search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்ப்பாட்டம்"

    • சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம்
    • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

    கோவை,

    திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அரசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு நலசங்க தலைவர் சுப்பிரமணியம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க அமைப்பு செயலாளர் பிரபாகரன், கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், மாவட்ட செயலாளர் மந்தராசலம், தமிழ்நாடு கட்சிசார்பற்ற விவசாய சங்க பொருளாளர் டாக்டர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். 

    • மாற்றுத்திறனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை அரசு வழங்க வேண்டும்.
    • ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், மாற்றுத்தி றனாளிகளின் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை அரசு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை தாசில்தார் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மோகன், மாவட்டத் துணைச் செயலா ளர்கள் ராஜன், சாமியப்பன், ராதிகா ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    இதில் மாற்றுத்திறனா ளிகள் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும்.
    • முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து சீர்காழி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் சீத.லெட்சுமனன் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ஞான சம்பந்தம், கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ, மாநில பொதுச்செய லாளர் கணிவண்ணன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். தொடர்ந்து 100 நாள் வேலைத்திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சரத்சந்திரன், நவாஸ், மாவட்ட பொருளாளர் சிவராமன், ராஜா, ஒன்றிய குழு துனை தலைவர் பானு சேகர், மகிளா காங்கிரஸ் தலைவி சித்ரா செல்வி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமானது கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது.
    • தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அனுப்பவில்லை.

    பல்லடம:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் இந்தியன் வங்கி முன்பு 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசை கண்டித்து பல்லடம் நகர வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். பல்லடம் வட்டார தலைவர் கணேசன், மங்கலம் வட்டார தலைவர் சபாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்ப பட்டது. இதுகுறித்து நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டமானது கடந்த 2005-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதனால் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது.

    இந்தத் திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதால் மத்திய பா.ஜ.க. அரசு இந்த திட்டத்தை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களாக மத்திய பா.ஜ.க அரசு சம்பளம் வழங்கவில்லை. இதனால் அதில் வேலை செய்த ஏழை மக்கள் சொல்லனா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அனுப்பவில்லை.

    எனவே 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் மத்திய அரசைக் கண்டித்து மாநில, மாவட்ட காங்கிரஸ் தலைமை உத்தரவின் பேரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆர்பாட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சக்திவேல், ஜேம்ஸ், பாலு, லோகேஷ், காளியப்பன் தமிழ்ச்செல்வி, மற்றும் நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • நூறு நாள் வேலைத்திட்டத்தை சீர்குழைக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரவிற்கிணங்க தஞ்சை வட்டார காங்கிரஸ் சார்பாக நூறு நாள் வேலைத்திட்டத்தை சீர்குழைக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவன கோட்ட அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை வட்டாரத்த லைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கில் கோ.அன்பரசன் துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கதர் வெங்கடேசன், மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, சிவாஜி சமூகநல பேரவைத்தலைவர் சதா. வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர்சசிகலா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி இளைய பாரத், மாவட்ட கலை இலக்கிய பிரிவு தலைவர் கலைச்செல்வன், கோபாலய்யர், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள் களிமேடு முருகானந்தம், பாரதிதாசன், சுவீதா ஞானப்பிரகாசம், மாரியம்மன்கோவில் ராமமூர்த்தி, மருங்குளம் உத்திராபதி, நாகராஜ், ஆனந்த முருகன், வீணை கார்த்தி, சிவக்குமார், கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • மாவட்ட தலைவர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார்.
    • பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசசை கண்டித்து தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தீர்த்தராமன் தலைமை தாங்கினார். நகர தலைவர் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை உடனே ஒதுக்க வேண்டும். வாழ்வா தாரமற்ற மக்களுக்காக கொண்டு வரப்பட்ட திட்டத்தை முடக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியு றுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும்
    • அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பிரசாத் தலைமையில் பா.ஜ.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும், 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்த வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாபாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் அருணகிரி, அசோக் குமார், சேகர், ராமலிங்கம், பழனி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வினோத்குமார், ஆதி திராவிடர் துறை மாநில துணைத்தலைவர் அன்புதாஸ், மாவட்ட தலைவர் முருகன், வட்டார தலைவர்கள் பந்தாமணி, இளங்கோவன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்றனர்

    • பா.ஜனதா அரசை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டப்ப நாயக்கன்பட்டி கனரா வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாநகர தலைவர் ஏ.ஆர்.பி. பாஸ்கர் தலைமையில் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

