search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டியில் சாலையில் குவிந்து கிடக்கும் கற்களால் விபத்து அபாயம்
    X

    ஊட்டியில் சாலையில் குவிந்து கிடக்கும் கற்களால் விபத்து அபாயம்

    • பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
    • கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது.

    ஊட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்களுக்கு வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் ஊட்டி நகரையே பலமுறை சுற்றி வரும் நிலையே காணப்படுகிறது.

    இந்த நிலையில் கோடப்பமந்து கால்வாயின் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி முடிந்த பின்பும், பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.

    இதனால் அந்த சாலையில் வாகனங்களை நிறுத்த முடியாமலும், வாகனங்கள் செல்வதற்கும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுத்து அங்கு இருக்கும் கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×