search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vegetables"

    • சுமார் 50-க்கும் மேற்பட்ட மினி ஆட்டோகளில் வைத்து பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்கின்றனர்.
    • இவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரில் ரெக்கார்டு செய்யப்பட்ட விலைப்பட்டியலை வெங்காயம், பூண்டு என விலை கூறி விற்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய பைபாஸ் சாலை மற்றும் சிவா தியேட்டர் கார்னர் பகுதிகளில், சுல்தான்பேட்டை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மினி ஆட்டோகளில் வைத்து பூண்டு, வெங்காயம், தக்காளி மற்றும் பழ வகைகள் விற்பனை செய்கின்றனர்.

    இவர்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அதிக சத்தத்துடன் ஸ்பீக்கரில் ரெக்கார்டு செய்யப்பட்ட விலைப்பட்டியலை வெங்காயம், பூண்டு என விலை கூறி விற்கின்றனர்.

    ஸ்பீக்கர் அதிக சத்தத்துடன் ஒலிப்பதால் அப்பகுதி மக்களும், சாலையில் நடந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

    மேலும் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் வகையில் சாலையிலேயே காலை முதல் மாலை வரை வண்டிகளை நிறுத்தி வைப்பதால் விபத்தும் ஏற்படுகின்றது.

    எனவே மினி ஆட்டோவில் உள்ள அதிக சத்தத்துடன் ஒலிக்கும் ஸ்பீக்கரை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஆட்டோ வியாபாரிகள் பதிவு செய்யப்பட்ட குரலை திரும்பத் திரும்ப ஒலிப்பதால் இதை கேட்கும் எங்களுக்கு மனநிலை பாதிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரே இடத்தில் நின்று கொண்டு சத்தத்துடன் ஸ்பீக்கரில் ஒளிபரப்புகின்றனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • வீட்டின் மாடி பகுதிகளை குறைந்த செலவில் தோட்டமாக மாற்றலாம்.
    • பாரம்பரிய நாட்டு காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்குகளை உற்பத்தி செய்யலாம்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் உள்ள மாடி வீடுகளில் இயற்கை முறையில் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில், ஆணையர் பிரதான் பாபு, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை யில் நடைபெற்றது.

    இயற்கை காய்கறி தோட்ட வல்லுனர் திருச்சி விதை யோகநாதன், தோட்டக லைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் ஆகியோர் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து எடுத்துரைத்தனர்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பேசுகையில்:-

    தற்போது காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருகிறது.

    இதனால் வீட்டின் மேல்பகு தியை குளிரவைக்க பல்வேற வழிகள் இருந்தாலும், பசுமைகுடில் அமைப்பது சிறந்தது. வீட்டின் மாடி பகுதிகளை குறைந்த செலவில் தோட்டமாக மாற்றி இயற்கை உரங்களை பயன்படுத்தி பாரம்பரிய நாட்டு காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்குகளை உற்பத்தி செய்யலாம்.

    இதனால் மன அமைதி, நஞ்சில்லாத உணவு, நோயற்ற வாழ்வு, பொருளாதார சேமிப்பு போன்ற நன்மைகள் கிடைக்கிறது.

    இதற்காக நகராட்சி நிர்வாகத்துடன் பாலம் சேவை நிறுவனம், பசுமை சிகரம் அமைப்பு ஆகியவை இணைந்து உரிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    மேலும், காய்கறி, விதைகள் வழங்கப்படும். ஓராண்டு க்குள் அனைத்து மாடி வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைப்பதே இலக்கு என்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டார்.

    • நேற்று மகாராஜாநகர் மற்றும் என்.ஜி.ஓ. காலனி உழவர் சந்தைகளில் நேற்று மட்டும் 85 டன் காய்கறிகள் விற்பனையானது.
    • மகராஜாநகர் உழவர் சந்தையில் இன்று ரூ.32 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.

    நெல்லை:

    பாளை உழவர்சந்தைகளில் கடந்த 2 நாட்களாகவே காய்கறிகள் விற்பனை டன் கணக்கில் நடைபெற்று வருகிறது. நேற்று மகாராஜாநகர் மற்றும் என்.ஜி.ஓ. காலனி உழவர் சந்தைகளில் நேற்று மட்டும் 85 டன் காய்கறிகள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

    இன்றும் அதிகாலை முதலே உழவர் சந்தைகளில் விவசாயிகளிடம் பொதுமக்கள் நேரடியாகவே காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மகராஜாநகர் உழவர் சந்தையில் இன்று 74 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. சுமார் 120 விவசாயிகள் கொண்டு வந்த இந்த காய்கறிகளை பொதுமக்கள் சுமார் 13 ஆயிரம் பேர் வாங்கி சென்றனர். இன்று மட்டும் அங்கு ரூ.32 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.

