search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலுவை"

    • 100 நாள் வேலை திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும்.
    • முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்து சீர்காழி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் சீத.லெட்சுமனன் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் பாலசுப்பிரமணியன், ஞான சம்பந்தம், கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்.எல்.ஏ, மாநில பொதுச்செய லாளர் கணிவண்ணன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். தொடர்ந்து 100 நாள் வேலைத்திட்டத்தில் நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சரத்சந்திரன், நவாஸ், மாவட்ட பொருளாளர் சிவராமன், ராஜா, ஒன்றிய குழு துனை தலைவர் பானு சேகர், மகிளா காங்கிரஸ் தலைவி சித்ரா செல்வி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிரியகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

    • பல கோடி ரூபாய் வரி நிலுவை இருந்த பொழுதிலும் எந்த ஒரு அனுமதி ஆணையும் இல்லாமல் இந்த சொத்துவரி கணக்குகள் நீக்கப்படுகின்றன.
    • சொத்துவரி நிலுவையில் இருக்கும் பட்சத்தில் முறையாக அனுமதி ஆணை இல்லாமல் நீக்கப்பட்ட கணக்குகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க. தனசேகரன் பங்கேற்று பேசியதாவது:-

    எனது தணிக்கை குழு ஆய்வின் போது அனைத்து மண்டலங்களிலும் வருடம் தோறும் ஆயிரக்கணக்கான சொத்து வரி கணக்குகள், சொத்து இணைப்பு, இடித்து புதிய கட்டிடம் கட்டுதல், ராங் பிராப்பர்டி போன்ற காரணங்களுக்காக நீக்கப்படுகின்றன.

    இக்கணக்குகளில் பல கோடி ரூபாய் வரி நிலுவை இருந்த பொழுதிலும் எந்த ஒரு அனுமதி ஆணையும் இல்லாமல் இந்த சொத்துவரி கணக்குகள் நீக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு மண்ட லம் 1-ல் 2019-20 நிதியாண்டில் சுமார் 682 வரிக் கணக்குகள் நீக்கப்பட்டு உள்ளது. இவற்றின் வரி நிலுவை தொகை சுமார் 3.47 கோடிகளாகும்.

    இதேபோல் 2020-21 நிதியாண்டில் மண்டலம் 3-ல் 517 சொத்துவரி கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதன் நிலுவை தொகை ரூ. 68.61 லட்சத்துக்கு மேல் உள்ளது.

    இதே நிலை அனைத்து மண்டலங்களிலும் காணப்படுகிறது. அதனால் ஆணையர் அவர்கள் சொத்துவரி நிலுவையில் இருக்கும் பட்சத்தில் முறையாக அனுமதி ஆணை இல்லாமல் நீக்கப்பட்ட கணக்குகளை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    மண்டலம் 3-ல் 2017-18 நிதியாண்டில் இருந்து 12 அரையாண்டுகளுக்கு மேலாக விஜய் ராஜ் சுரானா, தினேஷ் சந்த் சுரானா, கௌதம் ராஜ் சுரானா ஆகியோர் சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தாமல் மொத்தமாக சுமார் ரூ. 18.83 லட்சம் நிலுவையாக வைத்து உள்ளனர். இதனை உடனடியாக வசூலிக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையா ளர் உத்தரவிட வேண்டும். மண்டலம் 2-ல், தணிக்கை குழு களஆய்வில் அந்த மண்டலத்தில் இருக்கும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பல ஏக்கர் நிலங்களின் விவரங்கள் மற்றும் அவைகளின் சொத்து வரி நிலுவைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனை அடுத்து அந்நிறுவனம் ஆக்கிரமித்து வைத்திருந்த சுமார் 100 கோடி மதிப்புள்ள 3.3 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்ட செய்தி சில தினங்களில் பல்வேறு நாளிதழ்களில் வெளிவந்தன. இந்த துரித நடவடிக்கையை மேற்கொண்ட சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் சிவகுரு பிரபாகரன், மண்டல குழு தலைவர் ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் கவிதா ஆகியோருக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

