என் மலர்
உள்ளூர் செய்திகள்

இடிந்து விழும் நிலையில் கைத்தறி நெசவாளர் கட்டிடம்
- அபாயகரமான நிலை
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சின்ன வளையம் கிராமத்தில் அமைந்துள்ள கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்கம் 1991 இல் அமைக்கப்பட்டு, சுமார் 149 உறுப்பினர்களை கொண்டு சங்கம் நடைபெற்று வருகிறது.இதில் கிராமத்தை சார்ந்த நெசவாளர்கள் சொந்தமாக கைத்தறி நெசவு செய்து சேலை நெய்து அதை இந்த சங்கத்தின் மூலமாக விற்பனை செய்து வருகின்றனர். தற்பொழுது இயங்கி வரும் இந்த கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதை பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்கவில்லை. நேற்று திடீரென அதில் உள்ள முன் சுவர் இடிந்து விழுந்தது. நல்ல வேலையாக உயிர் சேதம் ஏதும் ஏற்பட்டவில்லை.இது குறித்து பணி புரியும் மேனேஜர் எழுத்தர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்டபோது, நாங்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவித்தனர். மேலும் இதை உடனடியாக சீரமைத்து நிதி ஒதுக்கி புதிய கட்டிடம் கட்ட உதவ வேண்டும் என்று நெசவாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.






