search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "trains"

    • மதுரையில் இரட்டைப் பாதை பணிகள் காரணமாக வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கூடல்நகரில் இருந்து புறப்படும்.
    • அடுத்த மாதம் 6-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரையில் இருந்து சென்னைக்கு சொகுசு பஸ்சில் செல்ல ரூ.850 கட்டணம் வசூலிக்கப் படுகிறது. குளிர்சாதன பஸ்சுக்கு ரூ.1,100 வரை கட்டணம் செலுத்த வேண்டும். மதுரையில் இருந்து சென்னைக்கு தனியார் நிறுவனங்கள் சார்பிலும் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் பயணிக்க, ஒருவருக்கு ரூ.1500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    மதுரையில் இருந்து சென்னைக்கு சீரான சாலைகள் இல்லை. பஸ்கள் குண்டும் குழி யுமான சாலைகளில் பயணிக்க வேண்டும். இதனால் பயணிகளுக்கு உடல் வலி, களைப்பு ஏற்படுகிறது. மேலும் மதுரையில் இருந்து சென்னைக்கு பஸ்சில் செல்ல அதிகபட்சம் 11 மணி நேரம் ஆகிறது.

    மதுரை-சென்னை இடை யேயான பஸ் பயணத்துடன் ஒப்பிடுகையில், ரெயில் பயணம் சுலபமானது. முன்கூட்டியே ரிசர்வ் செய்து விட்டால் படுத்துக் கொண்டே பயணம் செய்யலாம். பயண நேரம் குறைவு. கட்டணமும் அதிகமில்லை.

    மதுரையில் இருந்து சென்னைக்கு வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரெயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இது 10 நிறுத்தங்களை உள்ளடக்கியது. சில ரெயில் நிலையங்களில் மட்டுமே நிற்கும். அதுவும் தவிர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அதிவேகமாக செல்லக்கூடியவை. அதிக பட்சம் 7 மணி நேரத்தில் சென்னையை அடைய முடியும். இதன் காரணமாக மதுரையில் வசிக்கும் பொதுமக்கள் சென்னைக்கு ரெயிலில் செல்ல முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்படுகிறது. இது மதியம் 2.30 மணிக்கு சென்னை சேறும். அதேபோல சென்னையில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரைக்கு அதிகாலை 5.30 மணிக்கு வரும்.

    எக்ஸ்பிரஸ் ரெயிலை பொருத்தவரை குறைந்தபட்சம் 1000 பேர் ஒரே நேரத்தில் பயணம் செய்ய முடியும். மதுரை-சென்னைஇடையே தினந்தோறும் இரு மார்க்கங்க ளிலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர்.

    மதுரை-விருதுநகர் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் நடக்கிறது. வருகிற 17-ந் தேதி முதல் மார்ச் மாதம் 3-ந் தேதி வரை மதுரை - சென்னை வைகை விரைவு ரெயில் (12636) மற்றும் பிப்ரவரி 16 முதல் மார்ச் 2 வரை சென்னை - மதுரை வைகை விரைவு ரெயில் (12635) ஆகியவை கூடல்நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல பிப்ரவரி 16 முதல் மார்ச் 3-ந் தேதி வரை மதுரை-சென்னை பாண்டியன் விரைவு ரெயில், பிப்ரவரி 15 முதல் மார்ச் 2 வரை சென்னை - மதுரை பாண்டியன் விரைவு ரெயில் (12637) ஆகியவை கூடல் நகர் - மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து தினந்தோறும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இது மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு சென்னை செல்லும். மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை பாதை பணிகள் காரணமாக, தேஜஸ் ரெயில் நேற்று முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வருகிறது.

    மதுரை ரெயில் நிலை யத்தில் நடைபெறும் இரட்டைப்பாதை பணிகள் எப்போது முடியும் என்று தெரியவில்லை? அதே நேரத்தில் அடுத்த மாதம் 6-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளதால், அதுவரை பயணிகள் வைகை, பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிக்க வேண்டுமென்றால் கூடல் நகருக்கு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    இது பயணிகளுக்கு சற்று இடைஞ்சலை ஏற்படுத்தி யுள்ளது.

    • மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • 28, மார்ச் 2-ந்தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    நெல்லை:

    பயணிகளின் வசதிக்காக ரெயில்களின் வேகத்தை அதிகரிக்கவும், புதிய ரெயில் இயக்கவும் மதுரை ரெயில் நிலையத்தில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    நாளை (திங்கட்கிழமை) முதல் மார்ச் 7-ந்தேதி வரை பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரெயில் (16731), இன்று முதல் மார்ச் 6-ந்தேதி வரை திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரெயில் (16732), வருகிற 16-ந்தேதி முதல் மார்ச் 6 வரை செங்கோட்டை - மதுரை சிறப்பு ரெயில் (06664), செங்கோட்டை - நெல்லை சிறப்பு ரெயில் (06648), நெல்லை - செங்கோட்டை சிறப்பு ரெயில் (06687), வருகிற 17-ந்தேதி முதல் மார்ச் 7 வரை மதுரை - செங்கோட்டை சிறப்பு ரெயில் (06663),

    வருகிற 26-ல் புறப்பட வேண்டிய புதுச்சேரி - கன்னியாகுமரி விரைவு ரெயில் (16861), வருகிற 27-ல் புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - புதுச்சேரி விரைவு ரெயில் (16862), பிப்ரவரி 27, மார்ச் 1-ந்தேதிகளில் புறப்பட வேண்டிய தாம்பரம் - நாகர்கோவில் ரெயில் (22657), 28, மார்ச் 2-ந்தேதி ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - தாம்பரம் விரைவு ரெயில் (22658) ஆகியவை இந்த வழித்தடங்களில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நாகர்கோவில் - கோவை விரைவு ரெயில் (22667), பிப்ரவரி 28, மார்ச் 1, 2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய கோவை - நாகர்கோவில் விரைவு ரெயில் (22628), மார்ச் 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரெயில்கள் (22627/22628),

    மார்ச் 2-ந்தேதி புறப்பட வேண்டிய சென்னை - நாகர்கோவில் விரைவு ரெயில் (12667), மார்ச் 3-ந்தேதி புறப்பட வேண்டிய நாகர்கோவில் - சென்னை விரைவு ரெயில் (12668), மார்ச் 1, 2, 3 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய திருச்செந்தூர் - நெல்லை - திருச்செந்தூர் சிறப்பு ரெயில்கள் (06405/06409), மார்ச் 1, 2, 3, 4 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய ஈரோடு - நெல்லை விரைவு ரெயில் (16845), மார்ச் 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய நெல்லை - ஈரோடு விரைவு ரெயில் (16846) ஆகியவையும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    • மதுரை வழியாக செல்லும் ரெயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    சென்னை எழும்பூர்-ராமேசுவரம் விரைவு ரெயில் (16751), ராமேசுவரம்-எழும்பூர் விரைவு ரெயில் (16752), எழும்பூர்-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (16823), கொல்லம்-எழும்பூர் அனந்தபுரி விரைவு ரெயில் (16824) ஆகியவை வருகிற 6-ந் தேதி முதல் மேற்கண்ட புதிய எண்களுடன் இயக்கப்படும்.

    இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.
    • கோவை-கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.

    திருப்பூர்:

    சேலம் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 3-ந் தேதிகளில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பி–ரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 2.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் கோவை-சென்னை சென்ட்ரல் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 3.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல்-கோவை சதாப்தி எக்ஸ்பி–ரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 3.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.

    கோவை-கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 5.45 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. மேலும் கே.எஸ்.ஆர்.பெங்களூரு-கோவை செல்லும் உதய எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி மதியம் 2.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.

