search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WhatsApp"

    • செயலியை மாற்றிக் கொள்வதற்கு வாட்ஸ்அப் செயலிக்கு ஆறு மாதம் கால அவகாசம்.
    • இதன் மூலம் தகவல் தொடர்புக்கான இடைவெளி குறையும்.

    வாட்ஸ்அப் செயலியில் புதிய ஐரோப்பிய யூனியன் விதிகளுக்கு ஏற்ற வகையில், புதிய வசதிகளை வழங்கி வருகிறது. இது குறித்த புதிய தகவல் Wabetainfo வலைதளத்தில் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான் வாட்ஸ்அப் செயலியில் மல்டி-அக்கவுண்ட் அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    ஐரோப்பிய யூனியன் டிஜிட்டல் மார்கெட்ஸ் சட்டத்தை இயற்றி இருக்கிறது. இந்த சட்டம் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கடுமையான விதிகளை பிறப்பித்து இருக்கிறது. இதில் பயனர்கள் இதர செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதும் இடம்பெற்று இருக்கிறது.

     

    முன்னணி தொழில்நுட்ப தளம் என்ற அடிப்படையில், வாட்ஸ்அப் செயலியும் டிஜிட்டல் மார்கெட்ஸ் சட்டத்திற்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதன் காரணமாக புதிய விதிகளுக்கு ஏற்ப செயலியை மாற்றுவதற்கான பணிகளில் வாட்ஸ்அப் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பான விதிகள் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.23.19.8 அப்டேட்டில் இடம்பெற்று இருக்கிறது.

    புதிய விதிகளுக்கு ஏற்ப செயலியை மாற்றிக் கொள்வதற்கு வாட்ஸ்அப் செயலிக்கு ஆறு மாதம் கால அவகாசம் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் கொண்டு வேறு குறுந்தகவல் செயலியை பயன்படுத்துவோரும், வாட்ஸ்அப் பயனர்களை தொடர்பு கொண்டு குறுந்தகவல் அனுப்ப முடியும். இதன் மூலம் தகவல் தொடர்புக்கான இடைவெளி குறைந்துவிடும், ஆனாலும் என்க்ரிப்ஷன் தொழில்நுட்பத்தில் சந்தேகத்தை எழுப்பும்.

    இந்த அம்சம் எவ்வாறு இயங்கும், இது தொடர்பாக ஏற்பட்டு இருக்கும் தொழில்நுட்ப விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், வாட்ஸ்அப் நிறுவனம் மற்ற தளங்கள் இடையேயான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தும் சிஸ்டம்களில் முழுமையான என்ட்-டு-என்ட் என்க்ரிப்ஷன் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். அல்லது பயனர்கள் 7-வது விதியின் கீழ் இந்த ஆப்ஷனில் இருந்து வெளியேறும் வசதியும் வழங்கப்படும் என்று தெரிகிறது.

    மூன்றாம் தரப்பு செயலிகளுடன் தகவல் பரிமாற்றம் செய்வதற்கான வசதியை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வசதி செயலியின் எதிர்கால வெர்ஷனில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • வாட்ஸ்அப் மூலம் சாமிநாதனுக்கு ஸ்கிரீன் ரெக்கார்டு படத்தை அனுப்பியுள்ளார்.
    • ராஜஸ்தான் வாலிபர் செல்போனில் மிரட்டல் விடுத்த நம்பரை கொண்டு விசாரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பா.ஜனதா தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன். இவரது வீடு, லாஸ் பேட்டை பெத்து செட்டிபேட்டை புது வீதியில் உள்ளது.

    இவரது செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலமாக ஒரு பெண் ஆடையின்றி ஆபாசமாக வீடியோ காலில் தோன்றியுள்ளார். இதை பார்த்து திடுக்கிட்ட சாமிநாதன், உடனடியாக அந்த வீடியோ அழைப்பை துண்டிப்பு செய்தார்.

