search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breast"

    • ஹார்மோன்களின் தாக்கத்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
    • ஈஸ்ட்ரோஜன் சில நன்மைகளைக் கொண்டிருக்கலாம்.

    பெண்களுள் சிலர் தங்கள் மார்பகங்களின் அளவை குறைக்க கஷ்டப்பட்டாலும், சிலர் அதன் அளவை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். அதற்காக சில பெண்கள் சர்ஜரி செய்யவும் நினைக்கின்றனர்.

    மார்பகங்கள் சிறியதாக இருப்பதற்கு, ஒரு குறிப்பிட்ட ஹார்மோன்கள் அதிகமாகவும் அல்லது குறைவாகவும் இருப்பது தான் காரணமாக இருக்கும். அதிலும் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அதிகமாகவும், ஈஸ்ட்ரோஜென் குறைவாகவும் இருப்பது தான் முக்கிய காரணம்.

    பெண் குழந்தைகள் பருவம் அடையும்போது, ஹார்மோன்களின் தாக்கத்தால் உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இது பொதுவாக பத்து வயதில் தொடங்கி பதினான்கு வயது வரை நீடிக்கும். இந்த மாற்றங்கள் எட்டு வயதிற்கு முன்பாகவோ அல்லது பத்து வயதுக்கு முன் மாதவிடாய் ஏற்படுவதாகவோ தோன்றினால், அது "முன்கூட்டிய பருவமடைதல்" எனப்படும்.

    பொதுவாக, உடல் உறுப்புகளை வளர்ச்சியடைய வைப்பதற்காக மருத்துவர்கள் எவ்வித மருந்துகளையும் தருவதில்லை. ஈஸ்ட்ரோஜன் (பெண் பாலின ஹார்மோன்) சில நன்மைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், அது பல பக்க விளைவுகளையும் கொண்டுள்ளது.

    மார்பகங்களில் வலி, உடல் முழுவதிலும் வலி, மாதாந்திர ரத்தப்போக்கு போன்ற தற்காலிக பிரச்னைகள் மற்றும் கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய், நீரிழிவு போன்ற நீண்ட கால பிரச்னைகள் ஏற்படலாம்.

    மார்பக வளர்ச்சியைத் தூண்டுவதற்காக ஈஸ்ட்ரோஜனை செயற்கையாகச் செலுத்தினால், அது வளர்ச்சியை நிறுத்தும் அபாயம் உள்ளது.

    அதேபோல், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களை கருத்தடை மாத்திரைகளாகப் பயன்படுத்துவது சில நேரங்களில் பெண்களுக்குப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இவற்றை நீண்டகாலத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்துவதால் புற்றுநோயுடன் சேர்ந்து பக்கவாதம், மாரடைப்பு போன்ற உயிருக்கே ஆபத்தான பிரச்னைகளும் ஏற்படலாம்.

    அதனால்தான், மருத்துவர்கள் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து, ஆபத்துகள் குறித்துத் தெரிவித்த பின்னரே இந்த சிகிச்சைகளை தொடங்குகின்றனர்.

    உடல் எடை, கொழுப்பை அதிகரிக்க இன்சுலின், கார்டிசோல் கொடுக்கப்படுகின்றன. அதேநேரத்தில், அவை எலும்புகள் பலமிழப்பது, நீரிழிவு நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், ரத்த அழுத்தம் அதிகரிப்பு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

    பிற பிரச்னைகளுக்கான சிகிச்சையாக இவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதன் காரணமாகவும் பலரும் பக்க விளைவுகளால் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, கட்டாயம் தேவைப்படும் பட்சத்தில் மட்டுமே இந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் தீவிர பரிசோதனைகளுக்குப் பிறகு தேவையான நாட்களுக்கு, தேவையான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஈஸ்ட்ரோஜனை கொடுப்பதற்கு முன் பரிசோதிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண்ணின் தாய் அல்லது ரத்த உறவினர்கள் யாருக்கும் மார்பக அல்லது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    அத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு ஹார்மோன்கள் கொடுப்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம். அழகுக்கான சில அளவுகோல்களைக் கருத்தில் கொண்டு, அவற்றை செயற்கையாகப் பெறுவதற்கு தேவையில்லாமல் இதுபோன்ற முறைகளைக் கையாண்டால், ஆரோக்கியம் கெட்டு, சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகலாம்.

