search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டாரம் அருகே சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பரிதாப சாவு
    X

    கோப்பு படம் 

    கொட்டாரம் அருகே சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பரிதாப சாவு

    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர்

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜமணி (வயது 75).

    இவர் சம்பவத்தன்றுஇரவு கொட்டாரம் பெருமாள்புரம் பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு கார் இவர் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்ப த்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில்கன்னியாகுமரி போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

    பின்னர் அவரது உடல்ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்பிரேதபரிசோதனைசெய்யப்பட் டது. இது குறித்து கன்னியா குமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×