என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை - எடப்பாடி பழனிசாமி
- தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 150 நாட்கள் வேலை கொடுத்ததா?
- இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று வந்து தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரலாம்.
* பொங்கலுக்கு ரேசன் அட்டைக்கு ரூ.5000 வழங்க வேண்டும்.
* எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. வைத்த கோரிக்கையை தான் அ.தி.மு.க. தற்போது வைக்கிறது.
* தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி 150 நாட்கள் வேலை கொடுத்ததா?
* காவிரி விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் தி.மு.க. பேசி இருக்க வேண்டும்.
* 100 நாள் வேலை திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயர் தொடர வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
* ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தின் கடன் அதிகரித்து கொண்டிருக்கிறது.
* தமிழக அரசு பொருளாதார நிபுணர் குழுவை அமைத்த பின்னர் தான் கடன் அதிகரித்துள்ளது.
* த.வெ.க. நயினார் நாகேந்திரன் கூட்டணிக்கு அழைத்தது பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
* கொரோனா காலத்திலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.
* இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது.
* ரெயில் கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* த.வெ.க. தூய சக்தியா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
* கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.
* த.வெ.க. தூய சக்தி என்ற விஜயின் பேச்சிற்கு கே.பி.முனுசாமி பதில் அளித்து விட்டார்.
* இறந்தவர்கள் எல்லாம் தேர்தல் நேரத்தில் உயிர்பெற்று வந்து தி.மு.க.வுக்கு வாக்களித்தனர்.
* அ.தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