    இதேபோல் என்.ஜி.ஓ. காலனியில் தொடங்கப்பட்டுள்ள உழவர் சந்தையில் இன்று ஒரு நாளில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 30 டன் காய்கறிகள் விற்று தீர்ந்தன. அங்கு மட்டும் 10 ஆயிரம் பேர் வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர் என்று உழவர் சந்தை மேலாண்மை அலுவலர் பாப்பாத்தி, உதவி மேலாண் அலுவலர் உத்தமன் ஆகியோர் தெரிவித்தனர்.

    • பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொது மக்கள் பானைகள், அடுப்பு, கரும்பு, மஞ்சள் கொத்து, அச்சு வெல்லம் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.
    • பொங்கல் பண்டிகைக்கு வழக்கத்தை விட காய்கறிகளின் தேவை அதிக அளவில் இருக்கும். இதனால் அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படும்.

    தஞ்சாவூர்:

    வருகிற 15-ந் தேதி தைப்பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. பின்னர் மாட்டுப்பொங்கல் , காணும் பொங்கல் உள்ளிட்ட அடுத்தடுத்து பண்டிகைகள் வருகின்றன.

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொது மக்கள் பொங்கல் பானைகள், அடுப்பு, கரும்பு, மஞ்சள் கொத்து, அச்சு வெல்லம் உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.

    பொங்கலன்று பல்வேறு வகையான காய்கறிகளைக் கொண்டு சமைப்பது வழக்கம். இதனால் பொங்கல் பண்டிகைக்கு வழக்கத்தை விட காய்கறிகளின் தேவை அதிக அளவில் இருக்கும்.

    இதனால் அவற்றின் விலையும் உயர்ந்து காணப்படும். தஞ்சையில் கடந்த சில நாட்களாகவே காய்கறி விலை உச்சத்தை தொட்டு வருகிறது.

    தஞ்சை அரண்மனை வளாகத்தில் செயல்படும் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்துள்ளது.

    இந்த மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, நிலக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படும்.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது. இதனால் பொங்கல் பண்டிகைக்காக புதுமணத் தம்பதியினருக்கும் மற்றும் திருமணமான பெண்களுக்கு பெற்றோர்கள், சகோதரர்கள் சீர்வரிசை கொடுப்பது வழக்கம்.

    இதில் கரும்பு, வாழைத்தார், பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவையும் அடங்கும்.

    இதனால் தற்போது காய்கறிகள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது பனி காரணமாக காய்கறிகள் விளைச்சலும் குறைவாக உள்ளது. இதனால் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது.

    கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் முருங்கைக்காய் விலையும் கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.

    ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இதே போல் கத்தரிக்காய் கிலோ ரூ.100, வெண்டைக்காய் ரூ.80, மாங்காய் ரூ.120, அவரை ரூ.50, சின்ன வெங்காயம் ரூ.90 முதல் ரூ.110, பெரிய வெங்காயம் ரூ.30, பீட்ரூட் ரூ.50, மொச்சை ரூ.100, கருணைக்கிழங்கு ரூ.90, சவ்சவ் ரூ.25, கோவைக்காய் ரூ.90 -க்கு விற்பனை செய்யப்பட்டது.

    விளைச்சல் குறைவாக இருந்ததாலும் வரத்தை குறைவாக உள்ளதாலும் தேவை அதிகமாக இருப்பதாலும் காய்கறி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • இன்று வெள்ளிக்கிழமை மார்கழி மாத சர்வ மஹாலய முழு அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.
    • இன்று ஒரே நாளில் ரூ.78,45,691 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி, ஆட்டை யாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் வழக்கத்தை விட பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி நாட்களில் கூடுதலாக காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனையாவது வழக்கம்.

    அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை மார்கழி மாத சர்வ மஹாலய முழு அமாவாசை மற்றும் அனுமன் ஜெயந்தி ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்ப தற்காகவும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதி களவில் வாங்கி சென்றனர்.

    பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள், பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் உள்ள

    11 உழவர் சந்தைகளிலும் இன்று

    984 விவசாயிகள், பல்வேறு 651 வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 245.805 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 54,393 நுகர்வோர்கள் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.78,45,691 லட்சம் மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது. இது வழக்கமான வியாபாரத்தை விட இருமடங்கு விற்பனை ஆகும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதியில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.
    • இதில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.56-க்கும், கேரட் ரூ.56-க்கும், பீன்ஸ் ரூ.32-க்கும், இஞ்சி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் கோட்டை சாலையில் செயல்படும் உழவர் சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த

    விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளை விக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    உழவர் சந்தைக்கு 163 விவசாயிகள், 19,145 கிலோ காய்கறிகள் 4,410 கிலோ பழங்கள் என மொத்தம் 23 ஆயிரத்து 555 கிலோ விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். அவை ரூ.8.11 லட்சத்திற்கு விற்பனையானது. இதில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், கத்தரிக்காய் ரூ.60-க்கும், பீட்ரூட் ரூ.56-க்கும், கேரட் ரூ.56-க்கும், பீன்ஸ் ரூ.32-க்கும், இஞ்சி ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    • தென்காசி மாவட்டம் கணக்கப்பிள்ளைவலசையில் விழா நடைபெற்ற மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பாக அதன் அருகில் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கை பார்வையிட்டார்.
    • காய்கறிகள், பழங்கள், மலை பயிர்கள் உள்ளிட்டவற்றால் அகத்திய முனிவர், ஏர் கலப்பையுடன் விவசாயி நிற்கும் உருவம், பெண் தொழிலாளி தலையில் பெட்டியை வைத்து காய்கறி சுமந்து வரும் உருவம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருந்தன.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கணக்கப்பிள்ளைவலசையில் விழா நடைபெற்ற மேடைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவதற்கு முன்பாக அதன் அருகில் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கை பார்வையிட்டார்.

    அங்கு காய்கறிகள், பழங்கள், மலை பயிர்கள் உள்ளிட்டவற்றால் அகத்திய முனிவர், ஏர் கலப்பையுடன் விவசாயி நிற்கும் உருவம், பெண் தொழிலாளி தலையில் பெட்டியை வைத்து காய்கறி சுமந்து வரும் உருவம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் மலை பயிர்களான மிளகு உள்ளிட்டவையும் காட்சி படுத்தப்பட்டு இருந்தன. மேலும் அந்த அரங்கத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவப்படங்களும் இடம் பெற்றிருந்தன.

    மற்றொரு அரங்கில் தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கம் சார்பில் தயார் செய்து வைக்கப்பட்டு இருந்த பாய், தேன், கைவினை பொருட்கள் உள்ளிட்டவைகளையும் முதல்-அமைச்சர் பார்வையிட்டார். இந்த அரங்குகள் பொதுமக்களை கவர்ந்தன.

    • தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது.
    • தக்காளி கிலோ ரூ.10 முதல் 15, முள்ளங்கி ரூ.14-16வரையிலும் விற்பனையானது.

    உடுமலை :

    உடுமலை உழவர் சந்தைக்கு தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது. தக்காளி விலை குறைந்தும் சின்ன வெங்காயம் விலை உயர்ந்தும் காணப்பட்டது.

    தக்காளி கிலோ ரூ.10 முதல் 15 வரையிலும், உருளை ரூ. 45 முதல் 50 வரையிலும் ,சின்ன வெங்காயம்ரூ. 54 -90, கத்தரிக்காய் ரூ.30 -36, வெண்டைக்காய் ரூ.20 -24 ,முருங்கை ரூ.35-48 ,பீர்க்கங்காய் ரூ.20- 38 ,சுரைக்காய் ரூ.10 -15 ,புடலங்காய் ரூ.20 -24, பாகற்காய் ரூ.35 -40, தேங்காய் ரூ. 25- 30 ,முள்ளங்கி ரூ. 14-16 ,பீன்ஸ் ரூ.46- 48, அவரைக்காய் ரூ.50 -55 ,கேரட் ரூ. 60- 65க்கும் விற்பனையானது.

    • 1500 கிலோ அரிசி மற்றும் 1000 கிலோ காய்கறிகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர்.
    • தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனிகளில் சாத்தப்படுகிறது

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது.

    இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும்.

    6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டு உள்ளது.

    இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சி இன்று மாலை நடைபெறுகிறது.

    இதற்காக பக்தர்கள் இன்று காலையிலிருந்து அரிசி, காய்கறிகளை தானமாக செய்து வருகின்றனர்.

