என் மலர்
நீங்கள் தேடியது "Virudhunagar district"
- உணவுத் திருவிழாக்கள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களிலும் இவை தொடர்ந்து நடத்தப்படும்.
- தங்கள் ஆலோசனைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்து ஒருவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,
90களில் தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே அதிக அளவில் புரோட்டா தயாரிக்கும் மாவட்டமாக விளங்கியது விருதுநகர் எனலாம்.
விருதுநகர் எண்ணெய் புரோட்டா எல்லோரும் அறிந்தது. பர்மா கடை பற்றி எல்லோரும் பேசுவார்கள். ஆனால் தாஜ்,கார்னேசன், கமாலியா மற்றும் பெயர் இல்லாத கடைகளும் ஏராளமாக இருந்தன. அவர்கள் எந்த விதத்திலும் பர்மாவிற்கு குறைந்தவர்கள் இல்லை.
பானு என்கிற கடை இப்போதும் இருக்கிறது. அவர்கள் சாதாரணமாக புரோட்டாவிற்கு கொடுக்கும் சால்னாவே பெப்பர் சிக்கன் கிரேவியிலிருந்து சிக்கனை எடுத்துவிட்டு ஊற்றினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.
மாவட்டத் தலைநகர் விருதுநகராக இருந்தாலும் விருதுநகர் மாவட்டத்தின் கிங் சிவகாசி தான் என்பது போல, புரோட்டா தயாரிப்பிலும் சிவகாசி தான் நம்பர் ஒன். அங்கே நாள் முழுவதும் தீப்பெட்டி, பட்டாசு, காலண்டர்,டைரி, நோட் புக் மற்ற பிரிண்டிங் வேலைகள் என்று குடும்பத்தோடு வேலை பார்த்துவிட்டு, மாலை வேளையில் பார்சல் வாங்குவதற்கு என்றே நேர்ந்து விடப்பட்ட அவர்கள் குடும்பத்தில் ஒருவனை வாளியோடு அனுப்பிவிடுவார்கள்.
அங்கே எல்லா கடைகளிலும் சாப்பிடும் இடம் சிறியதாகவும் பார்சல் வாங்க நிற்பவர்கள் பெரிய இடத்தில் காத்திருக்கும்படிதான் அமைத்திருப்பார்கள். நான்கு பேர் சாப்பிட்டால் 40 பேர் பார்சலுக்கு நிற்பார்கள். அங்கேயும் விஜயம், ஜானகிராம், பெல் என சொல்லிக் கொண்டே போகலாம். ஒவ்வொரு கடையுமே ஒரு பிராண்ட் தான்.
அருப்புக்கோட்டையில் அந்த சமயத்தில் ஏராளமான தறி நெசவாளிகள். அவர்களும் சாயங்காலம் ஆகிவிட்டால் கடைகளில்தான். இனிமை,நடராஜ், முக்கு,கடற்கரை, ஆழாக்கு கடை என ஏகப்பட்ட கடைகள்.
ஒவ்வொரு கடை சால்னாவும் texture, consistency, taste ஒவ்வொன்றிலும் வித்தியாசமாக இருக்கும். வாளியை திறந்து பார்த்த உடனேயே சிலர் என்னடா இனிமையில் வாங்க சொன்னேன் நடராஜுல வாங்கிட்டு வந்துட்ட என்று சொல்லும் அளவிற்கு இருக்கும்.
ராஜபாளையத்திலும் சொல்லவே வேண்டாம். ஆனந்தாஸ் பாம்பே ரஹமத் என ஏராள கடைகள். ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூரும் அப்படித்தான்.
சேத்தூர் கண்ணாடி கடை மட்டன் சுக்கா சாப்பிட்டவர்களுக்கு அது ஒரு பென்ச் மார்க்காகவே மாறிவிடும். வேறு எங்கு சாப்பிட்டாலும் அந்த கடை மாதிரி இருந்தது இல்லை என்று யோசிக்க வைத்து விடும்.
விருதுநகர் மாவட்ட கடைகளில் ஒரு விசேஷம். நீங்கள் புரோட்டா வாங்கினாலும் சரி பூரி வாங்கினாலும் சரி கேட்காமலேயே ஒரு கரண்டி நல்ல தேங்காய் சட்டினி வைத்து விடுவார்கள். வைக்கும் போது தான் நாம் பிடிக்கவில்லை என்றால் வேண்டாம் என்று சொல்ல வேண்டும். அதேபோல ரவா தோசை வாங்கினால் சட்னி சாம்பார் ஊற்றிவிட்டு பக்கத்திலேயே ஒரு ஸ்பூன் சீனியும் வைத்து விடுவார்கள். அதுதான் பா காம்பினேஷன் என்பார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சாத்தூர் சேவு, பாலவனத்தம் சீரணி என ஸ்பெஷல் ஐட்டங்களும் இங்கேதான்.
இப்படிப்பட்ட மாவட்டத்தில் உணவு திருவிழா நடத்தினால் எப்படி இருக்கும்? அனேகமாக ஜனவரி 17 மற்றும் 18 தேதிகளில் விருதுநகரில் உணவுத் திருவிழா நடைபெற இருக்கிறது. உணவு மட்டுமின்றி நிறைய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் தளவாய் புரம் பகுதிகளில் தான் ஏராளமான நைட்டி தொழிற்சாலைகள் உள்ளன. பெரிய ஷோரூம்களில் விற்கப்படும் நைட்டிகள் தவிர எல்லா விதமான ரகங்களிலும் அங்கேதான் நைட்டிகள் தயாரிக்கப்படுகிறது.
