search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women Health"

    • கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.
    • கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப கால ஹார்மோன்களால் ஏற்படுகிறது

    கர்ப்ப காலத்தில் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். இந்த மாற்றங்களோடு, உடல் சில பிரத்யேக அறிகுறிகளை வெளிப்படுத்தி, சில அசௌகரியங்களுக்கு உட்படுவதையும் உணரலாம்.

    கர்ப்ப காலத்தில் தோன்றக் கூடிய பொதுவான அசௌகரியங்களுள், வயிறு, அடிவயிறு மற்றும் கால்கள் ஆகியவற்றில் உண்டாகும் தசைப்பிடிப்புகளும் ஒன்றாகும். இந்த தசைப்பிடிப்புகள் வலிமிகுந்தவையாக இல்லாதிருப்பினும், பல நேரங்களில் அசௌகரியமாக உணர்வதற்கு இவையே முக்கிய காரணிகளாகும்.

    கடுமையான தசை பிடிப்பு கர்ப்ப கால ஹார்மோன்களால் ஏற்படுகிறது. வேலை செய்யும் பெண்கள் குறிப்பாக நெடு நேரம் காலை தொங்கவிட்டபடி அமர்ந்து வேலை செய்யும் பெண்கள் சிறிது சுடுநீரில் உப்பிட்டு அதில் பாதங்களை சிறிது நேரம் வைத்துக் கொண்டிருப்பது, பாதங்களை மேல்நோக்கி லேசாக அழுத்துவது போன்றவை அவர்களுக்கு தசை பிடிப்பு வராமல் தடுக்கக்கூடிய சிறு சிறு பயிற்சிகள் ஆகும் .

    'சோம்பல் முறிப்பது' என்ற உடலை 'ஸ்ட்ரெட்ச்' செய்யாமல் இருக்க வேண்டும் . அவ்வாறு செய்தால் தசைபிடிப்பிற்கான வாய்ப்பு அதிகம். அது தவிர வெயில் காலத்தில் ஏராளமான நீர்ச்சத்து உள்ள பழங்கள் , ஜூஸ் போன்றவையும் அல்லது எதுவுமே பிடிக்காவிட்டாலும் வெறும் தண்ணீரையாவது அடிக்கடி குடித்து கொண்டே இருப்பது மிகவும் முக்கியமாகும்.

    அழுத்தம் தரக்கூடிய சூழல்களில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. ஏனெனில், உடலில் ஏற்படக்கூடிய தசைப்பிடிப்பை அதிகமாக்கக்கூடிய முக்கிய காரணங்களுள் மன அழுத்தமும் ஒன்று. மனதை அமைதியாக வைக்கக்கூடிய, இசையை ரசிப்பது போன்ற எளிய வழிமுறைகள் மூலம் எப்போதும் மனமகிழ்வோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வேலைப்பளுவைக் குறைத்து, மனதை அமைதியாக சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஹை ஹீல்ஸ் எனப்படும் குதியுயர்ந்த செருப்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். சில குறிப்பிட்ட மருந்துகள் குறிப்பாக மெக்னீசியம் உள்ள மருந்துகள் இந்த தசைப் பிடிப்புகள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன. அத்துடன் கால்சியம் மாத்திரைகளையும் சரிவர எடுத்துக் கொள்ளும் பொழுதும் இந்த தசை பிடிப்புக்கான வாய்ப்பு குறையும்.

    தசைப்பிடிப்புகளை எவ்வித சிரமுமின்றி குணமாக்க, தினமும் உணவில் பொட்டாசியம் மற்றும் கால்சியம் அதிகம் கொண்ட உணவுப் பொருள்களைக் கட்டாயமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழங்கள், அதிக பொட்டாசியச் சத்து கொண்டவையாகக் கருதப்படுகின்றன. உடலின் கால்சியத் தேவைகளுக்கு, வஞ்சிர மீன் வகைகள், பச்சை இலைகள் நிறைந்த காய்கறிகள், பாதாம் பருப்பு, பால் பொருட்கள் மற்றும் நெத்திலி மீன் வகைகளை உணவில் நிறையச் சேர்த்துக் கொள்ளலாம்.

    தொழில்முறை வல்லுநர் ஒருவரால் தரப்படும் மசாஜ், கர்ப்பப்பைத் தசைகள் மற்றும் தசைநார்கள், கெண்டைக்கால் பின் தசைகள் மற்றும் கால் தசைகளைத் தளர்த்தி, தசைப்பிடிப்புகளை நீக்கக்கூடியதாகும். தினமும் ஒரு வேளை இவ்வாறு மசாஜ் செய்து வந்தால், வலி மற்றும் அசௌகரியத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

    • மாதம்தோறும் பெண்களை வேதனைக்குள்ளாக்கும் பிரச்சனைகளில் ஒன்று மாதவிடாய்.
    • சிலருக்கு வாந்தி, செரிமானக் கோளாறு போன்றவைகளும் ஏற்படும்.

    மாதம்தோறும் பெண்களை வேதனைக்குள்ளாக்கும் பிரச்னைகளில் ஒன்று மாதவிடாய். மாதவிடாய் காலத்தில் பெண்களில் உடலில் சோர்வு, டென்ஷன், படபடப்பு, தலைவலி, கை வலி, கால் வலி போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

    மேலும் சிலருக்கு வாந்தி, செரிமானக் கோளாறு போன்றவைகளும் ஏற்படும். ஒவ்வொரு மாதமும் மாதவிடாயின் போது ஏற்படும் இரத்தத்தின் நிறத்தை வைத்தே பெண்களில் உடல் ஆரோக்கியத்தைக் கூறலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    ரத்தப்போக்கு எந்த நிறத்தில் இருந்தாலும் அது நார்மல்தான். ஒரே விஷயம்... ஃப்ரெஷ்ஷான ரத்தம் என்பது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

    உதாரணத்துக்கு, கையிலுள்ள சருமம் கட் ஆகி ரத்தம் வரும்போது, அது ஃப்ரெஷ் ரத்தம் என்பதால் இளஞ்சிவப்பாக இருக்கும். அதுவே ஆக்ஸிஜனுக்கு எக்ஸ்போஸ் ஆக, ஆக சற்று அடர்நிறத்தில் மாறும், அவ்வளவுதான். பீரியட்ஸின் ஆரம்பத்தில், அது வெஜைனா பகுதி சுரப்புடன் கலந்து வெளியேறுவதால் லைட் சிவப்பு நிறத்தில் இருக்கும். போகப்போக லேசான அடர்சிவப்பு நிறத்துக்கு மாறும்.

    அதுவே அடர்சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளியேறுகிறது என்றால் அது பெரும்பாலும் கட்டிகளாகவே இருக்கும். மாதவிலக்கு ரத்தமானது கட்டிகளாக மாறாது.

    ஒருவேளை உங்களுக்கு அப்படி கட்டிக்கட்டியாக ரத்தம் வெளியேறினால் உங்களுக்கு ப்ளீடிங் அதிகமிருப்பதாக அர்த்தம். கட்டிகள் சிறிதாக இருந்தால் பாதிப்பில்லை. பெரிய பெரிய கட்டிகளாக இருந்தால் அப்படியே விட்டுவிடாமல் மருத்துவரை பார்ப்பது நல்லது.

    உங்களுக்கு மூன்று முதல் நான்கு நாள்களுக்குத்தான் பீரியட்ஸ் இருக்கிறது, ஆனாலும் கட்டிகளாக வெளியேறுகிறது என்றால் அது நார்மலான விஷயமல்ல. அது குறித்து மருத்துவப் பரிசோதனையும் சிகிச்சையும் அவசியம்.

