search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK Administrators"

    • எடப்பாடி பழனி சாமி மீதும் எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.
    • தேர்தல் தோல்வி பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகளோடு கூட்டணி அமைத்து போட்டியிட்ட அ.தி.மு.க. தேர்தலில் பின்னடைவை சந்தித்தது. பா.ஜ.க. கூட்டணி சில தொகுதியில் இரண்டாம் இடத்தை பிடித்ததால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி சாமி மீதும் எதிர்ப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அனைவரையும் மீண்டும் சேர்த்து கொண்டால் மட்டுமே அ.தி.மு.க. பழைய நிலைக்கு திரும்பி வலுப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் நோக்கர்களும் கணித்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து பாராளுமன்ற தொகுதி வாரியாக கட்சியினர் மாவட்ட செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் ஆலோசனை நடத்த உள்ளார்.

    ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காஞ்சீபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த முக்கிய பொறுப் பாளர்கள் பங்கேற்கிறார்கள். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தோல்வி பற்றி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார்.

    நாளை முதல் வருகிற 19-ந் தேதி வரை தொடர்ச்சியாக 26 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார்.

    நாளை முதல் 19-ந் தேதி வரை காலை 9 மணிக்கு தொடங்கும் ஆலோசனை கூட்டம் மாலை வரையில் நடைபெற உள்ளது.

    ஒவ்வொரு நாளும் 3 தொகுதிகளை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். இதன்படி நாளை (11-ந் தேதி) காலை 9 மணிக்கு சிவகங்கை பாராளுமன்ற தொகுதியினருடனும், 11 மணிக்கு வேலூர் நிர்வாகி களுடனும், மாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலை நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்கிறார். எந்தெந்த தொகுதிகளை சேர்ந்தவர்கள் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கிறார்கள் என்பது பற்றிய விவரம் வருமாறு:-

    12-ந்தேதி-அரக் கோணம் தஞ்சை, திருச்சி, 13-ந்தேதி-சிதம்பரம், மதுரை, பெரம்பலூர். 15-ந்தேதி- நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி. 16-ந்தேதி-ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர். 17-ந் தேதி-தென்காசி, தேனி, திண்டுக்கல். 18-ந் தேதி-பொள்ளாச்சி, நீலகிரி, கோவை. 19-ந்தேதி-விழுப்புரம், கன்னியாகுமரி, தர்மபுரி.

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம் என்ன? என்பதை கண்டறிய முடிவு செய்துள்ள எடப்பாடி பழனிசாமி கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் முதல் கீழ் மட்ட நிர்வாகிகள் வரையில் உள்ள அனைவரிடமும் கருத்துக்களை கேட்க உள்ளார்.

    இதைத் தொடர்ந்து தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் தலைமை கழக செயலா ளர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், ஒன்றிய, பேரூராட்சி, பகுதி செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பு களில் உள்ளவர்கள் என அனைவரும் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

    இந்த கூட்டங்கள் முடிந்த பிறகு சென்னை உள்பட மீதமுள்ள தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

    இதன் பின்னர் தேர்தல் தோல்விக்கு காரணமான வர்கள் கண்டறியப்பட்டு அவர்கள மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    • தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராஜன், லட்சுமணன், வக்கீல் வெங்கடாஜலபதி, மரக்கடை கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பல்லடத்தில் அதிமுக., நகர நிர்வாகிகள் கூட்டம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடத்தில் அதிமுக., நகர நிர்வாகிகள் கூட்டம் நகரச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க அதிமுக., 52 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பல்லடம் நகரத்திலுள்ள 18 வார்டுகளில் கொடியேற்று விழா, மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. இதில் நிர்வாகிகள் தமிழ்நாடு பழனிச்சாமி, தர்மராஜன், லட்சுமணன், வக்கீல் வெங்கடாஜலபதி, மரக்கடை கிருஷ்ணமூர்த்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    நாகை, தேனி, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி அ.தி.மு.க. புதிய நிர்வாகிகளை ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    எம்.ஜி.ஆர். இளைஞர் அணியின் கூடுதல் நிர்வாகிகளாகவும், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகளாகவும், கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

    நாகப்பட்டினம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்- திலீபன் (கஞ்சமலைக்காடு, புஷ்பவனம், வேதாரண்யம்).

    புதுக்கோட்டை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகள்.

    மாவட்ட தலைவர்- கார்த்திக் தொண்டைமான் (முன்னாள் எம்.எல்.ஏ., புதுக்கோட்டை), மாவட்ட துணைத் தலைவர்கள்- துரைராஜ் (எருதுபட்டி, ஈஸ் வரன்கோவில் ஊராட்சி, அன்னவாசல் ஒன்றியம்), கருப்பையா (சோத்துப்பாளை, புதுக்கோட்டை ஒன்றியம்).

    மாவட்டச் செயலாளர்- முத்தமிழ்செல்வன் (கீழக்குறிச்சி, அன்னவாசல் ஒன்றியம்)

    மாவட்ட இணைச் செயலாளர்கள்- ராஜ்குமார் (சம்பட்டிவிடுதி அஞ்சல், புதுக்கோட்டை ஒன்றியம், மணமோகன் (ஆலங்குடி, திருவரங்குளம் மேற்கு ஒன்றியம்).

    மாவட்ட துணைச் செயலாளர்கள்- செந்தில்குமார் (ராஜாளிப்பட்டி, விராலி மலை மேற்கு ஒன்றியம்), சாமிநாதன் (எல்லையாபட்டி, அன்னவாசல் ஒன்றியம்), மாவட்ட பொருளாளர்- சுப்பிரமணியன் (வீரமங்கலம், ஆவுடையார்கோவில் ஒன்றியம்).

    தேனி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்- பாண்டிராஜ் (சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர்).

    விருதுநகர் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்டச் செயலாளர்- ராஜவர்மன் (முள்ளிகுளம், மல்லி அஞ்சல், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுக்கா).

    சிவகங்கை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள்:-

    மாவட்ட செயலாளர்- பிர்லாகணேசன் (தளக்கா வயல், தேவகோட்டை தாலுகா), மாவட்ட இணைச் செயலாளர்கள்- சிரஞ்சீவி சீனிவாசன் (சூடாமணி நகர், காரைக்குடி), கருப்பையா (ஜெயங்கொண்டம் ஊராட்சி, சாக்கோட்டை ஒன்றியம்).

    ராமநாதபுரம் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர்- வின்சென்ட் ராஜா (காமராஜர் நடுத்தெரு, திருவள்ளுவர் நகர், பரமக்குடி நகரம்).

    தூத்துக்குடி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர்- பிச்சையா (கருங்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர், விக்கிலாபுரம் அஞ்சல்).

    அ.தி.மு.க. தொண்டர்கள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ADMK
    ×