search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "real estate owner murder"

    • சுருளிராஜனுக்கு 2 மனைவிகள் உள்ளனர்.
    • குடும்ப பிரச்சனையில் கொலை நடந்ததா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை மணப்படை வீடு கிராமத்தை சேர்ந்தவர் சுருளிராஜன்(வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று மாலை தனது காரில் கே.டி.சி. நகரில் இருந்து பாளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பாளை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் வருமானவரி துறை அலுவலகம் கடந்து வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் கார் மீது தங்களது மோட்டார் சைக்கிளால் இடித்துள்ளனர். உடனே சுருளிராஜன் இடித்தது யார் என பார்க்க காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.

    இந்த சம்பவம் குறித்து பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஹரிகரன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்.

    மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    சுருளிராஜனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனையில் கொலை நடந்ததா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மேலும் சமீபத்தில் சுருளிராஜனின் மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினர் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதால் இந்த கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

    சேதராப்பட்டு:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு என்கிற ரிலையன்ஸ் பாபு (வயது 42). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 21-ந் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த கொலையில் தொடர்புடைய சங்கர் கணேஷ் உள்பட 8 பேர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.

    மேலும் ரிலையன்ஸ் பாபு கொலையில் முக்கிய குற்றவாளியான தாதா மணிகண்டன் உள்பட 6 பேரை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ரிலை யன்ஸ் பாபு கொலையில் தொடர்புடைய குயிலாப் பாளையத்தை சேர்ந்த வீரமணி (32) என்பவரை நேற்று ஆரோவில் போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே ரிலையன்ஸ் பாபு கொலையில் தொடர்புடைய சங்கர் கணேஷ், காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலையிலும் தொடர்பு உள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    விழுப்புரம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் ரவுடி தாதாமணிகண்டன் கூட்டாளிகள் 2 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு என்ற கோதண்டராமன் (வயது 42), ரியல் எஸ்டேட் அதிபர். கடந்த 21-ந் தேதி மாலை பாபு, மோட்டார் சைக்கிளில் ஆரோவில் பகுதிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    குயிலாப்பாளையம் அய்யனார்கோவில் அருகே வந்தபோது பின்னால் காரில் வேகமாக வந்த ஒரு கும்பல், மோட்டார் சைக்கிளை வழி மறித்து, நாட்டு வெடிகுண்டை எடுத்து பாபுவை நோக்கி வீசினர். இதில் நிலைகுலைந்த பாபுவை அந்த கும்பல் சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு காரில் தப்பிச்சென்றனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரோவில் போலீசார் விரைந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்தகொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். பாபு தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. குயிலாப்பாளையத்தில் ரவுடிகள் ராஜ்குமார் தலைமையில் ஒரு கும்பலாகவும், தாதாமணிகண்டன் தலைமையில் மற்றொரு கும்பலாகவும் செயல்பட்டு வருகின்றனர். இதில் பாபு, ரவுடி ராஜ்குமார் தரப்பை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

    போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாபுவை கொலை செய்தது தாதாமணிகண்டனின் கூட்டாளிகளான குயிலாப்பாளையத்தை சேர்ந்த அருள், பச்சியப்பன், வீரமணி மற்றும் புதுவை கருவடிக்குப்பத்தை சேர்ந்த கவாஸ்கர், பெரிய முதலியார் சாவடியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடிவந்தனர்.

    இந்தநிலையில் நேற்று இரவு கவாஷ்கர், ஜெகதீஸ் வரனை போலீசார் பிடித்தனர். அவர்கள் இருவரையும் வானூர் போலீஸ்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×