    கிரே கலந்த சிவப்பு நிறம் அதிகமாக ஏற்படாது. ஒருவேளை அப்படி வந்தால் அது ஏற்கனவே உடலில் தேங்கியிருந்த பழைய இரத்தமாக இருக்கும். அப்படி இல்லையென்றால் பாலியல் தொற்று இருந்தால் இந்த நிறத்தில் வரும். மேலும் நீங்கள் கர்பமாக இருந்தால் இந்த நிறத்தில் வரும் அல்லது கரு கலைந்து விட்டாலும் இந்த நிறத்தில் வரும். இந்த நிறத்தில் மாதவிடாய் வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

    சிலருக்கு மாதவிடாய் ஏற்படும் போது சிவப்பு கலந்த பிங்க் நிறத்தில் இரத்தம் வெளியேறும். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தால் தான் பிங்க் நிறத்தில் இரத்தம் வெளியேறும். மேலும் ஒருசிலருக்கு உடலில் இருக்கும் இரத்தத்தின் அளவு குறைவாக இருந்தாலும் இந்த நிறத்தில் வெளியேறும்.

    மற்றபடி பீரியட்ஸின்போது வெளியேறும் ரத்தத்தின் நிறத்துக்கும் வேறெதற்கும் தொடர்பில்லை. அது குறித்த பயமும் தேவையில்லை.

    • ஹார்மோன்களின் தாக்கத்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
    • ஈஸ்ட்ரோஜன் சில நன்மைகளைக் கொண்டிருக்கலாம்.

    பெண்களுள் சிலர் தங்கள் மார்பகங்களின் அளவை குறைக்க கஷ்டப்பட்டாலும், சிலர் அதன் அளவை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். அதற்காக சில பெண்கள் சர்ஜரி செய்யவும் நினைக்கின்றனர்.

    மார்பகங்கள் சிறியதாக இருப்பதற்கு, ஒரு குறிப்பிட்ட ஹார்மோன்கள் அதிகமாகவும் அல்லது குறைவாகவும் இருப்பது தான் காரணமாக இருக்கும். அதிலும் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அதிகமாகவும், ஈஸ்ட்ரோஜென் குறைவாகவும் இருப்பது தான் முக்கிய காரணம்.

    பெண் குழந்தைகள் பருவம் அடையும்போது, ஹார்மோன்களின் தாக்கத்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது பொதுவாக பத்து வயதில் தொடங்கி பதினான்கு வயது வரை நீடிக்கும். இந்த மாற்றங்கள் எட்டு வயதிற்கு முன்பாகவோ அல்லது பத்து வயதுக்கு முன் மாதவிடாய் ஏற்படுவதாகவோ தோன்றினால், அது "முன்கூட்டிய பருவமடைதல்" எனப்படும்.

    பொதுவாக, உடல் உறுப்புகளை வளர்ச்சியடைய வைப்பதற்காக மருத்துவர்கள் எவ்வித மருந்துகளையும் தருவதில்லை. ஈஸ்ட்ரோஜன் (பெண் பாலின ஹார்மோன்) சில நன்மைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், அது பல பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.

    மார்பகங்களில் வலி, உடல் முழுவதிலும் வலி, மாதாந்திர ரத்தப்போக்கு போன்ற தற்காலிக பிரச்னைகள் மற்றும் கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், நீரிழிவு போன்ற நீண்ட கால பிரச்னைகள் ஏற்படலாம்.

    மார்பக வளர்ச்சியைத் தூண்டுவதற்காக ஈஸ்ட்ரோஜனை செயற்கையாகச் செலுத்தினால், அது வளர்ச்சியை நிறுத்தும் அபாயம் உள்ளது.

    அதேபோல், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களை கருத்தடை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது சில நேரங்களில் பெண்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றை நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்றுநோயுடன் சேர்ந்து பக்கவாதம், மாரடைப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான பிரச்னைகளும் ஏற்படலாம்.

    அதனால்தான், மருத்துவர்கள் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து, ஆபத்துகள் குறித்துத் தெரிவித்த பின்னரே இந்த சிகிச்சைகளை தொடங்குகின்றனர்.

    உடல் எடை, கொழுப்பை அதிகரிக்க இன்சுலின், கார்டிசோல் கொடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில், அவை எலும்புகள் பலமிழப்பது, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

    பிற பிரச்னைகளுக்கான சிகிச்சையாக இவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாகவும் பலரும் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, கட்டாயம் தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகு தேவையான நாட்களுக்கு, தேவையான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஈஸ்ட்ரோஜனை கொடுப்பதற்கு முன் பரிசோதிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண்ணின் தாய் அல்லது ரத்த உறவினர்கள் யாருக்கும் மார்பக அல்லது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    அத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு ஹார்மோன்கள் கொடுப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம். அழகுக்கான சில அளவுகோல்களைக் கருத்தில் கொண்டு, அவற்றை செயற்கையாகப் பெறுவதற்கு தேவையில்லாமல் இதுபோன்ற முறைகளைக் கையாண்டால், ஆரோக்கியம் கெட்டு, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகலாம்.

    மார்பகங்களின் அளவை அதிகரிக்க சிம்பிளான பல இயற்கை வழிகள் இருக்க, ஏன் சர்ஜரிக்கு செல்ல வேண்டும்.

    மார்பகங்களின் அளவை பெரிதாக்க தினமும் தவறாமல் மசாஜ் செய்து வர வேண்டும். அதிலும் ஒரு மாதம் தொடர்ந்து தினமும் 30 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் மசாஜ் செய்யும் போது, மார்பகங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, அதனால் மார்பகங்களின் அளவை பெரிதாக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படும்.

    மார்பக தசைகளை மையமாக கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சிகள் அனைத்தும் மார்பகங்களின் அளவை பெரிதாக்கும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை தவறாமல் அன்றாடம் செய்து வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளான சிக்கன் சூப், சோயா உணவுப் பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், முட்டை, சூரியகாந்தி விதைகள், எள் மற்றும் ஆளி விதை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வர வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும்.
    • உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிப்பது.

    பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுழற்சி முறையில் நிகழக்கூடிய மாதவிடாய் சீராக இல்லாமல் தடைபடுவதும் அல்லது வழக்கத்திற்கு மாறாக அதிக ரத்தப்போக்கை உண்டாக்குவதுதான் பி.சி.ஓ.எஸ். கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகள்தான் இதற்கு முக்கிய காரணம். இந்த நீர்க்கட்டிகள் முழுமையாக உடைந்தால்தான் மாதவிடாய் சீராக இருக்கும்.

    பி.சி.ஓ.எஸை முற்றிலும் குணப்படுத்த எந்த சிகிச்சைகளும் இல்லாத நிலையில் முறையான வாழ்க்கை முறையே கை கொடுக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக அதிக எடை பிரதான காரணமாக இருக்கிறது. மேலும் முகம் மற்றும் உடலில் அதிகப்படியான முடி வளர்ச்சி, முகப்பரு மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

    பாலிசிஸ்டிக் ஓவரி நோய் (பி.சி.ஓ.எஸ்) பொதுவாக பெண்களின் இனப்பெருக்க வயதில் நிகழ்கிறது. இந்த பிரச்சனை உள்ள பெண்களின் கருப்பையின் இரு பக்கங்களிலும் உள்ள சினைப்பைகளில் சிறிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சி இருக்கும். இதன் விளைவாக கருமுட்டைகள் உருவாக முடியாத நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது.