    சேலம்:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டப்ப நாயக்கன்பட்டி கனரா வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மாநகர தலைவர் ஏ.ஆர்.பி. பாஸ்கர் தலைமையில் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதில் மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, மாநகர வர்த்தக பிரிவு தலைவர் எம்.டி சுப்பிரமணியம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் மெடிக்கல் பிரபு, பச்சப்பட்டி பழனி, திருமுருகன், மாநில சேவாதள பிரிவு வெங்கட்ராஜ், மாநில வக்கீல் பிரிவு பொதுச்செயலாளர் தேன்மொழி பிங்கி, கொண்டப்ப நாயக்கன்பட்டி கிராம கமிட்டி தலைவர் காமராஜ், மண்டல தலைவர்கள் ராமமூர்த்தி, சாந்தமூர்த்தி, நிசார் அஹமது, மோகன், ராமன், நாகராஜ் கோவிந்தராஜ், மாநகர செயலாளர் சஞ்சய் காந்தி, சுப்பிரமணியன், ஆரோக்கியநாதன் இளைஞர் காங்கிரஸ் அம்மாபேட்டை கோவிந்தன், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் எம்.பாலப்பட்டியில் உள்ள கனரா வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் மாநகர தலைவர் பிரபு தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில பொதுச் செயலாளர் எம்.ஆர். சுரேஷ், மாநில செயலாளர் வசந்தம் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர். இதில் மத்திய அரசுக்கு எதிராக நூதன முறையில் சட்டி ஏந்தி 100 நாள் வேலை திட்டத்தை முடக்காதே என கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் பொதுக்குழு உறுப்பினர் தனசேகர், மணி, காளியண்ணன், அல்லிகுட்டை ராமசாமி, ராமநாதன், குணாலினிசக்தி, கதிரவன், வரதராஜ், ஏழுமலை, பிரகாஷ், பூபதி, சேட்டு, ரஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு ஜாமியா மஜித் முத்தவல்லி அன்வர் தலைமை தாங்கினார். செயலாளர் நசீர் அகமத், ஜாமியா மஸ்ஜித் இமாம் சுஹேல் அகமது காஸிமி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாமியா மஜித் முத்தவல்லி அன்வர் தலைமை தாங்கினார். செயலாளர் நசீர் அகமத், ஜாமியா மஸ்ஜித் இமாம் சுஹேல் அகமது காஸிமி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    இதில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாஸ்கர், இந்திய முஸ்லிம் லீக் அன்சர் பாஷா, மனிதநேய மக்கள் கட்சி பாரூக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் காஜாமைதீன், பொதுக்குழு உறுப்பினர் நாசர்கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் லைன்மேடு முத்தவல்லி ஆப்சல் ஷெரீப் நன்றி கூறினார்.

    • 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 4 மாதங்களாக சம்பளம் தராததை கண்டித்து கோஷம்
    • கூலித்தொழிலாளிகள் உள்பட காங்கிரசார் பங்கேற்பு

    கோவை,

    கோவை எஸ்.எஸ். குளத்தில் உள்ள கனரா வங்கி முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் பச்சை முத்து, கவுன்சிலரும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவருமான ஜி. வி. நவீன் குமார் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த பெண்கள் உள்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  

    • ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • 2023-24 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

    மார்த்தாண்டம் :

    மத்திய அரசை கண்டித்து கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் கனரா வங்கி முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிள்ளியூர் வட்டார தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

    ஊராட்சி, பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலை வர்கள் குமரேசன், மரிய அருள்தாஸ், ராஜகிளன், ஜெபர்சன், சுரேஷ் கியூபர்ட் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தை ராஜேஷ்கு மார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசியதாவது:-

    100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் மத்திய பா.ஜ.க. அரசு உரிய முக்கி யத்துவம் வழங்குவதில்லை. 2021-22 இல் ரூ.98,468 கோடி ஒதுக்கிய நிலையில், 2023-24 நிதியாண்டில் இத்திட்டத்திற்கு ரூ.60 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது.

    ஆனால் எதிர்பார்க்கப் பட்ட பட்ஜெட் மதிப்பீடான ரூ.73 ஆயிரம் கோடியை விட 18 சதவீதம் குறை வாகவும், 2022-23 நிதி யாண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடான ரூ.89 ஆயிரம் கோடியை விட 33 சதவிகிதம் குறைவாகவும் இருந்தது. இந்த நிதியாண்டில் 6 மாதங்களில் இந்த திட்டம் ரூ.6147 கோடி தற்போது பற்றாக்குறையில் உள்ளது என்று இணையதளத்தில் ஒன்றிய அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.

    இந்த பற்றாக்குறையின் விளைவாக ஆண்டுக்கு சராசரியாக வெறும் 17 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மோடி அரசு அநியாயமான முறையில் குறைவான அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டு மென்றால் ரூ2.72 லட்சம் கோடி தேவை. ஆனால் தற்போது அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.

    கொரோனா காலத்தில் கிராமப்புற பொருளா தாரத்தை இத்திட்டம் தான் காப்பாற்றியது. கோடிக்க ணக்கான மக்களை பட்டினி கொடுமையிலிருந்து பாதுகாத்தது. முதல் கொரோனா ஊரடங்கின் போது 11 கோடி மக்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் வாழ்வாதாரமாக விளங்கி யது.

    இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டைட்டஸ், பால்மணி, மாநில பொதுசெயலாளர் ஆஸ்கர்பிரடி, நிர்வாகிகள் ஆசீர் பிரைட் சிங், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கிறிஸ்டல் ரமணி பாய், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், , கிள்ளியூர் வட்டார பொதுசெயலாளர் எட்வின்ஜோஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள், 100 நாள் வேலை பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருவெறும்பூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • இஸ்ரேல், பாலஸ்தீனம் போரை உடனடியாக, முடிவுக்கு கொண்டு வர கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன

    திருவெறும்பூர்,

    திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் புறநகர் மாவட்ட செயலாளர் மாரியம்மாள் தலைமை யில் நடைபெற்றது,

    ஆர்பாட்டத்தில் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காசாவில் குழந்தைகள், பெண்கள், மற்றும் முதியோர்கள் மீது குறி வைத்து தாக்கி கொன்று குவிப்பதை கண்டித்தும் இஸ்ரேல், பாலஸ்தீனம் போரை உடனடியாக, முடிவுக்கு கொண்டு வந்து சுதந்திர பாலஸ்தீனத்தை உருவாக்க கோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    ஆர்பாட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×