    கே.எஸ்.ஆர். பெங்களுரு-எர்ணாகுளம் எக்ஸ்பி–ரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 6.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர். பெங்களுரு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் 3-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கார்த்திகை மாதம் என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாகும்.
    • ரெயில் செல்லும் வழித்தடங்களில், முக்கியமானதாக கிணத்துக்கடவு பகுதியும் அமைந்துள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் தங்கி வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது வெளியூர் பயணங்களுக்கு அதிக அளவில் ெரயில் பயணத்தையே மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் கார்த்திகை மாதம் தொடங்கி உள்ள நிலையில் திருச்செந்தூருக்கு சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கார்த்திகை மாதம் என்றாலே முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாகும். இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் திருச்செந்தூருக்கு சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் திருப்பூரில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி ெரயில் சேவை இல்லாததால் இரண்டு ெரயில்கள் மாறி மாறி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது, இதனால் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பல ஆண்டுகளாக திருப்பூர் வழியாக திருச்செந்தூருக்கு ெரயில் சேவை இயக்க கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.ஆனால் தற்போது வரை அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு பண்டிகை காலங்களில் சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது கூட சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் ஹைதராபாத், சென்னை போன்ற பகுதிகளில் இருந்து திருப்பூர் வழியாக சபரிமலைக்கு சிறப்பு ெரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

    அதே போன்று கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது திருப்பூர் வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ெரயில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் உடுமலை-பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பொள்ளாச்சி - திண்டுக்கல் ெரயில்பாதை அகல ெரயில்பாதையாக மாற்றும் பணி கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி 2017ல் நிறைவடைந்தது.ஆனால் மீட்டர்கேஜ் காலத்தில் பொள்ளாச்சி வாயிலாக இயக்கப்பட்ட கோவை- ராமேஸ்வரம், கோவை- தூத்துக்குடி, கோவை-கொல்லம், கோவை - திண்டுக்கல் போன்ற ெரயில்கள் இயக்கப்படாமல் உள்ளன.

    இந்த ெரயில்களை இயக்க வேண்டும் என, ரெயில்வே பயணிகள் நலச்சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உட்பட பலரும், அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித பலனும் இல்லை.கொரோனா பரவலுக்கு முன் காலை மற்றும் இரவு நேரங்களில், கோவை மாவட்ட பயணிகள் வசதிக்காக கோவை-பொள்ளாச்சி மற்றும் பொள்ளாச்சி - கோவை ெரயில்கள் இயக்கப்பட்டன. அவை இப்போது இயக்கப்படுவதில்லை.

    இதனுடன் கோவை, பொள்ளாச்சி வழியாக டெல்டா மாவட்டங்களை இணைக்கும் மேட்டுப்பாளையம் - தாம்பரம், தீபாவளியை முன்னிட்டு இயக்கப்பட்ட திருநெல்வேலி, டானாபூர், வாரம் ஒரு முறை இயக்கப்படும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ஆகிய ெரயில்களை, தினசரி ெரயில்களாக இயக்க வேண்டும்.

    பாலக்காடு - திருநெல்வேலி செல்லும் பாலருவி விரைவு ெரயிலை, பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.

    மேலும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், வேலை நிமித்தமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பயணிகள் வசதிக்காக இயக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - கோவை மெமூ ெரயிலையும், பொள்ளாச்சி வரை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

    இவற்றுடன் திருவனந்தபுரம் - மதுரை வரை இயக்கப்படும் அமிர்தா விரைவு ெரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்கவும், பொள்ளாச்சி வழியாக கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ெரயிலை இயக்கவும், ெரயில்வே வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. அந்த பணிகள் கூட இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.

    அதேபோல், அமிர்தா ரெயிலின் மூன்று படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை, கொரோனாவுக்கு முன்பிருந்ததை போலவே அமரும் வசதி கொண்ட பெட்டிகளாக மாற்றி இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    இவ்வாறு உடுமலை, பொள்ளாச்சி பகுதி மக்களின் ரெயில்வே சேவை குறித்த கோரிக்கைகள் ஏராளமாக உள்ள நிலையில் அதை பாலக்காடு கோட்ட நிர்வாகமும், தெற்கு ெரயில்வேயும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன.தெற்கு ெரயில்வே நிர்வாகம், இந்த கோரிக்கைகளில் கவனம் செலுத்தி பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகல ெரயில்பாதையாகவும், மின்மயமாகவும் மேம்படுத்தப்பட்டுள்ள உடுமலை, பொள்ளாச்சி ெரயில் வழித்தடத்தில், மக்கள் எதிர்பார்க்கும் ெரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ெரயில்வே ஆர்வலர்கள் பிரதமருக்கு மனுவாக அனுப்பியுள்ளனர்.