    அதேபோல் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்பட்டு வரும் பாலிடெக்னிக் கல்லூரியின் காலிமனை சொத்து வரி நிதியாண்டு 2020-21 வரை சுமார் ரூ.1.3 கோடிக்கு மேல் நிலுவை உள்ளது என தணிக்கை ஆய்வில் கண்ட றியப்பட்டது. இதற்கு மண்டல அதிகாரிகள் இதனை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தனர். அதனால் இந்த பெரும் நிலுவை தொகை முழுமையாக வசூலிக்க ஆணையர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இதுமட்டுமல்லாமல், சுமார் 2.58 லட்சம் சதுரடிக்கு மேல் இயங்கி வரும் இந்த பாலிடெக்னிக் கல்லூரிக்கு நிதியாண்டு 2020-21 வரை சொத்துவரி எதுவும் விதிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் சொத்துவரி விதிக்கப்பட்டிருந்தால் 2020-21 வரை சுமார் ரூ.29,92,320 வசூலிக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. அதனால் இந்த கல்லூரி சொத்து வரி செலுத்துவதில் இருந்து ஏதேனும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. அப்படி இல்லையென்றால் சொத்துவரி வசூலிக்க ஆணையர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தணிக்கை குழு ஆய்வின் பொழுது அரசின் விதிகளுக்கு மாறாக மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர், உதவி வருவாய் அலுவலர், உதவி கோட்ட மின்பொறியாளர் அதிகாரிகள் செல்ப் செக் மூலம் பல கோடி ரூபாய் ரொக்கமாக எடுத்து வருவது தெரியவந்து உள்ளது. மேலும் இதனை செலவு செய்ததற்கான ஆதாரம் மற்றும் செலவு சீட்டுகள் முழுமையாக தணிக்கைக்கு அளிக்கப்படுவதும் இல்லை. உதாரணத்திற்கு மண்டலம் 9-ல் நிதி யாண்டு 2020-21-ல் வெறும் 37 செல்ப் செக் மூலம் சுமார் ரூ 6.34 கோடிக்கு மேல் ரொக்கம் எடுக்கபட்டுள்ளது. அதாவது ஒரு செல்ப் செக் மூலம் சராசரியாக ரூ. 17.13 லட்சம் ரொக்கமாக எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிதியாண்டு 2019-20-ல் சுமார் ரூ.2.3 கோடிக்கு மேல் செல்ப் செக் மூலம் பணம் எடுக்கபட்டுள்ளது. இன்றுவரை இதனை முறையாக தணிக்கை ஆய்வுக்கு உட்படுத்தவும் இல்லை. எனவே செல்ப் செக் மூலம் பணம் எடுக்கும் முறையை உடனடியாக நிறுத்த அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும்.

    மேலும் இதுவரை செல்ப் செக் மூலம் எடுக்கப்பட்ட பணம் முறையாக தணிக்கை செய்யப்பட்டதை உறுதி செய்து அதன் முழு விவரத்தை தணிக்கை குழுவிற்கு சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

    மண்டலம் 9-ல், நிதி யாண்டு 2020-21-ல் 38 அம்மா உணவகங்களில் மொத்த வரவு ரூ. 1,55,34,200-ஆகவும், இதற்கான மொத்த செலவு சுமார் ரூ.9,54,51,092-ஆக உள்ளது. இதில் அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வாங் குவதற்கான செலவு ரூபாய் 4,62,67,592 ஆகவும், அம்மா உணவகங்களின் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தினக்கூலி மட்டும் சுமார் ரூபாய் 4,91,83,500-ஆகவும் உள்ளது.

    இப்படி 7 கோடியே 99 லட்சத்து 16 ஆயிரத்து 892 ரூபாய் வருவாயை விட மிக அதிகமாக செலவிடப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த அதீத செலவீனத்தை முழுமையாக விசாரணைக்கு ஆணையர் உட்படுத்த வேண்டும்.

    தணிக்கை குழுவிற்கு தங்கும் விடுதிகள் குறித்து பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் பெரும்பான்மையான தங்கும் விடுதிகள் முறையாக அரசின் வழி காட்டுதல்களை பின்பற்றுவதில்லை எனவும் முறையாக வரி விதிக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி எல்லைக்குப்பட்ட அனைத்து தங்கும் விடுதிகள் முறையாக அரசின் விதிகள், மாநகராட்சியின் அனுமதி மற்றும் வரிகள் ஆகியவை முறையாக பின்பற்றபடுகின்றனவா என ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்த வேண்டும்.

