search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cases filed"

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், திமுகவினர் மீது அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.#TNElections2019 #PollCodeViolation
    சென்னை:

    தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 4690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் 941, மத்திய மண்டலத்தில் 712, வடக்கு மண்டலத்தில் 376 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்சிகள் அடிப்படையில் திமுக தரப்பினர் மீது 1695 வழக்குகளும், அதிமுக தரப்பினர் மீது 1453 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.213.18 கோடி ரொக்கம், 2403 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்து. மேலும், ரூ.3.51 கோடி மதிப்பிலான மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.  #TNElections2019 #PollCodeViolation

    இவ்வாறு அவர் கூறினார். #TNElections2019 #PollCodeViolation

    தர்மபுரி மாவட்டம் முழுவதும் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியில்லாமல் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளில் தேர்தல் சின்னங்களை எழுதியதாக 25 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். #LokSabhaElections2019
    தர்மபுரி:

    அரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தீர்த்த மலை, கொண்டரம்பட்டி, லாசனம்பட்டி, மாம்பட்டி ஆகிய இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் சுவர்களில் தேர்தல் சின்னங்களை எழுதிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதே போல் தர்மபுரி மாவட்டம் முழுவதும் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியில்லாமல் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளில் தேர்தல் சின்னங்களை எழுதியதாக 25 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.  #LokSabhaElections2019


    புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிகளை மீறியதாக 1,254 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    விருதுநகர்:

    புத்தாண்டு கொண்டாட்டத்தை அனைவரும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். வாகனங்களை ஓட்டுவதில் கவனமாக செயல்பட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை காவல் துறை அறிவித்திருந்தது.

    மது அருந்தி வாகனம் ஓட்டினாலோ, அதிவேகமாக சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் புத்தாண்டு நாளில் இரவு முழுவதும் முக்கிய பகுதிகளை கண் காணித்து வந்தனர். இதில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 1,254 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக வழக்கு பதிந்தவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

    ×