    அதன்பிறகு, வாட்ஸ்அப் மூலம் சாமிநாதனுக்கு ஸ்கிரீன் ரெக்கார்டு படத்தை அனுப்பியுள்ளார். அது, யூ-டியூப்பில் வீடியோ உள்ளடக்கத்தை பதிவேற்று வதற்கான ஸ்கிரீன் ஷாட் படமாக இருந்தது. வாட்ஸ் அப்பில் அந்த பெண் ஆபாசமாக தோன்றிய வீடியோ அழைப்பை பதிவு செய்து அனுப்பியதுடன், மேலும் சாமிநாதன் பேசுவது போல் சித்தரித்தும் இருந்துள்ளது.

    அதன்பிறகு அவருக்கு செல்போனில் வேறொரு நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆண் நபர், ரூ.50 ஆயிரம் பணம் தர வேண்டும். தராவிட்டால் ஆபாச வீடியோவை யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து சாமிநாதன், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி

    கேயன், கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய நபர்களை தேடி வருகின்றனர்.

    ராஜஸ்தான் வாலிபர் செல்போனில் மிரட்டல் விடுத்த நம்பரை கொண்டு விசாரித்தனர். இதில் அந்த நபர், ராஜஸ்தானில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் பெயர், ஊர் விவரத்தை கண்டுபிடித்து பிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    • கார்த்திக்கின் டி.பி.யில் இருந்த அவரது மனைவி மற்றும் தங்கையின் புகைப்படங்களை ஆபாச புகைப்படங்களாக சித்தரித்துள்ளார்.
    • உங்களது செல்போன்களில் உங்கள் குழந்தைகளின் புகைப்படமோ அல்லது மனைவி மற்றும் உறவுக்கார பெண்களின் புகைப்படமும் இருந்தால் இப்போதே எச்சரிக்கையாகி விடுங்கள்.

    சென்னை:

    ஆண்ட்ராய்டு செல்போன்களின் ஆதிக்கம் அதிகமான பிறகு சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் நாம் செல்போனில் வாட்ஸ் அப் டிபியாக வைக்கும் நமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் புகைப்படங்களை திருடி அதனை ஆபாசமாக சித்தரித்த வக்கிர வாலிபர் சிக்கி உள்ளார்.

    இவர் இதுவரை 926 பேரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது தெரியவந்தது. சேலம் சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக அவரை கைது செய்து உள்ளனர்.

    இதற்காக போலீசார் தங்கள் பாணியில் செயல்பட்டு முதலில் அவரது வங்கி கணக்கில் இருந்த சுமார் 3 லட்சம் ரூபாயை முடக்கி அவரை நேரில் வர வழைத்து பிடித்திருக்கிறார்கள்.

    இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் கார்த்திக் இவரது செல்போனுக்கு அறிமுகம் இல்லாத நபர் ஒருவரின் செல்போனில் இருந்து ஹாய் என்று மெசேஜ் வந்துள்ளது.

    இதை பார்த்ததும் நீங்கள் யார் என்று கார்த்திக் கேட்டுள்ளார். தற்போது எதிர்மறையில் இருந்த நபர் யு.பி.ஐ.டி. ஒன்றை அனுப்பி பணம் அனுப்புமாறு மிரட்டி உள்ளார். ஆனால் கார்த்திக் பணம் தர முடியாது என்று கூறியதால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கார்த்திக்கின் டி.பி.யில் இருந்த அவரது மனைவி மற்றும் தங்கையின் புகைப்படங்களை ஆபாச புகைப்படங்களாக சித்தரித்துள்ளார்.

    இதன் பிறகு கார்த்திக்கின் செல்போன் என்னுடன் அந்த ஆபாச புகைப்படங்களை முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்து பலர் கார்த்திக்கின் செல்போன் எண்ணுக்கு போன் செய்து மனைவி மற்றும் தங்கையை தவறான உறவுக்கு அழைத்திருக்கிறார்கள்.

    இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திக் இது பற்றி சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதோடு கார்த்திக் தனது மனைவியையும் தங்கையையும் ஆபாசமாக சித்தரித்த நபரை தொடர்பு கொண்டு உங்களது வங்கிக் கணக்கை அனுப்புங்கள். நான் பணம் அனுப்புகிறேன் என்றும் கூறியிருக்கிறார். வங்கி கணக்குத் தெரிந்தால் உடனடியாக அவர் யார் என்பதை கண்டு பிடித்து விடலாம் என்கிற எண்ணத்தில் கார்த்திக் செயல்பட்டு உள்ளார்.

