search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டாரம்"

    • அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள கன்னி விநாயகர் புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பத்மாவதி
    • மோட்டார் சைக்கிளை பத்மாவதி ஓட்டிச்சென்றார். அவர் மகள் தமிழிசை பின்னால் அமர்ந்து இருந்தார்.


    நாகர்கோவில் :அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள கன்னி விநாயகர் புரத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி பத்மாவதி (வயது 45). இவரும், இவரது மகள் தமிழிசை (25) என்பவரும் நேற்று மாலை காவல்கிணற்றில் இருந்து தனது சொந்த ஊரான அகஸ்தீஸ்வரம் கன்னி விநாயகர்புரத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பத்மாவதி ஓட்டிச்சென்றார். அவர் மகள் தமிழிசை பின்னால் அமர்ந்து இருந்தார். இவர்களது மோட்டார் சைக்கிள் கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளை டாஸ்மாக் மதுக்கடை அருகில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது இவர்களது மோட்டார் சைக்கிள் மீது எதிரே கிருஷ்ணன்புதூரை சேர்ந்த டூலிப் ஆன்றோ (34) என்பவர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் பத்மாவதியும், தமிழிசையும் தூக்கி வீசப்பட்டனர். இதற்கிடையில் பின்னால் வந்த வாகனம் ஒன்று பத்மாவதி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயம் அடைந்த பத்மாவதி தனது மகள் தமிழிசை கண் எதிரே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் தமிழிசை புகார் செய்தார். அதன்பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணை நடத்தினார்கள். அதன்பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. அங்கு அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 4 ஆண்டாக கிடப்பில் போடப்பட்ட பணி மீண்டும் தொடங்கியது
    • வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-நாகர்கோ வில், காவல்கிணறு- நாகர்கோவில், நாகர்கோவில்-வில்லுக்குறி, வில்லுக்குறி-உச்சக்கடை என 4 பிரிவுகளாக நான்கு வழிச்சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முற்றிலும் புதிய வழித்தடமாக அமையும் இந்த சாலை நீர் நிலைகளை பாதிக்கும் என்றும் எனவே ஏற்கனவே இருக்கும் என்.எச்.47 சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் பல்வேறு வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டன. பின்னர் இந்த வழக்குகள் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அனுப்பப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் கமிட்டி ஆய்வு செய்து அளித்த அறிக்கை யின்படி நீர்நிலைகள் பாதிக் காமல் பாலங்கள் அமைத்து கொள்ள பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்தது. இதில் குமரி மாவட்டத்தில் 29 பெரிய பாலங்களும், 12 சிறிய பாலங்களும், 2 இடங்க ளில் தண்ணீர் செல்லும் குழாய்களும், 75 பெரிய கல்வெர்ட்களும் 8 இடங்களில் சிறியகல்வெர்ட்களும் அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

    அந்த அடிப்படையில் இந்த 4 வழிசாலை பணிக்காக குமரி மாவட்டத்தில் உள்ள தாம ரைக்குளம், பொட்டக் குளம், புதுக்குளம், நட்டாலம் மவுதக்குளம், மாம்பள்ளி குளம், செட்டிகுளம், பகவதிக்குளம், ரெட்டை குளம், அரசமுத்துகுளம், பிலாஞ்சேரிகுளம், வெள்ளி யாகுளம், பாம்பாட்டிகுளம், செல்லாக்குளம்-1, செல்லா க்குளம்-2, நாச்சியார்குளம், கரிச்சான்குளம், அம்பலத்தடி குளம், குதிரை பாஞ்சான் குளம், அனந்தன்குளம்-1, அனந்தன்குளம்- 2, தேவன் குளம், பாணாகுளம், சுந்தர நைனார்குளம், நிலப் பாறைக்குளம், கிருஷ்ண சமுத்திரகுளம், புத்தேரிகுளம், பிராந்த நேரிகுளம், புரு ஷோத்தமநேரிகுளம், தாணு மாலையன்குளம், புளி யன்குளம், கண்டுகிருஷிகுளம், பள்ளக்குளம், ராஜேந்திரிகுளம், மந்தாரம்புதூர் குளம், தேவகுளம், கவற்குளம், அகஸ்தியர்குளம், பன்னிக்குண்டுகுளம், நுள்ளி குளம் ஆகிய குளங்களில் பாலம் அமைக்க பசுமை தீர்ப்பாயம் ஆணையிட்டுள்ளது.

    இந்த பாலங்களை அமைக்க கூடுதலாக ரூ.490 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தியர்குளம், பொற்றையடி பள்ளக்குளம் உள்பட பல குளங்களில் 4 வழிசாலைக்காக பாலங்கள் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளது. இதற்காக இந்த குளங்களில் மேம்பாலங்கள் அமைப்பதற்காக ராட்சத எந்திரங்கள் மூலம் சிமெண்ட் பிளாக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையி லான நான்கு வழிசாலையில் கொட்டாரம்-அகஸ்தீஸ்வரம் சாலையின் குறுக்கே வடுகன் பற்று பகுதியில் மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் இருபுறமும் மண் நிரப்பி இணைப்பு சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் கொட்டாரம் பகுதியில் நான்கு வழி சாலை முழுமை அடையாமல் இருந்தது.

    இந்த நிலையில் 4 வருடங்க ளுக்கு பிறகு கொட்டாரம் நான்கு வழிச்சாலை மேம் பாலத்தை இணைக்கு வகையில் தற்போது இருபுற மும் ஏராளமான டாரஸ் லாரிகள் மூலம் மண் கொண்டு வந்து நிரப்பப்பட்டு "ரோடுரோலர்" மூலம் இணைப்பு சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வரு கிறது. கொட்டாரம் பகுதியில் நடந்து வரும் இந்த நான்கு வழிசாலை மேம்பால இணைப்பு சாலை அமைக்கும் பணிகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் என்ஜீ னியர்கள் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    • பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்டனர்.
    • கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள மறுகால் ஓடை மற்றும் பொதுமக்கள் குளிக்கும் படித்துறை உடைந்து சேதம் அடைந்த நிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப் படாமல் கிடந்தது. இதனால் பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்ட னர். இதைத் தொடர்ந்து குளத்தின் படித்துறை மற்றும் மறுகால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று சமூக ஆர்வலர் வக்கீல் சந்திர சேகரன் ஏற்பாட்டில் மறு கால் சீரமைப்பு பணி தொடங்கியது.

    இந்த பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவி விமலா, நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மதி, காங்கிரஸ் வட்டார துணை தலைவர் அரி கிருஷ்ண பெருமாள், தி.மு.க. நிர்வா கிகள் முருகன், சாமிநாதன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டு பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
    • வெறி நாயை உடனடியாக பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொட்டாரம் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் கொட்டாரம், அகஸ்தீஸ்வரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொது மக்கள் 26 பேரை வெறி நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்து உள்ளது. வெறிநாய் கடியினால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போட்டு பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

    கொட்டாரம் சுற்று வட்டார பகுதியில் சுற்றி திரியும் அந்தவெறி நாய் சிவப்புநிறம் உடைய தாகவும் வாயில் கருப்பு நிறம் உள்ளதாகவும் கழுத்து பகுதியில் நீல நிறம் உள்ள கயிறு அணியப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.எனவே கொட்டாரம் சுற்று வட்டார பகுதியில் சுற்றி திரிந்து கொண்டிருக்கும் அந்த வெறி நாயை உடனடியாக பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொட்டாரம் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.

    • விவசாயிகள் மகிழ்ச்சி
    • அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடியான கும்பப்பூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக கொளுத்திய கடும் வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தன. இந்த நிலையில் முதல் போக சாகுபடியான கன்னிபூ சாகுபடிக்காக கால்வாய்கள் தூர்வாரப்படாமல் கடந்த ஜூன் மாதம் 1-ந்தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது.

