search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Uzhavar Santhai"

    • தினமும் சுமார் 4,500 கிலோ தக்காளி உழவர் சந்தைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
    • வரத்து குறைவால் தக்காளி ஒரு கிலோ ரூ.130 வரை விற்பனையாகிறது.

    நெல்லை:

    நெல்லையில் மகராஜநகர், மேலப்பாளையம், கண்டியப்பேரி, என்.ஜி.ஓ. காலனி மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றது.

    இங்கு தினமும் சுமார் 4,500 கிலோ தக்காளி உழவர் சந்தைகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் மகாராஜநகர் உழவர் சந்தையில் 2,800 கிலோவும், மேலப்பாளையத்தில் 1,200 கிலோவும், மீதமுள்ள 3 உழவர் சந்தைகளில் 500 கிலோ தக்காளியும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    தற்போது வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்து வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.130 வரை விற்பனையாகிறது. இதனை கட்டுப்படுத்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவ ட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலமாக உழவர் சந்தைகளில், விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற தக்காளி பழங்களை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து எடுத்து மகராஜநகர் மற்றும் மேலப்பாளையம் உழவர் சந்தைகளில் நுகர்வோருக்கு குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

    மாவட்டத்தில் ஆண்டு தோறும் தக்காளி சுமார் 200 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. தக்காளியில் மிக முக்கிய உணவு ஆதாரமான லைக்கோபின் என்ற ஆன்டி ஆக்ஸிடண்டு உள்ளது. இது இதய நோய் மற்றும் புற்று நோயின் அபாயத்தை குறைப்பது உட்பட பல ஆரோக்கிய நன்மைகள் தருகிறது.

    இன்றைய நிலவரப்படி ஒரு கிலோ தக்காளி ரூ.98-க்கு விற்கப்படுவதாக தோட்டக்கலை துணை இயக்கு நர் பாலகிருஷ்ணன் தெரி வித்துள்ளார்.

    • நேற்று மகாராஜாநகர் மற்றும் என்.ஜி.ஓ. காலனி உழவர் சந்தைகளில் நேற்று மட்டும் 85 டன் காய்கறிகள் விற்பனையானது.
    • மகராஜாநகர் உழவர் சந்தையில் இன்று ரூ.32 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.

    நெல்லை:

    பாளை உழவர்சந்தைகளில் கடந்த 2 நாட்களாகவே காய்கறிகள் விற்பனை டன் கணக்கில் நடைபெற்று வருகிறது. நேற்று மகாராஜாநகர் மற்றும் என்.ஜி.ஓ. காலனி உழவர் சந்தைகளில் நேற்று மட்டும் 85 டன் காய்கறிகள் விற்பனையானது. இதன் மதிப்பு ரூ.35 லட்சம் ஆகும்.

    இன்றும் அதிகாலை முதலே உழவர் சந்தைகளில் விவசாயிகளிடம் பொதுமக்கள் நேரடியாகவே காய்கறிகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். மகராஜாநகர் உழவர் சந்தையில் இன்று 74 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. சுமார் 120 விவசாயிகள் கொண்டு வந்த இந்த காய்கறிகளை பொதுமக்கள் சுமார் 13 ஆயிரம் பேர் வாங்கி சென்றனர். இன்று மட்டும் அங்கு ரூ.32 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.

    இதேபோல் என்.ஜி.ஓ. காலனியில் தொடங்கப்பட்டுள்ள உழவர் சந்தையில் இன்று ஒரு நாளில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 30 டன் காய்கறிகள் விற்று தீர்ந்தன. அங்கு மட்டும் 10 ஆயிரம் பேர் வந்து காய்கறிகள் வாங்கி சென்றனர் என்று உழவர் சந்தை மேலாண்மை அலுவலர் பாப்பாத்தி, உதவி மேலாண் அலுவலர் உத்தமன் ஆகியோர் தெரிவித்தனர்.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல உழவர் சந்தைகள் வேகமாக திறக்கப்பட்டன.
    • நெல்லை மாவட்டத்தில் 4 இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    நெல்லை:

    விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட வேளாண் விளைப் பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது.

