search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tsunami"

    சுனாமி 14-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவ கிராம மக்களுடன் சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி வணங்கினார். #Tsunami #MemorialDay
    நாகப்பட்டினம்:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் பயங்கர பூகம்பம் காரணமாக சுனாமி என்னும் ஆழிப்பேரவை எழுந்தது. இதனால் இந்தோனேசியா, இந்தியா, இலங்கை, மியான்மர் உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரை பகுதிகளை வாரி சுருட்டின. இதில் மொத்தம் 2½ லட்சம் பேர் பலியானார்கள்.

    தமிழகத்தில் சுனாமி பேரலைக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதில் நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்து 65 பேர் இறந்தனர். மீனவர்களின் படகுகள் தூக்கி வீசப்பட்டு கடும் சேதமானது.

    இறந்தவர்களின் உடல்களை புதைக்க போதிய இடம் இல்லாததால் ஒரே குழிக்குள் 25 உடல்கள் வரை புதைக்கப்பட்டன சுனாமியில் உருக்குலைந்த நாகை மாவட்டம் மீண்டு வர பல மாதங்கள் ஆனது.

    இந்த கோர சம்பவம் நடந்து இன்றுடன் 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. சுனாமியால் குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், மற்றும் உற்றார்-உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கும் இன்னும் ஆறாத வடுவாகவே உள்ளது.

    சுனாமியின் கோரத்தாண்டவத்தில பலியான வர்களின் நினைவாக நாகை மாவட்டத்தில் உள்ள கடற்கரையோர பகுதிகளில் நினைவிடம் அமைக்கப் பட்டுள்ளது.

    நாகை அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், வேளாங்கண்ணி, நாகூர் மற்றும் வேதாரண்யம், ஆறுக்காட்டுத்துறை, தரங்கம்பாடி, பூம்புகார், சின்னகுடி, பொறையாறு, சந்திரபாபு ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவ கிராம மக்கள் இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நாகையில், மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இன்று காலை மவுன ஊர்வலமாக சென்றனர். பின்னர் கடலில், பாலை ஊற்றி, சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    வேதாரண்யம் அடுத்த ஆறுக்காட்டுத்துறை மீனவர் கிராமத்தில் இன்று 14-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீனவ கிராம மக்களுடன் கடலுக்கு சென்று கடலில் பால் ஊற்றி மலர் தூவி வணங்கினார். பின்னர் சுனாமி நினைவிடத்திற்கு வந்து அங்கு மலர் வளையம் வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

    நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுனாமி நினைவு பூங்காவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், கலெக்டர் சுரேஷ்குமார், எஸ்.பி.விஜயகுமார், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

    இதேபோல் நாகை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் இன்று பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தியபடி மவுன ஊர்வலம் நடத்தினர். இதில் அரசியல் கட்சியினர், வணிகர் சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  #Tsunami #MemorialDay
    14-வது சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமியால் உயிர்களை பறிகொடுத்த சொந்தங்கள் கடற்கரை பகுதிகளில் அஞ்சலி செலுத்தினர். #Tsunami #MemorialDay
    கடல்... உலகெங்கும் வியாபித்து இருக்கும் பெரிய நீர்நிலை. எப்போதும் ஓய்வெடுக்காமல் உழன்றுகொண்டே இருக்கும். நீலக்கடலில் இருந்து எழும் வெள்ளை நிற அலை, இடைவிடாது கரையை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் அழகைக் காண குவியும் மக்களின் எண்ணிக்கைக்கு கடற்கரை மணலில் அவர்கள் பதியவிட்டு செல்லும் காலடித்தடங்களே சாட்சி. இப்படி, ரசிக்க மட்டுமே என்று இருந்த கடல், ஆபத்தானது என்பதை உணர்த்திய ஆண்டு 2004.

    14 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 26-ந் தேதி அதிகாலை நேரத்தில், இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பூகம்பத்தால் சுனாமி என்ற ஆழிப்பேரலை கடல் அரக்கனாய் விஸ்வரூபம் எடுத்து, கடற்கரையோர மக்களையும், அவர்களின் உடைமைகளையும் வாரிச் சுருட்டிச் சென்ற கொடிய நாள்.

    சுனாமி கடல் அரக்கனின் கோரத்தாண்டவத்துக்கு இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து, கிழக்கு ஆப்பிரிக்கா, மலேசியா, மாலத்தீவு, மியான்மர், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளில், கடற்கரையோரம் வசித்த 2 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் பலியானார்கள். தமிழகத்தில் மட்டும் 7,941 பேர் மாண்டு போனார்கள். அதிகபட்சமாக நாகப்பட்டினத்தில் 6,039 பேர் பலியானார்கள். கன்னியாகுமரியில் 798 பேர் இறந்துபோனார்கள். கடற்கரையோரம் குவிந்து கிடந்த பிணங்களை ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது. அன்று ஒலிக்கத் தொடங்கிய மரண ஓலம் இத்தனை ஆண்டுகள் கடந்த பின்பும் ஓய்ந்த பாடில்லை.

    “ஆண்டொன்று போனால், வயதொன்று போகும்” என்று சொல்வார்கள். அன்று... சிறுவர்-சிறுமியாய் மாண்டுபோனவர்கள், இன்றைக்கு உயிரோடு இருந்திருந்தால் இளம் வயதினராய் வலம் வந்திருப்பார்கள். அன்றைக்கு இளம் வயதில் இருந்தவர்கள், இன்று.. திருமணம் முடிந்து குடும்பமாய் பிள்ளைகளோடு வாழ்ந்து மகிழ்ந்திருப்பார்கள். ஆனால், அன்றைக்கு ஆழிப்பேரலையின் கோரப் பசிக்கு இரையானவர்களின் புகைப்படங்கள் இன்றைக்கு அவர்களது வீடுகளில் சுவற்றில் நினைவுச் சின்னமாக தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதைப் பார்க்கும் போதெல்லாம் மரித்துப்போனவர்களின் ரத்த சொந்தங்களுக்கு கண்களில் கண்ணீர் பொங்கி நிற்கிறது.



    2004-ம் ஆண்டு நடந்த இந்த பெரிய இயற்கை பேரிடருக்கு பிறகு, எப்போதாவது இடையிடையே ‘சுனாமி’ என்னும் அரக்கன், கடல் கொந்தளிப்பாக உருவெடுத்து கரையோர மீனவர்களை மிரட்டிக் கொண்டே இருக்கிறான். 2005-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தால், கடல் கொந்தளித்து தமிழக கடலோர மாவட்டங்களில் சுனாமி பீதியை கிளப்பியது. மீண்டும் அதே ஆண்டு மார்ச் 28-ந் தேதி, இந்தோனேசியா அருகே ஏற்பட்ட கடுமையான பூமி அதிர்ச்சி காரணமாக சுனாமி பீதி ஏற்பட்டது. தமிழகத்தில் கடலோர பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த பூகம்ப தாக்குதலில் இந்தோனேசியாவில் 2 ஆயிரம் பேர் பலியானார்கள். இப்படி, ஆழிப்பேரலையின் மிரட்டல்கள் அவ்வப்போது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

    எனவே மக்களின் மனங்களில் சுனாமி ஏற்படுத்திய வடு இன்னும் மறைந்தபாடில்லை. 14-வது சுனாமி நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. உயிர்களை இழந்த சொந்தங்கள், கடல் தாயிடம் வேண்டி முறையிட்டு கனத்த இதயத்தோடு கடற்மணல் பரப்பில் அஞ்சலி செலுத்துகின்றனர். கடலில் பால் ஊற்றியும் பிரார்த்தனை செய்கின்றனர். இனியும் இதுபோன்ற கோரத் தாக்குதல்கள் தொடர வேண்டாம் என்பதே அவர்களுடைய வேண்டுதலாக உள்ளது.

    எந்தவொரு கவலைக்கும் சரியான மருந்து காலத்திடம் தான் இருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் மனதில் சுனாமி ஏற்படுத்திய ஆறாத வடுவையும் காலம் என்ற மருந்து விரைவாக ஆற்றட்டும் என்று இறைவனிடம் நாம் வேண்டுவோம்.  #Tsunami #MemorialDay
    இந்தோனேசியாவை தாக்கிய சுனாமிக்கு சுமார் 300 பேர் பலியாகி உள்ள நிலையில், இசை நிகழ்ச்சியில் சுனாமி புகுந்து மக்களை அடித்துச் செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. #Tsunami #IndonesiaTsunami
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது. பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    சுமார் சுமார் 65 அடி உயரத்தில் (20 மீட்டர்) சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. ஏராளமான மக்கள், அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். இன்று காலை நிலவரப்படி சுனாமிக்கு 281 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.

    இந்நிலையில், இசை நிகழ்ச்சி ஒன்றில் சுனாமி அலை புகுந்து மக்களை அடித்துச் செல்லும் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.



    டான்செங் லெசங்க் கடற்கரையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்காக மிகப்பெரிய டெண்ட் அமைக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் இதில் பங்கேற்று நிகழ்ச்சியை கண்டுகளித்துக்கொண்டிருந்தனர். பாடகர் மிகுந்த உற்சாகத்துடன் பாடிக்கொண்டிருந்த சமயம், திடீரென இசை நிகழ்ச்சிக்குள் சுனாமி அலைகள் புகுந்தது. மேடையை உடைத்துக்கொண்டு தண்ணீர் புகுந்ததால் மேடை சரிந்து, அனைவரும் கீழே விழுகின்றனர். இசைக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகின்றனர்.

    இதில், இசைக்குழுவின் மேலாளர் மற்றும் ஒரு பாடகர் இறந்துவிட்டதாகவும், சிலரை காணவில்லை என்றும் அந்த இசைக்குழு சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு இசைக்குழு சார்பில் இரங்கலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tsunami #IndonesiaTsunami



    இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியின் கோரத்தாண்டவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது. #Tsunami #IndonesiaTsunami
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில்  உள்ள அனாக் கிரகடாவ் என்ற எரிமலை நேற்று முன்தினம் இரவு வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது. அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால் சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது.

    பின்னர் சிறிது நேரத்தில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து எழுந்த ராட்சத சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. சுமார் 65 அடி உயரத்தில் (20 மீட்டர்) சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. சாலைகள், ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.


     
    சுனாமி தாக்குதலில் முதல் கட்டமாக 43 பேர் பலியானதாக தகவல் வெளியானது. சுனாமியின் வேகம் குறைந்து தண்ணீர் வடியத் தொடங்கியதும் மீட்பு பணியை தொடங்கியபோது ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    நேற்று மாலை நிலவரப்படி சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 222 என்ற நிலையில் இருந்தது. இன்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 281 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது. பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Tsunami #IndonesiaTsunami
     
    இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது. #Tsunami
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தி உள்ளது. மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. அதில் இருந்து புகை வெளியே வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக் குழம்பும் வெளியாகியது.
     
    அப்பகுதி முழுவதும் அதிர்ந்து குலுங்கியதால் சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதற்கிடையே, சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து திடீரென ராட்சத சுனாமி அலைகள் தோன்றியது. சுமார் 65 அடி உயரம் (20 மீட்டர்) அலைகள் எழும்பி கரையை வந்தடைந்தன. இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின.

    அங்கு சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. சாலைகள், ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் பீதி அடைந்த மக்கள் அங்கிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
     
    சுனாமி தாக்குதலில் முதல் கட்டமாக 43 பேர் பலியானதாக தகவல் வெளியானது. பின்னர் உயிர்ச்சேதம் 168 ஆக உயர்ந்தது. மேலும், 750 பேர் காயம் அடைந்தனர். 30 பேரை காணவில்லை.



