search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trapped"

    கும்பகோணத்தில் டெல்லி பெண் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #delhiwomanmolestation #autodriverarrested

    கும்பகோணம்:

    டெல்லியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடந்த 2-ந்தேதி வங்கி பணி பயிற்சிக்காக கும்பகோணத்துக்கு ரெயில் மூலம் வந்தார்.

    ஓட்டலுக்கு செல்வதற்காக அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறினார். அந்த ஆட்டோ டிரைவர், இளம்பெண் செல்ல வேண்டிய ஓட்டலுக்கு செல்லாமல் நகர் முழுவதும் சுற்றி வந்தார். சந்தேகம் அடைந்த இளம்பெண், ஆட்டோ டிரைவரிடம் கேட்டதற்கு வாக்குவாதம் செய்து செட்டிமண்டபம் பைபாஸ் ரோட்டில் நள்ளிரவில் இறக்கி விட்டு சென்று விட்டார்.

    நள்ளிரவில் தனியாக நடந்து வந்த இளம் பெண்ணை பார்த்ததும் அங்கு நின்ற 2 வாலிபர்களுக்கு சபலம் ஏற்பட்டது. இளம்பெண்ணிடம் நைசாக பேசி, மோட்டார் சைக்கிளில் ஓட்டலுக்கு அழைத்து செல்கிறோம் என்று கூறினர். இதை நம்பி இளம்பெண்ணும் அவர்களுடன் சென்றார்.

    2 வாலிபர்களும், இளம்பெண்ணை ஆள்நட மாட்டமில்லாத இடத்துக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். தனது நண்பர்கள் 2 பேருக்கும் செல்போன் மூலம் பேசி அழைத்தனர். 4 வாலிபர்களும் அந்த இளம் பெண்ணை கற்பழித்தனர்.


    பிறகு 4 பேரும், ஆட்டோவில் இளம்பெண்ணை ஓட்டல் அருகே கொண்டு விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இளம்பெண்ணை கற்பழித்த வழக்கில் கும்பகோணம் பகுதியை சேர்ந்த வசந்த், தினேஷ், புருசோத்த மன், அன்பரசன் ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். இதில் போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய போது காலில் காயம் அடைந்த வசந்த், தினேஷ் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கற்பழிப்பு வழக்கில் கைதான 4 பேருக்கும் ஆஸ்பத்திரியில் ஆண்மை பரிசோதனை நடந்தது.

    இந்த வழக்கில் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி இளம்பெண்ணை அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் யார்? அவர் எதற்காக ஒரு மணி நேரம் ஆட்டோவில் வைத்து சுற்றினார் என்பது புரியாத புதிராக இருந்து வந்தது.

    ஆட்டோ டிரைவர் ஒரு வாரமாக தலைமறைவாக இருந்து போலீசுக்கு டிமிக்கி கொடுத்து கொண்டு இருந்தார். போலீசார், ஆட்டோ டிரைவரை பிடிக்க தீவிரம் காட்டினர்.


    ரெயில் நிலைய பகுதியில் காமராஜர் சாலை, புதிய பஸ் நிலைய பகுதி மற்றும் நகரின் முக்கிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர்.

    கும்பகோணத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    அப்போது ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் இருந்த ஆட்டோ டிரைவர் மட்டும் வித்தியாசமாக தனது ஆட்டோவின் முன் பக்கத்தில் இருந்த பம்பர், ஹாரன், மற்றும் கண்ணாடியை மாற்றி பழைய ஆட்டோவைப் போல் டிசைன் செய்து இருந்தார். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    அந்த ஆட்டோ யாருடையது என்று போலீசார் விசாரித்தனர். பக்கத்து ஊர்களிலும் சென்று ஆட்டோவை தேடினர்.

    அப்போது திருவிடைமருதூர் திருப்பணிபேட்டை யில் அந்த ஆட்டோ நின்று இருந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். அதன் டிரைவர் குருமூர்த்தி (வயது25) என்பவரை நள்ளிரவில் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கும்பகோணம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் போலீசாரிடம் கூறுகையில், “சம்பவத்தன்று ரெயில் நிலையத்தில் சவாரியை இறக்கி விட்டு திரும்பியபோது இளம்பெண் ஆட்டோவை நிறுத்தி ஓட்டலில் விடுமாறு ஆங்கிலத்தில் கூறினார். நானும் அவர் சொன்னபடி ஆட்டோவில் ஏற்றிச் சென்றேன். வழியில் தகராறு ஏற்பட்டதால் நடுவழியில் இறக்கி விட்டதாக ஒப்புக் கொண்டார்.