    இதில் நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் தூர்வாரப்படாததால் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கால்வாயை தூர்வாரி கடைவரம்பு பகுதி வரை தண்ணீர் தடங்கல் இன்றி வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் எனப்படும் என்.பி. கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்தது. இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பால் அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால்வாய் மற்றும் பள்ளக்கால்வாய் பகுதி வரை 24 கிலோ மீட்டர் 560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடந்து முடிந்தது.

    இதைத்தொடர்ந்து விவசாய பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து கொட்டாரம் புத்தனாறு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொட்டாரம் பகுதியில் உள்ள புத்தனாறு கால்வாயில் தண்ணீர் இருபுறமும் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து கொட்டாரம் கடைவரம்பு பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கன்னிபூ சாகுபடி விவசாயப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகின்றன.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • இந்த கோவிலில் 30-வதுஆண்டுஸ்ரீராமநவமி விழா 2 நாள் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் நந்தவனத்தில் ஸ்ரீ ராமர் கோவில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையஆட்சித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் 30-வதுஆண்டுஸ்ரீராமநவமி விழா 2 நாள் நடந்தது.

    முதல் நாள் மங்கள இசையும் அதைத்தொடர்ந்து கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் காலை 7 மணிக்கு அபிஷேக மும், 7.30 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அதன் பின்னர் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அகண்ட ராம நாம ஜெபமும், மாலை 6.30 மணிக்கு தீபாராதனையும், இரவு 7 மணிக்கு பல்சுவை பட்டிமன்றமும், 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்குதலும் நடந்தது.

    2-வதுநாள் மங்கள இசையும் அதைத் தொடர்ந்து கலச பூஜையும், நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு சிறப்பு பஜனையும், கலை 9.30 மணிக்கு அபிஷே கமும், 11.15மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. அதன் பின்னர் 5.15 மணிக்கு ஸ்ரீராமஜெயம் எழுத்து போட்டியும் நடந்தது. 11.30 மணிக்கு மகா அன்னதான மும் நடந்தது. மாலையில் சமயசொற்பொழிவும், தீபா ராதனையும் நடந்தது.அதன் பிறகு ஸ்ரீ ராமநாம சங்கீர்த்த னமும் சாயராட்சை தீபாராதனையும், இரவு ராமபெருமானுக்கு பிச்சி, முல்லை, மல்லிகை, மரிக்கொழுந்து, ரோஜா, துளசி, பச்சை, கொழுந்து, அரளி, தெற்றிபூ போன்ற பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடந்தது.

    அதன் பின்னர் ஸ்ரீராம ருக்கு ஊஞ்சலில்தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து தீபாராதனை மற்றும் பக்தர் களுக்கு அருட்பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவுக்கான ஏற்பாடு களை கொட்டாரம் ஸ்ரீராமர் கோவில் பக்தர்கள் சங்கத்தினர் செய்து இருந்தனர்.

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் 7 மணி நேரம் விசாரணை
    • போலீசார் மடக்கி பிடித்தனர்.

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவிற்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமா, சிவசங்கரி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை கொட்டாரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றனர் அப்போது சார் பதிவாளர் பொறுப்பு அன்வர்அலி வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார்.

    கொட்டாரத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அன்வர்அலியை மந்தாரம்புதூர் பகுதியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அன்வர் அலியிடம் லஞ்ச ஒழிப்புபோலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அவரிடம் இருந்து ரூ.41 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். மாலை 6 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 1 மணி வரை நீடித்தது.நேற்று ஒரே நாளில் 30 பத்திர பதிவுகள் நடந்துள்ளது. அதில் ஏதாவது பணம் பெறப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    மேலும் பணம் வாங்கிய தற்கான சில ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த 15 நாட்களாக தான் சார்பதிவாளர் பொறுப்பு பணியை அன்வர்அலி கவனித்து வருகிறார். இந்த நிலையில் அவர் லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கி யிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அன்வர்அலி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீ சார் பரிந்துரை செய்துள்ளனர். எனவே அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது. நேற்று முன்தினம் வடசேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் பெண் கிராம நிர்வாக அதிகாரி ஒருவரிடம் இருந்து ரூ.17,743 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது சார்பதி வாளர் அலுவ லகத்திலும் பணம் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர்

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜமணி (வயது 75).

