search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sold wine bottle"

    தேவதானப்பட்டியில் அனுமதியின்றி மது பாட்டில் விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    தேவதானப்பட்டி:

    திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. தேவதானப்பட்டியில் அனுமதியின்றி மது பானங்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    கெங்குவார்பட்டியில் முத்துபாண்டி மனைவி ஆச்சியம்மாள் (48), தேவதானப்பட்டி தெற்கு தெருவில் சென்ராயன் (47), சில்வார்பட்டி வடக்கு தெருவில் தெய்வம் மனைவி செல்லம்மாள் (46), பிரகாஷ் (32), இ.புதுப்பட்டியில் முருகன் (44) ஆகியோர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டு இருந்தனர்.

    போலீசார் அவர்கள் 7 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 397 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ×