search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குட்கா விற்பனை செய்த 7 பேர் கைது
    X

    குட்கா விற்பனை செய்த 7 பேர் கைது

    • 204 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர்.
    • கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே பெட்டிக்கடைகளில் குட்கா பொருள் பதுக்கி வைத்திருந்து விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை சூலூர் போலீசார் மற்றும் தனிப்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 204 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    சூலூர் சுற்றுவட்டார பகுதியில் பெட்டிக்கடைகளில் குட்கா பொருள்கள் பதிக்க வைத்து விற்பனை செய்வதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா மற்றும் தனிப்படை போலீசார் அப்பகுதி கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது சூலூர் பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருந்த சூலூரைச் சேர்ந்த கடை உரிமையாளர்கள் கண்ணன் (வயது42), ரத்னா மூர்த்தி (45), சச்சிதானந்தம் (55), பரமசிவம் (57), அருணாச்சலம் (57), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது (48), மதுரையை சேர்ந்த ஜெயபாலன் (33), ஆகிய 7 பேரை பிடித்தனர்.

    இதனையடுத்து அவர்களிடமிருந்து 204 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் 7 பேரும் கைது செய்யப்பட்டு சூலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×