search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "without permission"

    புன்னம்சத்திரத்தில் அனுமதியின்றி மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே ஜன வெளியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே மசக்கவுண்டன்புதூர் செல்லும் சாலையில் அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

    இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு மணிகண்டன் மது விற்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    அதியமான்கோட்டையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேரை கைது செய்தனர்.
    தருமபுரி:

    அதியமான்கோட்டை போலீசாருக்கு அரசுக்கு புறம்பாக மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த பெருமா என்பவர் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெருமாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 8 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

    இதேபோன்று பென்னாகரம் போலீசார் நடத்திய சோதனையில் அதே பகுதியை சேர்ந்த சத்தியா மற்றும் கணேசன் என்பவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    தேவதானப்பட்டியில் அனுமதியின்றி மது பாட்டில் விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    தேவதானப்பட்டி:

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தேவதானப்பட்டியில் அனுமதியின்றி மது பானங்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கெங்குவார்பட்டியில் முத்துபாண்டி மனைவி ஆச்சியம்மாள் (48), தேவதானப்பட்டி தெற்கு தெருவில் சென்ராயன் (47), சில்வார்பட்டி வடக்கு தெருவில் தெய்வம் மனைவி செல்லம்மாள் (46), பிரகாஷ் (32), இ.புதுப்பட்டியில் முருகன் (44) ஆகியோர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டு இருந்தனர்.

    போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 397 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அனுமதியின்றி கட்சி கொடி ஏற்றிய முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 26 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தில் கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் தலைமையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் அங்குள்ள மாரியம்மன் கோவில் முன்பு பார்வர்டு பிளாக் கட்சி கொடியை ஏற்றினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

    இது குறித்து துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராம நிர்வாக அதிகாரி ரகுபதி எம்.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    எவ்வித அனுமதியும் பெறாமல் கட்சிக்கொடியை ஏற்றியதாக முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் காசி, பாஸ்கரபாண்டி உள்ளிட்ட 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் கிருஷ்ணாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் சட்ட விரோதமாக செயல்படும் காய்கறி கடைகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை இழுத்து மூட மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. #Koyambedumarket

    சென்னை:

    கோயம்பேடு வணிக வளாகம் ஆசியாவின் மிகப் பெரிய மார்க்கெட்டாக விளங்குகிறது.

    சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிர்வாகத்தின் கீழ் செயல்படும் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக கமிட்டி இந்த வணிக வளாகத்தில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்து கண்காணித்து வருகிறது. இங்கு காய்கறி மார்க்கெட்டில் 1900 காய்கறி கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் 1600 கடைகள் சட்டவிரோதமாக செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அங்கு காய்கறி கடை வைத்திருப்பவர்களுக்கு அதற்கான உரிய அனுமதி ஆணை எதுவும் இல்லை. வேறொருவர் காய்கறி கடைக்கு அனுமதி பெற்று அதை மற்றவருக்கு வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

    இதற்கான முறைப்படியான ஒப்பந்தம் எதுவும் செய்யப்படாமல் சட்ட விரோதமாக செயல்படுவதாக மார்க்கெட் நிர்வாக கமிட்டி தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு அறிக்கையாக அளித்துள்ளது. அதில் மொத்தம் உள்ள 1900 கடைகளில் 1600 கடைகள் சட்ட விரோதமாக இயங்குவதாக குறிப்பிடப்பட்டு அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    இதையடுத்து சட்ட விரோதமாக செயல்படும் காய்கறி கடைகள் மீது நடவடிக்கை எடுத்து அவற்றை இழுத்து மூட மார்க்கெட் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

    ஒட்டு மொத்தமாக 1600 கடைகள் மீது நடவடிக்கை எடுத்து மூடப்பட்டால் சென்னை நகரில் காய்கறி சப்ளை பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே காய்கறி சப்ளை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பது பற்றி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாடு மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்து 450 லோடு காய்கறிகள் வருகின்றன. இங்கிருந்து சென்னை நகரில் உள்ள சிறிய மார்க்கெட்டுகள், சிறிய கடைகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

    இதேபோல் சென்னை புறநகர் பகுதி வியாபாரிகளும் கோயம்பேடு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்று சில்லரை வியாபாரம் செய்கிறார்கள்.

    இதற்கிடையே சட்ட விரோதமாக செயல்படும் காய்கறி கடைகளுக்கு உரிய அனுமதி பெற வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்குள் முறைப்படி அனுமதி பெற வேண்டும், ஒதுக்கீடுதாரர்கள் மட்டுமே கடை நடத்த வேண்டும் என்று மார்க்கெட் நிர்வாக கமிட்டி அதிகாரி தெரிவித்துள்ளார். #Koyambedumarket

    இண்டூர் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி மண் கடத்தி வந்த லாரி டிரைவரை கைது செய்தனர்.
    இண்டூர்:

    தர்மபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சின்னசாமி மற்றும் போலீசார் தருமபுரி-பென்னாகரம் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக அனுமதியின்றி டிப்பர் லாரியில் செம்மண் கடத்தி வந்த டிரைவர் முருகன் (வயது 39), லாரியின் உரிமையாளர் முனுசாமி ஆகிய 2 பேர் மீது வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தனர். தலைமறைவாகி உள்ள முனுசாமியை போலீசார் தேடி வருகிறார்கள். பின்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.      
    விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உடுமலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 88 பேர் கைது செய்யப்பட்டனர்.
    உடுமலை:

    தமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கடந்த 17-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 23-ந்தேதி முதல் உண்ணா விரத போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதுவரை அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இந்த பிரச்சினையை தீர்க்க அரசு பேச்சுவார்த்தை நடத்த கோரியும் உடுமலையில் அரசியல் கட்சியினர் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக போலீசில் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

    இந்த நிலையில் அரசியல் கட்சியினர் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று உடுமலை மத்திய பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத் தினர். இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை தாங்கி பேசினார்.