    மார்பகங்களின் அளவை அதிகரிக்க சிம்பிளான பல இயற்கை வழிகள் இருக்க, ஏன் சர்ஜரிக்கு செல்ல வேண்டும்.

    மார்பகங்களின் அளவை பெரிதாக்க தினமும் தவறாமல் மசாஜ் செய்து வர வேண்டும். அதிலும் ஒரு மாதம் தொடர்ந்து தினமும் 30 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் மசாஜ் செய்யும் போது, மார்பகங்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து, அதனால் மார்பகங்களின் அளவை பெரிதாக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படும்.

    மார்பக தசைகளை மையமாக கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சிகள் அனைத்தும் மார்பகங்களின் அளவை பெரிதாக்கும். எனவே இங்கு கொடுக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிகளை தவறாமல் அன்றாடம் செய்து வாருங்கள். இதனால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகளான சிக்கன் சூப், சோயா உணவுப் பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், பழங்கள், முட்டை, சூரியகாந்தி விதைகள், எள் மற்றும் ஆளி விதை போன்றவற்றை அதிகம் சாப்பிட்டு வர வேண்டும்.

    • சாதாரண கட்டிகள் என்று இருப்பினும் இதனால் உண்டாகும் துன்பங்கள் ஏராளம்.
    • பெண்கள் முறையான சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

    'பைப்ரோஅடினோமா' எனப்படும் தசைக்கட்டிகள் இன்றைய வாழ்வியலில் பல்வேறு பெண்களுக்கு மார்பகத்தில் உண்டாகிறது. முக்கியமாக 20 முதல் 35 வயதுள்ள பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் இதன் அளவு கூடுகிறது. ஆனால் இந்த வகை கட்டிகள் சாதாரணமான கட்டிகள் தான். இருப்பினும் ஆயிரத்தில் இரண்டு பேருக்கு இது புற்றுக்கட்டியாக மாறும் வாய்ப்புள்ளதாக நவீன அறிவியல் கூறுகின்றது.

    ஆகவே அவ்வப்போது இதனை பரிசோதனை செய்துகொள்வது நல்லது. சித்த மருத்துவ தத்துவத்தின் படி, வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் கபமும் வாதமும் சீர் கேடடைந்து கபவாதம் என்ற நிலை உருவாகி இத்தகைய கட்டிகளை மார்பகத்தில் உண்டாக்குவதாக கூறுகின்றது.

    ஆக கபவாதத்தை சீர் செய்யும் மருந்துகளையும், கட்டிகளை கரைக்கும் மூலிகைகளையும், மருந்துகளையும் எடுத்துக்கொள்ள நோய் நிலையில் முன்னேற்றம் வரும். இவை சாதாரண கட்டிகள் என்று இருப்பினும் இதனால் உண்டாகும் துன்பங்கள் ஏராளம். ஆக, பெண்கள் முறையான சிகிச்சை மேற்கொள்வது நல்லது. கட்டிகளை கரைக்கும் சித்த மருத்துவ மூலிகைகளாகிய அமுக்கராக் கிழங்கு, மஞ்சள், சேராங்கொட்டை, கொடிவேலி, கழற்சிக்காய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்துகளை நாடுவது நல்லது.