    இதை அறியாத மர்ம நபர் தனது வங்கி கணக்கை கார்த்திக்கின் செல்போனிற்கு அனுப்பி இருக்கிறார். இதை வைத்து தான் சேலம் சைபர் கிரைம் போலீசார் ஆபாசமாக சித்தரித்த நபரை கண்டுபிடித்தனர்.

    அவரது பெயர் சரத்கு மார் என்பதும் தூத்துக்குடியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரது வங்கி கணக்கில் இருந்த மூன்று லட்சம் ரூபாய் பணத்தை உடனடியாக முடக்கினர் சைபர் கிரைம் போலீசார் இதனால் அவர் அலறி அடித்துக் கொண்டு தூத்துக்குடியில் இருந்து சேலத்துக்கு ஓடினார். அப்போது தான் போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    சரத்குமாரிடம் நடத்திய விசாரணையில் அவர் இது போன்று 900க்கும் அதிகமான பெண்களின் புகைப்ப டங்களை வாட்ஸ் அப் டி.பி.யில் இருந்து திருடி ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.

    சரத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ள போலீசார் வாட்ஸ் அப் டி.பி.யில் இருக்கும் புகைப்படங்களை யாரும் திருட முடியாத வகையில் எப்படி செயல்படுவது என்பதையும் விளக்கி இருக்கிறார்கள்.

    வாட்ஸ் அப் மற்றும் முக நூல் பக்கங்களில் பிரைவசி என்ற பகுதி இருக்கும் அதன் உள்ளே நுழைந்தால் உங்கள் வாட்ஸ் அப் டி.பி. யில் உள்ள புகைப்படங்களை யார் யார் பார்க்க வேண்டும், யார் யார் பார்க்க கூடாது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.

    இனி செல்போன் டிபியில் தங்களது குடும்பத்தினரின் புகைப்படங்களை வைக்கும் அனைவரும் இதனை பின்பற்றி சரத்குமார் போன்ற நபர்களின் பிடியில் இருந்து தங்களது குடும்பத்தினரை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    உங்களது செல்போன்களில் உங்கள் குழந்தைகளின் புகைப்படமோ அல்லது மனைவி மற்றும் உறவுக்கார பெண்களின் புகைப்படமும் இருந்தால் இப்போதே எச்சரிக்கையாகி விடுங்கள். இல்லை என்றால் நீங்களும் சேலம் கார்த்திக் போல நிச்சயம் பாதிப்புக்குள்ளாகலாம் உஷார்.

    • புதிய வசதியை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தார்.
    • வீடியோக்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி விரைவில் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி வழங்கப்பட்டு வருகிறது. படிப்படியாக வழங்கப்படும் நிலையில், இந்த அம்சம் அடுத்த சில வாரங்களில் அனைவருக்கும் கிடைத்துவிடும் என்று தெரிகிறது. புதிய அப்டேட் மூலம் பயனர்கள் வாட்ஸ்அப் செயலி மூலமாகவே அதிக தரமுள்ள புகைப்படங்களை அனுப்பிட முடியும்.

    புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த வசதியை வாட்ஸ்அப் வெப் மற்றும் டெஸ்க்டாப் பயனர்களும் பயன்படுத்த முடியும். இதற்காக செயலியில் சிறியதாக "HD" என்ற ஐகான் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை தொடர்ந்து வாட்ஸ்அப் செயலியில் வீடியோக்களையும் ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதி விரைவில் வழங்கப்படும் என்று மெட்டா தெரிவித்து இருக்கிறது.

     

    புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதியை மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்தார். ஃபேஸ்புக் பதிவின் மூலம் புதிய அம்சத்தை அறிவித்த மார்க் ஜூக்கர்பர்க் இத்துடன் புகைப்படம் ஒன்றையும் இணைத்து இருந்தார். அதில் HD ஐகான் தெளிவாக இடம்பெற்று இருந்தது.