    பி.சி.ஓ.எஸ் பெரும்பாலும் வாழ்க்கை முறை தொடர்பான நோயாக வகைப்படுத்தப்படுகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள், உடற்பயிற்சியின்மை, மோசமான வாழ்க்கை முறை, புகைபிடித்தல், மன அழுத்தம் மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இதை சரி செய்ய எப்படியான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும்..?

    ஆரம்ப கட்ட அறிகுறிகள்

    * ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, தாமதமான சுழற்சிகள், மிகக் குறைந்த கால மாதவிடாய் போன்றவை நீர்க்கட்டி பிரச்னையின் முக்கிய அறிகுறிகள்.

    * பெரியவர்களுக்கு மாதவிடாய் காலங்கள் 21 நாட்களுக்கு முன்னதாகவோ அல்லது 35 நாட்களுக்குப் பிறகோ ஏற்படும். அதுவே இளம் பெண்களுக்கு 45 நாட்களுக்கு பிறகு மாதவிடாய் நிகழ்ந்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

    * உடல் பருமன் மற்றொரு எச்சரிக்கை அறிகுறியாகும். ஏனெனில் பி.சி.ஓ.எஸ் பாதித்த பெண்களில் கிட்டத்தட்ட 40-80 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக இருப்பார்கள்.

    * ஆண்களின் உடலில் சுரக்கப்படும் ஹார்மோன்கள் அதிக அளவில் இருப்பதால் உடலில் முகப்பரு, அதிகப்படியான முடி வளர்வது, குறிப்பாக முகத்தில் ஒரு முக்கிய அறிகுறி.

    * உச்சந்தலையில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை ஏற்படுத்துவது.

    * டைப் 2 நீரிழிவு நோயின் பாதிப்பு. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சாதாரண அளவை விட அதிகரிக்கும்.

    * உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு அதிகரிப்பது.

    *மனநிலை மாற்றங்கள், மனச்சோர்வு, தன்னம்பிக்கை இல்லாமை மற்றும் பதட்டம் போன்றவை பி.சி.ஓ.எஸ்-ன் அறிகுறிகளாகும்.

    மருத்துவ ரீதியாக கண்டறியும் முறை பி.சி.ஓ.எஸ் நோயைக் கண்டறிய திட்டவட்டமான சோதனை எதுவும் இல்லை. எனினும் மருத்துவர்கள் பி.சி.ஓ.எஸ் நோயறிதலுக்கு ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகளான ரத்த பரிசோதனைகள் மற்றும் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம்.

    வாழ்க்கை முறை மாற்றங்கள்

    பி.சி.ஓ.எஸ் உயிருக்கு ஆபத்தான நோய் அல்ல. ஆனால் நீண்டகால சிக்கல்களை தவிர்க்க ஆரம்ப கட்டத்திலேயே உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருத்துவ ரீதியாக சிகிச்சையளிக்க முடியும் என்றாலும், சில எளிய வாழ்க்கை முறை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பி.சி.ஓ.எஸ்-ஐ குணப்படுத்தலாம்.

    * சத்தான உணவை உட்கொள்வது மற்றும் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறலாம்.

    * பீட்சா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் வெண்ணெய், சீஸ் போன்ற கொழுப்புச்சத்து நிறைந்த பொருள்களை சாப்பிடுவதை தவிர்த்து ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பதையும் தேர்ந்தெடுப்பது அவசியம்.

    *வழக்கமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சியில் ஈடுபடுவது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

    * உங்கள் அன்றாட செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் இன்சுலின் அளவை சீராக வைத்துக்கொள்ளலாம். இது உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

    * தினசரி 7- 8 மணிநேர இடைவிடாத தூக்கம் பி.சி.ஓ.எஸ் வராமல் தடுக்க உதவும் ஒரு முக்கிய காரணியாகும்

    * மன அழுத்தம் நம் வாழ்வின் ஒரு பகுதியாக மாறிவிட்டது, ஆனால் பி.சி.ஓ.எஸ்-ல் இருந்து நீங்கள் குணமடைய விரும்பினால் மன அழுத்தத்தை குறைக்க நேரம் ஒதுக்குவது அவசியமாகும். இதற்கு தினமும் யோகா, நீச்சல் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

    • இந்தியாவில் பெண்களுக்கு சராசரியாக 47 வயதில் கருமுட்டை உற்பத்தியாவது நின்று விடுகிறது.
    • குழந்தையின்மைக்கு பெண்கள் தான் காரணம் என்று முந்தைய காலத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

    பிரசவம்... ஒரு தாயின் மறுபிறப்பாக கருதப்படுகிறது. ஆனாலும் மருத்துவ வளர்ச்சி பெறாத காலத்தில் பிள்ளை பிறப்பு என்பது இறைவன் அளிக்கும் பரிசாக கருதப்பட்டது. இதனால் அப்போது ஒரு வீட்டில் 10 பிள்ளைகள், 12 பிள்ளைகள் என்பது சாதாரணமாக இருந்தது.

    இதன் விளைவாக 2017-ம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவின் மக்கள் தொகை 133.92 கோடியாக பெருகியது. அது நாட்டிற்கு பெரும் சவாலாக அமைந்தது. எனவே இந்திய அரசு 1964-ம் ஆண்டு குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகம் செய்தது. அது குறித்த விழிப்புணர்வும் பரவியது. இதன் காரணமாக தற்போது ஒவ்வொரு வீட்டிலும் ஒன்று அல்லது 2 குழந்தைகள் தான் இருக்கிறார்கள்.

    ஆனாலும் மக்கள் தொகையில் முதல் இடத்தில் உள்ள சீனாவை இந்தியா 2027-ம் ஆண்டு முந்தி விடும் என்று ஐ.நா. கணித்து உள்ளது. அதற்கு ஏற்றாற் போல், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 13-வதாக ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் சின்னதம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிறந்தது.

    இதை அறிந்த மருத்துவ குழுவினர் அந்த தம்பதிக்கு குடும்ப கட்டுப் பாடு அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன்பிறகு அந்த ஆணுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பெண்கள் கருத்தரிக்கும் விகிதம் 17 சதவீதம் குறைந்து உள்ளது. இதனால் மக்கள் தொகையில் 2-ம் இடத்தில் உள்ள இந்தியா குழந்தையின்மையில் முதலிடத்தில் உள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சினையால் 27.5 மில்லியன் தம்பதிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக மெட் டெக் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி 2019-ல் கருத்தரித்தல் விகிதம் என்பது 2.2 -ல் இருந்து 2.0 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, நகர்ப்புற பகுதிகளில் 6 தம்பதிகளில் ஒரு தம்பதி குழந்தையின்மையால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

    அது போல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் கருத்தரித்தல் விகிதம் 1.8 ஆக குறைந்து உள்ளது. இதற்கு அந்த மாநிலங்களில் கல்வி அறிவில் முன்னேறி இருப்பது காரணமாக கூறப்படுகிறது.

    ஆனால் உத்தரபிரதேசம், பீகார் போன்ற வட மாநிலங்களில் கருத்தரித்தல் விகிதம் 2.3 ஆக உள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் தொகையில் தென்மாநிலங்களின் பங்கு 19.8 சதவீதமாகவும், வட மாநிலங்களின் பங்கு 43.2 சதவீதமாகவும் உள்ளது.

    திருமணமான தம்பதிகளில் 46 சதவீதம் பேருக்கு குழந்தையின் மை பிரச்சினை இருப்பதாகவும், 31 - 40 வயதுக்கு உட்பட்ட 63 சதவீத தம்பதிகளுக்கும், 21 - 30 வயதுக்குட்பட்ட 34 சதவீத தம்பதிகளுக்கும் குழந்தையின்மை பிரச்சினை இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

    நவீன தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட அம்சங்களால் ஒவ்வொருவரும் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் உணவு முறை, வேலைப்பளு, திருமண வயது அதிகரிப்பு, ஹார்மோன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களில் மலட்டுத்தன்மை ஏற்பட்டு குழந்தையின்மை அதிகரித்து வருகிறது.

    மற்ற நாடுகளில் திருமண வயது 23 முதல் 25 வரை உள்ளது. அதனுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18 என மிக குறைவாக உள்ளது . இதனால் பெண்களின் மகப்பேறு காலம் அதிகரிக்கிறது.

    பொதுவாக பெண்கள் 21 வயது முதல் 27 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படுவது இல்லை. ஏனென்றால் இந்தியாவில் பெண்களுக்கு சராசரியாக 47 வயதில் கருமுட்டை உற்பத்தியாவது நின்று விடுகிறது. எனவே வயது அதிகரிக்கும் போது இயல்பாக கருத்தரிப்பது கூட சவால் நிறைந்ததாக மாறி விடுவதாக மகப்பேறு மருத்துவத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

    ஆனால் கடந்த 15 வருடங்களாக வேலை உள்ளிட்ட காரணங்களால் திருமண வயது தாண்டிய பிறகே திருமணம் செய்யும் நிலை உருவாகி வருகிறது. வயது அதிகமாகும் போது கருப்பை தனது சீரான செயல்பாட்டை செய்யாமல் இருப்பதாலும், குழந்தைப் பேறை தம்பதிகள் திட்டமிட்டு தள்ளிப்போடுவதும் மலட்டுத்தன்மையை உண்டாக்கி விடுகிறது.

    குழந்தையின்மைக்கு பெண்கள் தான் காரணம் என்று முந்தைய காலத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ஆண்களின் மலட்டுத்தன்மையும் குழந்தையின்மைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு, ஹார்மோன் குறைபாடு, நீண்ட கால புகைப்பழக்கம், மது, உயிரணுக்கள் குறைவு, பரம்பரை ரீதியான குறைபாடு உள்ளிட்டவை குழந்தைப்பேறை உண்டாக்குவதில் மிகப்பெரிய தடையாக இருக்கிறது.

    இதற்கு தீர்வு கண்டு குழந்தை பேறுக்காக கருமுட்டை உருவாக்குதல், கருப்பையின் உள்ளே விந்தணுவை செயற்கையாக உட்செலுத்துதல், விந்தணுவை கருமுட்டையில் நேரடியாக வைத்தல், சோதனைக்குழாய் உள்ளிட்ட முறைகளை பலரும் நாடுகின்றனர். இதனால் செயற்கை கருத்தரித்தல் மையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதை ஒழுங்குபடுத்த மகப்பேறு சிகிச்சை வழங்கும் சேவைகளை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மக்களவை நிறைவேற்றி உள்ளது.

    குழந்தை பிறப்பு என்பது தம்பதிகள் இடையே எழும் இயல்பான உணர்வால், உறவால் நிகழும் ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று குழந்தை பிறப்பு சவால் நிறைந்ததாக மாறி இருக்கிறது. எனவே மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில் குழந்தையின்மை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருவது வினோதமான முரணாகவே பார்க்கப்படுகிறது.

    • குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.
    • கர்ப்ப காலத்தின் 3 மாதங்களுக்கு ஒரு முறை நீரிழிவு பரிசோதனை அவசியம்.

    தாயாகப் போகிறோம் என்கிற மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும்போதே, திடீரென சில மாற்றங்கள் நிகழும். சோதனை முடிவுகளும் சோதனைக்கு உள்ளாக்கும். ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக ஏற்படும் இந்தப் பிரச்னை, கர்ப்ப காலத்தின் எந்த நேரத்திலும் வெளிப்படலாம். பிரசவத்தில் பிரச்னை ஏற்படுத்துகிற இந்த நீரிழிவிலும் இரு வகைகள் உண்டு.

    *Gestational Diabetes Mellitus (GDM)

    குளுக்கோஸ் தாங்குதிறன் குறைவதால் சிக்கல்களை உண்டாக்கும் கர்ப்ப கால நீரிழிவு இது. நீரிழிவால் பாதிக்கப்படுகிற கர்ப்பிணிகளில் 90 சதவிகிதத்தினருக்கும் இந்த வகை பிரச்னையே ஏற்படும். கர்ப்பத்தின் தொடக்கத்திலோ, அது அறியப்படும்போதோ, இந்த நீரிழிவும் அறியப்படும்.

    *Pre-gestational diabetes or Type 1 or Type 2 diabetes

    ஏற்கனவே டைப் - 1 அல்லது டைப் - 2 நீரிழிவு உள்ள பெண்கள் மற்றும் கர்ப்ப கால நீரிழிவு ஏற்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள்... இவர்களுக்குப் பிரசவத்தையே குழப்பமாக்கக்கூடிய தன்மை நீரிழிவுக்கு உண்டு. தாய்க்கும் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் ஆபத்து விளைவிக்கவோ, வளர்ச்சிக் குறைபாடு உண்டாக்கவோ இது காரணமாகலாம்.

    கர்ப்ப காலத்தின் நடுவிலோ, இறுதிக் கட்டத்திலோ இந்தக் குழப்பங்கள் தீவிரமாகும். கர்ப்ப கால நீரிழிவு அல்லது அதற்கு முந்தைய நிலையில் அதிகம் பாதிக்கப்படுவது யார் என்றால் 25 வயதுக்குப் பிறகு கர்ப்பம் தரிப்பவர்களே இந்தப் பிரச்னைக்கு அதிகம் ஆளாகிறார்கள். எடை அதிகம் கொண்டவர்களும் இதில் சிக்கலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு கொண்டிருப்பவர்களுக்கும் இது ஏற்படலாம்.

    இதற்கு முக்கியமான காரணிகள்...

    * குடும்பப் பின்னணியில் நீரிழிவு

    * 4 கிலோவுக்கும் அதிகமாக குழந்தை எடை பெறுதல்

    * திரும்பத் திரும்ப கரு கலைதல் பிரச்னை

    * சிறுநீரில் அதிக சர்க்கரை (Glycosuria) தொடர்ச்சியாக இருத்தல்

    * பருமன், அதிக எடை

    * முந்தைய பிரசவத்தில் பிரச்னைகள், தவறாக உருவாகி இருத்தல், குறைப் பிரசவம், குழந்தை இறத்தல் போன்ற குழப்பங்கள்

    * நீர்க்குடத்தில் அதிக திரவம் சேர்கிற Polyhydramnios என்கிற நிலை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற Pre-eclampsia என்கிற நிலை

    * அளவுக்கு அதிகமான ரத்தக்கொதிப்பு

    * பூஞ்சைத் தொற்று அல்லது சிறுநீரகக் குழாய் தொற்று அடிக்கடி ஏற்படுதல்

    * முந்தைய கர்ப்ப காலத்தில், குழந்தைக்கு நரம்பியல் கோளாறு காரணமாக பிரசவத்தில் சிக்கல்.

    இதுபோன்ற எந்தக் காரணியும், இந்தப் பிரசவத்துக்கு முன்பே நீரிழிவைக் கொண்டு வரக்கூடும்.

    முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்...

    கர்ப்ப காலத்தின் ஒவ்வொரு ட்ரைமஸ்டரிலும் (3 மாதங்களுக்கு ஒரு முறை) நீரிழிவு பரிசோதனை அவசியம்.பொதுவாக இதற்காக பிளாஸ்மா குளுக்கோஸ் சோதனை செய்யப்படுகிறது. 24-28 வார காலகட்டத்தில், முன்பு உண்ட உணவைப் பற்றிக் கவலைப்படாமல், 75 கிராம் குளுக்கோஸ் அளிக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவீடப்படுகிறது.

