search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "without permission"

    • கடத்தூர் போலீசார் சிங்கிரி பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.
    • அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் ஒருவர் அனுமதி யின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    கோபி:

    கோபிசெட்டி பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பெருமாள் மற்றும் போலீசார் கோபிசெட்டி பாளையம் அடுத்த சிங்கிரி பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை பின்புறம் ஒருவர் அனுமதி யின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார். போலீசாரை கண்டதும் அவர் அங்கு இருந்து தப்பி ஓடினார். போலீசார் அவரை சுற்று வளைத்து பிடித்தனர்.

    போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கோவை மாவ ட்டம் நரசிம்ம நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (41) என்பதும், அவர் சிங்கிரிபாளையம் பகுதியில் தங்கி அனுமதி யின்றி மது விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து ரூ.19 ஆயிரத்து 450 மதிப்புள்ள 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசு அனுமதி இல்லாமல் விற்பனைக்காக வெளி மாநில மதுபாட்டில்கள் 48 அடங்கிய 14 அட்டைப்பெட்டிகள் வீட்டில் வைத்திருந்ததை போலீசார்கள் கண்டுபிடித்தனர்.
    • அப்துல் கனி அண்ணன் தம்பிகளான சஞ்சீவி, முரளி ஆகிய இருவருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் பகுதியில் கடந்த 8.12 2016 அன்று அப்போதைய பாபநாசம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் செந்தில், அன்பழகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவில் தேவராயம்பேடை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சஞ்சீவி வயது 34 அவரது அண்ணன் முரளி 40 ஆகிய இருவரும் போலீசாரை கண்டவுடன் தப்பி ஓட முயற்சி செய்தார்கள்.

    உடனே அவர்களைப் பிடித்து விசாரணை செய்தபோது அரசு அனுமதி இல்லாமல் விற்பனைக்காக வெளி மாநில மதுபாட்டில்கள் 48 அடங்கிய 14 அட்டைப்பெட்டிகள் வீட்டில் வைத்திருந்ததை போலீசாார்கள் கண்டுபிடித்தனர்.

    பின்னர் அங்கிருந்த 672 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து பாபநாசம் போலீசார்கள் வழக்கு பதிவு செய்து அண்ணன் தம்பிகளான சஞ்சீவி, முரளி ஆகிய இருவரையும் கைது செய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர் படுத்திருந்தனர்.

    வழக்கை விசாரணை செய்த பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் கனி அண்ணன் தம்பிகளான சஞ்சீவி, முரளி ஆகிய இருவருக்கும் 1 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.2 ஆயிரமும் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார்.

    • ஆசனூர்- சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள 2 காட்டேஜ்களில் அனுமதியின்றி சிலர் மது பானம் குடித்து கொண்டு இருந்தனர்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட 14 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    ஆசனூர்- சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள 2 காட்டேஜ்களில் அனுமதியின்றி சிலர் மது பானம் குடித்து கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீசார் ஒரு காட்டேஜில் விற்பனைக்கு வைத்திருந்த 14 மது பாட்டில்கள் மற்றொரு காட்டேஜில் இருந்து 3 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது அருந்த அனு மதித்த ஜெயபாலன (68), ரமேஷ் (42) ஆகியோரை கைது செய்தனர்.

    இதே போல் ஆசனூர் அருகே உள்ள காட்டே ஜ்களில் மது அருந்த அனு மதித்த ஆசனூர் பகுதியை சேர்ந்த ராஜா (23), பெரியசாமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கு இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மலையம்பாளை யம் அருகே உள்ள வேலம் பாளையம் பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவர் அனுமதியின்றி டாஸ்மாக் மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்து இருந்தார். போலீசார் அவரி டம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை அடுத்த சீனாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை எதிரில் ஒருவர் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி னர். இதில் அவர் கிருஷ்ண கிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த மணி கண்டன் (31) என்றும், அவர் அதிக விலைக்கு டாஸ்மாக் மதுவை விற்ப னை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரிடம் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு 16 ரோடு பகுதி யில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில் களை விற்பனை செய்ய கொண்டு சென்றார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு அதியமான் நகரை சேர்ந்த சீனிவாசன் (50) என்றும் அவர் மது பானத்தை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை அருகே உள்ள காளியம்புதூர் பகுதியில் பழனிசாமி (72) என்பவர் டாஸ்மாக் மது பானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்து இருந்தார். அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நம்பியூர் அருகே உள்ள வரபாளையம் அடுத்த அழகம்பாளையம் பகுதியில் வெள்ளியங்கிரி (42) என்பவர் மது பானத்தை விற்பனை செய்து கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மலையம்பாளையம் அடுத்த குள்ள கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பாவா மொய்தீன் (50) என்பவர் பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். போலீசார் சம்பவ இடத்து க்கு சென்று பெட்டி கடை யில் சோதனை நடத்தி அங்கு இருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த னர்.

    ஈரோடு நாடார் மேடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (32) என்பவர் லாட்டரி சீட்டு களின் எண்களை வெள்ளை தாளில் எழுதி விற்பனை ெசய்து ெகாண்டு இருந்தார்.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட 14 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்த முத்துகிரு ஷ்ணன் (38) என்பவர் 19 ரோடு நாச்சி பாளையம் பகுதியில் தடை செய்ய ப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து 36 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.15 ஆயிரத்து 10-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
    • அவரை பிடித்து விசாரித்ததில் அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    பவானி:

    பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் பவானி அடுத்த போத்த நாயக்கனூர் அருகே கவுண்டன்புதூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பவானி அருகே உள்ள நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வேலுச்சாமி (32) என்பதும், அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த தர்மா (24), சிவகங்கையை சேர்ந்த பிரபாகரன் (30) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 434 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் ரூ. 22 ஆயிரத்து 770 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மது பாட்டில்கள், பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. 

    • டி.என்.பாளையம் யூனியன் அலுவலகம் சாலையில் 3 யூனிட் கற்கள் அனுமதியின்றி விற்பனைக்காக ஏற்றி வந்தது தெரியவந்தது.
    • லாரி டிரைவர் உதயகுமார் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் பகுதியில் அனுமதியின்றி லாரியில் கற்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், கோபி மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் தலைமையில், வாணிப்புத்தூர் வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது டி.என்.பாளையம் யூனியன் அலுவலகம் சாலையில் கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியை கோபி மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் நிறுத்தி சோதனை செய்தபோது 3 யூனிட் கற்கள் அனுமதியின்றி விற்பனைக்காக ஏற்றி வந்தது தெரியவந்தது.

    கற்கள் ஏற்றி வந்த டிப்பர் லாரியை டி.என்.பாளையம் குமரன் கோயில் ரோடு பகுதியை சேர்ந்த உதயகுமார் (32) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

    அதிகாரிகள் லாரி டிரைவரை விசாரித்ததில், புஞ்சை துறையம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் குவாரியில் இருந்து கொங்கர்பாளையம் ஊராட்சி கவுண்டம்பா ளையம் கிராமத்தில் உள்ள தனியார் கிரசர்க்கு கற்களை ஏற்றி செல்வது தெரியவந்தது.

    இதனையடுத்து கோபி மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் இது குறித்து பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பிடிபட்ட லாரி டிரைவர் உதயகுமாரை விசாரித்த போது டிப்பர் லாரி டி.என்.பாளையத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து, அனுமதியின்றி கற்களை விற்பனைக்காக ஏற்றி வந்த டிப்பர் லாரியை 3 யூனிட் கற்களுடன் பறிமுதல் செய்து, லாரி டிரைவர் உதயகுமார் மீது பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம்; 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவாக நடந்தது

    புதுக்கோட்டை:

    அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே ஏம்பல் சாலையில் உள்ள கரைமேல் அய்யனார் கோவிலில் குதிரை எடுப்பு விழா நடைபெற்றது. இந்த குதிரை எடுப்பு விழாவையொட்டி பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவாக மாட்டு வண்டி பந்தயம் நடத்திய விழா கமிட்டியை சேர்ந்த 5 பேர் மீது கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பவானி அருகே உள்ள போத்தநாயக்கன் புதூர் பகுதியில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • இதனையடுத்து அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் பிரபுவை கைது செய்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள போத்தநாயக்கன் புதூர் பகுதியில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பவானி போலீசார் சென்று சோதனை மேற்கொ ண்டனர். அப்போது போத்தநாயக்கன்புதூர் சுடுகாடு அருகில் உள்ள முட்புதர் பகுதியில் சாக்கு மூட்டையில் விற்பனை செய்ய பிராந்தி மற்றும் பீர் பாட்டில்களை வாலிபர் ஒருவர் வைத்து இருந்தது தெரியவந்தது.‌

    அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு சூரம்பட்டி வலசு, பாண்டியன் வீதியை சேர்ந்த பிரபு (25) என்பதும், சமையல் வேலை செய்து வரும் இவர் அனுமதியின்றி மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து அனுமதியின்றி மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் பிரபுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • அனுமதியின்றி மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தானம் மற்றும் சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 116 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு அனுமதி யின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படு வதாக பவானி போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து பவானி சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், மகேஸ்வரி மற்றும் போலீசார் குருப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் சோதனை செய்தனர்.

    அப்போது குருப்பநாயக்கன் பாளையம் அய்யனாரப்பன் கோவில் வீதியில் சந்தானம் (வயது 51) 15 மது பாட்டில்கள் வைத்து கொண்டு விற்ப னை செய்தது தெரியவந்தது.

    அதேபோல் செங்கோடன் டீக்கடை வீதியில் சந்திரன் (56) என்பவர் 101 மது பாட்டில்கள் விற்பனை க்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதயைடுத்து அனுமதியின்றி மது பாட்டில் களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக சந்தானம் மற்றும் சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 116 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • ஈரோடு டவுன் போலீசார் கொங்காலம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
    • அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகம் படுபடியாக நின்று கொண்டிருந்தார். அவரை சோதனை செய்தபோது 15 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு:

    ஈரோடு டவுன் சப்- இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் கொங்காலம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் சந்தேகம் படுபடியாக நின்று கொண்டிருந்தார்.

    அவரைப் பிடித்து விசாரித்தனர். அவர் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா தும்பை பட்டி , கக்கன் நகரைச் சேர்ந்த திருமூர்த்தி (40) என தெரிய வந்தது. அவரை சோதனை செய்தபோது 15 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.

    அனுமதி இன்றி அவற்றை விற்பனைக்கு கொண்டு சென்றது அவர் ஒப்புக்கொண்டார்.

    இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து திருமூர்த்தியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ.2,100 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையான போலீசார் பவானி - அந்தியூர் பிரிவில் சோதனையில் ஈடுபட்டபோது முதியவர் ஒருவர் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டு இருந்தார்.

    அவரை சோதனை செய்தபோது அனுமதி இன்றி 6 மது பாட்டில்களை விற்பனைக்கு கொண்டு சென்றதை ஒப்புக்கொ–ண்டார். விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (73) என்ன தெரிய வந்தது.

    இதையடுத்து பவானி போலீசார் அவரை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேப்போல் சிறுவளூரில் அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட ஆனந்த் குமார் (33) போலீசார் கைது செய்தனர்.

    வேட்டவலம் அருகே பாய் வியாபாரத்தில் ஈடுபட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாததால் அவர் கொண்டு சென்ற ரூ.1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    வேட்டவலம்:

    வேட்டவலத்தை அடுத்த நாரையூர் கூட்ரோடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சஜேஸ்பாபு மற்றும் போலீசார் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. சந்தேகமடைந்த பறக்கும் படையினர் அந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் ஆவூர் கிராமத்தை சேர்ந்த பாய் வியாபாரி ஜான்பாஷா (வயது 50) இருந்தார். அவர் ரூ.99 ஆயிரத்து 400 வைத்திருந்தார். பாய் வியாபாரம் செய்து விட்டு அதில் கிடைத்த பணத்துடன் திரும்பிக்கொண்டிருப்பதாக அதிகாரிகளிடம் அவர் கூறினார். ஆனால் உங்களிடம் உரிய ஆவணம் இல்லை எனக்கூறி அந்த பணத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். ஆவணங்களை காண்பித்த பின்னர் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என பறக்கும் படைடயினர் அவரிடம் கூறினர்.