    இந்நிலையில், இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதலால் பலியானோர் எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

    பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலால் பலியானோருக்கு  ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சுந்தா எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். #Tsunami
    எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சுனாமி அலைகள் தாக்குதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. 745 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். #Tsunami
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை இந்திய பெருங்கடலுடன் இணைக்கும் சுந்தா ஜலசந்தி உள்ளது. மேற்கு ஜாவா தீவில் பல எரிமலைகள் உள்ளன. அவற்றில் அனாக் கிரகடாவ் என்ற மலை கடந்த சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. அதில் இருந்து புகை வெளியே வந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு 9.30 மணிக்கு திடீரென வெடித்து சிதறியது. அதில் இருந்து புகையும், நெருப்புக்குழம்பும் வெளியாகியது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையாக அதிர்ந்து குலுங்கியது. சுட்டெரிக்கும் வெப்பமும் வெளியேறியது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சம் அடைந்தனர்.



    இந்நிலையில் சுந்தா ஜலசந்தி பகுதியில் இருந்து திடீரென ராட்சத சுனாமி அலைகள் தோன்றியது. சுமார் 65 அடி உயரம் (20 மீட்டர்) அலைகள் எழும்பி கரையை வந்தடைந்தன.

    இந்த சுனாமி அலைகள் தெற்கு சுமத்ரா மற்றும் மேற்கு ஜாவா தீவுகளை கடுமையாக தாக்கின. ஜாவா தீவில் பான்டென் மாகாணத்தில் உள்ள பான்டெக்லாங் பகுதியையும், தெற்கு சுமத்ராவில் பாண்டர்லாம்பங் நகரையும் துவம்சம் செய்தன. அங்கு சீறிப்பாய்ந்த சுனாமி அலைகள் நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்களை அழித்து தரைமட்டமாக்கின. ரோடுகள் மற்றும் ஓட்டல்களுக்குள் கடல்நீர் புகுந்தது.

    இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகள் மற்றும் ஓட்டல்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.
    சுனாமி தாக்குதலில் முதற்கட்டமாக 43 பேர் பலியாகினர் என செய்தி வெளியானது. பின்னர் உயிர்ச்சேதம் 168 ஆக உயர்ந்தது. 750 பேர் காயம் அடைந்தனர். 30 பேரை காணவில்லை.



    பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஜாவா தீவில் உள்ள பான்டெக்லாங் பகுதிதான் கடும் பாதிப்புக்குள்ளானது. அங்கு உஜங்குலான் தேசிய பூங்கா மற்றும் பிரசித்தி பெற்ற கடற்கரைகள் உள்ளன. அவை சுனாமி தாக்குதலில் பலத்த சேதம் அடைந்தன. இங்கு மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பான்டெக்லாங்கில் மெட்ரோ டிவி நிலையம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இன்னும் பலரை காணவில்லை. அவர்களை உறவினர்கள் தேடிவருகின்றனர். இதே நிலை பல இடங்களிலும் காணப்படுகிறது. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் அபாயம் உள்ளது.



    கிராகடாவ் எரிமலை வெடித்தபோது நிலநடுக்கமும், கடலுக்கு அடியில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால்தான் சுனாமி அலைகள் உருவாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 430 வீடுகள் மிகவும் சேதம் அடைந்துள்ளன. 9 ஓட்டல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 10 எந்திர படகுகள் உடைந்து நொறுங்கின.
    காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சி குழுமம், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு பங்கேற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடந்தது.
    ராயபுரம்:

    கடலோர பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை மாதிரி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை குழு அறிவுறுத்தியுள்ளது.

    அதன்படி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சென்னை மாநகராட்சி பெருநகர வளர்ச்சி குழுமம், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு பங்கேற்ற சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடந்தது. இன்று காலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் சுனாமி தாக்கப்போவதாக ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

    இது சுனாமி ஒத்திகை என்பதை அறியாத அந்த பகுதி மக்களில் பலர் பதட்டம் அடைந்தனர். பின்னர் ஒத்திகை என்பதை தெரிந்து கொண்டதும் ஆர்வமுடன் அதை கவனித்தனர்.