    இவர் சம்பவத்தன்றுஇரவு கொட்டாரம் பெருமாள்புரம் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் இவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்ப த்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில்கன்னியாகுமரி போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் அவரது உடல்ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்பிரேதபரிசோதனைசெய்யப்பட் டது. இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தீயணைக்கும் படையினர் போராடி அகற்றினர்
    • நேற்று மாலை “திடீர்” என்று சூறாவளி காற்று வீசியது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் சந்திப்பில் இருந்து வட்டக்கோட் டைக்கு செல்லும் சாலையில் உள்ள லெட்சுமிபுரம் சந்திப்பில் 100ஆண்டு பழமை வாய்ந்த நாவல்மரம் ஒன்று உள்ளது.

    இந்த மரத்தில் உள்ள ராட்சத மரக்கிளை நேற்று மாலை "திடீர்" என்று வீசிய சூறாவளி காற்றில் நடுரோட்டில் முறிந்து விழுந்தது. இந்த மரக்கிளை கொட்டாரம் சந்திப்பில் இருந்து வட்டகோட்டை செல்லும் சாலையும் கொட்டாரம் பெருமாள் புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் முன்புஇருந்து பொட்டல் குளம் செல்லும் சாலையும் சந்திக்கும் நான்கு முக்கு ரோடு சந்திப்பில் முறிந்து விழுந்ததால் அந்தப் பகுதியில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஆனால் அந்தப் பகுதியில் மரம் முறிந்து விழும்போது எந்தவித வாகனங்களும் செல்லாததால்பெரும்உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுபற்றி தகவல்அறிந்ததும் கன்னியாகுமரிதீயணைக் கும்படைவீரர்கள்சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று பல மணி நேரம்போராடி அந்த ராட்சத மரக்கிளை களை உடனடியாகவெட்டிஅப்புறப்படுத்தினார்கள்.

    அதன் பிறகு அந்த பகுதியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

    • தரமான கரும்பு ஒன்று ரூ.50 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது.
    • கொட்டாரம் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி:

    தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் இடும்போது சூரிய பகவானுக்கு படைப்பதற்கு முக்கிய பொருளாக மஞ்சள்குலை மற்றும் கரும்பு பயன்படுத்தப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி வெளி மாவட்டங்களில் இருந்து தான் இதுவரை குமரி மாவட்டத்துக்கு மஞ்சள் குலை மற்றும் கரும்புகள் சந்தைகளில் விற்பனைக்காக வந்து குவிந்த வண்ணமாக இருந்தன.

    ஆனால் இதுவரை நெல்பயிர், வாழை மற்றும் தென்னை சாகுபடி செய்யும் பணியில் மட்டும் ஈடுபட்டு வந்த கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பகுதி விவசாயிகள் தற்போது மஞ்சள்குலை மற்றும் கரும்பு போன்றவற்றை பயிரிடும் பணியில் கடந்த 6 மாதங்களாக தீவிர மாக ஈடுபட்ட னர். நெல் பயிர் மற்றும் வாழை, தென்னை போன்ற சாகுபடியில் போதிய வருவாய் கிடைக்காததால் விவசாயிகள் மாற்று பயிரான கரும்பு மற்றும் மஞ்சள் செடிகளை பயிரிடும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அதன் அடிப் படையில் கொட்டாரம் பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான கரும்புகள் மற்றும் மஞ்சள் குலைகளை பயிரிட்டு உள்ள னர்.இந்த கரும்பு மற்றும் மஞ்சள் குலைகள் தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் கரும்பு மற்றும் மஞ்சள் குலைகளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மஞ்சள் குலை மற்றும் கரும்புகளை விவசாயிகள் அறுவடை செய்து கட்டு கட்டாக கட்டி டெம்போ மற்றும் லாரிகள் மூலம் சந்தைகளுக்கு அனுப்பிய வண்ணமாக உள்ளனர். தரமான கரும்பு ஒன்று ரூ.50 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது.