    இதில் அமுக்கராக் கிழங்கு கட்டிகளை கரைப்பதோடு மட்டுமின்றி, அது சார்பாக பெண்களுக்கு உண்டாகும் மன அழுத்தத்தைப் போக்கி நன்மை பயக்கும். சேராங்கொட்டை எனும் கொடிய நஞ்சுடைய பாலினை கொண்ட மூலிகையின் நஞ்சினை போக்கி மருந்தாக சித்த மருத்துவம் பயன்படுத்துகிறது. இது சேரும் மருந்துகள் தசைக்கட்டி மட்டுமல்லாது புற்றுக்கட்டிகளிலும் நல்ல பலன் தருவதாக உள்ளது. மஞ்சள் எனும் மாமருந்து தசைகட்டிக்கும் நல்ல பலன் தரும். தினசரி பாலில் மஞ்சள் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து எடுத்துக்கொள்ள கட்டியை கரைக்க உதவும். இன்னும் பல தாது கலப்பு மருந்துகள் மார்பக தசைக்கட்டிகளில் உதவக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சித்த மருத்துவ மூலிகை கடைசரக்கான வெந்தயம் பால் சுரப்பிகளுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. மார்பக அழற்சி எனும் வீக்கநிலையில் வெந்தயத்தை பயன்படுத்த பித்தம் குறைந்து வீக்கம் தணியும். அதற்கு வெந்தயத்தை அரைத்து பற்றாக்கி மார்பகத்தின் மீது போடலாம்.

    இவை அனைத்தும் ஒரு புறமிருக்க மார்பகம் சார்ந்த குறிகுணங்களான, சுற்றி நெறிக்கட்டிகள் காணுதல், மார்பகத்தின் வடிவம் மற்றும் பருமன் மாறுபட்டு காணுதல், வழக்கத்திற்கு மாறான கசிவு, மார்பகத்தின் மேல் ரத்த நாளங்கள் விரிந்து காணுதல், மார்பகம் கடினமாக தோன்றுதல் ஆகிய குறிகுணங்களில் ஒன்றோ அல்லது பலவோ சேர்ந்து தோன்றினால் பெண்கள் எந்த வித தயக்கமும் இன்றி மருத்துவரை அணுகுவது அவசியம். முறையான பரிசோதனை முறைகள் மூலம் மார்பகம் சார்ந்த நோய்களை முன்னதாகவே கணிக்க முடியும். சித்த மருத்துவம் மூலம் தீர்வு தந்து நலமான வாழ்வை நோக்கி நகர முடியும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • மலச்சிக்கல் கூடினால் வாதம் கூடுவதாகப் பொருள்.
    • மார்பக வலிக்கு காரணம் உடலில் அதிகமாகும் வாதம் தான் என்கிறது சித்த மருத்துவம்.

    பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான். கிட்டத்தட்ட 65% பெண்கள் மார்பக வலியால் அவதிப்படுவதாக அறிவியல் தரவுகள் கூறுகின்றன.

    மாதவிடாய்க்கு முன்பாக இத்தகைய வலியுடனும் வேதனையுடனும் பல பெண்கள் துன்பப்படுகிறார்கள். முதல் பூப்பினை எய்தும் போதும், கர்ப்ப காலத்திலும், கர்ப்பத்திற்கு பின் பாலூட்டும் காலத்திலும் கூட பல பெண்களுக்கு மார்பக வலி பல்வேறு உடல் செயலியல் மாற்றங்களால் உண்டாகிறது. இறுதி மாதவிடாய் என்று கருதப்படும் மெனோபாஸ் நிலைக்கு பின்னும் பல பெண்களுக்கு மார்பக வலி உண்டாகும். இது 'சைக்ளிக் அல்லாத மார்பக வலி' என்று கருதப்படும். இவற்றிற்கு சித்த மருத்துவம் தரும் தீர்வுகளையும், உணவு முறைகளையும் பின்பற்றுவது, வலியை குறைத்து நல்ல முன்னேற்றம் தரும்.

