என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவொற்றியூர் பகுதி அ.தி.மு.க. 4 ஆக பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமனம் - இ.பி.எஸ். அறிவிப்பு
- மாவட்ட பிதிநிதிகள் சத்தியவாணிமுத்து நகர் குஜலாத்தி, எண்ணூர் நேரு நகர் ஆனந்தசேகர், டி.எஸ்.கோபால் நகர் பாரதிராஜா.
- தகவல் தொழில் நுட்பப் பிரிவு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, அம்மா பேரவை உள்ளிட்டவைகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
திருவொற்றியூர் பகுதி அ.தி.மு.க. 4 ஆக பிரிக்கப்பட்டு புதிய பகுதி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு திருவொற்றியூர் கிழக்கு, மேற்கு ஆகிய பகுதிகள் மற்றும் வட்டங்கள் மறு சீரமைக்கப்பட்டு வடக்கு பகுதி, தெற்கு பகுதி என கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பகுதி கழக பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவை வருமாறு:-
திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலாளர் அஜாக்ஸ் பரமசிவம், திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன்.
திருவொற்றியூர் வடக்கு பகுதி கழக அவைத் தலைவர் எர்ணாவூர் நேதாஜிநகர் வி.பரசுராமன், பகுதி செயலாளர் எண்ணூர் நெட்டுக்குப்பம் எம்.கே.கண்ணன் (முன்னாள் கவுன்சிலர்) பகுதி இணைச் செயலாளர் எண்ணூர் காட்டுக்குப்பம் ஹேம பிரியா, பகுதி துணைச் செயலாளர்கள் திருவொற்றியூர் சிவசக்தி நகர் 6-வது தெரு எல்.ஜெசிந்தா, சக்தி கணபதி நகர் தாமோதரன், பகுதி பொருளாளர் எண்ணூர் நெட்டுக்குப்பம் சச்சிதானந்தம்.
மாவட்ட பிதிநிதிகள் சத்தியவாணிமுத்து நகர் குஜலாத்தி, எண்ணூர் நேரு நகர் ஆனந்தசேகர், டி.எஸ்.கோபால் நகர் பாரதிராஜா.
திருவொற்றியூர் தெற்கு பகுதி அவைத் தலைவர் சி.பி.சி.எல்.நகர் முன்னாள் கவுன்சிலர் நாகப்பன், பகுதி செயலாளர் மணலிபாட சாலை தெரு சாரதி பார்த்தீபன்.
பகுதி இணைச் செயலாளர் மணலி பெரிய தோப்பு சித்ரவள்ளி, துணைச் செயலாளர்கள் சின்னசேக்காடு முன்னாள் கவுன்சிலர் குப்பம்மாள், மணலி எம்.ஜோசப், பகுதி பொருளாளர் ராஜா தோட்டம் வினோத்குமார் மாவட்ட பிரதிநிதிகள் சின்னசேக்காடு மேரி, மணலி முருகானந்தம் முல்லை கார்டன் ரத்தினம்.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மஞ்சம்பாக்கம் சந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் அண்ணாமலைநகர் ரவிச்சந்திரன்.
மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர்கள் நெட்டுக்குப்பம் ஜி.சாந்தா, முகத்துவார குப்பம் செல்வி, மோரை அஜிதா, பாலவேடு காமராஜ் நகர் தீபிகா. இதேபோல் மாணவர் அணி, அண்ணா தொழிற் சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, அமைப்புசாரா ஓட்டுநர் அணி, இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில் நுட்பப் பிரிவு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, அம்மா பேரவை உள்ளிட்டவைகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூர் மேற்கு பகுதி 1 கிழக்கு வட்டக் கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.கே.கண்ணன் விடுவிக்கப்பட்டு, 1 கிழக்கு வட்ட கழக வட்ட செயலாளராக எண்ணூர் தாளங்குப்பம் லைபான் நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