    முதலமைச்சரின் சிங்கார சென்னை 2.0 திட்டதின் கீழ் சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு வந்தாலும் மாநகராட்சி முழுக்க வரையபட்டுள்ள சுவர் விளம்பரங்கள் இன்னும் முழுமையாக அழிக்கபடாமலும் மேலும் தினம் புது புது சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டும் வருகின்றன. எனவே ஆணையர் இந்த சுவர் விளம்பரங்களை முழுமையாக அழித்து தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், வரலாற்று சிறப்புகளையும் குறிக்கும் வகையிலான கண்கவரும் வண்ண ஓவியங்கள் வரைய அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கி நடவடிக்கைகளை துரித்த படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • போலீஸ் நிலையத்தில் எவ்வித வழக்குகளும் நிலுவையில் இருக்க கூடாது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை போலீஸ் நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் வருகை தந்தார். அவரை சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ. செந்தில்குமார் வரவேற்றார். தொடர்ந்து, அவர் போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சூழலை பார்வையிட்டு தூய்மையாக வைத்து கொள்ள அறிவுறுத்தி னார். அதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பராம ரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போலீஸ் நிலையத்தில் எவ்வித வழக்குகளும் நிலுவையில் இருக்க கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தி, போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள வாகனங்களை ஒழுங்குப்ப டுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிநாதசாமி கோவில் இருப்பதால் எந்த நேரத்திலும் போலீசார் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

    • நகரத்தை மேன்மைப்படுத்தி பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்ய தனி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
    • மத்திய அரசு தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஒதுக்க வேண்டும்.

    கும்பகோணம்:

    நாடாளுமன்ற மாநிலங்களவையின் குளிர்காலக் கூட்ட த்தொடரில் தி.மு.க. எம்.பியான கே.கல்யாணசுந்தரம் பேசியதாவது:

    பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த நாள் முதல் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரவில்லை. அவர்களுடைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

    கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். மகாமகம் அடுத்த 2028-ல் நடைபெற உள்ளது.

    பல லட்சம் மக்கள் வந்து செல்லும் கும்பகோணம் நகரத்தை மேன்மைப்படுத்தி பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்ய தனி நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலான ரயில்வே பாதை விழுப்புரம்-தஞ்சாவூர் இரு வழிப்பாதையாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    அதேபோல் மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் பாதையை புதுப்பிக்கும் கோரிக்கையும் சென்னை-தஞ்சாவூர் இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோரிக்கையும் நிலுவையில் இருந்து வருகிறது.

    இதனை உடனே முடிக்க வேண்டும். மேலும் மத்திய அரசு நிறுவனங்களான ெரயில்வே, நெய்வேலி, பெல் போன்ற தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஒதுக்க வேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான கைவினைப் பொருட்கள் உற்பத்தி யாகின்றன. அவைகள் அனைத்தையும் அரசே கையகப்படுத்தி விற்பனை செய்வதன் மூலமாக கைவினை கலைஞர்களுக்கு ஒரு போனஸ் வழங்குவது போன்ற வாய்ப்பு கிடைக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒவ்வொரு ஆண்டும் 5 மாத வட்டி தள்ளுபடி ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • வட்டி சலுகையை பயன்படுத்தி கிரைய பத்திரம் பெற்றுக் பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவிற்கு உட்பட்ட அனைத்து குடியிருப்புகளில் (சுயநிதி திட்டம் மற்றும் வணிக மனைகள் நீங்கலாக) ஒதுக்கீடு பெற்ற அனைத்து ஒதுக்கீடுதாரர்களுக்கும் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணையின்படி அரசாணை ( நிலை ) எண்.194 வீ.வ.ம.ந.பு.வ. ( நி.எ.2(1) துறை நாள் 4-11-2022ன் படி வட்டி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    மேற்கண்ட சலுகைகளை பெற ஒதுக்கீடு தாரர்களால் ஆறு மாத காலத்திற்குள் அதாவது அடுத்த ஆண்டு மே மாதம் 3-ம் தேதிக்குள் நிலுவைத்தொகை ஒரே தவணையாகவோ அல்லது நிலுவையில் உள்ள அசல் தொகைக்கு நடைமுறையில் உள்ள தனி வட்டியுடன் மூன்று தவணைகளில் செலுத்த வேண்டும்.

