search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபாயம்"

    • கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.
    • தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகரில் மஞ்சக்குப்பம், திருப்பாதி ரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வணிக வளாகங்கள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் 100-க்கண க்கான வாகனங்கள் மூலமாக பல்வேறு பொரு ட்கள் கொண்டு வரப்பட்டு, கடைகளில் பொருட்களை ஏற்றி, இறக்கி வருகின்றனர் கடலூர் மாநகராட்சி சார்பில் பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. தற்போது கட்டணம் வசூலிக்க வரும் நபர்கள் பெரும்பாலானோர் வாலிபர்களாக உள்ளனர்.  4 மணி நேரமும் வாகனங்கள் மூலம் பொருட்கள் கொண்டுவரும் நிலையில் பணம் வசூலிக்கும் வாலிபர்கள் வாகன டிரைவர்களிடம் சீட்டு வழங்கி அதற்கான கட்டண தொகை வசூல் செய்கின்றனர். கட்டணம் வசூல் செய்யும் வாலிபர்கள் அடாவடியாக வாகன ஓட்டுனர் மற்றும் கடை உரிமையாளர்களிடம் பணம் வசூல் செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக அடா வடியாக வசூல் செய்யும் வாலிபர்களிடம் ஏன்? இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறீர்கள், பணம் கேட்டால் கண்டிப்பாக வழங்கப்படும். ஆனால் சில நேரங்களில் வேலை பளு காரணமாக சில நிமிடங்கள் காலதாமதமானால் இது போன்ற அடாவடியாக வசூல் செய்வதால் அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அவர்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் தொ டர்ந்து அடாவடிப்போக்கில் கட்டண வசூல் செய்வதால் நாளடைவில் பெரிய அளவிலான சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினருக்குள் வாக்குவாதம் ஏற்படும் சமயத்தில் தகராறாக மாறி கடும் பாதிப்பை ஏற்படும் நிலையும் உருவாக்கி வருகின்றது. இது சம்பந்தமாக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் தனி கவனம் செலுத்தி, கட்டணம் வசூல் செய்யும் நபர்களிடம் ஒழுங்கான முறையில் பணம் வசூல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என கடும் எச்சரிக்கை விடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வணிகர்களும் வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும், இது போன்ற நடவடிக்கையில் தொடர்ந்து அதிகரித்தால் வணிகர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப் பெரிய போராட்டத்தை கையில் எடுக்கும் நிலை ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
    • கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது.

    ஊட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்களுக்கு வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் ஊட்டி நகரையே பலமுறை சுற்றி வரும் நிலையே காணப்படுகிறது.

    இந்த நிலையில் கோடப்பமந்து கால்வாயின் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி முடிந்த பின்பும், பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் அந்த சாலையில் வாகனங்களை நிறுத்த முடியாமலும், வாகனங்கள் செல்வதற்கும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுத்து அங்கு இருக்கும் கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சாலையை மறித்து சினிமா பேனர்கள் வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
    • எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பேருந்து நிலைய மேம்பாலம் அருகில், தேசிய நெடுஞ்சாலையில், சாலையை மறித்து சினிமா பேனர்களை வைத்துள்ளனர்.

    இதனால் அவ்வழியே செல்பவர்கள் போஸ்டரை பார்த்து செல்லும் சமயத்தில் பின்னால் வேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்தும், நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் மோதும் அபாயமும் உள்ளது.

    அப்பகுதியில் ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் கடைக்காரர்கள், சினிமா தியேட்டர் ஆக்கிரமிப்பு இருப்பதாகவும், அதில் சாலையை மறித்து சினிமா பேனர்கள் வைத்துள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் அருகிலேயே நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் காவேரிப்பட்டினம் ஒன்றிய அலுவலகம் உள்ளது. ஆனால் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    உடனடியாக இந்த பேனர்களை அகற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு விஷால் நகர் பகுதியில் வீடு மற்றும் தோட்டங்கள் நிலங்களில் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு பன்றி ஒன்று இறந்து கிடந்தது. இதனால் இப்பகுதியில்துர்நாற்றம் வீசி வருகிறது.

