search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "for selling liquor"

    • அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
    • அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் முழுவதும் அனுமதி இன்றி மது விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆங்காங்கே வாகன சோதனை, ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று ஒரே நாளில் ஈரோடு மாவட்டம் கோபி உள் கோட்டம் மற்றும் ஈரோடு டவுன் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அனுமதி இன்றி மது விற்பனையில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 60 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • அதன் பேரில் போலீசார் இண்டியம்பாளையம் அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து சோதனை செய்தனர்.
    • சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி (46) என்றும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

    கோபி

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இண்டியம் பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் இண்டியம்பாளையம் அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து சோதனை செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார். தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி (46) என்றும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்தனர்.

    • கோட்டபாளையம் காரப்பாடியை சேர்ந்த செந்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
    • பின்னர் போலீசார் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே கோட்டபாளையம் குளியங்காட்டு தோட்டம் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை நடைபெற்று வருவதாக புளியம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் ரபி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் கோட்டபாளையம் காரப்பாடியை சேர்ந்த செந்தில் (42) என்பதும், சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 8 லிட்டர் சாராயம், 200 லிட்டர் சாராய ஊறல், ஊறல் போட பயன்படுத்திய டிரம், குடம், பாத்திரம் மற்றும் ரொக்கப்பணம் ரூ.3200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போலீசார் செந்தில் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் செந்தில் மீது ஏற்கனவே சாராயம் காய்ச்சிய வழக்கு மற்றும் நாட்டுது ப்பா க்கி வைத்தி ருந்த வழக்கும் உள்ளது குறிப்பி டத்தக்கது.

    • ஆசனூர்- சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள 2 காட்டேஜ்களில் அனுமதியின்றி சிலர் மது பானம் குடித்து கொண்டு இருந்தனர்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட 14 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    ஆசனூர்- சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள 2 காட்டேஜ்களில் அனுமதியின்றி சிலர் மது பானம் குடித்து கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீசார் ஒரு காட்டேஜில் விற்பனைக்கு வைத்திருந்த 14 மது பாட்டில்கள் மற்றொரு காட்டேஜில் இருந்து 3 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது அருந்த அனு மதித்த ஜெயபாலன (68), ரமேஷ் (42) ஆகியோரை கைது செய்தனர்.

    இதே போல் ஆசனூர் அருகே உள்ள காட்டே ஜ்களில் மது அருந்த அனு மதித்த ஆசனூர் பகுதியை சேர்ந்த ராஜா (23), பெரியசாமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கு இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மலையம்பாளை யம் அருகே உள்ள வேலம் பாளையம் பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவர் அனுமதியின்றி டாஸ்மாக் மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்து இருந்தார். போலீசார் அவரி டம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை அடுத்த சீனாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை எதிரில் ஒருவர் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி னர். இதில் அவர் கிருஷ்ண கிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த மணி கண்டன் (31) என்றும், அவர் அதிக விலைக்கு டாஸ்மாக் மதுவை விற்ப னை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரிடம் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு 16 ரோடு பகுதி யில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில் களை விற்பனை செய்ய கொண்டு சென்றார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு அதியமான் நகரை சேர்ந்த சீனிவாசன் (50) என்றும் அவர் மது பானத்தை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை அருகே உள்ள காளியம்புதூர் பகுதியில் பழனிசாமி (72) என்பவர் டாஸ்மாக் மது பானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்து இருந்தார். அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நம்பியூர் அருகே உள்ள வரபாளையம் அடுத்த அழகம்பாளையம் பகுதியில் வெள்ளியங்கிரி (42) என்பவர் மது பானத்தை விற்பனை செய்து கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மலையம்பாளையம் அடுத்த குள்ள கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பாவா மொய்தீன் (50) என்பவர் பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். போலீசார் சம்பவ இடத்து க்கு சென்று பெட்டி கடை யில் சோதனை நடத்தி அங்கு இருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த னர்.

    ஈரோடு நாடார் மேடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (32) என்பவர் லாட்டரி சீட்டு களின் எண்களை வெள்ளை தாளில் எழுதி விற்பனை ெசய்து ெகாண்டு இருந்தார்.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட 14 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்த முத்துகிரு ஷ்ணன் (38) என்பவர் 19 ரோடு நாச்சி பாளையம் பகுதியில் தடை செய்ய ப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து 36 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.15 ஆயிரத்து 10-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.
    • அவரை பிடித்து விசாரித்ததில் அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    பவானி:

    பவானி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா மற்றும் போலீசார் பவானி அடுத்த போத்த நாயக்கனூர் அருகே கவுண்டன்புதூர் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது வாய்க்கால் கரைப்பகுதியில் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்ததில் அவர் பவானி அருகே உள்ள நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வேலுச்சாமி (32) என்பதும், அவர் வாய்க்கால் கரை மறைவான இடத்தில் மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வேலுச்சாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதேபோல் சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்ேபாது சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த தர்மா (24), சிவகங்கையை சேர்ந்த பிரபாகரன் (30) என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 434 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மேலும் ரூ. 22 ஆயிரத்து 770 ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மது பாட்டில்கள், பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. 

    • அனுமதியின்றி மது பாட்டில்களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தானம் மற்றும் சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
    • மேலும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 116 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள குருப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரசு அனுமதி யின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படு வதாக பவானி போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத்தொடர்ந்து பவானி சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், மகேஸ்வரி மற்றும் போலீசார் குருப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் சோதனை செய்தனர்.

    அப்போது குருப்பநாயக்கன் பாளையம் அய்யனாரப்பன் கோவில் வீதியில் சந்தானம் (வயது 51) 15 மது பாட்டில்கள் வைத்து கொண்டு விற்ப னை செய்தது தெரியவந்தது.

    அதேபோல் செங்கோடன் டீக்கடை வீதியில் சந்திரன் (56) என்பவர் 101 மது பாட்டில்கள் விற்பனை க்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதயைடுத்து அனுமதியின்றி மது பாட்டில் களை வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றத்திற்காக சந்தானம் மற்றும் சந்திரன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த 116 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×