    முன்னதாக இந்த அம்சம் டெஸ்டிங்கில் இருந்து வந்த நிலையில், தற்போது அனைவருக்குமான அப்டேட்டில் வழங்கப்பட்டு வருகிறது. ஜூன் மாதத்தில் இருந்து புகைப்படங்களை ஹெச்.டி. தரத்தில் அனுப்புவதற்கான வசதியை வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்து வந்தது. இந்த அம்சம் மூலம் புகைப்படங்களை அதிக தரத்தில் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் இவ்வாறு செய்யும் போது, அதிக டேட்டா மற்றும் சாதனத்தில் மெமரி அதிகளவில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • வாட்ஸ்அப் செயலியில் புதிய அம்சம் காரணமாக, இனி அவ்வாறு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
    • புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.17.7 மற்றும் 2.23.17.8 வெர்ஷன்களில் கிடைக்கிறது.

    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த புதிய அம்சத்திற்கான சோதனையை துவங்கி இருக்கிறது. அதன்படி பயனர்கள் விரைவில், ஒரே சாதனத்தில் பல்வேறு அக்கவுன்ட்கள் இடையே ஸ்விட்ச் செய்து வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும். தற்போது பல்வேறு வாட்ஸ்அப் அக்கவுன்ட் வைத்திருப்போருக்கு இது பயன்தரும் அம்சமாக இருக்கும்.

    புதிய அம்சம் மல்டி-அக்கவுன்ட் என்று அழைக்கப்படுகிறது. இதை கொண்டு பயனர்கள் எளிதில் தங்களது அக்கவுன்ட்கள் இடையே மாற்றிக் கொள்ளலாம். இதனால் குளோன் செய்வது போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளை பயன்படுத்த வேண்டிய நிலையை இனிமேல் நாட வேண்டிய அவசியம் இல்லை. இந்த அம்சம் பற்றிய தகவலை Wabetainfo வெளியிட்டு உள்ளது.

     

    அதன்படி இந்த அம்சம் முதற்கட்டமாக வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.17.7 மற்றும் 2.23.17.8 போன்ற வெர்ஷன்களில் கிடைக்கிறது. பீட்டா டெஸ்டர்கள் மல்டி அக்கவுன்ட் அம்சத்தை தங்களது வாட்ஸ்அப் செட்டிங்கில் உள்ள கியூ.ஆர். கோடுக்கு அருகில் இருக்கும் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்த பிறகு, அவர்களுக்கு அம்சம் வழங்கப்பட்டு இருந்தால், அவர்களால் மற்றொரு அக்கவுன்டை சேர்க்க முடியும். மேலும் அந்த அக்கவுன்ட்-இன் மொபைல் நம்பர் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட வேண்டும்.

    மற்றொரு அக்கவுன்டிற்கு மாற்றிக் கொள்ள வேண்டுமெனில் அதே ஐகானை மீண்டும் க்ளிக் செய்து அந்த அக்கவுன்டிற்கு மாற்றிக் கொள்ளலாம். ஒவ்வொரு அக்கவுன்ட்-இலும் சொந்த சாட்கள், நோட்டிஃபிகேஷன் மற்றும் செட்டிங்கள் வழங்கப்படுகிறது.

    தற்போது இந்த அம்சம் பீட்டா வெர்ஷனில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் எப்போது அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    Photo Courtesy: WaBetaInfo

    • வாட்ஸ்அப் செயலியில் 2016 முதல் வீடியோ கால் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
    • வாட்ஸ்அப்-இன் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் அறிவித்து இருக்கிறார்.

    வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் பேசும் போது, உங்களது சாதனத்தின் ஸ்கிரீனை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தினை மெட்டா நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார்.

    அதன்படி பயனர்கள் வீடியோ கால் பேசும் போது ஷேர் ஐகானை க்ளிக் செய்து குறிப்பிட்ட செயலியோ அல்லது சாதனத்தின் முழு ஸ்கிரீனையோ ஷேர் செய்து கொள்ளலாம். ஷேர் செய்ய துவங்கியதும், உங்களது ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் அனைத்தும் பகிரப்பட்டு, ஷேர் செய்வோருடன் பகிரப்படும். இதனை எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்வதற்கான வசதியும் வழங்கப்படுகிறது.