    முதல் உழவர்சந்தை

    1999-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி, முதல் உழவர் சந்தையை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல உழவர் சந்தைகள் வேகமாக திறக்கப்பட்டன.

    தாங்கள் விளைவித்த பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுவதன் மூலம் அதிக லாபம் கிடைத்ததால் விவசாயிகளிடையே உழவர் சந்தை திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது.

    நெல்லை மாவட்டம்

    நெல்லை மாவட்டத்தில் பாளை மகாராஜாநகர், மேலப்பாளையம், டவுன் கண்டிகைபேரி மற்றும் அம்பை ஆகிய 4 இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் தமிழகம் முழுவதும் மேலும் 10 உழவர்சந்தைகள் அமைக்கப்படும் என அறிவித்தார். அதன்படி நெல்லையில் மேலும் ஒரு உழவர்சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    5-வது உழவர்சந்தை

    அதன்படி நெல்லை மாவட்டத்தில் 5-வது உழவர்சந்தை பாளை என்.ஜி.ஓ. ஏ. காலனியில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது.

    கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி அப்துல்வகாப் எம்.எல்.ஏ. இதற்கான அடிக்கல்லை நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

    16 கடைகள்

    இந்த உழவர்சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு 16 கடைகள் அமைக்கபட்டுள்ளது. மேலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஒரு குளிர்பதன கிடங்கு அமைந்துள்ளது. நெல்லை மாநகர பகுதியில் 3 உழவர்சந்தைகள் உள்ளது.

    இதில் மகராஜநகர் சந்தையில் மட்டுமே குளிர்பதன கிடங்கு உள்ளது.

    தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள உழவர்சந்தையிலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.மேலும் சி.சி.டி.வி. காமிராக்களும் அமைக்கப்படுகிறது.

    நேரடியாக விற்பனை

    இதன்மூலம் ரெட்டியார் பட்டி, இட்டேரி, பருத்திப்பாடு, தருவை, முத்தூர், கருங்குளம், முன்னீர்பள்ளம், டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது பொருட்களை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம்.

    மேலும் இந்த புதிய உழவர் சந்தையால் என்.ஜி.ஓ. 'ஏ', 'பி' காலனி, ரெட்டியார்பட்டி, திருமால்நகர், பொதிகைநகர், பெருமாள்புரம் பகுதி பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறி, பழங்களை வாங்கலாம்.

    தயார் நிலையில்

    பாளை என்.ஜி.ஓ. ஏ. காலனி புதிய உழவர்சந்தை பணிகள் 5 மாதங்களில் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி 5 மாதங்களில் அனைத்து பணிகளும் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.

    கடந்த 8-ந்தேதி நெல்லையில் நடைபெற்ற விழாவில் மாவட்டத்தில் முடிவடைந்த பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    அப்போது என்.ஜி.ஓ. ஏ. காலனி புதிய உழவர்சந்தையும் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது திறக்கப்படவில்லை. இது தொடர்பாக உழவர்சந்தைகளின் நிர்வாக அலுவலர் மாரியப்பன் கூறியதாவது:-

    விரைவில் திறப்பு

    புதிய உழவர்சந்தை பணிகள் அனைத்தும் கடந்த வாரம் முடிந்துவிட்டது. முதல்-அமைச்சர் நெல்லை வந்த போது சிறிய அளவிலான பணிகள் முடிக்கப்படாமல் இருந்தது.

    மேலும் பணிகள் முடிந்த பிறகு, அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னரே திறக்க வேண்டும் என விதி உள்ளது. தற்போது அதிகாரிகளும் ஆய்வு செய்து உள்ளனர். எனவே புதிய உழவர்சந்தை விரைவில் திறப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய உழவர்சந்தையை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்பதே விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×