search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mixed marriage"

    ஆந்திர மாநிலத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்ட பெண் மற்றும் அவரது 2 குழந்தைகளையும் அவரது உறவினர் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #HonourKilling
    நகரி:

    ஆந்திரமாநிலம் அனந்தபுரம் மாவட்ட கார்லதின்ன கிராமத்தை சேர்ந்த சிவய்யா மகள் மீனாட்சி (வயது24). அதே ஊரை சேர்ந்த நல்லப்பா என்னும் வேற்று மத வாலிபரை காதலித்து குடும்பத்தினரை எதிர்த்து 4 ஆண்டுகளுக்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டார்.

    இதையடுத்து மீனாட்சியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை ஒதுக்கி வைப்பதாக அறிவித்து எந்த சுப காரியத்திற்கும் அழைப்பதில்லை. மீனாட்சி- நல்லப்பா தம்பதிகளுக்கு விதேஷ் (வயது3), கீர்த்தி1) குழந்தைகள் பிறந்தனர்.

    குழந்தைகளை பார்த்த மீனாட்சியின் பெற்றோர் மற்றும் சகோதர-சகோதரிகள் மீனாட்சியுடன் பேசுவதும், அவர் குழந்தைகளை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வதும் ஒன்றுசேர ஆரம்பித்தனர். இதை கவுரவக் குறைவாக நினைத்த மீனாட்சியின் சித்தப்பா மகன் ஹரி ஆத்திரமடைந்தார்.

    ஏற்கனவே மீனாட்சி தம்பதியினரை ஊரை விட்டு ஓடிபோய் விட வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி வந்த ஹரிக்கு இது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று கத்தியுடன் வீட்டில் புகுந்து மீனாட்சி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார். மீனாட்சியின் மாமியார் சுப்பம்மா காலை பிடித்து கெஞ்சினார் ஆனாலும் உதரி தள்ளி படுகொலை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு நிதானமாக வீட்டை விட்டு வெளியேறினார்.

    மோட்டார் சைக்கிளில் ஊரைவிட்டு தப்பியோட முயன்ற ஹரியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். #HonourKilling
    கலப்பு திருமணம் செய்த வாலிபரை கொன்ற 3 பேர் சிக்கியுள்ளதால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழசரக்கல் விளை ரகுமத்கார்டனைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 32). மீனவர். கலப்பு திருமணம் செய்தவர் இவரது மனைவி சகானா. வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

    செல்வம் நேற்றுமுன் தினம் இரவு கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார். பொருட்கள் வாங்கி விட்டு வீட்டு அருகே வந்தபோது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. 

    அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அந்த கும்பல் செல்வத்தை சரமாரியாக தாக்கினர். இதில் செல்வத்தின் கழுத்து, மார்பு என உடலின் பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடினார். அவரை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. 

    கடைக்கு சென்ற செல்வம் வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி சகானா, கணவரை தேடி வெளியே வந்தார். அப்போது செல்வம் ரோட்டில் அரிவாள் வெட்டுப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருப்பதை பார்த்து  அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போட்டு கதறிஅழுதார். அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து செல்வத்தை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே செல்வம் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முன் விரோதம் காரணமாக செல்வம் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. செல்வத்தின் நண்பரான ஆஸ்டின் என்பவரை இளங்கடையைச் சேர்ந்த மனோ என்ற உஸ்மான் (30)  தாக்கியுள்ளார். இதையறிந்த செல்வம் உஸ்மானை சந்தித்து அவரை கண்டித்தார். அப்போது ஆத்திரத்தில் உஸ்மானை செல்வமும், ஆஸ்டினும் சேர்ந்து தாக்கினர். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் செல்வத்தை கொலை செய்ய உஸ்மான் திட்டம் தீட்டினார். இதற்காக தனது நண்பர்களான கீழசரக்கல்விளையைச் சேர்ந்த பிரதீப், பிரபு மற்றும் புத்தன்குடியிருப்பைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோரின் உதவியை நாடினார். அவர்கள் உஸ்மானுக்கு உதவ சம்மதித்தனர்.  அவர்கள் திட்டப்படி நேற்று முன்தினம் இரவு செல்வத்தை அவரது வீட்டு அருகிலேயே வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. 

    இதையடுத்து உஸ்மான், பிரதீப், பிரபு, ரமேஷ் ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகிறார்கள். செல்வம் கொலைக்கு முன்விரோதம் மட்டும் தான் காரணமா? வேறு எதாவது காரணம் உண்டா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலையில் 4 பேரை தவிர மேலும் யாருக்காவது தொடர்பு உண்டா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான உஸ்மான் ரவுடிகள் பட்டியலில் உள்ளார்.
    கலப்பு திருமண ஊர்வலத்தில் தலித் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Dalitleaderdead

    பாட்னா:

    பீகார் மாநிலம் முகாபர்பூர் நகரம் அருகில் உள்ள அபி சாப்ரா கிராமத்தில் தலித் பிரிவைச் சேர்ந்த வாலிபருக்கும் இன்னொரு பிரிவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

    அப்போது திடீரென்று அவர்களுக்கு இடையே கலப்பு திருமணம் தொடர்பாக மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் துப்பாக்கியால் சுட்டதில் நவின் மாஞ்சி என்ற 22 வயது வாலிபர் குண்டு பாய்ந்து பலியானார். தலித் பிரிவைச் சேர்ந்த இவர் தான் திருமண ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார். இது தொடர்பாக மணமகனின் மைத்துனர் முகேஷ்குமார் என்பவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

    அவர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் மூண்டது. கார், வேன்கள், இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

    இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்தி சிலர் மணமகளை தாக்கி அவர் அணிந்திருந்த நகைகளையும் திருமண கோஷ்டியினர் அணிந்திருந்த நகைகளையும், செல்போன்களையும் கொள்ளையடித்துச் சென்றனர்.

    இதையடுத்து அந்த கிராமத்துக்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Dalitleaderdead  #tamilnews

    ×