     

    ஸ்மார்ட்போன்களில் சிறப்பான வியூவிங் மற்றும் ஷேரிங் அனுபவத்தை பெறுவதற்கு வீடியோ கால் பேசும் போது மொபைலை லேன்ட்-ஸ்கேப் மோடில் வைத்துக் கொள்வது நல்லது. 2016-ம் ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் வீடியோ கால் செய்வதற்கான வசதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது தான் ஸ்கிரீன் ஷேரிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக மே மாத வாக்கில் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சத்திற்கான டெஸ்டிங் செய்ய துவங்கியது. வின்டோஸ் பீட்டா வெர்ஷனில் இந்த அம்சத்திற்கான டெஸ்டிங் ஜூன் மாத வாக்கில் துவங்கியது. தற்போது வாட்ஸ்அப் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

    • வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்தலாம்.
    • புதிய க்ரூப் வீடியோ கால் அம்சம் வாட்ஸ்அப் செயலியின் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருக்கிறது.

    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ கால்களில் அதிகபட்சம் 32 பேருடன் பேச முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் பயனர்களால் அதிகபட்சம் 7 பேருடன் மட்டுமே க்ரூப் வீடியோ கால் பேச முடிந்தது. தற்போது 32 பேருடன் வீடியோ காலில் பேசுவதற்கு, வீடியோகால் ஏற்கனவே துவங்கி இருப்பது அவசியம் ஆகும்.

    தற்போது வாட்ஸ்அப்-இல் வெளியாகி இருக்கும் அப்டேட் மூலம் பயனர்கள் க்ரூப் வீடியோ கால்-ஐ மேற்கொள்ளும் போதே அதிகபட்சம் 15 பேருடன் உரையாட முடியும். இதற்கான அப்டேட் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.23.15.14, 2.23.15.10, 2.23.15.11 மற்றும் 2.23.15.13 வெர்ஷன்களில் கிடைப்பதாக கூறப்படுகிறது.

     

    Photo Courtesy WaBetaInfo

    Photo Courtesy WaBetaInfo

    வாட்ஸ்அப் பீட்டா பயனர்கள் தங்களின் செயலியை அப்டேட் செய்து இந்த அம்சத்தை பயன்படுத்த துவங்கலாம். பீட்டா வெர்ஷனில் இருப்பதால், இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்க மேலும் சில காலம் ஆகும். வாட்ஸ்அப்-இல் க்ரூப் வீடியோ கால் மேற்கொள்வதற்கான வழிமுறை மிகவும் எளிமையானது தான். வாட்ஸ்அப் செயலியில் கால்ஸ் டேப்-ஐ க்ளிக் செய்து, க்ரியேட் கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

    இனி க்ரூப் வீடியோ கால் ஆப்ஷனில் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருப்பவர்களை தேர்வு செய்ய வேண்டும் தற்போது உங்களால் அதிகபட்சம் ஏழு பேரை, கால் துவங்கும் முன் சேர்க்க முடியும். கால் துவங்கியதும், அதிகபட்சம் 32 பேரை இணைத்துக் கொள்ள முடியும். புதிய அப்டேட் மூலம் இந்த எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ்அப்-இல் ஸ்டார்ட் நியூ சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
    • வியாபார ரீதியில் வாட்ஸ்அப்-ஐ சார்ந்து இருப்பவர்களுக்கு புதிய அம்சம் அதிக பயனுள்ளதாக இருக்கும்.

    மெட்டா நிறுவனத்தின் முன்னணி செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அவ்வப்போது புதிய அம்சங்களை வழங்கி வரும் வாட்ஸ்அப், தற்போது கான்டாக்ட்களை சேவ் செய்யாமலும் குறுந்தகவல் அனுப்பும் வசதியை வழங்கி இருக்கிறது.