நூறு ரூபாய் முதல் 2000 ரூபாய் வரையிலான ரகங்கள் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்றன.
இந்த உணவுத் திருவிழாக்களில் அதுபோன்ற நைட்டி அவுட்லெட்கள் சிலவற்றை அமைத்தால் கம்ப்ளீட் பேக்கேஜ் ஆக இருக்கும். விருதுநகர் மாவட்டத்தின் மற்ற தயாரிப்புகளான நோட்புக்குகள் ஸ்டேஷனரிகள் போன்ற ஸ்டால்கள் இருந்தாலும் சிறப்பாக இருக்கும்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தினர் தயைகூர்ந்து பரிசீலிக்க வேண்டும் என்று ஒருவர் எக்ஸ் தளத்தில் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதற்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எக்ஸ் தளத்தில் பதில் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-
உங்களுடைய ஆலோசனைகளுக்கு நன்றி.
விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் நைட்டி உள்ளிட்ட ஆடைகள் மற்றும் பல்வேறு உபயோகப் பொருட்களை இது போன்ற மக்கள் கூடும் விழாக்களில் சந்தைப்படுத்துகிறோம். இதன் மூலமாக மகளிர் சுய உதவி குழு பெண்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. உணவுத் திருவிழாக்கள் போன்ற அதிக மக்கள் கூடும் இடங்களிலும் இவை தொடர்ந்து நடத்தப்படும்.
தங்கள் ஆலோசனைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றிகள் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர்:
புத்தாண்டு கொண்டாட்டத்தை அனைவரும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும். வாகனங்களை ஓட்டுவதில் கவனமாக செயல்பட வேண்டும் என பல்வேறு விதிமுறைகளை காவல் துறை அறிவித்திருந்தது.
மது அருந்தி வாகனம் ஓட்டினாலோ, அதிவேகமாக சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனை போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் புத்தாண்டு நாளில் இரவு முழுவதும் முக்கிய பகுதிகளை கண் காணித்து வந்தனர். இதில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக 1,254 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வழக்கு பதிந்தவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. மொத்தம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
விருதுநகர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மாநிலம் முழுவதும் நேற்று முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் விடிய, விடிய மழை பெய்தது. விருதுநகரில் மழை காரணமாக பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சில இடங்களில் மின்வெட்டும் ஏற்பட்டது.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் அந்தப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.
சிவகாசி, திருச்சுழி, வத்திராயிருப்பு, பிளவக்கல், கோவிலாங்குளம், சாத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
விருதுநகர்-33
வெம்பக்கோட்டை-22.2
பிளவக்கல்-3.2
மாவட்டத்தில் 296.8 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ராமேசுவரத்தில் நேற்று இரவு முதல் பலத்த காற்று வீசியது. இன்று காலை 5 மணிக்கு பலத்த மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக கோவில் வீதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதிகாலையில் பெய்த மழை காரணமாக கோவில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் வாடிப்பட்டி, சமயநல்லூர், நாகமலை புதுக்கோட்டை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 1 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது.
இந்த நோயினால் இறப்புகள் குறைவாக இருந்தபோதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.
மேலும் இந்த நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும். நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை, வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. இந்த நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடும் பணி கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 14 சுற்று தடுப்பூசிப் பணி முடிவடைந்துள்ளது. தற்போது 15-வது சுற்று தடுப்பூசி போடும் பணி வருகிற 1-ந்தேதி முதல் 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 2.24 லட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு இந்த தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களது பசுக்கள் மற்றும் எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதங்களுக்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் முகாமில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சிவஞானம் கேட்டுக்கொள்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 அரசு உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தி மேல்நிலைப்பள்ளியாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், அரசு நடுநிலைப்பள்ளிகளை உயர் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் பணிகளை அம்மா வழியில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசு செவ்வனே செய்து வருகிறது.
அதன் அடிப்படையில் சிவகாசி தொகுதிக்குட்பட்ட பள்ளபட்டி கிராமத்தில் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி கிராம மக்கள் என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி பள்ளபட்டி என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே இதை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் எடுத்துரைத்தேன்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள கூமாப்பட்டியில் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா என்னிடம் கோரிக்கை விடுத்தார்.
விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் கூமாப்பட்டியில் மேல் நிலைப்பள்ளி மிகவும் அத்தியாவசியம் என்பதையும் நான் நன்கு அறிவேன்.
அதுபோலவே சாத்தூர் தொகுதி ஓ.மேட்டுப்பட்டியில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி மக்கள் ஒன்றியச்செயலாளர் சண்முகக்கனி தலைமையில் என்னிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இந்த பள்ளிகளையும் உடனடியாக மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.
அதன் பேரில் தற்போது இந்த 3 பள்ளிகளையும் தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப்யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாணவர்களின் நலன் கருதி இந்த உத்தரவை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறையின் செயலர் பிரதீப்யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட அனைத்து பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