    • பேச்சிப்பாறை அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதியான கொட்டாரம் ஜேக்கப்பிளாக் புரவு பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
    • உடனடியாக தண்ணீர் திறந்து விடாவிட்டால் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட விவசாய பாசனத்துக்காக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணை தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணை தண்ணீரை நம்பி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாம் போக சாகுபடியான கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த அணைகளில் இருந்து நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய், தோவாளை கால்வாய், புத்தனாறு கால்வாய், அனந்தன் கால்வாய் உள்பட பல கால்வாய்களில் விவசாய பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

    இதில் தோவாளை கால்வாயின் கடை வரம்பு பகுதி யான கொட்டாரம் ஜேக்கப் பிளாக் புரவு பகுதி யில் உள்ள கொட்டாரம், பொட்டல்குளம், பெரிய விளை, சுந்தரபுரம் போன்ற பகுதிகளில் சுமார் 300 ஏக்கரில் கும்பப்பூ சாகுபடிக்கான நெல்பயிரிடப்பட்டு உள்ளது. தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதியில் உள்ள நிலப்பாறையில் இருந்து கூண்டு பாலம் வழியாக செல்லும் கிளை கால்வாய் மூலம் இந்த ஜேக்கப் பிளாக் கடை வரம்புபகுதியில் உள்ள வயல்களுக்கு தினமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்த பிறகும் இந்த கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு ராதாபுரம் கால்வாயில் திறந்து விடப்பட்டுஉள்ளது. ஜேக்கப் பிளாக் புரவு பகுதியில் நெற் பயிர்கள் பயிரிடப்பட்டு 40 நாட்கள்ஆகிவிட்டன. இதனால் இந்த நெற் பயிர்கள் கருநடவு பருவத்தை கடந்துவிட்ட நிலையில் உள்ளது. சில இடங்களில் இந்த நெற் பயிர் தற்போது பொதியும் கதிருமான பருவத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஜேக்கப் பிளாக் புரவின் கடைவரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படாததால் வயல்வெளிகள் தண்ணீரின்றி வெடிப்பு விழுந்து வறண்டு காணப் படுகிறது.

    அதுமட்டுமின்றி தண்ணீர் இல்லாமல் பொதியும் கதிருமான பருவத்தை எட்டிஇருக்கும் சூழ்நிலையில் நெற் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுஉள்ளது.இதனால் விவசாயிகள்கவலை அடைந்துள்ளனர். விவசாயி கள் தினம் தினம் தங்களது வயலுக்கு சென்று தண்ணீர் வராதா! தண்ணீர் வராதா! வாடிய பயிரை காப்பாற்ற முடியாதா? என்று எதிர் பார்த்தபடி காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    பேச்சிப்பாறை அணை யில் போதிய அளவு தண்ணீர் இருந்த பிறகும் தோவாளை கால்வாயின் கடைவரம்பு பகுதியான கொட்டாரம் ஜேக்கப்பிளாக் புரவு பகுதிக்கு தண்ணீர் திறந்து விடாமல் ராதாபுரம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடுவது ஏன்? அதுவும் சுழற்சி முறையில் வாரத்துக்கு ஒருமுறை இந்த பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடுவதன் மர்மம் என்ன? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். இதன் பிறகும் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ள நெல் பயிரை காப்பாற்றஉடனடி யாக தண்ணீர் திறந்து விடா விட்டால் போராட்ட களத்தில் குதிப்பதற்கும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

    • திருமணம் ஆகாத விரக்தியில் பரிதாபம்
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள செல்வன்புதூரைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் ரமேஷ் (வயது 29). இவர் டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் வாழ்க்கையில் விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மது போதையில் தனது வீட்டுக்கு வந்து உள்ளார்.இரவுஅவர் தனது வீட்டில்படுத்து தூங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்றுஅவர் வெகு நேரமாகியும் எழும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×