என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் ஒருவர் கைது
சேதராப்பட்டு:
புதுவையை அடுத்த தமிழக பகுதியான குயிலாப்பாளையத்தை சேர்ந்தவர் பாபு என்கிற ரிலையன்ஸ் பாபு (வயது 42). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 21-ந் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலையில் தொடர்புடைய சங்கர் கணேஷ் உள்பட 8 பேர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளனர்.
மேலும் ரிலையன்ஸ் பாபு கொலையில் முக்கிய குற்றவாளியான தாதா மணிகண்டன் உள்பட 6 பேரை தேடி வருகிறார்கள்.
இந்த நிலையில் ரிலை யன்ஸ் பாபு கொலையில் தொடர்புடைய குயிலாப் பாளையத்தை சேர்ந்த வீரமணி (32) என்பவரை நேற்று ஆரோவில் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே ரிலையன்ஸ் பாபு கொலையில் தொடர்புடைய சங்கர் கணேஷ், காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலையிலும் தொடர்பு உள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்