    இதேபோல் போளூர் தனி தாசில்தார் சுரேஷ் தலைமையிலான பறக்கும்படை குழுவினர் பேட்டை கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக போளூர் நோக்கி வந்த லாரியை அவர்கள் மடக்கி சோதனை செய்தனர்.

    அந்த லாரியில் செங்கம் தாலுகா ஓரந்தவாடி கிராமத்தை சேர்ந்த துரைசாமி மகன் குப்பன் (வயது 64) வந்தார். நெல் வியாபாரியான அவரிடம் ரூ.70 ஆயிரம் இருந்தது. கேளூரில் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ய செல்வதாக அதிகாரிகளிடம் கூறினார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி அவர் வைத்திருந்த ரூ.70 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து போளூர் தாசில்தார் ஜெயவேலுவிடம் ஒப்படைத்தனர். அந்த பணம் போளூர் கருவூலத்தில் செலுத்தப்பட்டது. 
    தர்மபுரி மாவட்டம் முழுவதும் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியில்லாமல் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளில் தேர்தல் சின்னங்களை எழுதியதாக 25 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். #LokSabhaElections2019
    தர்மபுரி:

    அரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தீர்த்த மலை, கொண்டரம்பட்டி, லாசனம்பட்டி, மாம்பட்டி ஆகிய இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் சுவர்களில் தேர்தல் சின்னங்களை எழுதிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதே போல் தர்மபுரி மாவட்டம் முழுவதும் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியில்லாமல் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளில் தேர்தல் சின்னங்களை எழுதியதாக 25 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.  #LokSabhaElections2019


    ஈரோடு மாவட்டத்தில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.4¼ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    ஈரோடு:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு செல்லப்படுகிறதா? என கண்டுபிடிக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்து வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் அதிகாரிகள் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சத்தி-கோபி ரோட்டில் கோபி கொடிவேரி அணை பிரிவில் பறக்கும் படை அதிகாரி பவானி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் வாகன சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ரூ.3 லட்சத்து 2 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கோபி அருகே உள்ள சிங்கிரிபாளையத்தை சேர்ந்த விவசாயியான நரேந்திரன் என்பது தெரியவந்தது.

    மேலும் நடத்திய விசாரணையில், நிலத்தை கிரையம் செய்வதற்காக சத்தியமங்கலம் சென்ற அவர், வேலை முடியாததால் ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்துடன் ஊருக்கு காரில் திரும்பியது தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் நரேந்திரனிடம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கோபி ஆர்.டி.ஓ. அசோகனிடம் ஒப்படைத்தனர்.

    சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்களை காட்டினால் அவரிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. தெரிவித்தார்.

    இதேபோல் விஜயமங்கலம்-ஊத்துக்குளி ரோட்டில் பெருந்துறை அருகே உள்ள வேட்டைக்காரன்கோவிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சுந்தரவடிவேல் மற்றும் அதிகாரிகள் நேற்று மதியம் 2 மணி அளவில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் ரூ.75 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் பவானியை சேர்ந்த திருநாவுக்கரசு என்பதும், ஊத்துக்குளியில் வெடிமருந்தை விற்றுவிட்டு அதற்கான பணம் ரூ.75 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு ஊருக்கு சென்றதும் தெரியவந்தது. ஆனால் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு பெருந்துறை தாசில்தார் துரைசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    சத்தியமங்கலம் அருகே உள்ள புதுரோடு என்ற கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜீவாதயாளன், சப்-இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். இதில் சத்தியமங்கலத்தில் இருந்து கேரளாவுக்கு பேக்கரி பொருட்கள் வாங்க காரில் சென்ற முகமது சுவேகான் (19) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காரில் ரூ.52 ஆயிரத்து 200 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக்கிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.4லட்சத்து 29 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.
    ×