    இதற்கான கட்-ஆஃப் மதிப்பு 140 mg/dl என இருந்தால், பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80 சதவிகிதத்தினருக்கு கர்ப்ப கால நீரிழிவு உறுதி செய்யப்படும். கட்-ஆஃப் மதிப்பு 130 mg/dl என இருந்தால், 90 சதவிகிதத்தினரின் பாதிப்பு தெரிய வரும்.

    பிரசவத்தின் போது ஏற்படும் விளைவுகள்

    *கர்ப்ப கால நீரிழிவு உள்ளவர்களில் 10-25 சதவிகிதத்தினரை Pre-eclampsia பிரச்னை தாக்குகிறது. இது உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் அதிக புரோட்டீன் கலப்பு ஏற்பட்டு சிறுநீரகம் பாதிக்கப்படுகிற நிலை.

    *நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம்... தாய்க்கு மட்டுமல்லாமல் கருவுக்கும் தொற்றக்கூடும்.

    *குழந்தை பிறந்த உடன் அதீத ரத்தப்போக்கு

    *சிசேரியன் செய்ய வேண்டிய நிலை

    *எடை கூடுதல்

    *உயர் ரத்த அழுத்தம்

    *கரு கலைதல்

    *மூன்றாவது ட்ரைமஸ்டரில் குழந்தை இறத்தல்

    *டைப் - 2 நீரிழிவாக மாற்றம் அடைதல்

    *வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்த அதிக இன்சுலின் தேவைப்படுதல்

    *ரெட்டினோபதி எனும் விழித்திரை நோய் ஏற்படுதல்

    *நெப்ரோபதி எனும் சிறுநீரகப் பிரச்னைகள் உண்டாகுதல்... சிறுநீரகச் செயல் இழப்புக்கான அறிகுறிகள் தோன்றுதல்

    *கரோனரி ஆர்டரி எனும் இதயப் பிரச்னை வலுவடைதல், ஏற்கனவே பிரச்னை அதிகம் இருப்பின் பிரசவ மரணம் ஏற்படுதல்

    *கார்டியோமையோபதி எனும் இதயத்தசை நோய் ஏற்படுதல்.

    கருவில் ஏற்படும் பிரச்னைகள்

    *பிறப்புநிலைக் கோளாறுகள்

    *பிறக்கும்போதே ரத்த சர்க்கரை குறைவு

    *மேக்ரோஸ்மியா (4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள பிக் பேபி சிண்ட்ரோம்). இது மூளை தவிர மற்ற எல்லா உறுப்புகளையும் பாதிக்கும்.

    *மஞ்சள் காமாலை

    *ரத்தத்தில் கால்சியம் பற்றாக்குறை (Hypocalcaemia), மெக்னீசிய சத்துக் குறைவு (Hypomagnesemia)

    *பிறப்பதிர்ச்சி (Birth trauma), மேக்ரோஸ்மியா காரணமாக வலிமிகு பிரசவம்

    *குறைப் பிரசவம்

    *Hyaline membrane எனும் நுரையீரல் நோய்

    *மூச்சின்மை, குறை இதயத் துடிப்பு (Apnea and bradycardia).

    கட்டுப்படுத்துவது எப்படி?

    மேலே கண்ட பிரச்னைகள் மிரட்டுவதாகத் தோன்றினாலும், குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம், கர்ப்ப கால நீரிழிவையும் அதன் கோளாறு களையும் நிச்சயம் சமாளிக்க முடியும்... வெற்றிகரமாக ஆரோக்கியமான குழந்தையையும் பெற்றெடுக்க முடியும்.

    ரத்த சர்க்கரை அளவுக்கு அதிகமாகக் குறைந்தாலும் பிரச்னைதான். ஹைப்போகிளைசமிக் என்கிற தாழ்நிலை சர்க்கரையானது, அதீத சர்க்கரை அளவைப் போலவே தாயையும் சேயையும் பாதிக்கும்.

    தயக்கம் வேண்டாம்!

    குடும்பத்தில் நீரிழிவு பின்னணி இருக்கிறதா? தாய்மைக்குத் தயாராகும் போதே, இது பற்றி மகப்பேறு மருத்துவரிடம் தயங்காமல் தெரிவித்து விடுங்கள். கர்ப்பம் தரித்தது அறிந்ததும் செய்யப்படும் முதல் ஆலோசனை தொடங்கி, ஒவ்வொரு முறையும் நீரிழிவு விஷயமும் கவனத்தில் கொள்ளப்படும்.

    * மகப்பேறு மருத்துவரே முதல் கட்ட ஆலோசனைகளை அளித்தாலும், பின்னர் நீரிழிவு மருத்துவர், டயட்டீசியன், பிசியோதெரபிஸ்ட் ஆகியோரும் இணைந்து உதவுவார்கள்.

    * குடும்ப நீரிழிவு பின்னணி உள்ளவர்களுக்கு கர்ப்பம் தரிக்கும் முன்பே இது பற்றி தெளிவாக

    அறிவுறுத்தப்படும்.

    * கர்ப்ப காலத்திலும் பிரசவத்திலும் நீரிழிவு காரணமாக ஏற்படும் விளைவுகள் பற்றியும், அதைத் தவிர்க்கும் வழிகள் பற்றியும்

    விளக்கப்படும்.

    *வீட்டிலேயே குளுக்கோமீட்டர் பயன்படுத்தி சோதிக்கும் முறைகள் பற்றி அறிவுறுத்தப்படும்.

    * அல்ட்ரா சவுண்ட் மூலம் கரு வளர்ச்சி சோதிக்கப்படும்.

    * பிரசவ குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில் திட்டமிடப்படும்.

    * எதிர்காலக் குழப்பங்கள் குறித்தும் அவற்றைப் போக்கும் வழிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருப்பு நிற உள்ளாடை மார்பக புற்றுநோயை உண்டாக்கும்.
    • பிரா அணிந்து தூங்குவது புற்றுநோயை உண்டாக்கும்.

    கருப்பு நிறத்தில் உள்ளாடை (பிரா) அணிந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. இது ஒரு கட்டுக்கதை தான். உள்ளாடை விஷயத்தில் உலவும் கட்டுக் கதைகள் பற்றியும், உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.

    கட்டுக்கதை 1: கருப்பு நிற உள்ளாடை மார்பக புற்றுநோயை உண்டாக்கும்.

    உண்மை: கருப்பு நிற பிரா அல்லது அடர் நிற பிரா அணிவது மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்காது. அடர் நிற பிராக்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சிவிடும், அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படக்கூடும் என்பது கட்டுக்கதையை நம்புபவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. கருப்பு நிற பிரா, அடர் நிற பிரா, பிற வண்ண நிற பிரா அணிவது அல்லது பிரா அணியாமல் இருப்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது.

    கட்டுக்கதை 2: பிரா அணியாமல் இருப்பது மார்பகத்தை வேகமாக வளரச் செய்துவிடும்.

    உண்மை: மார்பக அளவை குறைக்கும் விஷயத்தில் உள்ளாடை எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதேபோல் மார்பகங்களில் கிரீம்கள், லோஷன்கள், எண்ணெய் பயன்படுத்துவது அதன் அளவை பாதிக்காது. உடல் எடை அதிகரித்தால் மார்பக அளவு அதிகரிக்கும். உடல் எடையை குறைப்பது மார்பக அளவு குறைவதற்கு வித்திடும்.