    இதில் விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஏ.பாலதண்டபாணி, உடுக்கம் பாளையம் பரமசிவம், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செ.செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் கே.எஸ்.ரணதேவ், ஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் வி.சவுந்திரராஜன், காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் டி.கோவிந்தராஜ், தமிழ் மாநில காங்கிரஸ் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் டி.ரெத்தினவேல், உடுமலை நகர தலைவர் ஏ.பாலகிருஷ்ணன், தே.மு.தி.க. நகர செயலாளர் ராமச்சந்திரன், ம.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தெற்கு மாவட்ட தலைவர் கொங்கு ரவிச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய பிரிவு செயலாளர் முத்தமிழ் வேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் அங்கு வந்த போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 3 பெண்கள் உள்பட 88 பேரை போலீசார் கைது செய்து வேன்கள் மூலம் உடுமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மாலையில் கைதான அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 
    இரணியல் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கருங்கல் ஏற்றிவந்த லாரி டிரைவர் மற்றும் கிளீனரை கைது செய்தனர்.

    இரணியல்:

    குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    இதையடுத்து இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞான சிகாமணி மற்றும் போலீசார் நேற்று தோட்டியோடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக லாரி ஒன்று வேகமாக வந்தது. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியை தடுத்து நிறுத்தினார்கள்.

    பின்னர் அந்த லாரியை சோதனை செய்தபோது அதில் எந்தவித அனுமதியும் இன்று கருங்கல் கடத்தி வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் லாரியை நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியை சேர்ந்த கோமதி (வயது 38) என்பவர் ஓட்டி வந்ததும், அவருடன் கிளீனராக நெய்யூர் பகுதியை சேர்ந்த மைக்கேல்ஜோஸ் (44) என்பவர் வந்ததும் தெரியவந்தது.

    போலீசார் அவர்களை எந்தவித அனுமதியும் இன்றி கருங்கல் ஏற்றி வந்ததாக கைது செய்தனர். மேலும் அவர்களிடம் எங்கிருந்து கருங்கல் ஏற்றி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து போலீசார் கனிமவளங்கள் கடத்தப்பட்டு வருவதை தடுப்பதற்காக கண்காணித்து வருகின்றனர். அனைத்து வாகன சோதனைச்சாவடிகளிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டம் ஏரியூர் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்ற 3 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் பகுதியில் அனுமதியின்றி திருட்டு தனமாக வீடு மற்றும் கடைகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது அதே பகுதியில் திருட்டு தனமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பழனியம்மாள், சின்னகண்ணு, முத்தம்மாள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி பெண்கள் சிறையில் அடைத்தனர்.  

    இதேபோல் பெரும்பாலை பகுதியில் அனுமதியின்றி மது விற்ற செவந்தான் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காவேரிபட்டணம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.
    காவேரிபட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது சந்தாபுரம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி ஏற்றி வந்த லாரியை பிடித்தனர். லாரியில் 2 யூனிட் மணல் கடத்தி வந்த பழைய தருமபுரி குண்டலபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது29) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த லாரி உரிமையாளர் சுமதி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பூந்தமல்லியில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த 130 ஆழ்குழாய் கிணறுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி தாலுகாவுக்கு உட்பட்ட சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலையையொட்டி உள்ள பகுதிகளில் அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு இயங்கி வந்தன.

    இந்த கிணறுகளில் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு விற்கப்படுவதாகவும் இதனால் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் புகார் வந்தது.

    அதிக அளவில் லாரிகள் செல்வதால் இந்த சாலை மிகவும் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறி விட்டது. எனவே இதன் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வருவாய் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.

    இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட உதவிகலெக்டர் ரத்னா தலைமையில் பூந்தமல்லி தாசில்தார் புனிதவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் வரு வாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து அனுமதி இன்றி செயல்பட்டு வந்த ஆழ்குழாய் கிணறுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தினார்கள்.

    மேலும் அங்கு கொடுக்கப்பட்டு இருந்த மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, போர்வெல், மிஷின்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய அனுமதி இல்லாமல் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுத்து செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் பாருக்கு சீல் வைக்கப்பட்டதால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த நாகேஸ்வரன் கோவில் வடக்கு வீதியில் டாஸ்மாக் பார் ஒன்று இயங்கி வந்தது. இந்த நிலையில் அந்த கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அந்த பகுதியில் டாஸ்மாக் பார் இருப்பதால் அப்பகுதி யினருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்த வழியாக பெண்கள் யாரும் சென்று வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பொதுமக்களின் புகாரை தொடர்ந்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சத்தியம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் ஆகியோர் அனுமதியின்றி செயல்படுவதாக கூறப்படும் டாஸ்மாக் பாருக்கு சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது அந்த டாஸ்மாக் பாரில் தாராசுரம் கீழதெருவை சேர்ந்த பிரகாஷ் (38) என்பவர் பணியில் இருந்தார். அங்கு அதிகாரிகள் சோதனை நடத்திய போது வேறு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனே அந்த பாருக்கு சீல் வைக்க உத்தரவிட்டனர். அதன்படி அந்த கடை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஊழியர் பிரபாகரனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×