search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pending certificates"

    • நிலுவையில் உள்ள சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்க அரசு முதன்மை செயலாளர் உஷா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    • பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்கள் அதனை ஆர்வத்துடன் கற்று மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரி வித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலாளருமான பள்ளிக்கல்வித்துறை காகர்லா உஷா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், இணைய வழியில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் இது குறித்து பள்ளி கல்வி துறை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குடிநீர் இணைப்பு, கட்டட அனுமதிகள், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள், சொத்துவரி பெயர் மாற்றம் போன்ற பொதுமக்களுக்கான சேவைகளை தாமதமின்றி விரைந்து முடித்திட அலு வலர்களுக்கு உத்தர விட்டதோடு, குடிநீர் இணைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது தோண்டப்படும் சாலைகளை மீண்டும் பழைய நிலையிலேயே இருக்கும்படி உடனடியாக சீர்செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

    அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றார்.

    இந்த ஆய்வின்போது காகர்லா உஷா பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் இணைய வழியில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஈரோடு மற்றும் கோபி செட்டிபாளையம் ஆகிய இரண்டு கோட்டங்களிலும் வழங்கப்படும் சான்றிதழ்களை எவ்வித நிலுவையுமின்றி வழங்கவும், மேலும், நிலுவையில் உள்ள சான்றிதழ்களை உடனடியாக வழங்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் மற்றும் பட்டாமாறுதல் விண்ணப்பங்களின் விபரங்கள் குறித்து அனைத்து வட்டாட்சியர்களிடமும் கேட்ட றிந்தார். நிலுவை க்கான காரணங்களை உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து இணைக்கப்பட வேண்டிய ஆவணங்களை பெற்று, சான்றிதழ்கள் மற்றும் பட்டாக்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளு மாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் செயல்படும் இ-சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமான வரி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ் கோரி பதிவு செய்யவும், ஏற்கனவே பதிவு செய்து சான்றிதழ் பெறவும் வந்திருந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.

    அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் வட்டார அளவிலான பயிற்சி நடைபெறுகிறது. இதை யொட்டி பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இப்பயிற்சி மாணவர்க ளின் கற்றலை மேம்படுத்துவதாக அமைய வேண்டும் என்றும் பயிற்சியில் பங்கு பெற்றுள்ள ஆசிரியர்கள் அதனை ஆர்வத்துடன் கற்று மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, கோட்டாட்சியர்கள் சதீஷ்குமார் (ஈரோடு), திவ்ய பிரியதர்ஷினி (கோபி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், பெருந்துறை தாசில்தார் குமரேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×