    கட்டுக்கதை 3: இறுக்கமாக உள்ளாடை அணிவது புற்றுநோயை உண்டாக்கும்.

    உண்மை: இறுக்கமாக உள்ளாடை அணிவது அசவுகரியத்தை ஏற்படுத்தும். தேவையற்ற உடல் தொந்தரவுகளுக்கு வழிவகுக்கும். ஆனால் புற்றுநோயை உண்டாக்குவதற்கு சாத்தியமில்லை. எனினும் மார்பகத்துக்கு பொருத்தமான அளவு கொண்ட உள்ளாடையை தேர்ந்தெடுப்பது நல்லது.

    கட்டுக்கதை 4: உள்ளாடை அணியாவிட்டால் மார்பகம் வலுவிழந்து விடும்.

    உண்மை: மார்பகங்கள் தளர்வடைவதை பிராக்கள் தடுக்கும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. மார்பகங்கள் தொய்வடைந்தால், உள்ளாடையால் அதை தடுக்க முடியாது.

    கட்டுக்கதை 5: கம்பி இழை போன்ற பிராக்களை அணிவது புற்றுநோயை உண்டாக்கும்.

    உண்மை: சாதாரண பிரா, ஸ்போர்ட்ஸ் பிரா உட்பட எந்த வகையான பிராவை அணிவதற்கும், மார்பக புற்றுநோய்க்கும் தொடர்பு இல்லை. இருப்பினும் கம்பி இழைகள் அழுத்தம் கொடுக்க தொடங்கினால் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.

    கட்டுக்கதை 6: பிரா அணிந்து தூங்குவது புற்றுநோயை உண்டாக்கும்.

    உண்மை: தூங்கும் போது பிரா அணிவது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. உள்ளாடை அணியாமல் தூங்கினால் மார்பக வடிவம் மாறிவிடும் என்பதற்கும் ஆதாரம் இல்லை.

    இறுக்கமாக பிரா அணிந்தால் மார்பகம் சரியான வடிவில் இருக்கும் என்று நினைப்பதும் தவறானது. தளர்வான பிரா அணிவதும் அசவுகரியத்தை கொடுக்கும். நிறைய பேர் தவறான அளவு கொண்ட பிராக்களை அணிகிறார்கள். இதனால் சீரான ரத்த ஓட்டமின்மை, சரும பிரச்சினை, சுவாச கோளாறு போன்ற பாதிப்புகள் உண்டாகக்கூடும்.

    இரவில் தூங்கும்போது மென்மையான பிரா அணிவது மார்பக அசைவை குறைக்கும். அதன் இயக்கத்தை கட்டுப்படுத்த உதவும். மார்பக வலியை குறைத்து சவுகரியமான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

    • பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும்.
    • நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

    50 வயதை நெருங்கும் பெண்கள் மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிறுத்த சுழற்சியை எதிர்கொள்ள நேரிடும். அந்த சமயத்தில் உடல் ஆரோக்கியம் சார்ந்த சில முக்கியமான நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் உடல் எடை அதிகரிக்க தொடங்கிவிடும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுடன், முதுமை கால கட்டம், வாழ்க்கை முறை, மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவையும் உடல் பருமன் பிரச்சினைக்கு வழிவகுக்கலாம். அப்படி உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் சுவாச கோளாறு, டைப்-2 நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளை அனுபவிக்க நேரிடும். மெனோபாஸ் காரணமாக ஏற்படும் எடை அதிகரிப்புடன் தொடர்புடைய சில பொதுவான உடல்நலப் பிரச்சினைகள் குறித்து பார்ப்போம்.

    நீரிழிவு நோய்: மாதவிடாய் நின்று மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்கொள்ளும் பெண்களில் சராசரி உடல் எடை கொண்டவர்களை விட, அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு நான்கு மடங்கு அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    இதய நோய்: மாதவிடாய் நின்ற பிறகு அதிக கொழுப்புள்ள உணவுகள் உண்பது, ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களை பின்பற்றுவது இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம். அதிலும் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் இதய நோய்க்கு ஆளாக நேரிடும்.

    உயர் ரத்த அழுத்தம்: மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தை நெருங்கும்போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறையக்கூடும். இத்தகைய குறைபாடு மாதவிடாய் நின்ற பிறகு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது, இதயம் மற்றும் ரத்த நாளங்களில் விறைப்பு ஏற்பட்டும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வித்திடும்.

    உடல் மாற்றங்கள்: பெண்களை பொறுத்தவரை வயதுக்கு ஏற்ப, உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும்போது தசைகள் பலவீனமடையும். வளர்சிதை மாற்றமும் படிப்படியாக குறையும். இத்தகைய மாற்றங்கள் மாதவிடாய் காலத்தில் எடை அதிகரிக்க வழிவகுக்கும். இருப்பினும், வேறு சில காரணங்களும் மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடையவை. சருமம் வறட்சி அடைவது, உடல் மெலிந்து போவது, முடி உதிர்தல் போன்றவை மாதவிடாய் நிறுத்தத்தின்போது ஏற்படும் மற்ற மாற்றங்களாகும். இத்தகைய மாற்றங்கள் பெண்கள் மனதில் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்கி கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழி வகுத்துவிடும்.

    ஆரோக்கியமான உணவு முறை: ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்ற சத்தான உணவை உட்கொள்வது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை கூடுமானவரை தவிர்த்துவிட வேண்டும். கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். நிறைவுற்ற, கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிடலாம்.

    உடற்பயிற்சி: மாதவிடாய் நிற்கும் சமயத்தில் எதிர்கொள்ளும் உடல் பருமனை குறைப்பதற்கு மட்டுமல்லாமல், அந்த சமயத்தில் உருவாகும் மன நிலை மாற்றங்களை கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சி அவசியமானது. உடல்வாகுக்கு பொருத்தமான உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுக்கலாம். அவை எலும்புகளை பலவீனமடைய செய்யும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் நோய் பாதிப்பு அபாயத்தை குறைக்க உதவும்.

    சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அடித்தல், தினமும் 30 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்தல் போன்ற பழக்கங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், உடல் மற்றும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக உணரவும் உதவும். டம்ப்பெல்ஸ், 'எக்ஸ்சர்சைஸ் பேண்டு' எனப்படும் உடற்பயிற்சி செய்யும் பட்டைகள், யோகா போன்றவை தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவும். ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்வது இதயம் மற்றும் நுரையீரலுக்கு நலம் சேர்க்கும்.

    தூக்கம்: உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க நன்றாக தூங்கி எழும் வழக்கத்தை கடைப்பிடிப்பதும் முக்கியமானது. இன்றைய காலகட்டத்தில் தூங்கச் செல்வதற்கு முன்பு மின்னணு சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்த்தாலே போதுமானது.

    மெனோபாஸ் என்பது பெண்களின் உடல் மற்றும் மன நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தலாம். இருப்பினும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலம் வாழ்க்கையை புதுப்பித்து, முழுமையாக வாழ முடியும்.

    • முதல் குழந்தைக்கு மட்டுமல்ல, அடுத்தடுத்த குழந்தையாக இருந்தாலும் இந்தத் திட்டமிடல் அவசியம்.
    • முந்தைய பிரசவம் சிசேரியனாக இருந்தால் இன்னும் அதிக காலம் தேவைப்படலாம்.