    மாதத் தவணைக்கான அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி, வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாக தள்ளுபடி, நிலத்திற்கான இறுதி விலை வித்தியாசத் தொகையில் ஒவ்வொரு ஆண்டும் 5 மாத வட்டி தள்ளுபடி ஆகிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    எனவே ஒதுக்கீடு தாரர்கள் நிலுவைத் தொகையை செலுத்தி வட்டி சலுகையை பயன்படுத்தி கிரைய பத்திரம் பெற்று பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்த சலுகையானது வட்டி தள்ளுபடி திட்டம் அரசாணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு மாத காலங்கள் (3-5-2023) வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

    மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • கடன் நிலுவை வசூல் என்ற பேரில் மிரட்டி அதிரடி வசூல்.
    • வீடுகளை பூட்டி மழைக்காலத்தில் மக்களுக்கு இழைக்கும் அராஜகம்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பைனான்ஸ்
    நிறுவனங்களால் நடக்கக்கூடிய ஒரு சில நிறுவனங்கள் கடன் நிலுவை வசூல் என்ற அடிப்படையில் மிரட்டி அதிரடி வசூலில் ஈடுபடுகின்றனர்.

    இதனால் ஏழைமற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தை குறிவைத்து கோர்ட் உத்தரவுகளை பெற்று வீடுகளை பூட்டி மழைக்கா லத்தில் மக்களுக்கு இழைக்கும் அராஜக போக்கை கண்டித்து ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ஏ.எம்.மோகன் தலைமையில் ஒத்தக்கடை என்ற பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத அறப்போ ராட்டத்தை தொட ங்கினார்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 100 நாள் வேலை திட்டத்திற்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும்.
    • புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை தாங்கினார்.

    மாநில குழு உறுப்பினர் நாகை மாலி எம்.எல்.ஏ பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும், பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை வியர்வை குறைக்க வேண்டும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் பலவீனப்படுத்தும் முயற்சியை நிறுத்த வேண்டும், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

    இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் லெனின், கஸ்தூரி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால், ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றிய தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று கடைகள், வீடுகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

    • நிலுவையில் உள்ள சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க அரசு முதன்மை செயலாளர் உஷா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்கள் அதனை ஆர்வத்துடன் கற்று மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரி வித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலாளருமான பள்ளிக்கல்வித்துறை காகர்லா உஷா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், இணைய வழியில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் இது குறித்து பள்ளி கல்வி துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடிநீர் இணைப்பு, கட்டட அனுமதிகள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சொத்துவரி பெயர் மாற்றம் போன்ற பொதுமக்களுக்கான சேவைகளை தாமதமின்றி விரைந்து முடித்திட அலு வலர்களுக்கு உத்தர விட்டதோடு, குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது தோண்டப்படும் சாலைகளை மீண்டும் பழைய நிலையிலேயே இருக்கும்படி உடனடியாக சீர்செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    இந்த ஆய்வின்போது காகர்லா உஷா பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் இணைய வழியில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் ஆகிய இரண்டு கோட்டங்களிலும் வழங்கப்படும் சான்றிதழ்களை எவ்வித நிலுவையுமின்றி வழங்கவும், மேலும், நிலுவையில் உள்ள சான்றிதழ்களை உடனடியாக வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் மற்றும் பட்டாமாறுதல் விண்ணப்பங்களின் விபரங்கள் குறித்து அனைத்து வட்டாட்சியர்களிடமும் கேட்ட றிந்தார். நிலுவை க்கான காரணங்களை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை பெற்று, சான்றிதழ்கள் மற்றும் பட்டாக்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளு மாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் கோரி பதிவு செய்யவும், ஏற்கனவே பதிவு செய்து சான்றிதழ் பெறவும் வந்திருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

    அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் வட்டார அளவிலான பயிற்சி நடைபெறுகிறது. இதை யொட்டி பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இப்பயிற்சி மாணவர்க ளின் கற்றலை மேம்படுத்துவதாக அமைய வேண்டும் என்றும் பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்கள் அதனை ஆர்வத்துடன் கற்று மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கோட்டாட்சியர்கள் சதீஷ்குமார் (ஈரோடு), திவ்ய பிரியதர்ஷினி (கோபி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், பெருந்துறை தாசில்தார் குமரேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×