    கண்காணிப்பு கேமிரா மூலம் ஆட்டோவை போலீசார் தேடுவதை அறிந்து தனது ஆட்டோவின் முன் பகுதியை மாற்றினேன் என்றும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

    இவருக்கு வாலிபர்களுடன் தொடர்பு உள்ளதா? தன்னை நம்பி ஆட்டோவில் ஏறிய பெண்ணை நடுரோட்டில் ஏன் இறக்கி விட்டார்? என்பது குறித்து அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது. #delhiwomanmolestation #autodriverarrested

    தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுவனை போலீசார் மடக்கி பிடித்தனர்.

    சென்னை:

    தேனாம்பேட்டை பகுதியில் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் செல்போன் திருட்டு தொடர்பாக 14 வயது சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்தனர். செம்மஞ்சேரியை சேர்ந்த அந்த சிறுவனிடம் இருந்து 3 செல்போன்களும், ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டன.

    இச்சிறுவனுடன் தொடர்புடைய 2 பேர் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிப்பதற்காக சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    நேற்று காலையில் கழிவறைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற சிறுவன், போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சிறுவனை தேடி வந்தனர். செம்மஞ்சேரி பகுதியில் பதுங்கி இருந்த அவனை நேற்று இரவு போலீசார் மடக்கி பிடித்தனர்.

    தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட அவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்க முடிவு செய்துள்ளனர்.

    கடந்த 2 மாதத்துக்கு முன்னர் சிறுவன் செம்மஞ்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தான். சில நாட்களுக்கு முன்பு வெளியில் வந்த அவன் மீண்டும் கைவரிசை காட்டிய போதுதான் சிக்கியுள்ளான். சாலையோரமாக தூங்குபவர்களிடம் கைவரிசை காட்டுவதை சிறுவன் வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

    திருச்சி விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்த 4 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #trichyairport #goldseized

    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு மலேசியா மற்றும் துபாயில் இருந்து விமானங்கள் வந்தன. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது திருவாரூரை சேர்ந்த அகமதுகான், புதுக்கோட்டையை சேர்ந்த அடைக்கலம், குலசேகர பட்டினத்தை சேர்ந்த அப்துல்காதர் மற்றும் ஒருவர் ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர்கள் ரூ.10.50 லட்சம் மதிப்புள்ள 345 கிராம் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி விமான நிலையம் வழியாக கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சோதனை பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். #trichyairport #goldseized

    கலப்பு திருமணம் செய்த வாலிபரை கொன்ற 3 பேர் சிக்கியுள்ளதால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழசரக்கல் விளை ரகுமத்கார்டனைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). மீனவர். கலப்பு திருமணம் செய்தவர் இவரது மனைவி சகானா. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

    செல்வம் நேற்றுமுன் தினம் இரவு கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். பொருட்கள் வாங்கி விட்டு வீட்டு அருகே வந்தபோது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. 

    அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அந்த கும்பல் செல்வத்தை சரமாரியாக தாக்கினர். இதில் செல்வத்தின் கழுத்து, மார்பு என உடலின் பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடினார். அவரை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. 

    கடைக்கு சென்ற செல்வம் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி சகானா, கணவரை தேடி வெளியே வந்தார். அப்போது செல்வம் ரோட்டில் அரிவாள் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதை பார்த்து  அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போட்டு கதறிஅழுதார். அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து செல்வத்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன் விரோதம் காரணமாக செல்வம் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. செல்வத்தின் நண்பரான ஆஸ்டின் என்பவரை இளங்கடையைச் சேர்ந்த மனோ என்ற உஸ்மான் (30)  தாக்கியுள்ளார். இதையறிந்த செல்வம் உஸ்மானை சந்தித்து அவரை கண்டித்தார். அப்போது ஆத்திரத்தில் உஸ்மானை செல்வமும், ஆஸ்டினும் சேர்ந்து தாக்கினர். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் செல்வத்தை கொலை செய்ய உஸ்மான் திட்டம் தீட்டினார். இதற்காக தனது நண்பர்களான கீழசரக்கல்விளையைச் சேர்ந்த பிரதீப், பிரபு மற்றும் புத்தன்குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரின் உதவியை நாடினார். அவர்கள் உஸ்மானுக்கு உதவ சம்மதித்தனர்.  அவர்கள் திட்டப்படி நேற்று முன்தினம் இரவு செல்வத்தை அவரது வீட்டு அருகிலேயே வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. 