    இது குறித்து Wabetainfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பயனர்கள் புதிய நம்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப நேரிட்டால், அந்த நம்பரை சேவ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் பயனர்கள் குறுந்தகவல் அனுப்ப வேண்டிய அனைத்து நம்பர்களையும் சேமிக்க வேண்டிய அவசியம் இருக்காது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை அப்டேட் செய்த பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    இந்த அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ்அப்-இல் ஸ்டார்ட் நியூ சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து சர்ச் பாரில் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். இவ்வாறு செய்யும் போது, நம்பர் உங்களது பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்பதை வாட்ஸ்அப் தேடும். அதன்பிறகு கான்டாக்ட் லிஸ்ட் வெளியிலும் தேடும்.

    தற்காலிகமாக அறிமுகமில்லா நபர்களுக்கு வாட்ஸ்அப் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பயனர்கள் முன்னதாக அந்த நம்பர்களை மொபைலில் சேவ் செய்தால் மட்டுமே குறுந்தகவல் அனுப்ப முடியும். ஆனால், புதிய வசதி மூலம் பயனர்கள் மொபைல் நம்பர்களை சேவ் செய்யாமலும், குறுந்தவல் அனுப்பிடலாம்.

    வியாபார ரீதியில் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப்-ஐ அதிகம் சார்ந்து இருப்பவர்களுக்கு புதிய அம்சம் அதிக பயனுள்ளதாக இருக்கும். இது பீட்டா பயனர்கள் மட்டுமின்றி, அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், பயனர்கள் வாட்ஸ்அப்-இன் சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து, புதிய அம்சத்தை பயன்படுத்தலாம். 

    • தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் ஸ்டிக்கர் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.
    • புதிய ஸ்டிக்கர் டிரே மூலம் எளிதில் விரும்பிய ஸ்டிட்க்கர்-ஐ அனுப்பிடலாம்.

    வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்படும் புதிய அம்சம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த அம்சம் ஸ்டிக்கர் சஜெஷன் என்று அழைக்கப்படுகிறது. கூகுள் பிளே பீட்டா 2.23.14.16 வெர்ஷனில் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.

    2018 ஆண்டு வாட்ஸ்அப் செயலியில் ஸ்டிக்கர் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. பயனர்கள் மூன்றாம் தரப்பு செயலிகள் உருவாக்கும் ஸ்டிக்கர்களை இம்போர்ட் செய்து பயன்படுத்துவதற்கான வசதி வழங்கப்பட்டு இருந்தது. இவ்வாறு செய்து குறிப்பிட்ட எமோஜிக்களை பயனர்கள் பயன்படுத்த முடியும். தற்போது வாட்ஸ்அப்-இல் வழங்கப்படும் புதிய ஸ்டிக்கர் சஜெஷன் அம்சம் எப்படி இயங்குகிறது என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

     

    தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் ஸ்டிக்கர் சர்ச் அம்சம் வழங்கப்பட்டு வருகிறது. புதிய பீட்டா அப்டேட்-இல் புதிய ஸ்டிக்கர் டிரே கீபோர்டின் மேல்புறத்தில் காணப்படும். இந்த டிரே-இல் எமோஜியுடன் தொடர்புள்ள ஸ்டிக்கர்கள் இடம்பெற்று இருக்கும். இதன் மூலம் பயனர்கள் சூழலுக்கு ஏற்ற சரியான ஸ்டிக்கர்-ஐ தேர்வு செய்து அனுப்ப முடியும்.

    இந்த அம்சம் உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள பில்ட்-இன் ஸ்டிக்கர் ஸ்டோரில் இருந்து கப்பி (Cuppy) ஸ்டிக்கர் பேக்-ஐ டவுன்லோடு செய்து, சாட் பாரில் எமோஜியை டைப் செய்ய வேண்டும். ஸ்டிக்கர் சஜெஷன் அம்சம் செயல்படுத்தப்பட்டு இருந்தால், புதிய ஸ்டிக்கர் டிரே மூலம் எளிதில் விரும்பிய ஸ்டிட்க்கர்-ஐ அனுப்பிடலாம்.