    விழுப்புரம்:

    திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட 1வது வார்டு விஷால் நகர் பகுதியில் பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன. இந்த பகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இதனால் வீடு மற்றும் தோட்டங்கள் நிலங்களில் பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பன்றி ஒன்று இறந்து கிடந்தது. இதனால் இப்பகுதியில்துர்நாற்றம் வீசி வருகிறது

    . இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இந்த பகுதியில் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் பன்றிகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி கழக அதிகாரிகள் துப்புரவு தொழிலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

    • மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் முதல் கொண்டை ஊசி வளைவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
    • அதிவேகமாக வரும் வாகனங்களால் வன உயிரினங்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வு ஏற்படுகிறது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரு வனச்சாலைகள் உள்ளன. ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இந்த சாலையில் எப்போதும் வாகனங்கள் அனிவகுத்து சென்று வருகின்றன.

    குறிப்பாக மேட்டுப் பாளையம்-குன்னூர் சாலையை அதிகளவில் வாகன பயன்பாடு உள்ளது. அதே சமயத்தில் இந்த சாலை அடர் வனத்தில் இருப்பதால் யானை, மான், குரங்கு, சிறுத்தை உள்ளிட்ட வன உயிரினங்கள் அவ்வப்போது சாலையை கடக்கும் நிலையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் வன உயிரினங்கள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் நிகழ்வு ஏற்படுகிறது.

    அத்துடன் இந்த சாலையில் ஏழு கொண்டை ஊசி வளைவுகள் உள்ளதால் இந்த வளைவுகளில் அடிக்கடி வாகனங்களும் ஒன்றொடு ஒன்று மோதி விபத்து ஏற்படுவதுடன் பள்ளத் தாக்கில் கவிழும் நிலையும் இருந்து வருகிறது. எனவே கொண்டை ஊசி வளைவில் வரும் வாகனங்கள் அந்த வளைவுக்கு முன்னரே வாகனங்கள் வருவதை அறிந்து கொள்ளவும், வன உயிரினங்கள் அந்த வழியாக வருவதை தவிர்க்கவும் சாலை ஓரத்தில் தானியங்கி ஒலிபெருக்கி கருவி தேசிய நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டது.

    இதன் மூலம் வாகன விபத்துகள் தவிர்க்கப்படும் என கூறி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் முதல் கொண்டை ஊசி வளைவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. திட்டம் தொடங்கி ஓரா ண்டு கூட முழுமை பெறாத நிலையில் தற்போது அந்த தானியங்கி ஒலிபெருக்கி முற்றிலும் பழுது பட்டு எந்த பயனும் இன்றி முடங்கியுள்ளது.

    கொண்டை ஊசி வளைவு முன்பே சோலார் மூலம் இயங்கும் சென்சார் பொருத்தபட்டு அந்த வழியாக ஒரு வாகனம் கொண்டை ஊசி வளைவி னை கடக்கும் போது சென்சார் மூலம் தானாகவே ஒலி பெருக்கி இயங்கி வாகனம் வருவதை அறிவிக்கும் அதுமட்டுமின்றி அங்குள்ள சிக்னல்கள் மற்றும் அறிவுப்பு பலகை ஆகியவை ஒரே சமயத்தில் இயங்கும். இது மேலே இருந்து வரும் வாகனங்கள் மற்றும் கீழே இறங்கும் வாகனங்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்படுத் தப்பட்டிருந்தது. ஆனால் அதனை முறையாக நெடுஞ்சாலைத்துறை பராமரிக்க தவறியதால் அது இப்போது பயன்பட்டில் இல்லாமல் முடங்கியுள்ளது.

    தற்போது சாலை வாகனங்களை வந்தால் சிக்னல் கொடுக்கும் சென்சார்கள் மற்றும் டிஜிட்டல் அறிவிப்பு பலகை, ஒலிப்பெருக்கி என எதுவும் செய ல்பாட்டில் இல்லாததால் இந்த திட்டம் பயன்பாடு இன்றி உள்ளது. இனிவரும் காலம் கோடை சீசன் என்ப தால் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என ஆயிரக்க ணக்கானோர் ஊட்டிக்கு வருவார்கள். எனவே விபத்துகளை தடுக்க அதற்குள் இந்த தானியங்கி ஒலிபெருக்கி அலாரம் திட்டத்தை பய ண்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அருகே எரவாஞ்சேரி ஊராட்சி, தேவங்குடியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.

    இந்த குடிநீர் தொட்டியில் குழாய்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் கீழத்தெரு, நடுத்தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது பழுதடைந்து காணப்படுகிறது.

    இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நேரடியாக மோட்டாரில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த மோட்டார் குளத்திற்கு அருகில் இருப்பதால் குளத்தில் உள்ள கழிவுநீர் குழாய்களில் வருகிறது.