    இதையடுத்து உஸ்மான், பிரதீப், பிரபு, ரமேஷ் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். செல்வம் கொலைக்கு முன்விரோதம் மட்டும் தான் காரணமா? வேறு எதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையில் 4 பேரை தவிர மேலும் யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான உஸ்மான் ரவுடிகள் பட்டியலில் உள்ளார்.
    தேன்கனிகோட்டை அருகே வனவிலங்குகளை வேட்டையாட சென்ற 2 பேர் மின்சார வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தேன்கனிகோட்டை:

    தேன்கனிகோட்டை அருகேயுள்ள நாட்ராம் பாளையம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் கெம்பன் மற்றும் சிவனப்பா. இவர்கள் இருவரும் உறவினர்கள் ஆவர். நேற்று இரவு வனவிலங்குகளை வேட்டையாட அதேபகுதியில் உள்ள பஞ்சள்துணை என்ற கிராமத்திற்கு இவர்கள் சென்று உள்ளனர். 

    அப்போது அங்கு சித்தராமையா என்பவரின் வேர்க்கடலை தோட்டத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் இருவரும் சிக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து மின்சாரம் தாக்கிய அவர்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார வேலியில் சிக்கி 2 பேர் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சேலத்தில் லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மாவட்டம் மேட்டூர், கருப்பு ரெட்டியூர் அருகே உள்ள கும்புரான் காடு பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 34). லாரி டிரைவர். இவர் நேற்று சங்ககிரி அருகே கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னக்கவுண்டனூர் என்ற இடத்தில் லாரியை ஓட்டி வந்து நிறுத்தினார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் ஹரிகரனை மிரட்டி பணத்தை பறித்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி, திருப்பூர் மாவட்டம் கனகையம்பாளையம், கிழக்கு தெருவை சேர்ந்த செல்வகுமார் என்கிற மதன் (30), திருப்பூர் விக்னேஸ்வரர் நகரை சேர்ந்த பூபதி (23), திருச்செங்கோடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த குப்புசாமி என்கிற சதாசிவம் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மதன் மீது தாராபுரம், பழனி டவுன், சூலூர் போலீஸ் நிலையங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது.

    இதுபோல் சங்ககிரி, கலியனூர் பிரிவு பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் முருகேசன் (48)கீழே இறங்கியபோது அவரை 6 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றது. இந்த 6 பேர் கும்பலை சங்ககிரி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    விழுப்புரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் ரவுடி தாதாமணிகண்டன் கூட்டாளிகள் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு என்ற கோதண்டராமன் (வயது 42), ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 21-ந் தேதி மாலை பாபு, மோட்டார் சைக்கிளில் ஆரோவில் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    குயிலாப்பாளையம் அய்யனார்கோவில் அருகே வந்தபோது பின்னால் காரில் வேகமாக வந்த ஒரு கும்பல், மோட்டார் சைக்கிளை வழி மறித்து, நாட்டு வெடிகுண்டை எடுத்து பாபுவை நோக்கி வீசினர். இதில் நிலைகுலைந்த பாபுவை அந்த கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு காரில் தப்பிச்சென்றனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரோவில் போலீசார் விரைந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தகொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பாபு தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. குயிலாப்பாளையத்தில் ரவுடிகள் ராஜ்குமார் தலைமையில் ஒரு கும்பலாகவும், தாதாமணிகண்டன் தலைமையில் மற்றொரு கும்பலாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதில் பாபு, ரவுடி ராஜ்குமார் தரப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாபுவை கொலை செய்தது தாதாமணிகண்டனின் கூட்டாளிகளான குயிலாப்பாளையத்தை சேர்ந்த அருள், பச்சியப்பன், வீரமணி மற்றும் புதுவை கருவடிக்குப்பத்தை சேர்ந்த கவாஸ்கர், பெரிய முதலியார் சாவடியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடிவந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு கவாஷ்கர், ஜெகதீஸ் வரனை போலீசார் பிடித்தனர். அவர்கள் இருவரையும் வானூர் போலீஸ்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டாணா அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நகை கொள்ளையர்கள் 2 பேரை பிடித்தனர்.
    துறையூர்:

    துறையூர் முசிறி பிரிவு ரோடு ரவுண்டாணா அருகில் துறையூர் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாத கார்ஒன்று வந்தது. அதை மடக்கி விசாரனை செய்த போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரனாக பேசினர். இதனால் சந்தேகமடைந்து அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்ததில் அவர்கள் தூத்துகுடி மாவட்டம் குலையன் கரைசலை சேர்ந்த தனசேகரபாண்டியன்(34) மற்றும் பட்டறை சுரேஷ் என்பவரின் மனைவி தனம் பூங்கொடி(28) என்பது தெரிந்தது.

    அவர்களை விசாரித்ததில் கடந்த மாதம் துறையூர் சாமிநாதன் நகரில் மெடிக்கல் உரிமையாளர் பாபு என்பவர் வீட்டில் 40 பவுன் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் விசாரனை செய்ததில் முதல் கட்டமாக 8 பவுன் மற்றும் காரை போலீசார் கைபற்றி குற்றவாளிகள் இருவரையும் துறையூர் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். 

    முக்கிய குற்றவாளியான பட்டறை சுரேஷ் தலைமறைவாக இருப்பதால் அவரை பிடித்தால்தான் மற்ற நகைகளை கைப்பற்றமுடியும் என போலீசார் தெரிவித்தனர்.
    பெரம்பூர்- மாதவரம் நெடுஞ்சாலையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வழிப்பறி கொள்ளையர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் மடக்கி பிடித்தார்.

    பெரம்பூர்:

    செம்பியத்தில் போலீஸ் காரராக பணிபுரிபவர் சிவலிங்கம். இவர் ‘பாஸ் போர்ட்’ விசாரணைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பூர்- மாதவரம் நெடுஞ்சாலையில் 2 வாலிபர்கள் கையில் கத்தியுடன் மோட்டார் சைக்கிளில் சத்தமிட்டபடி சென்றனர்.

    அவர்களை போலீஸ்காரர் சிவலிங்கம் மடக்கினார். ஆனால் அவர்கள் நிற்காமல் அவரது கை விரலில் கத்தியால் வெட்டி விட்டு தப்பி விட்டனர். இதனால் ரத்த காயம் அடைந்த அவர் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் இன்ஸ் பெக்டர் ஜெகநாதன், சப்-இன்ஸ் பெக்டர் பாஸ்கர் ஆகியோருக்கு தகவல் கொடுத்தார்.

    உடனே அவர்கள் அந்த வழியாக வந்த வாலிபர்களை மடக்கி பிடித்தனர். விசாரணை நடத்திய போது அவர்களது பெயர் அஜித் (20), பரத் (19) என தெரியவந்தது. வியாசர்பாடி பி.வி. காலனியை சேர்ந்த இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆவர்.

    இவர்கள் மீது எம்.கே.பி. நகர், வியாசர்பாடி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழிப்பறி கொள்ளை வழக்குகள் உள்ளன. எனவே இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கத்தி, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இவர்கள் கத்தியுடன் சுற்றி திரிந்தது ஏன் என தெரியவில்லை. வழிப்பறி கொள்ளையில் ஈடுபட இருவரும் வந்தனரா? அல்லது கொலை செய்யும் நோக்கத்துடன் சுற்றி திரிந்தனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மானாமதுரை அருகே நடைபெற்ற வாகன சோதனையில் தலைமறைவு குற்றவாளிகள் 3 பேர் சிக்கினர்.

    சிவகங்கை:

    மானாமதுரை அருகே உள்ள மாங்குடி விலக்கில் சிப்காட் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது 3 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தனர். அவர்களை நிற்குமாறு போலீசார் சைகை காட்டினர்.

    ஆனால் அவர்கள் நிற்காமல் வேகமாகச் சென்றனர். எனவே போலீசார் அவர்களை தங்கள் ஜீப்பில் விரட்டினர்.

    சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளை மடக்கி 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரிய கோட்டையைச் சேர்ந்த பிரதாப் (வயது 29), வைரம் பட்டியைச் சேர்ந்த கனிராஜா (26), சிவகங் கையைச் சேர்ந்த சசிகுமார் (21) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவாகி உள்ளதும், ஜாமீனில் வெளி வந்த இவர்கள் அதன் பின்னர் தலைமறைவானதும் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    ×