search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pending"

    • போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • போலீஸ் நிலையத்தில் எவ்வித வழக்குகளும் நிலுவையில் இருக்க கூடாது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை போலீஸ் நிலையத்தை ஆய்வு மேற்கொள்ள தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜெயச்சந்திரன் வருகை தந்தார். அவரை சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ. செந்தில்குமார் வரவேற்றார். தொடர்ந்து, அவர் போலீஸ் நிலையத்தின் சுற்றுச்சூழலை பார்வையிட்டு தூய்மையாக வைத்து கொள்ள அறிவுறுத்தி னார். அதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் பராம ரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போலீஸ் நிலையத்தில் எவ்வித வழக்குகளும் நிலுவையில் இருக்க கூடாது என போலீசாருக்கு அறிவுறுத்தி, போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள வாகனங்களை ஒழுங்குப்ப டுத்தி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிநாதசாமி கோவில் இருப்பதால் எந்த நேரத்திலும் போலீசார் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார்.

    • நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
    • கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி பொதுமக்கள் ஜப்தி நடவடிக்கைகளில் இருந்து மீளுவதற்கு நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

    வேதாரண்யம் நகராட்சியில் 2022-2023 ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய சொத்து வரி தொழில்வரி குடிநீர் கட்டணம் கடை வாடகை மற்றும் தொழில் உரிமை கட்டணம் ஆகியவற்றை உடனடியாக நகராட்சியில் இந்த மாத இறுதிக்குள் செலுத்த வேண்டும் வேதாரண்யம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. அதில் சுமார் 40,000 பொதுமக்கள் வசித்து வருகின்றனர் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி தெரு விளக்கு பொது சுகாதாரம் உள்ளிட்ட பணிகள் நகராட்சியால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது நகராட்சி வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு வசதியாக உடனே நிலவையில் உள்ள வரித்தொகையினை அலுவலகத்தில் செலுத்த வேண்டும்

    வரிகளை செலுத்தவில்லை என்றால் பாக்கி வைத்துள்ளவரின் பெயர்கள் பொது இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். எனவே உடனே வரி செலுத்தவும். வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகள் உடனடியாக துண்டிக்கப்படும்.

    மேலும் ஜப்தி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை நகராட்சி நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்படும். நகராட்சி மென்மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை கருத்தில் கொண்டு நகராட்சி செலுத்த வேண்டிய சொத்து வரி குடிநீர் கட்டணம் தொழில்வரி கடை வாடகை தொழில் உரிமை கட்டணம் ஆகிய அனைத்து தொகையை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா கேட்டுக் கொண்டுள்ளார்.

    • 100 நாள் வேலை திட்டத்திற்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும்.
    • புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.

    ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை தாங்கினார்.

    மாநில குழு உறுப்பினர் நாகை மாலி எம்.எல்.ஏ பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும், பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை வியர்வை குறைக்க வேண்டும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் பலவீனப்படுத்தும் முயற்சியை நிறுத்த வேண்டும், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.

    இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் லெனின், கஸ்தூரி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால், ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றிய தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று கடைகள், வீடுகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

    எம்எபி, எம்எல்ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PendingCases #SupremeCourt
    புதுடெல்லி:

    குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்ட  அரசியல்  தலைவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க கோரி, வழக்கறிஞரும் பாஜக தலைவருமான அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விஷயத்தில் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை அமிகஸ் கியூரியாக நியமித்தது.

    அஸ்வினி உபாத்யாய்

    இந்நிலையில், இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா தனது அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், நாடு முழுவதிலும் பல்வேறு நீதிமன்றங்களில் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விரிவான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    நாடு முழுவதிலும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி,எம்எல்ஏக்களுக்கு எதிராக மொத்தம் 4122 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டிலேயே எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளில் தமிழகம் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 321 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், 71 வழக்குகள் மட்டுமே கீழமை நீதிமன்றங்களில் உள்ளதாகவும், மற்ற வழக்குகள் தற்போதுவரை விசாரணை நிலைக்கு வரவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    264 வழக்குகள் மீது உயர்நீதிமன்றங்களால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டில் இருந்து நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளில் இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், விசாரணையை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #PendingCases #SupremeCourt
    ×