    இந்த ஒத்திகையின்போது சுனாமி தாக்கினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது எப்படி? உயிரை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பதை தீயணைப்பு படையினர், மருத்துவ குழு, போலீஸ், மின்வாரிய ஊழியர்கள், வருவாய் துறை உள்ளிட்ட 15 துறைகளை சார்ந்த 500-க்கும் மேற்பட்டோர் செய்து காட்டினார்கள்.

    பிளாஸ்டிக் படகு மூலம் மக்களை மீட்பது, காயம்பட்டவர்களை ஸ்ட்ரெக்சர் மூலம் தூக்கிச் செல்வது போன்றவற்றை நடித்து காட்டினார்கள். பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது. காலை 9.30 மணிமுதல் மதியம் ஒரு மணி வரை இந்த ஒத்திகை நடந்தது. இதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

    பிரான்ஸ் நாட்டின் தீவு கூட்டங்களில் ஒன்றான நியூ கலிடோனியாவில் இன்று அடுத்தடுத்து தாக்கிய 7.5 மற்றும் 6.6 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #earthquake #newcaledonia
    நயுமியா:

    தெற்கு பசிபிக் கடல் பிராந்தியத்தில் நியூசிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுமார் 24 ஆயிரம் தீவு கூட்டம் அமைந்துள்ளது. பனைமரங்கள் சூழ்ந்த இந்த தீவு கூட்டத்தில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் இயற்கை எழிலை கண்டு மகிழ்வதற்காக ஏராளமான உள்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் நீர் சறுக்கு விளையாட்டுக்காக இங்கு வந்து செல்கின்றனர்.

    இந்த தீவு கூட்டத்தில் உள்ள முக்கிய பகுதியான நியூ கலிடோனியாவில் (உள்நாட்டு நேரப்படி) மாலை சுமார் 3.30 மணியளவில் 7.5 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
        
    நிலநடுக்கத்துக்கு பிறகு தொடர்ந்து அடிக்கடி பலமுறை நில அதிர்வுகளும் ஏற்பட்டது. கடல் அலைகள் 3 மீட்டருக்கும் அதிகமாக எழும்பி கரையை தாக்கியது. அதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.



    அருகாமையில் உள்ள தீவு நாடுகளான வனாது, பிஜி ஆகியவற்றுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடலோரத்தில் தங்கியிருக்கும் மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    நியூகலிடோனியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதும் நியூசிலாந்திலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அது வாபஸ் பெறப்பட்டது.

    இந்த நிலநடுக்கம் தாக்கிய சுமார் இரண்டு மணிநேரத்துக்கு பின்னர் 6.6 அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியது. இந்த இரு நிலநடுக்கங்களால் ஏற்பட்ட உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய தகவல் எதுவும் வெளியாகவில்லை. #earthquake #newcaledonia
    தமிழகத்தில் கஜா புயலானது 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியது போன்ற மோசமான பேரழிவு என்று தேசிய பேரிடர் மீட்பு குழு துணை கமாண்டன்ட் ராஜன் பாலு தெரிவித்துள்ளார். #GajaCyclone #Tsunami
    சென்னை:

    கஜா புயல் தாக்கிய டெல்டா மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    கஜா புயலின் தாக்கம் குறித்து பேரிடர் மீட்பு குழு துணை கமாண்டன்ட் ராஜன் பாலு அளித்த பேட்டி வருமாறு:-

    கேள்வி:- கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

    பதில்:- சென்னை மற்றும் வட மாவட்டங்களை தாக்கிய வர்தா புயல் போன்றுதான் கஜா புயலும். காற்றின் வேகம் வர்தா புயல் போன்றுதான் இருந்தது. வர்தா புயலால் சேதம் குறைவு. ஆனால் கஜா புயலால் நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கே:- கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு உங்கள் குழு சென்றபோது அங்கே கண்ட காட்சி என்ன?

    ப:- கஜா புயலானது 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கியது போன்ற மோசமான பேரழிவாகும். சுனாமியால் கடலோர மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பலியானார்கள். அதுபோல் இப்போதும் கடலோர மாவட்டங்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளது.

    கே:- கஜா புயல் கரையை கடப்பதற்கு முன், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் 46 பேர் பலியாகி இருக்கிறார்களே, ஏன்?


