search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
    X

    தஞ்சையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    • நூறு நாள் வேலைத்திட்டத்தை சீர்குழைக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உத்தரவிற்கிணங்க தஞ்சை வட்டார காங்கிரஸ் சார்பாக நூறு நாள் வேலைத்திட்டத்தை சீர்குழைக்கும் மத்திய அரசை கண்டித்து தஞ்சாவூர் காந்திஜி சாலையில் உள்ள ஆயுள் காப்பீட்டு நிறுவன கோட்ட அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சை வட்டாரத்த லைவர்கள் ரவிச்சந்திரன், நாராயணசாமி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கில் கோ.அன்பரசன் துவக்கி வைத்தார். முன்னதாக மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கதர் வெங்கடேசன், மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, சிவாஜி சமூகநல பேரவைத்தலைவர் சதா. வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் களிமேடு ராமலிங்கம், மாவட்ட மகளிர் காங்கிரஸ் செயலாளர்சசிகலா, இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி இளைய பாரத், மாவட்ட கலை இலக்கிய பிரிவு தலைவர் கலைச்செல்வன், கோபாலய்யர், ஐ.என்.டி.யூ.சி நிர்வாகிகள் களிமேடு முருகானந்தம், பாரதிதாசன், சுவீதா ஞானப்பிரகாசம், மாரியம்மன்கோவில் ராமமூர்த்தி, மருங்குளம் உத்திராபதி, நாகராஜ், ஆனந்த முருகன், வீணை கார்த்தி, சிவக்குமார், கருணாநிதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×