    மார்பக வலிக்கு காரணம் உடலில் அதிகமாகும் வாதம் தான் என்கிறது சித்த மருத்துவம். எனவே வாதத்தை குறைக்க எளிமையான ஆமணக்கு எண்ணெயை பயன்படுத்தலாம். அதனை மார்பகத்தின் மேலேயும் பூசி வரலாம். அவ்வப்போது ஆமணக்கு எண்ணெயை தேக்கரண்டி அளவு உள்ளுக்கும் குடிக்க வாதம் குறைந்து வலி குறையும். சிறிது சமைக்கவும் பயன்படுத்தி, குடும்பத்தில் உள்ள அனைவரின் வாதத்தையும் குறைத்து உடலை கெடாமல் பாதுகாத்து கொள்ளலாம்.

    வாதத்தை தூண்டும் பதப்படுத்தப்பட்ட, எண்ணெய் தோய்ந்த உணவுகளை தவிர்த்து, லேசான, எளிதில் சீரணிக்கும் படியான உணவுகள் எடுத்துக்கொள்வது அவசியம். உணவில் அதிக நார்ச்சத்துக்களை கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகள் பயன்படுத்துவதும் அவசியம். மலச்சிக்கல் கூடினால் வாதம் கூடுவதாகப் பொருள்.

    இதனால் மார்பகவலி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் மலச்சிக்கலை உண்டாக்கும் உணவுகளை தவிர்ப்பது நல்லது. காபி மற்றும் தேநீரில் உள்ள மெத்தில்சேந்தின் எனும் வேதிப்பொருள் மாதவிடாயின் போது மார்பகவலியை அதிகரிப்பதாக உள்ளது. இன்றைய வாழ்வியலில் காபி, டீ-க்கு அடிமையாகிவிட்ட பல பெண்கள் இதை அவசியம் தெரிந்துகொண்டு இயற்கை பானங்களை நாடுவது நலம் பயக்கும்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான்.
    • சித்த மருத்துவத்தில் இதற்கு நிரந்தர தீர்வு உண்டு.

    மார்பகம் என்பது பெண்கள் பூப்பு அடைந்தபின் வளர்ச்சி அடையும் உறுப்பாக பலர் கருதுகின்றனர். உண்மையில் தாயின் கருவில் இருக்கும் போதே, ஆறாவது வாரம் முதல் எட்டாவது வாரத்தில் மார்பகத்தின் வளர்ச்சி உண்டாவதற்கான ஆயத்தம் உடலில் உண்டாகி விடுகிறது. அதன் பின் மார்பகம் சார்ந்த பல்வேறு பகுதிகள் ஒவ்வொன்றாக உண்டாக துவங்கி விடுகின்றன. இத்தகைய வளர்ச்சியில் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. பெண் ஹார்மோனாக கருதப்படும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டெரோன் மட்டுமல்லாது மூளையில் உள்ள பிட்யூட்டரி எனும் நாளமில்லா சுரப்பியில் சுரக்கும் புரோலாக்டின் எனும் ஹார்மோனும் முக்கிய பங்காற்றுகிறது. இந்த புரோலாக்டின் ஹார்மோன் தான் தாய்ப்பால் சுரப்பிற்கும் முதன்மையானது.

    பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது மார்பக வலியினால் தான். கிட்டத்தட்ட 65% பெண்கள் மார்பக வலியால் அவதிப்படுவதாக அறிவியல் தரவுகள் கூறுகின்றன.

    மாதவிடாய்க்கு முன்பாக இத்தகைய வலியுடனும் வேதனையுடனும் பல பெண்கள் துன்பப்படுகிறார்கள். இது 'சைக்ளிக் மாஸ்டால்ஜியா' என்று அழைக்கப்படும். இது மட்டுமில்லாது முதல் பூப்பினை எய்தும் போதும், கர்ப்ப காலத்திலும், கர்ப்பத்திற்கு பின் பாலூட்டும் காலத்திலும் கூட பல பெண்களுக்கு மார்பக வலி பல்வேறு உடல் செயலியல் மாற்றங்களால் உண்டாகிறது. இறுதி மாதவிடாய் என்று கருதப்படும் மெனோபாஸ் நிலைக்கு பின்னும் பல பெண்களுக்கு மார்பக வலி உண்டாகும். இது 'சைக்ளிக் அல்லாத மார்பக வலி' என்று கருதப்படும். இவற்றிற்கு சித்த மருத்துவம் தரும் தீர்வுகளையும், உணவு முறைகளையும் பின்பற்றுவது, வலியை குறைத்து நல்ல முன்னேற்றம் தரும்.

