search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banned lottery"

    • அதன் பேரில் போலீசார் இண்டியம்பாளையம் அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து சோதனை செய்தனர்.
    • சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி (46) என்றும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

    கோபி

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள இண்டியம் பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி மற்றும் மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் போலீசார் இண்டியம்பாளையம் அடுத்த தொப்பம்பட்டி பகுதியில் ஆய்வு செய்து சோதனை செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்தார். தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ரவி (46) என்றும், அவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்தனர்.

    • வெள்ளைத் தாளில் எண்களை எழுதி, அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரியை ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.
    • இதையடுத்து, மொடக்குறிச்சி போலீசார் சண்முகராஜா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள லக்காபுரம், கொமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் உமா மகேஸ்வரன் (46). இவர், கரூர் மெய்ன்ரோட்டில் உள்ள சோலார்பகுதியில், பாஸ்ட் புட் கடை ஒன்றின் அருகே நேற்று நின்று கொண்டிருந்தார்.

    அப்போது, ஒரு நபர் அவரிடம், வெள்ளைத் தாளில் எண்களை எழுதி, அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரியை ஏமாற்றி விற்பனை செய்துள்ளார்.

    இதுகுறித்து, உமா மகேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கு லாட்டரி விற்பனை செய்த நபரை மடக்கிப் பிடித்தனர்.

    விசாரணையில் அவர் சோலார் புதூர், பாலுசாமி நகரைச் சேர்ந்த சண்முகராஜா ( 40) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மொடக்குறிச்சி போலீசார் சண்முகராஜா மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    மேலும் அவரிடமிருந்து 20 லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையி லான போலீசார் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
    • தடை செய்யப்பட்ட 9 கேரளா லாட்டரி டிக்கெட்டுகள், 300 ரூபாய் ரொக்கம் வைத்திருந்தனர்.

    கடலூர்:

    திட்டக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையி லான போலீசார் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கோழியூர் மேலத் தெருவை சேர்ந்த சவுந்த ர்ராஜன் (62) என்பவரிடம் தடை செய்யப்பட்ட 9 கேரளா லாட்டரி டிக்கெட்டுகள், 300 ரூபாய் ரொக்கம் வைத்திருந்ததை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதே போல திட்டக்குடி பெரிய கோவில் தெருவைச் சேர்ந்த லதா (48) என்பவரிடமிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் மற்றும் 300 ரூபாய் ரொக்க பணத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதோடு லதாவை கைது செய்தனர். 

    • திருவெண்ணைநல்லூர் அருகே லாட்டரி டிக்கெட் விற்ற நபர் கைது செய்யப்பட்டனர்.
    • நேற்று மனக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் நின்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்றார்.

    விழுப்புரம்: 

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள இளந்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 38) இவர் நேற்று மனக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் நின்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள்விற்றார். அப்போது அந்த வழி யாக ரோந்து சென்ற திரு வெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் நாகராஜன் தலை மை யிலான போலீசார் ஏழு மலையை கைது செய்தனர். மேலும் அவரிட மிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் மோட்டார் சைக்கிள்போ ன்ற வற்றை பறிமுதல் செய்தனர்.

    திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருச்சி:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பொதுமக்கள் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிகள், மார்க்கெட்டுகளில் குவிந்துள்ளனர். இதேபோல் பஸ், ரெயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனை பயன்படுத்தி லாட்டரி மற்றும் கஞ்சா விற்பனையில் ஒரு கும்பல் படு ஜோராக ஈடுபடுகிறது. இது குறித்து மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. அதனை தொடர்ந்து போலீசார் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறும் பகுதிகள் குறித்து விசாரித்து வந்தனர்.

    அப்போது திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளான கே.கே.நகர், அரியமங்கலம், திருவானைக்காவல், பாலக்கரை, சங்கிலியாண்டபுரம், பெரியகடை வீதி, உய்யக்கொண்டான்  திருமலை, அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆங்காங்கே பொருட்கள் வாங்குவது போல் பொதுமக்கள் வேடத்தில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேர் என மொத்தம் 18 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

     திருவானைக்காவல் சரவணன் (45), உறையூர் ராம கிருஷ்ணன் (54), குமார் (29), பாண்டமங்கலம் ஹித யத் உசேன் (54), உய்யக்கொண்டான் திருமலை மணிகண்டன் (25), ஆர்.எம்.எஸ்.காலனி தினகரன் (62), அரியமங்கலம் சீனிவாச நகர் முத்துமணி (28), மதியழகன் (65), காட்டூர் ரவி (40), சங்கிலியாண்டபுரம் இளையராஜா (35), குமார் (32), காந்தி மார்க்கெட் மன்னர் பிள்ளை தெரு செந்தில்குமார் (38), பாலக்கரை திருமூர்த்தி (27), முகமது உசேன் (40) ஆகியோர் ஆவர். மேலும் சாகின்ஷா, பாண்டியன், நடராஜன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    ×