    தற்போது இந்த அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டாவில் தேர்வு செய்யப்பட்ட சில பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது. வரும் நாட்களில் மேலும் அதிக பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டிக்கர் சஜெஷன் மட்டுமின்றி வாட்ஸ்அப் நிறுவனம், தனது செயலியில் வழங்குவதற்கு பல்வேறு புதிய அம்சங்களை டெஸ்டிங் செய்து வருகிறது.

    • சாட் ஹிஸ்ட்ரியை அதிவேகமாக டிரான்ஸ்பர் செய்வதற்காக புதிய அம்சம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் இயங்க வேண்டியது அவசியம் ஆகும்.

    வாட்ஸ்அப் செயலியில் சாதனங்கள் இடையே சாட் டிரான்ஸ்ஃபர் செய்து கொள்ளும் அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இதனை செய்துமுடிக்க ஸ்மார்ட்போனினை ரிசெட் செய்யவோ அல்லது கூகுள் டிரைவை பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

    இந்த நிலையில், மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் வாட்ஸ்அப் சாட் ஹிஸ்ட்ரியை பாதுகாப்பாகவும், அதிவேகமாகவும் டிரான்ஸ்பர் செய்வதற்காக புதிய அம்சத்தினை அறிவித்து இருக்கிறது. ஆனால் இதற்கு இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் இயங்கவேண்டியது அவசியம் ஆகும்.

     

    கடந்த சில மாதங்களாக டெஸ்டிங் செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனினை ரிசெட் செய்யவோ அல்லது கூகுள் டிரைவ் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

    சாட்களை டிரான்ஸ்பர் செய்வது எப்படி?

    - இரண்டு சாதனங்களிலும் ஒரே ஒஎஸ் கொண்டிருப்பது, வைபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    - சாட் டிரான்ஸ்பர் செய்ய லொகேஷன் எனேபில் செய்யப்பட்டு இருப்பதும் அவசியம் ஆகும்.

    - பழைய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- சாட் -- சாட் டிரான்ஸ்ஃபர் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

    - புதிய ஸ்மார்ட்போன் மூலம், பழைய ஸ்மார்ட்போனின் திரையில் காணப்படும் கியூஆர் கோடினை ஸ்கேன் செய்ய வேண்டும். இனி சாட்-களை தேர்வு செய்து அனுப்பலாம்.

    - டிரான்ஸ்பர் ஆக வேண்டிய புதிய ஸ்மார்ட்போனில் தகவல்களை பெறுவதற்கு Accept ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இனி சாட் டிரான்ஸ்பர் முடிக்கப்பட்டு விடும்.

    இவ்வாறு மேற்கொள்ளப்படும் சாட் டிரான்ஸ்பர் வசதி இரு சாதனங்களிடையே நடைபெறுகிறது. சாட் டிரான்ஸ்பின் போது தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்படுகின்றன. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் அதிக ஃபைல் சைஸ் கொண்ட தரவுகளை அனுப்ப முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • வாட்ஸ்அப் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தடுக்கும் வசதி வழங்கப்படுகிறது.
    • புதிய அம்சங்கள் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் இரண்டு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் முதல் அம்சம் செயலியில் தேவையற்ற அழைப்புகளை தவிர்க்க செய்கிறது. மற்றொரு அம்சம் பிரைவசி செக்கப் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு புதிய அம்சங்களும் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களில் வழங்கப்படுகிறது.

    கடந்த சில மாதங்களாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் தங்களுக்கு அறிமுகமில்லா எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக குற்றம்சாட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் புதிதாக சைலன்ஸ் அன்னோன் கால்ஸ் (silence unknown calls) அம்சம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

     

    இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களின் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இருப்பவர்கள் மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள செய்யும். இதன் மூலம் பயனர் கான்டாக்ட் லிஸ்ட்-இல் இல்லாதவர்கள் மேற்கொள்ளும் அழைப்புகள் பயனர்களை தொந்தரவு செய்யாது. எனினும், நோட்டிஃபிகேஷன் பகுதியில் அழைப்பு வந்ததற்கான தகவல் மற்றும் கால்ஸ் டேபில் அழைப்பு விவரம் இடம்பெற்று இருக்கும்.