    மார்பக வலியின் போது சித்த மருத்துவ கடைசரக்குகள் பயனுள்ளதாக உள்ளதை ஆய்வுத் தரவுகள் கூறுகின்றது. கருஞ்சீரகம், சோம்பு, இஞ்சி, மஞ்சள், ஆளி விதை ஆகியன அதில் முக்கிய இடத்தை பிடிக்கின்றன. கருஞ்சீரகத் தைலத்தை கொண்டு மேலை நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் சைக்ளிக் மார்புவலிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாக முடிவுகள் கூறுகின்றன. மாதவிடாயின் போது உண்டாகும் வயிற்றுவலிக்கு சோம்பு கசாயம் (பெருஞ்சீரகம்) கைகண்ட மருந்து. அதைப்போல் மார்பக வலிக்கும் பயன் தருவதாக உள்ளது. ஒமேகா-3 எனும் மருத்துவ குணமிக்க கொழுப்பு அமிலத்தை இயற்கையில் கொண்டுள்ள சித்த மருத்துவ மூலிகை ஆளி விதை. பெண்களின் மார்பக வலியை குறைப்பதில் இதுவும் பயனளிக்கும்.

    மஞ்சள் பெண்களின் மாதவிடாய் சமயத்தில் உண்டாகும் மார்பக வலிக்கும் சிறந்த பலன் தருவதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. காரணம் இதில் உள்ள குர்குமின் வேதிப்பொருள் உடலில் வலி மற்றும் வீக்கத்திற்கு காரணமாகும் ப்ரோஸ்டாகிலாண்டின் என்ற வேதிப்பொருளின் செயலை தடுப்பதாக உள்ளது.

    இஞ்சியில் உள்ள 'ஜின்ஜிபேரின்' எனும் அல்கலாய்டு வேதிப்பொருள் உடலில் வீக்கம் மற்றும் வலியை உண்டாக்கும் ப்ரோஸ்டாகிலாண்டின் மற்றும் லியூகோட்ரின் ஆகியவற்றின் செயலை தடுத்து வலியை குறைக்கும் தன்மையுடையது. ஆக பெண்கள் ஒரு கோப்பை இஞ்சி டீ எடுத்துக்கொள்வது பெண்களின் மார்பக வலியை குறைக்கும் இயற்கை அலுப்பு மருந்தாக உள்ளது. இது சித்த மருத்துவத்தில் எளிமையே வலிமைக்கு உதாரணம்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • குறைந்த கொழுப்புள்ள உணவுகளையும் சத்தான உணவுகளையும் சாப்பிடவும்.
    • இறுக்கமான உள்ளாடைகள் அணியாதீர்கள்.

    மாதவிடாய் காலத்தில் சில பெண்களுக்கு மார்பகங்களில் வலி, வீக்கம், கனத்த உணர்வு போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகள் மாதவிடாய் தொடங்குவதற்கு சில நாட்கள் முன் ஆரம்பித்து, மாதவிடாய் காலத்தில் உச்சத்தை அடைந்து பிறகு தானாகவே சரியாகி விடக்கூடியவை. பயப்படத் தேவையில்லை. அதற்காக இப்படி எல்லா அறிகுறிகளையுமே சாதாரணம் என நினைத்து அலட்சியப்படுத்தவும் கூடாது.