    இதனால் தொற்று நோய் பரவும் அபாய நிலை உள்ளது.

    இந்த தொட்டியின் அருகே ஆபத்தை உணராமல் சிறுவர்கள் விளையாடி கொண்டிருக்கின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அபாயகரமான நிலை
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் கிராமத்தில் அமைந்துள்ள கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் 1991 இல் அமைக்கப்பட்டு, சுமார் 149 உறுப்பினர்களை கொண்டு சங்கம் நடைபெற்று வருகிறது.இதில் கிராமத்தை சார்ந்த நெசவாளர்கள் சொந்தமாக கைத்தறி நெசவு செய்து சேலை நெய்து அதை இந்த சங்கத்தின் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். தற்பொழுது இயங்கி வரும் இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதை பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை. நேற்று திடீரென அதில் உள்ள முன் சுவர் இடிந்து விழுந்தது. நல்ல வேலையாக உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டவில்லை.இது குறித்து பணி புரியும் மேனேஜர் எழுத்தர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது, நாங்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். மேலும் இதை உடனடியாக சீரமைத்து நிதி ஒதுக்கி புதிய கட்டிடம் கட்ட உதவ வேண்டும் என்று நெசவாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பேச்சிப்பாறை அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதியான கொட்டாரம் ஜேக்கப்பிளாக் புரவு பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
    • உடனடியாக தண்ணீர் திறந்து விடாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட விவசாய பாசனத்துக்காக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணை தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணை தண்ணீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் போக சாகுபடியான கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த அணைகளில் இருந்து நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய், தோவாளை கால்வாய், புத்தனாறு கால்வாய், அனந்தன் கால்வாய் உள்பட பல கால்வாய்களில் விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

    இதில் தோவாளை கால்வாயின் கடை வரம்பு பகுதி யான கொட்டாரம் ஜேக்கப் பிளாக் புரவு பகுதி யில் உள்ள கொட்டாரம், பொட்டல்குளம், பெரிய விளை, சுந்தரபுரம் போன்ற பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் கும்பப்பூ சாகுபடிக்கான நெல்பயிரிடப்பட்டு உள்ளது. தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதியில் உள்ள நிலப்பாறையில் இருந்து கூண்டு பாலம் வழியாக செல்லும் கிளை கால்வாய் மூலம் இந்த ஜேக்கப் பிளாக் கடை வரம்புபகுதியில் உள்ள வயல்களுக்கு தினமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்த பிறகும் இந்த கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு ராதாபுரம் கால்வாயில் திறந்து விடப்பட்டுஉள்ளது. ஜேக்கப் பிளாக் புரவு பகுதியில் நெற் பயிர்கள் பயிரிடப்பட்டு 40 நாட்கள்ஆகிவிட்டன. இதனால் இந்த நெற் பயிர்கள் கருநடவு பருவத்தை கடந்துவிட்ட நிலையில் உள்ளது. சில இடங்களில் இந்த நெற் பயிர் தற்போது பொதியும் கதிருமான பருவத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஜேக்கப் பிளாக் புரவின் கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படாததால் வயல்வெளிகள் தண்ணீரின்றி வெடிப்பு விழுந்து வறண்டு காணப் படுகிறது.

    அதுமட்டுமின்றி தண்ணீர் இல்லாமல் பொதியும் கதிருமான பருவத்தை எட்டிஇருக்கும் சூழ்நிலையில் நெற் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.இதனால் விவசாயிகள்கவலை அடைந்துள்ளனர். விவசாயி கள் தினம் தினம் தங்களது வயலுக்கு சென்று தண்ணீர் வராதா! தண்ணீர் வராதா! வாடிய பயிரை காப்பாற்ற முடியாதா? என்று எதிர் பார்த்தபடி காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    பேச்சிப்பாறை அணை யில் போதிய அளவு தண்ணீர் இருந்த பிறகும் தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதியான கொட்டாரம் ஜேக்கப்பிளாக் புரவு பகுதிக்கு தண்ணீர் திறந்து விடாமல் ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுவது ஏன்? அதுவும் சுழற்சி முறையில் வாரத்துக்கு ஒருமுறை இந்த பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடுவதன் மர்மம் என்ன? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன் பிறகும் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ள நெல் பயிரை காப்பாற்றஉடனடி யாக தண்ணீர் திறந்து விடா விட்டால் போராட்ட களத்தில் குதிப்பதற்கும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

    • புல், பூண்டுகள் ஏராளமாய் மண்டிய நிலையில் புதர்களாக காட்சி அளிக்கின்றன.
    • கிராமமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அரையபுரம் கேட்டுத்தெரு பகுதியில் தெருவாசிகள் பயன்படுத்தி வரும் குடிநீர் பம்புகள், மினிடேங்க் அருகே புல், பூண்டுகள், ஏராளமாய் மண்டிய நிலையில் புதர்களாக காட்சி அளிக்கின்றன.

