search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- விவசாயி இயக்கம் வலியுறுத்தல்
    X

    விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்- விவசாயி இயக்கம் வலியுறுத்தல்

    விருதுநகர் மாவட்டத்தில் போதிய மழையில்லாததால் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாழ்க விவசாயி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    விருதுநகர்:

    போதிய மழையில்லாததால் விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும். காப்பீடு செய்த அனைத்து பயிர்களுக்கும் பாரபட்சமில்லாமல் 100 சதவீத இழப்பீடு வழங்கவேண்டும். விவசாயிகளுக்கு உற்பத்தி செலவில் இருந்து கூடுதலாக 50 சதவீத ஆதாயவிலையை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வாழ்க விவசாயி இயக்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தி வாழ்க விவசாயி இயக்கத்தின் தென்மண்டல ஒருங்கிணைப்பாளர் காளிராஜ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஒருங்கிணைபாளர் பாலகிருஷ்ணன், முன்னாள் வெம்பகோட்டை யூனியன் தலைவர் பெருமாள்சாமி, மாநில குழு உறுப்பினர் ராஜசேகர், வக்கீல் ராகவன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இயக்க நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.
    Next Story
    ×