    சுமார் 1500 கிலோ அரிசி, சுமார் 1000 கிலோ முள்ளங்கி, கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள், இனிப்பு வகைகள் ஆகியவற்றை பக்தர்கள் தானமாக வழங்கினர்.

    இதனைத் தொடர்ந்து அரிசியை சாதமாக தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

    மேலும் காய்கறிகள் கொண்டு அலங்காரம் செய்யும் பணியும் நடைபெற உள்ளது.

    பணிகள் அனைத்தும் முடிந்த பிறகு

    இன்று மாலை 4.30 மணி அளவில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    தயார் செய்யப்பட்ட சாதம் பெருவுடையார் திருமேனிகளில் சாத்தப்படுகிறது.

    காய்கறிகள் கொண்டு பெருவுடையாருக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்படுகிறது.

    இந்த அன்னாபிஷேகம் மூலம் உலக மக்கள் நலன் பெற வேண்டியும், நீர்நிலைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்கவும் நடத்தப்படுகிறது.

    அன்னாபிஷேகம் முடிந்ததும் அலங்காரம் கலைக்கப்பட்டு பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

    மேலும் நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகள் உணவருந்தும் வகையில் அன்னம் ஆற்றில் கரைக்கப்படும்.

    இந்த அன்னாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    • 13 அடி உயரம், 23 அடி சுற்றளவு உள்ள லிங்கம் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்–பட்டுள்ளது.
    • மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பெருவுடையாருக்கு மகா தீபாராதனை.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்–கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத் திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்–கட்டு உள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நாளை (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    பின்னர் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்து வருகின்றனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • பிரசவ காலத்தில் மூச்சு பயிற்சியில் ஈடுபட்டால் உடலும், மனமும், குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்க வழிவகை செய்யும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் உடலும் மனமும் ஆரோக்கியம் பெற ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி;

    காய்கறி, கீரை, பழங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துள்ள உணவு பொருட்களும் வழங்கப்பட்டது

    நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில் ஒரே நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

    பிரசவ காலத்தில் யோகா உள்ளிட்ட மூச்சு பயிற்சியில் ஈடுபட்டால் உடலும் மனமும் குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்க வழிவகை செய்யும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    தொடர்ந்து 52- கர்ப்பிணி தாய்மார்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு திருமருகல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் வழங்கப்பட்டது.

    • அரசு தோட்டக்கலை பண்ணை, ஆடுதுறையில் கத்தரி வீரிய ஒட்டு ரக குழித்தட்டு நாற்றுகள் 3 லட்சம் எண்கள் இருப்பு உள்ளது.
    • மா நெருக்கு ஒட்டு கன்றுகள் 8 ஆயிரம் எண்களும், மா குருத்து ஒட்டு கன்றுகள் 4 ஆயிரம் எண்களும், மல்லிகை வேர்குச்சிகள் 15000 எண்களும், தேக்கு 25000 எண்களும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளம் மற்றும் ஆடுதுறை அரசு தோட்டக்கலை பண்ணைகளில் வீரிய ஒட்டு ரக காய்கறி நாற்றுகள் குழித்தட்டுகளில் உற்பத்தி செய்யப்பட்டு தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    குறிப்பாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் 80 சதவீதம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது மருங்குளம் அரசு தோட்டக்கலை பண்ணையில் கத்தரி வீரிய ரக குழித்தட்டு நாற்றுகளும் மிளகாயில் வீரிய ரக குழித்தட்டு நாற்றுகளும் தலா 50 ஆயிரம் நாற்றுகள் இருப்பு உள்ளது. மேலும் மா நெருக்கு ஒட்டு கன்றுகள் 8 ஆயிரம் எண்களும், மா குருத்து ஒட்டு கன்றுகள் 4 ஆயிரம் எண்களும், மல்லிகை வேர்குச்சிகள் 15000 எண்களும், தேக்கு 25000 எண்களும் விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.

    அரசு தோட்டக்கலை பண்ணை, ஆடுதுறையில் கத்தரி வீரிய ஒட்டு ரக குழித்தட்டு நாற்றுகள் 3 லட்சம் எண்கள் இருப்பு உள்ளது. மேலும் துளசி, கற்றாழை, ரணகல்லி உள்ளிட்ட மருத்துவ செடிகள் 3000 எண்கள் மற்றும் மா நெருக்கு, குருத்து ஒட்டு கன்றுகள் 2000 எண்களும் விற்பனைக்கு உள்ளதால் தேவைப்படும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை தஞ்சாவூர் தோட்டக்கலை துணை இயக்குநர் எஸ்.கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

    ×