    திருமண வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக இருப்பது மகப்பேறு. எந்த ஒரு செயலாயினும் அதனைச் செய்வதற்கு முன்பு திட்டமிட வேண்டும் என்பது கர்ப்பம் தரிப்பதற்கும் பொருந்தும். குழந்தை பெற்றுக் கொள்வது என முடிவெடுத்த பிறகு அது சார்ந்து திட்டமிட்டு கர்ப்பம் தரிப்பது ஆரோக்கியமானது என்கின்றனர் மருத்துவர்கள்.

    குழந்தை பெற்றுக்கொள்வதென முடிவெடுத்து விட்டால், மூன்று மாதங்களுக்கு முன்பே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஏதேனும் உடற்பிரச்சனைக்காக மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், கர்ப்பம் தரிக்கும்போது அந்த மருந்தானது குழந்தையை பாதிக்குமா என்று பார்த்து, அப்படி பாதிக்குமெனில் அதற்கு மாற்று மருந்து பரிந்துரைக்கப்படும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஃபோலிக் ஆசிட் மிகவும் முக்கியமானது. உணவு வழியே கிடைப்பது மட்டும் போதாது என்பதால் ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள் வழங்கப்படும்.

    ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படும். ஒருவேளை கர்ப்பச் சர்க்கரை (pregnancy diabetic) ஏற்படும் வாய்ப்பு இருப்பின், அது ஏற்படாதபடி உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் ஆகியவை பரிந்துரைக்கப்படும்.

    முதல் குழந்தைக்கு மட்டுமல்ல, அடுத்தடுத்த குழந்தையாக இருந்தாலும் இந்தத் திட்டமிடல் அவசியம். ஒரு குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தைக்குத் திட்டமிடுவதென்றால், குறைந்தபட்சம் 18 மாதங்கள் இடைவெளி தேவை. அப்போதுதான் அடுத்த குழந்தைக்கு அவர்களது உடல் தயாராகும். இதுதவிர, முந்தைய குழந்தைக்கான பாலூட்டுதல், அதனைப் பராமரிப்பதற்கான காலமும் கிடைக்கும்.

    இதுவே முந்தைய பிரசவம் சிசேரியனாக இருந்தால் இன்னும் அதிக காலம் தேவைப்படலாம். பொதுவாக குழந்தை பிறகு அடுத்த ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் உற்பத்தி நடப்பதால் கருமுட்டை உற்பத்தி இருக்காது. மேலும், முறையற்ற மாதவிடாய் ஏற்படும் என்பதால் கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறைவு. விதிவிலக்குகளும் உண்டும். மேலும், அந்தக் காலம் முடிந்தவுடனேயே அடுத்த குழந்தைக்குத் திட்டமிடக்கூடாது. பெண்ணின் உடல்நிலையை பரிசோதித்து ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுக்கும் அளவுக்கு அவர்களது உடலைத் தயார் செய்த பின்புதான் கர்ப்பம் தரிக்க வேண்டும்.

    ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையே மூன்று ஆண்டுகள் இடைவெளி இருப்பது தாய்க்கு மட்டுமல்ல அக்குழந்தைக்கும் நல்லது. சரியான காலத்தில் இரண்டாவது குழந்தையைத் திட்டமிடலாம். உடல் நலம் மற்றும் வயது ஆகிய இரண்டையும் கணக்கில் கொண்டுதான் கருவுறுதலைத் திட்டமிட வேண்டும்.

    • பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது.
    • சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும்.

    தற்போது நமது இந்திய நாட்டில் பெரும்பாலும் பகல், இரவு, எந்த நேரத்திலும் தாம்பத்தியம் கொண்டுவிடுகிறார்கள். இதன் காரணமாக ஆண்கள், பெண்கள் தேகம் வெளுத்து, வாடி, வருந்தி வலுவற்று விடுகின்றனர். ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாக இருபாலரும் இருத்தல் அவசியம். இதில் பாதிப்பு ஆண்களுக்கே அதிகம். பகற்பொழுதில் ஒருக்காலும் ஒன்று சேருவது கூடாது.

    இதனால் ஆண்களின் வீரியம் பங்கம் உண்டாகும் என்று வள்ளலார் சொல்லியுள்ளார். ஆகாரம், மைதுனம் ஆகிய இரண்டிலும் மிக்க ஜாக்கிரதையாக இருத்தல் அவசியமாகும். இல்லை எனில் தேகமானது அதி சீக்கிரத்தில் கூற்றுவனுக்கு இரையாகிவிடும் என்றும் கூறுகிறார். சுக்கிலமாகிய திரியை விசேஷமாக தூண்டி, அடிக்கடி சுக்கிலத்தை வீணே செலவு செய்தால், திரியானது அணைந்து போய், ஆயுளாகிய பிரகாசத்தை பாழ்படுத்திவிடும்.

    960 நாழிகைக்கு ஒருமுறை தேக சம்பந்தம் செய்து சுக்கிலத்தை வெளிப்படுத்தி விடவேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. 60 நாழிகை என்பது ஒரு நாள். 960 நாழிகை என்பது 16 நாளாகும். இந்த கணக்குப்படி மாதம் இரண்டுமுறை மட்டுமே தனது நன் மனையாளை மருவுதல் வேண்டும். இதற்கு மேற்படின், பல பிணிகளுக்கு உள்ளாக நேரிடுமென்றும், ஆண்களுக்குரிய வீரியமும், விறைப்பும் குறைந்து தளர்ச்சி உண்டாகி உடல் ரோகம் உண்டாகுமென்கிறது சாஸ்திரம். பெண்களுக்கு அடிக்கடி சேருவதால் கருப்பையில் பிணி உண்டாகுமென்றும், ருதுவில் பிரச்னையும் ஏற்படுமென்கிறது சித்த சாஸ்திரம்.

    சுத்த இரத்தம் 60 துளிகள் கொண்டது ஒரு துளி விந்துவாகும். ஆண்கள் வீரியத்தை பலமுறை வெளியேற்றினால் அது எவ்வளவு இரத்தம் குறையுமென்று இதன் மூலம் அறியலாம். இவ்வாறு அபரிமிதமான இரத்தம் குறையவே ஜீவாக்கினி குறைகிறது.

    ஜீவாக்கினி குறையவே தேக உறுப்புக்களின் சுபாவத் தொழில் கெட்டு, அதனால் தேகம் தளர்ந்து, முகம் வெளுத்து, கண்பார்வை மங்கி, ஜீரண சக்தி குறைந்து, ஞாபக சக்தி குறைந்து, மொத்தத்தில் பலவீனமாகி, கைகால்கள் நடுக்கம், மூட்டு வீக்கம் உண்டாகி, நடை தளர்ந்து சோர்ந்து, பல தீராத வியாதிகளுக்கு மனிதன் தள்ளப்படுகிறான். எனவே தம்பதிகள் இந்த நடைமுறையை கையாண்டால் தேக சௌக்கியமுடன் நல்ல குழந்தைகளை பெற்று வாழ்வில் நலமடைவார்களென்று சித்த நூல்கள் கூறுகிறது.

    -சிவசங்கர்

    • யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
    • உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு.

    *இயற்கை வழி பிரசவமாக (சுகப்பிரசவம்) இருந்தால் குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குப் பிறகும், அறுவை சிகிச்சையாக (C - section) இருந்தால் ஆறு மாதத்திற்குப் பின்பும் உடற்பயிற்சிகள் தொடங்கலாம்.

    *ஆரம்ப நிலை உடற்பயிற்சி முதல் படிப்படியாக அதிகரித்து கடினமான உடற்பயிற்சிகள் வரை செய்யலாம்.