    ப:- இதில் அரசு எந்திரம் சிறப்பாக செயல்பட்டது. மக்களுக்கு முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்தியது. புயல் கரையை கடக்கும் இடங்களை தெரிவித்து அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றி முகாம்களில் தங்க வைத்து விட்டனர். இல்லையெனில் கடுமையான உயிர்சேதம் ஏற்பட்டு இருக்கும். மற்றபடி 46 பேர் சுவர் இடிந்தும், மரங்கள் முறிந்து விழுந்தும் பலியாகி இருக்கிறார்கள்.

    கே:- இப்போது எத்தனை மீட்பு குழு களத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    ப:- தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில அரசுகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாங்கள் 10 பேரிடர் மீட்பு குழுவை அனுப்பி வைத்தோம். இதில் 8 குழு தமிழக மாவட்டங்களிலும் 2 குழு புதுவையிலும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு உள்ளது. நேற்று வரை எங்கள் குழுவினர் முறிந்து விழுந்த 1,629 மரங்களை அப்புறப்படுத்தினர். 123 மின்சார கம்பங்களை நட்டு 189 கி.மீ. தூரத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

    கே:- இதுபோன்று வெள்ளம், புயல் பாதிப்புகளில் இருந்து சேதங்களை தவிர்ப் பது எப்படி?

    ப:- கடலூர், நாகப்பட்டினம் போன்றவை புயல் தாக்கும் அபாயம் உள்ள பகுதிகள். எனவே இங்கு மின்சார கேபிள்களை பூமிக்கு அடியில் பதிப்பது தான் சிறந்த வழி. இது சேதங்களையும், மனித உயிரிழப்புகளையும் தவிர்க்கும். மேலும் சேதம் அடைந்து மோசமான நிலையில் உள்ள மின்சார கம்பங்கள், வயர்கள் போன்றவற்றையும் காய்ந்து போன மரங்களையும் முன் கூட்டி கண்டுபிடித்து அகற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #Tsunami
    பப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியது. #PapuaNewGuinea #Tsunami #Earthquake
    போர்ட் மோர்ஸ்பை :

    பசிபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில் இன்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

    பிரிட்டனின் கிம்பே தீவில் இருந்து கிழக்கே 125 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ராட்ச அலைகள் ஏற்பட்டதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. #PapuaNewGuinea #Tsunami #Earthquake 
    இந்தோனேசியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2000-ஐ நெருங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #Indonesiaquake
    ஜகார்தா:

    இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிவுநிலைக்கு தள்ளப்பட்டது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.

    சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணியில் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன. தோண்ட தோண்ட பிணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மேலும் பலர் மாயமாகி போயுள்ளனர். அதே நேரத்தில் உள்ளே சிக்கி தவிப்பவர்களும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1944 ஆக அதிகரித்துள்ளது.

    இதுதொடர்பாக, மீட்புப்படை அதிகாரிகள் கூறுகையில், சுமார் 62,359 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது வரை 2,549 பேர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், பல அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்கள் என பல கட்டிடங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை  உயரலாம் என தெரிவித்துள்ளனர். #Indonesiaquake
    இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 1763 ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமல் போன 5 ஆயிரம் பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #Indonesiaearthquake
    ஜகர்தா:

    இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது. இதனால் அந்நகரம் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.

    சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணிகளில் பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.


    இந்நிலையில், இன்றைய நிலவரப்படி 1763 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட பலரோவா மற்றும் பெட்டோபோ நகரங்களில் சுமார் 5 ஆயிரம் மக்களை காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மீட்புத்துறை செய்தி தொடர்பாளர் சுட்டோப்போ புர்வோ நுக்ரோஹோ இன்று அறிவித்துள்ளார்.

    மலையடிவாரங்களிலும், சகதிக்குள்ளும் சிக்கி கிடக்கும் பல பிரேதங்களை மீட்பதில் மிகுந்த சிரமங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #5000missing #Indonesianquakezones #Indonesiaearthquake
    ×