    கடைப்பிடிக்க வேண்டியவை:

    குறைந்த கொழுப்புள்ள உணவுகளையும் சத்தான உணவுகளையும் சாப்பிடவும். இறுக்கமான உள்ளாடைகள் அணியாதீர்கள். இரவில் தூங்கும்போது உள்ளாடைகளை கழற்றிவிட்டு வசதியாக தூங்குங்கள். டீ, காஃபி குடிக்க வேண்டாம். மார்பகத்தில் சுடுதண்ணீர் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துவிடவும்.

    மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் என்பதும், சிறியதாக இருந்தால் குறைவாக சுரக்கும் என்பதும் தவறான கருத்தாகும்.
    பெண்களின் உடல் உறுப்புகளில் முக்கியமானவை மார்பகங்கள். வயது மற்றும் ஹார்மோன்களின் செயல்பாட்டால் இவற்றில் ஏற்படும் மாற்றங்களை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். மார்பகங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

    பூப்பெய்தும் காலத்தில் மார்பகங்கள் வளரத் தொடங்குகின்றன. இவை கொழுப்புத் திசுக்கள், பால் சுரப்பு நாளங்கள் கொண்டவை. உடல் எடை கூடும்போது மார்பகங்களின் அளவும் அதிகரிக்கும். இதன் காரணமாக அவை சீக்கிரமே தளர்ச்சி அடைய நேரிடலாம். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சரியான அளவுடைய உள்ளாடைகளை அணிதல் போன்ற வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் இதனைத் தவிர்க்க முடியும்.

    கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களால் மார்பகங்கள் மற்றும் மார்புக் காம்புகள் பெரிதாகுதல், தசைகள் விரிவடைதல், மென்மை
    யாகுதல், மார்புக் காம்புகளைச் சுற்றியுள்ள பகுதி கருமை அடைதல் போன்ற மாறுதல்கள் உண்டாகக்கூடும். இதன் காரணமாக மார்பகங்களில் வலி, அரிப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம்.

    மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் என்பதும், சிறியதாக இருந்தால் குறைவாக சுரக்கும் என்பதும் தவறான கருத்தாகும். பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால்தான் சிறந்த உணவு. அதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தாய்ப்பால் புகட்டுவது தாயின் உடல் நலத்துக்கும் நல்லது. அதன் மூலம் கர்ப்ப காலத்தின் போது அதிகரித்த எடையை எளிதாகக் குறைக்க முடியும்.

    தாய்ப்பால் புகட்டுவதற்கு முன்பும், புகட்டிய பின்பும் மார்பகங்களை மிதமான சூடுள்ள நீரால் சுத்தப்படுத்த வேண்டும். பின்பு பருத்தித் துணியால் மென்மையாகத் துடைக்க வேண்டும். இதன் மூலம் மார்புக் காம்புகளில் புண், வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கும் பெண்களுக்கு பால் கட்டுதல், வலி ஏற்படுதல், பால் சுரப்பதில் சிக்கல்கள் போன்றவை ஏற்படும். அவர்களை மார்பகப் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் உள்ளது.

    மேலும் பெண்களுக்கு உடல் பருமன், மரபியல், உணவு மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களாலும் மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம். இந்தியாவில் கருப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் ‘மேமோகிராம்’ எனும் பரிசோதனையை வருடத்துக்கு ஒரு முறை செய்து கொள்வது நல்லது. இதைத்தவிர சுய பரிசோதனை மூலமும் மார்பகங்களில் கட்டிகள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் மாற்றங்கள் உள்ளதா? என்பதை பெண்கள் தெரிந்து கொள்ளலாம்.

    பல பெண்கள் மார்பகங்கள் தளர்ச்சி அடைதல், அவற்றின் அளவு, வடிவம் போன்றவற்றை எண்ணி குழப்பம் அடைந்து தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். அதைத் தவிர்த்து விழிப்புணர்வோடு செயல்படுவோம்.
    ×