    *இயன்முறை மருத்துவர் உங்களை முழுவதும் பரிசோதித்து பின் எந்தெந்த தசைகளுக்கு வலிமை பயிற்சிகள், இலகுவாக்குவதற்கான பயிற்சிகள், தாங்கும் ஆற்றலுக்கான பயிற்சிகள் (Cardiac Endurance), எடை குறைய உதவும் பயிற்சிகள் எனத் தனித்தனியாகப் பிரித்து கற்றுக்கொடுப்பர்.

    *ஒவ்வொரு பயிற்சியும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும் என்பதால், இதனை செய்தால் போதும் எனக் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

    *மேலும் குழந்தையை அதிக நேரம் தூக்க வேண்டும் என்பதால் கைகள், தோள்பட்டைக்கான பயிற்சிகள் வழங்குவார்கள். கூடவே,எப்படி, எவ்வாறு குழந்தையை தூக்குவது, எந்த முறையில் பால் கொடுப்பது போன்ற யுக்திகளையும் கற்றுக் கொடுப்பர். இதனால் உடல் வலி, முதுகு வலி, தோள்பட்டை வலி போன்றவற்றை தவிர்க்கலாம்.

    கவனிக்க வேண்டியவை...

    * யூடியூப், டிவி போன்றவற்றை பார்த்து உடற்பயிற்சிகள் செய்வது பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏனெனில், சில பயிற்சிகளை குழந்தை பிறந்த பின்பு செய்யக் கூடாது. அதேபோல சில பயிற்சிகளை கட்டாயம் செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், எவ்வளவு செய்ய வேண்டும் என்பதும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.

    * அதேநேரம், உணவு அளவைக் குறைத்து பட்டினி இருந்து உடல் எடையை குறைப்பது மிகவும் தவறு. தாய்ப்பால் உற்பத்தி செய்ய நிறைய சக்தி தேவைப்படும். கூடவே கால்சியம், இரும்பு, வைட்டமின் பி12, டி போன்ற ஊட்டச்சத்துகள் சராசரியாக மற்றவர்களுக்கு தேவைப்படுவதை விட ஒரு பங்கு அதிகமாக தேவைப்படும் என்பதால், அளவைக் குறைப்பது புத்திசாலித்தனம் இல்லை.

    *போதிய அளவு உறக்கம் என்பது புது தாய்மார்களுக்கு கிடைக்காது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால், தூக்கம் சரியாக இல்லை எனில் மாவுச்சத்து அதிகம் இருக்கும் உணவுகள் மீது நாட்டம் (Sugar Cravings) வரும். இதனால் நொறுக்குத் தீனி, சாப்பாடு அதிகம் சாப்பிடுவது, இனிப்பு வகைகள் உண்பது என உடல் எடை அதிகரிக்குமே தவிர தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. எனவே, கட்டாயமாக எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்.

    *பிஸ்கட், சிப்ஸ், கேக் போன்ற நொறுக்குத் தீனிகள் தின்பதற்கு பதில் பழங்கள், காய்கறிகள் நிறைந்த சாலட்கள், வேகவைத்த பயிறு, கடலை வகைகளை தாராளமாக உண்ணலாம். இதனால் எடையும் ஏறாது, ஊட்டச்சத்துகளும் கிடைக்கும்.

    *சரிவிகித உணவு முறையை (Balanced diet) கட்டாயம் தொடர வேண்டும். பேலியோ, நீர், கீட்டோ டயட் போன்றவற்றை கடைபிடிப்பதில் முழு பலன் இருக்காது.

    *சினிமா நடிகைகள், இணையதள பிரபலங்கள் மட்டும் குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் எடையை குறைக்கிறார்களே என்று சிலருக்கு தோன்றலாம். ஒவ்வொருவரின் உடல் வாகைப் பொறுத்து மாறுபடும் என்பதால், நமக்கானதைத் தேடி, அறிந்து அதன் வழி மாற்றிக்கொள்வது நல்ல பலன்களை தரும்.

    *தாங்களாகவே நடைப்பயிற்சி, ரன்னிங், நடனம், வெறும் உணவு வழியாக எடையை குறைப்பது போன்றவை செய்து உடல் எடையைக் குறைக்கலாம் என நினைத்தால் செய்யலாம். ஆனால், சில வகையான தசை வலிமை பயிற்சிகள், தசை இலகுவாக இருக்க பயிற்சிகள் எனக் கட்டாயம் செய்ய வேண்டும். அப்போதுதான் முதுகு வலி, முன் வயிற்றில் தசை பிரிவதை தடுப்பது போன்ற பல பேறுக்காலத்திற்குப் பின் வரும் சிக்கல்களை தவிர்க்க முடியும்.

    நம் உடலிற்கு எது பொருந்துமோ அதன் வழியை பின்பற்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கவனித்து நடப்பதே என்றென்றைக்கும் சிறந்தது.

    ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான பாலின விகிதம் 7 மாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது.
    குழந்தைகள் மற்றும் தாய்வழி ஆரோக்கியம், ஊட்டச்சத்து, குடும்ப கட்டுப்பாடு, கல்வி அறிவு, திருமண வயது, நல வாழ்வு, சுகாதாரம் உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக்கொண்டு தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு (என்.எப்.எச்.எஸ்) மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி இரண்டு கட்டங்களாக கள ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

    பெரியவர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வரும் போக்கு நிலவுவதை கள ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2015-16-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 15-49 வயதுக்குட்பட்ட அதிக எடை கொண்ட பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதம் அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம், கோவா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்களில், 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் உடல் பருமனாக உள்ளனர்.

    ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு ஏற்ப பிறக்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்பான பாலின விகிதம் 7 மாநிலங்களில் சரிவை சந்தித்துள்ளது. கோவா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில், இந்த விகிதம் 900-க்கும் குறைவாக உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு மேல் பெண் குழந்தைகள் பிறக்கும் பாலின விகிதம் கொண்ட ஒரே மாநிலமாக திரிபுரா உருவெடுத்துள்ளது.

    2015-16-ம் ஆண்டு 51 சதவீதமாக இருந்த பதின்ம வயது கர்ப்பம் 43 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும் 18 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது. 2015-16-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது குழந்தை திருமண விகிதம் 26.8 சதவீதமாக இருந்தது. தற்போது 23.3 சதவீதமாக குறைந்துள்ளது.

    மருத்துவ மையங்கள், மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ வசதி கொண்ட இடங்களில் நடக்கும் பிரசவம் 2015-16-ல் 78.9 சதவீதமாக இருந்தது. தற்போது 88.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனினும் சிசேரியன் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளைக் காட்டிலும் தனியார் மருத்துவ மனைகளில் அதிகம் நடைபெறுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் சிசேரியன் பிரசவம் 47.4 சதவீதமாகும். அரசு மருத்துவமனைகளில் 14.3 சதவீதம் சிசேரியன் பிரசவம் நடைபெறுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை கவலைக்குரியதாகவே உள்ளது.

    வளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை (வயதுக்கு ஏற்ப உயரம்) சற்று குறைந்துள்ளது. 2015-16-ல் 38.4 சதவீதத்தில் இருந்து சமீபத்திய கணக்கெடுப்பில் 35.5 சதவீதமாக குறைந்துள்ளது. குடும்பத்தின் முக்கிய முடிவுகளை பெண்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது. தனியாகவோ அல்லது கூட்டாகவோ அதிகமான பெண்கள் சொந்தமாக வீடு வைத்துள்ளனர். இது 38.4 சதவீதத்தில் இருந்து 43.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. சமையலுக்கு கியாஸ் போன்ற எரிபொருளைப் பயன்படுத்தும் குடும்பங்களின் சதவீதம் 43.8 சதவீதத்தில் இருந்து 58.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
    ×