    அந்த வகையில் புதிய அம்சம் அழைப்புகளை முழுமையாக தடுக்காது. மாறாக, அழைப்பு வந்த தகவலை வழங்கி, யாரோ அழைப்பை மேற்கொள்ள முயற்சித்தார்கள் என்று தெரிவிக்கும். புதிய அம்சம் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

     

    வாட்ஸ்அப் பிரைவசி செக்கப்:

    பெயருக்கு ஏற்றார்போல் புதிய வாட்ஸ்அப் பிரைவசி செக்கப் அம்சம் கொண்டு செயலியில் கிடைக்கும் பிரைவசி செட்டிங்களை இயக்க வழி செய்கிறது. வாட்ஸ்அப் செட்டிங்கில் உள்ள பிரைவசி செக்கப் ஆப்ஷனில், ஸ்டார்ட் செக்கப் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும், பிரைவசி செட்டிங் நிறைந்த மெனு திரையில் காணப்படும்.

    இதில் யார் உங்களை தொடர்பு கொள்ள முடியும், தனிப்பட்ட விவரங்களை கட்டுப்படுத்துவது, சாட் பிரைவசி என ஏராளமான அம்சங்கள் இடம்பெற்று இருக்கும். பல்வேறு வகையான பிரைவசி செட்டிங்களை ஒரே பெயரின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட அம்சமாக புதிய பிரைவசி செக்கப் உள்ளது. 

    • பல நாட்கள் லாட்டரி சீட்டுகள் வாங்கியும் பரிசு விழாமல் ஏமாற்றம் அடைந்த அவர் இதுகுறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.
    • வாட்ஸ்அப் குழுவில் மேலும் தலைமறைவாக இருக்கும் ஏஜெண்டுகளையும், அட்மின்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள மயிலம்பாடி கொண்டுரெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (43). இவரது மனைவி எழிலரசி (33). இவர்களிடம் பவானியை சேர்நத ஒருவர் ஆன்லைன் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டு வாங்கி வந்தார்.

    பல நாட்கள் லாட்டரி சீட்டுகள் வாங்கியும் பரிசு விழாமல் ஏமாற்றம் அடைந்த அவர் இதுகுறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.

    பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சரவணன் அவரது மனைவி எழிலரசி ஆகியோர் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

    பட்டதாரிகளான கணவன், மனைவி 2 பேரும் லேப்டாப் மற்றும் செல்போனில் வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி பவானி, அம்மாபேட்டை, சித்தோடு, பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் ஏஜெண்டுகள் நியமித்து அவர்கள் மூலம் வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை ஆன்லைன் மூலம் அனுப்பி பரிசு விழும் என கூறி பொதுமக்களை நம்ப வைத்து லாட்டரி சீட்டுகள் விற்கப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து வாட்ஸ்அப் குழுவில் இருந்த பவானியை சேர்ந்த அப்புசாமி, காடையாம்பட்டியை சேர்ந்த தினேஷ், திருவள்ளுவர் நகரை சேர்ந்த நாகராஜன், ஆதிநாராயணன், அம்மாபேட்டை குருப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கண்ணுசாமி, நெரிஞ்சிப்பேட்டையை சேர்ந்த ரசூல், சித்தோடு நால்ரோடு பகுதியை சேர்ந்த வேலுமணிகண்டன், பெருந்துறையை சேர்ந்த பொன்னுசாமி ஆகிய 9 ஏஜெண்டுகளையும் போலீசார் கைது செய்தனர்.

    கைதான 11 பேரிடம் இருந்து 2 லேப்டாப், 2 டேப், 11 செல்போன்கள், 2 வங்கி பாஸ் புத்தகம், ஒரு ஏ.டி.எம். கார்டு, ரூ.13 ஆயிரத்து 650 ரொக்கப்பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    பின்னர் கைதான 11 பேரும் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் பவானி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு ஆண்கள் 10 பேர் பவானி கிளை சிறையிலும், எழிலரசி கோவை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    இந்த வாட்ஸ்அப் குழுவில் மேலும் தலைமறைவாக இருக்கும் ஏஜெண்டுகளையும், அட்மின்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் கைதானவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி சொத்துக்களை பறிமுதல் செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×