search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "young girl suicide"

    கிச்சிப்பாளையத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் எருமாபாளையம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஹேமலதா (வயது 21) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் ஹேமலதா சாணி பவுடரை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள்அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்தார்.

    இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரித்த போது தீராத வயிற்று வலியால் ஹேமலதா அவதிப்பட்டு வந்ததாகவும், அதனால் மனம் உடைந்து தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    சூலூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ளது குளத்தூர். இந்த பகுதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 31). இவருக்கும் தங்கராஜ் என்பவருக்கும் திருமணமானது. கருத்துவேறுபாட்டால் 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டனர்.

    சித்ராவின் தங்கை மகேஷ். இவர் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கணவருடன் வசித்து வருகிறார். மகேசுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு குளத்தூரில் உள்ள அக்காள் சித்ரா வீட்டுக்கு வந்தார்.

    நேற்று இரவு சித்ராவுக்கும், மகேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சித்ரா கோபித்துக்கொண்டு தனது அறைக்கு சென்று விட்டார். இன்று காலை எழுந்து பார்த்தபோது சித்ரா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காரமடை அருகே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை காரமடை அருகே உள்ள அம்சாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் நித்யா (வயது 22). இவர் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் அந்த வாலிபர் திருமண செய்ய மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த நித்யா வாழ்க்கையில் விரக்தி அடைந்து அந்த பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கிணற்றில் இருந்து நித்யாவின் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம், கல்லூரணியைச் சேர்ந்தவர் மணியம்மாள். இவரது மகள் மலர்லட்சுமி (வயது 30). இவருக்கும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் கணவன் -மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ரமேஷை விட்டு மலர்லட்சுமி பிரிந்து விட்டார்.

    கவுரிசங்கர் என்பவரை 2-வது திருமணம் செய்த மலர் லட்சுமி ராசாக்கூரில் உள்ள குடியிருப்பில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மலர் லட்சுமி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சியில் பீகார் வாலிபர் வாயில் நுரை தள்ளிய படி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் இதேபோல் பெண் மற்றும் வாலிபரும் தற்கொலை செய்து கொண்டனர்.
    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் எழில்நகர் செண்பக தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வன் (வயது 34).  பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளி. இவர் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார். இதை பெற்றோர்கள் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முத்துசெல்வன் நேற்றிரவு வீடடில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    பீகார் மாநிலத்தைசேர்ந்தவர் மகேஷ் (40).இவர் துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இன்று காலையில் அவரது அறைக்கு சென்று பார்த்த போது மகேஷ் வாயில் நுரை தள்ளிய படி மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

    இது குறித்து துவாக்குடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் கரை பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 58). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வாழ்வில் விரக்தியடைந்த கோவிந்தம்மாள் கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு சென்று விஷம் குடித்துள்ளார்.

    பின்னர் ஆற்றுப்படுகையில் பெண் மயங்கி கிடப்பதை பார்த்த நபர்கள் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் கோட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் குறுந்தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 35). இவரது மனைவி சீதா (28). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

    வெங்கடேஷ் திருப்பூரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். வெங்கடேசுக்கும், சீதாவுக்கும் குடும்ப தகராறு இருந்து வந்தது. வெங்கடேஷ் தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த போதும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் திருப்பூருக்கு சென்றார். நேற்று அவர், சீதாவிடம் போனில் பேசினார். அப்போதும் அவர்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சீதா மனம் உடைந்து காணப்பட்டார். நேற்று இரவு தனது குழந்தைகள் 2 பேரையும் தூங்க வைத்தார். பின்னர் நள்ளிரவு குளியலறைக்கு சென்ற அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இன்று காலை தாயாரை காணாமல் 2 குழந்தைகள் கண்ணீர் விட்டு கதறி அழுதன. அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு குளியல் அறையில் சீதா பிணமாக தொங்கினார்.

    இதுபற்றி கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, சப்-இன்ஸ் பெக்டர் அருளப்பன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். சீதா தற்கொலை செய்தது தொடர்பாக விசாரிக்க அவரது கணவர் வெங்க டேசை போலீசார் நாகர்கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளனர்.

    மேலும் சீதாவுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்தாரா? என்பது பற்றி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    2 குழந்தைகளை தவிக்க விட்டு சீதா தற்கொலை செய்த சம்பவம் கோட்டார் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காங்கேயம் ரோடு காங்கேயம்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 52). பனியன் தொழிலாளி. இவருடைய 3-வது மகள் பானுப்பிரியா (25). இவர் அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை தீவிரமாக காதலித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளுடைய காதல் விவகாரம் ஈஸ்வரமூர்த்திக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஈஸ்வரமூர்த்தி அந்த வாலிபரின் பெற்றோரிடம் சென்று மகளின் காதல் விவகாரம் குறித்து பேசி உள்ளார். மேலும் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது பற்றியும் பேசியதாக கூறப்படுகிறது.

    ஆனால் பானுப்பிரியாவின் காதலனின் பெற்றோர் அவர்களுடைய காதலை ஏற்கவில்லை. மேலும் திருமணத்திற்கு சம்மதிக்கவே முடியாது என்றும் கூறி உள்ளார். இந்த தகவல் பானுப்பிரியாவுக்கு தெரிந்துவிட்டது.

