search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "7 PEOPLE WERE ARRESTED"

    • 204 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.
    • கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே பெட்டிக்கடைகளில் குட்கா பொருள் பதுக்கி வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை சூலூர் போலீசார் மற்றும் தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 204 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    சூலூர் சுற்றுவட்டார பகுதியில் பெட்டிக்கடைகளில் குட்கா பொருள்கள் பதிக்க வைத்து விற்பனை செய்வதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சூலூர் பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருந்த சூலூரைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள் கண்ணன் (வயது42), ரத்னா மூர்த்தி (45), சச்சிதானந்தம் (55), பரமசிவம் (57), அருணாச்சலம் (57), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது (48), மதுரையை சேர்ந்த ஜெயபாலன் (33), ஆகிய 7 பேரை பிடித்தனர்.

    இதனையடுத்து அவர்களிடமிருந்து 204 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 7 பேரும் கைது செய்யப்பட்டு சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • ஆசனூர்- சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள 2 காட்டேஜ்களில் அனுமதியின்றி சிலர் மது பானம் குடித்து கொண்டு இருந்தனர்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட 14 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபானம் மற்றும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    ஆசனூர்- சத்தியமங்கலம் ரோட்டில் உள்ள 2 காட்டேஜ்களில் அனுமதியின்றி சிலர் மது பானம் குடித்து கொண்டு இருந்தனர். இதையடுத்து போலீசார் ஒரு காட்டேஜில் விற்பனைக்கு வைத்திருந்த 14 மது பாட்டில்கள் மற்றொரு காட்டேஜில் இருந்து 3 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் மது அருந்த அனு மதித்த ஜெயபாலன (68), ரமேஷ் (42) ஆகியோரை கைது செய்தனர்.

    இதே போல் ஆசனூர் அருகே உள்ள காட்டே ஜ்களில் மது அருந்த அனு மதித்த ஆசனூர் பகுதியை சேர்ந்த ராஜா (23), பெரியசாமி ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கு இருந்து 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மலையம்பாளை யம் அருகே உள்ள வேலம் பாளையம் பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் (30) என்பவர் அனுமதியின்றி டாஸ்மாக் மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்து இருந்தார். போலீசார் அவரி டம் விசாரணை நடத்தி அவரை கைது செய்தனர்.

    அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை அடுத்த சீனாபுரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடை எதிரில் ஒருவர் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தி னர். இதில் அவர் கிருஷ்ண கிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த மணி கண்டன் (31) என்றும், அவர் அதிக விலைக்கு டாஸ்மாக் மதுவை விற்ப னை செய்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரிடம் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு 16 ரோடு பகுதி யில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மது பாட்டில் களை விற்பனை செய்ய கொண்டு சென்றார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் ஈரோடு அதியமான் நகரை சேர்ந்த சீனிவாசன் (50) என்றும் அவர் மது பானத்தை விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பெருந்துறை அருகே உள்ள காளியம்புதூர் பகுதியில் பழனிசாமி (72) என்பவர் டாஸ்மாக் மது பானத்தை அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்து இருந்தார். அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நம்பியூர் அருகே உள்ள வரபாளையம் அடுத்த அழகம்பாளையம் பகுதியில் வெள்ளியங்கிரி (42) என்பவர் மது பானத்தை விற்பனை செய்து கொண்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மலையம்பாளையம் அடுத்த குள்ள கவுண்டனூர் பகுதியை சேர்ந்த பாவா மொய்தீன் (50) என்பவர் பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டு இருந்தார். போலீசார் சம்பவ இடத்து க்கு சென்று பெட்டி கடை யில் சோதனை நடத்தி அங்கு இருந்த 5 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த னர்.

    ஈரோடு நாடார் மேடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (32) என்பவர் லாட்டரி சீட்டு களின் எண்களை வெள்ளை தாளில் எழுதி விற்பனை ெசய்து ெகாண்டு இருந்தார்.

    இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து வெள்ளை தாளில் எண்கள் எழுதப்பட்ட 14 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.4100 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு முள்ளாம்பரப்பு பகுதியை சேர்ந்த முத்துகிரு ஷ்ணன் (38) என்பவர் 19 ரோடு நாச்சி பாளையம் பகுதியில் தடை செய்ய ப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தார். போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் இருந்து 36 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.15 ஆயிரத்து 10-ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • உண்ணாவிரதம் இருந்த முதியவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்
    • பள்ளி வளாகத்தில் ஊராட்சி அலுவலகம் திறப்பதை கண்டித்து

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில், ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு, திறப்பு விழா காணாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

    இந்நிலையில், அந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தை பள்ளிக்கே வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன் பாடு ஏற்படவில்லை.

    இந்நிலையில், இந்த ஊராட்சி அலுவலகம் நேற்று திறக்கப்படவுள்ளதாக அறிவித்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் தமிழ்மணி மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி அலுவலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

    இவருக்கு ஆதரவாக முன்னாள் மாணவர் சங்க தலைவர் தமிழ்களம் இளவரசன், செயலர் நீலமேகம் மற்றும் ஆ.ராஜா, ராஜேந்திரன், வடிவேல், பாரிவள்ளல் ஆகியோரும் உண்ணாவிரதம் இருந்தனர்.

    தகவலறிந்து வந்த அரியலூர் காவல் துறையினர், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மேற்கண்ட 7 பேரையும் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    ×