என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 5 பேர் கும்பலுக்கு வலைவீச்சு
- சுருளிராஜனுக்கு 2 மனைவிகள் உள்ளனர்.
- குடும்ப பிரச்சனையில் கொலை நடந்ததா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை மணப்படை வீடு கிராமத்தை சேர்ந்தவர் சுருளிராஜன்(வயது 45). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நேற்று மாலை தனது காரில் கே.டி.சி. நகரில் இருந்து பாளை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது பாளை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் வருமானவரி துறை அலுவலகம் கடந்து வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கும்பல் கார் மீது தங்களது மோட்டார் சைக்கிளால் இடித்துள்ளனர். உடனே சுருளிராஜன் இடித்தது யார் என பார்க்க காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது.
இந்த சம்பவம் குறித்து பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஹரிகரன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்.
மேலும் மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்வரி உத்தரவின்பேரில் துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுருளிராஜனுக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்குள் குடும்ப பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த பிரச்சனையில் கொலை நடந்ததா? என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் சுருளிராஜனின் மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு குடும்பத்தினர் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதால் இந்த கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்