    இந்த நிலையில் பானுப்பிரியா தனது காதலனிடம் கேட்டபோது அவரும் சரியான பதில் கூறிவில்லை என்று தெரிகிறது. இதனால் மனம் உடைந்த பானுப்பிரியா வேலை செய்யும் அலுவலகத்திலேயே அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டார்.

    சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பானுப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

    முத்துப்பேட்டை அருகே திருமணம் முடிந்த ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அருகே உள்ள முனங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், கோட்டூரை அடுத்த இருள்நீக்கி பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    ஜெயராமன் திருமணத்திற்கு பின் மீண்டும் வெளி நாட்டிற்கு வேலைக்காக சென்று விட்டார். இதனால் பரமேஸ்வரி கணவர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது பரமேஸ்வரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து பரமேஸ்வரி தந்தை சரவணன் முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து பரமேஸ்வரி கணவர் வீட்டில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதும் காரணமா என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமேஸ்வரிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் முடிந்தது என்பதால் ஆர்.டி.ஓ.வும் தனி விசாரணை நடத்தி வருகிறார். திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்பகோணம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தை அடுத்த மணகுடியை சேர்ந்தவர் பாண்டியன், விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் பானுபிரியா (வயது 25).

    இவருக்கு பெற்றோர் மாப்பிளை பார்த்து வந்தனர். சிலர் வந்து பெண் கேட்டும் திருமணம் நிச்சயமாகவில்லை. இதனால் பாண்டியனும், அவரது மனைவியும் வேதனை அடைந்தனர். அவர்கள் இது தொடர்பாக நேற்று இரவு பேசிக் கொண்டு இருந்தனர். அதனை பானுபிரியா கேட்டதும் தனக்கு திருமணமாகாதது பெற்றோருக்கு மிகுந்த கஷ்டத்தை கொடுப்பதாக எண்ணி மனமுடைந்தார். அவர் எலி மருந்தை தின்று விட்டு படுத்து கொண்டார். இன்று காலை பானுபிரியா எலி மருந்தை தின்றது தெரியவந்தது. அவரை கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர்.

    இது பற்றிய புகாரின் பேரில் பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் அமையாததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மனகுடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை அருகே திருமணமான 15 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கணபதி பூந்தோட்டம் 2-வது வீதியை சேர்ந்தவர் சித்திரை சேர்மன். இவரது மனைவி முத்து அபிநயா(வயது 21). இவர்களுக்கு திருமண மாகி 15 நாட்களே ஆகிறது.

    சித்திரை சேர்மன் வீடு அருகே மளிகை கடை நடத்தி வருகிறார். இன்று அதிகாலை அவர் கடை திறக்கச் சென்று விட்டார். சிறிது நேரத்தில் முத்து அபிநயா வீட்டில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார்.

    இதைப்பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தனர். சம்பவஇடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். முத்து அபிநயா தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமாகி 15 நாட்களே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது. முத்து அபிநயாவின் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த உள்ளார்.

    கோவை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    திண்டுக்கல் மாவட்டம் சுக்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகள் சத்யா (வயது 20). கடந்த 6 மாதத்திற்கு முன்பு ராஜாங்கம் மனைவி, மகளுடன் கோவை துடியலூரில் உள்ள விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு வந்தனர்.

    சத்யாவுக்கும் அவரது உறவுக்காரர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதை அறிந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஜாதக பொருத்தம் இருந்தால் பார்க்கலாம் என்றனர். ஒருவேளை ஜாதகம் பொருந்தவில்லை என்றால் காதல் கைகூடாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் சத்யா இருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று சத்யா மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    முத்தியால்பேட்டையில் பிறந்த நாளுக்கு பெற்றோர் புத்தாடை வாங்கி தராததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை செயின்ட் சீமோன் பேட் காரல் மார்க்ஸ் தெருவை சேர்ந்தவர் விஜயபாலன் மீனவர். இவரது மகள் ராகினி (வயது 17). இவர் பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்ததால் தையல் பயிற்சிக்கு சென்று வந்தார். இடையில் தையல் பயிற்சிக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    கடந்த 10-ந் தேதி பிறந்த நாளையொட்டி ராகினி தனது பெற்றோரிடம் புத்தாடை வாங்கி தரும்படி கேட்டார்.

    ஆனால், அதற்கு பெற்றோர் தீபாவளி பண்டிகைக்கு 5 புத்தாடைகள் வாங்கி தந்ததால் அதில் ஒன்றை பிறந்த நாளுக்கு அணிந்து கொள்ளும்படி கூறினர்.

    இதையடுத்து பெற்றோரிடம் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று ராகினி வலியுறுத்தினார். அதற்கு பெற்றோர் அடுத்த வருடம் கேக் வெட்டி கொண்டாடலாம் என்று பெற்றோர் தட்டிக் கழித்ததாக கூறப்படுகிறது.

    மேலும் நேற்று ராகினியின் அண்ணன் விஜயராஜிக்கு புத்தாடை வாங்க பெற்றோர் பணம் கொடுத்தனர். இதனால் விரக்தி அடைந்த ராகினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    நேற்று இரவு வீட்டின் பின்பக்கத்தில் குளியல் அறையில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்கினார். அப்போது எதேச்சையாக ராகினியின் தாய் ஹேமமாலினி குளியல் அறைக்கு வந்த போது அங்கு மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து ராகினியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராகினி வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் ரமேஷ், உதவி சப்-இன்ஸ்பெக்டர் முருகையன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×