search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "organizations"

    • இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்திற்கு ஜாமியா மஜித் முத்தவல்லி அன்வர் தலைமை தாங்கினார். செயலாளர் நசீர் அகமத், ஜாமியா மஸ்ஜித் இமாம் சுஹேல் அகமது காஸிமி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாமியா மஜித் முத்தவல்லி அன்வர் தலைமை தாங்கினார். செயலாளர் நசீர் அகமத், ஜாமியா மஸ்ஜித் இமாம் சுஹேல் அகமது காஸிமி ஆகியோர் வரவேற்று பேசினார்.

    இதில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாஸ்கர், இந்திய முஸ்லிம் லீக் அன்சர் பாஷா, மனிதநேய மக்கள் கட்சி பாரூக், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் காஜாமைதீன், பொதுக்குழு உறுப்பினர் நாசர்கான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் லைன்மேடு முத்தவல்லி ஆப்சல் ஷெரீப் நன்றி கூறினார்.

    • கூட்டத்தில் போலீசார் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
    • கடந்த ஆண்டு எந்தெந்த இடத்தில் சிலை வைக்கப்பட்டதோ, அதே இடத்தில் தான் வைக்க வேண்டும். மற்ற இடங்களில் வைக்ககூடாது.

    வடவள்ளி,

    நாடு முழுவதும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசயைாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி தற்போதே விநாயர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் தொடங்கி விட்டன.

    கோவையிலும் விநாயகர் சதுர்த்தியன்று இந்து அமைப்பினர், பொது மக்கள், விநாயகர் சிலையை வைத்து வழிபடுவார்கள்.

    கோவையில் பல்வேறு இடங்களில் இந்து முன்னணியினர் மற்றும் இந்து அமைப்பினர் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கான ஏற்பாடுகளை தற்போதே தொடங்கி விட்டனர். விநாயகர் சிலை தயாரிப்பு பணியும் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.

    கோவை வடவள்ளி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகதிகளில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் இந்து முன்னணியினர் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இந்து அமைப்பினருக்கு போலீசார் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

    வடவள்ளி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு எந்தெந்த இடத்தில் சிலை வைக்கப்பட்டதோ, அதே இடத்தில் தான் வைக்க வேண்டும். மற்ற இடங்களில் வைக்ககூடாது.

    மேலும் தாங்கள் வைக்க கூடிய சிலைகளை மிகவும் பாதுகாப்புடன் பார்த்து கொள்ள வேண்டும். சிலை வைத்திருக்கும் இடத்ைத சுற்றிலும் தகரம் வைத்து அடைத்து விட வேண்டும். அங்கு எளிதில் தீப்பற்றக்கூ டிய பொருட்களை வைக்க கூடாது. அங்கு தீயணைப்பு கருவியையும் வைத்திருக்க வேண்டும்.

    இதுதவிர விநாயகர் சிலை வைத்திருக்கும் இடத்தை சுற்றிலும் கண்காணிப்பு காமிராக்களும் பொருத்த வேண்டும். 3 நாட்களுக்கு மேல் சிலைகளை வைக்க கூடாது. 3 நாட்களுக்குள் எடுத்து சென்று கரைத்து விட வேண்டும் என்பன உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    • புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி சிறப்பாக உள்ளது
    • இதற்கு சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

    புதுச்சேரி:

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி சிறப்பாக உள்ளது என்றும், புதுவை மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் குழப்பம் விளைவிக்க சமூக அமைப்புகள் முயன்று வருவதாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கருத்து தெரிவித்து இருந்தார்.

    இதற்கு சில சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். மன்னிப்பு கேட்காவிட்டால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது என்று மிரட்டல் விடுத்து இருந்தன.

    இது பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், வி.பி.ராமலிங்கம், அசோக்பாபு, வெங்கடேசன், ரிச்சர்ட் மற்றும் பா.ஜனதா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அங்காளன், சிவசங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.வை மிரட்டியது உரிமை மீறல் பிரச்சினை. எனவே மிரட்டல் விடுத்த அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருமித்த கருத்தை கூறினர். இதைத்தொடர்ந்து பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் செல்வத்தை சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ.வை மிரட்டிய சமூக அமைப்பு கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    மனுவை பெற்றுக்கொண்ட சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் அவர் கூறும் போது, புதுவையில் 1567 அமைப்புகளை தடை செய்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீறி செயல்படுவர்கள் கைது செய்யப்படுவார்கள் எச்சரிக்கை விடுத்தார்.

    ×