    இதனால் குடிநீர் பம்புகளை பயன்படுத்தும் கிராம மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அச்சத்தில் உள்ளனர்.

    எனவே உடனடியாக பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் மினிடேங்க் மற்றும் குடிநீர் குழாய் அருகே மண்டியுள்ள புல், பூண்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை சீரமைக்க கோரி வீரப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
    • இங்கு 1500-க்கும் மேற்பட்டோர் இருப்பதால் காவிரி தண்ணீரை மேல்நிலைத்தொட்டிக்கு அனுப்பி சப்ளை செய்யப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரப்பட்டி கிராமத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டது. இந்த கிராமத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் இருப்பதால் காவிரி தண்ணீரை மேல்நிலைத் தொட்டிக்கு அனுப்பி சப்ளை செய்யப்படுகிறது. சில மாதங்களாக குடிநீர் நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டியின் அடிப்பகுதி சேதமடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.

    ேமலும் இந்த தொட்டி அருகே பாதுகாப்பு இல்லாத திறந்த வெளி கிணறு உள்ளது. 10 அடி தூரத்தில் பள்ளி இருப்பதால் மாணவ-மாணவிகள் இந்த பகுதியில் அடிக்கடி வந்து விளையாடி வருகின்றனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கிராமமக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. உயிர் பலி ஏற்படும் முன்பு மேல்நிலைத் தொட்டியை சீரமைக்க வேண்டும். திறந்த வெளியில் உள்ள கிணற்றை மூட வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • சீமை கருவேல மரங்களால் மழை வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    • நிலத்தடி நீரை விஷமாக மாற்றி கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் தன்மை கொண்டது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே மு.வேலாயுதம்பாளையம் கிராம பகுதிகளில் உள்ள நொய்யல் ஆற்றின் இரு கரையோரங்களிலும் ஏராளமான சீமை கருவேல மரங்கள் வளர்ந்து பரந்து, விரிந்து ஓங்கி நின்றபடி உள்ளதால் ஆற்றில் நீர்வரத்து அதிக அளவில் செல்லும் போது நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. மேலும் நொய்யல் ஆற்றில் செல்லும் தண்ணீர் தேங்கி மேலே எழும்பி அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் விவசாய விளை நிலங்களில் புகுந்து உயிர் சேதம், பொருள் சேதம் ஏற்படும் அபாயம் சூழ்நிலை நிலவி வருகிறது.

    மேலும் சீமை கருவேல மரங்களின் வேர்கள் மண்ணில் ஆழமாக ஊடுருவி நிலத்தடி நீரை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. இந்த மரங்களின் வேர்கள் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் தன்மை கொண்டது. மேலும் காற்று மண்டலம் முழுவதும் நச்சுத்தன்மை ஆக்கி சுற்று பகுதி முழுவதும் பரவும் ஆற்றல் கொண்டது.

    நொய்யல் ஆற்றின் இரு கரையோரங்களிலும் வளர்ந்து உள்ள சீமை கருவேல மரங்களால் மழை வளம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு சீமை கருவேல மரங்களை முற்றிலும் வெட்டி அகற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்என்று விவசாயிகள், கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குடிநீர் குழாய் தொட்டியில் மோதி கீழே விழும் அபாயம் உள்ளது.
    • குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி நகராட்சி அன்னசாகரம் செல்லும் சாலையில் குடிநீர் குழாய் வால்வுக்காக அமைக்கப்பட்ட தொட்டி யின் மூடி உடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் சாலையை கடப்பவர்கள் சாலையின் நடுவே குழி இருப்பதை அறியாமல் குடிநீர் குழாய் தொட்டியில் மோதி கீழே விழும் அபாயம் உள்ளது.

    அன்னசாகரம் சாலையை காரவோனி, மாதேமங்கலம், வெங்கடம்பட்டி, குட்டூர், எட்டியானூர், எட்டிமருத்துப்பட்டி, கொமத்தம்பட்டி, உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அசம்பாவிதங்கள் நிகழ்வ தற்கு முன் வால்வு சிலாப்பினை சீரமைத்து குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×