    இது குறித்து ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    கோவை - பொள்ளாச்சி ரெயில் காலை, 5:45 மணிக்கு கோவையில் புறப்பட்டு, பொள்ளாச்சி வரும். அதேபோல் இரவு 8:30 மணிக்கு பொள்ளாச்சியில் புறப்பட்டு கோவை செல்லும். இதனால் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் பகுதி பயணிகளுக்கு செம்மொழி, ஆலப்புழா மற்றும் நீலகிரி ஆகிய விரைவு ெரயில்களை பிடிக்கவும், பாலக்காடு - திருச்செந்தூர் ெரயிலை பிடிக்கவும், இணைப்பு ெரயிலாக இருந்தது.அதேபோல் பொள்ளாச்சி - கோவை ெரயில், சென்னை, நீலகிரி, சேரன், பெங்களூரு, யஷ்வந்த்பூர் ஆகிய ெரயில்களுக்கு இணைப்பு ெரயிலாக இருந்தது.கொரோனா பரவலின்போது இந்த இரண்டு ெரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு, இந்த ெரயில்களை மீண்டும் இயக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து, திருநெல்வேலி வரை வாராந்திர விரைவு ெரயில் இயக்கப்படுகிறது. இந்த ெரயில், வெள்ளிக்கிழமைகளில் இரவு 7:45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் புறப்பட்டு மறுநாள் காலை 7:45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

    ெரயில் செல்லும் வழித்தடங்களில், முக்கியமானதாக கிணத்துக்கடவு பகுதியும் அமைந்துள்ளது. ஆனால், கிணத்துக்கடவில் இந்த ெரயில் நிற்காததால், இப்பகுதி மக்கள் பொள்ளாச்சி அல்லது போத்தனூர் சென்று, இந்த ெரயிலில் பயணிக்க வேண்டியுள்ளது.தெற்கு ரயில்வே நிர்வாகம், திருநெல்வேலி ெரயிலை கிணத்துக்கடவில் நிறுத்தி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மதுரை வழியாக மேலும் 2 சிறப்பு ெரயில்கள் 25-ந் தேதி இயக்கப்படுகிறது
    • இந்த ரெயில்கள் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டையில் நின்று செல்லும்.

    மதுரை

    நாகர்கோவில்- பெங்களூரு, கொச்சுவேலி- தாம்பரம் இடையே மேலும் 2 தீபாவளி சீசன் சிறப்பு ரெயில்களை இயக்குவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    நாளை மறுநாள் (25-ந் தேதி) நாகர்கோவிலில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்தநாள் காலை 9.20 மணிக்கு பெங்களூர் செல்லும். மறு மார்க்கத்தில் பெங்களூரில் இருந்து வருகிற 26-ந் தேதி காலை 10.15 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்தநாள் இரவு 12.20 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.

    இந்த ரெயில்கள் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டையில் நின்று செல்லும்.

    கொச்சுவேலியில் இருந்து நாளை மறுநாள் (25-ந் தேதி) காலை 11.40 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் செல்லும்.

    மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி செல்லும். இந்த ரெயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • தீபாவளியை கொண்டாட மக்கள் இன்றிலிருந்தே சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
    • பண்டிகை காலத்தை முன்னிட்டு தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வரும் 24-ந்தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வந்தவண்ணம் உள்ளனர். இதனால் பேருந்து மற்றும் ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது.

    தீபாவளிக்கு முந்தைய சனி, ஞாயிறு (22, 23-ந்தேதி) விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. எனவே, சென்னையில் தங்கியிருந்து வேலை செய்யும் மக்கள் இன்றிலிருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.


    சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் ஏராளமானோர் எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு வருகின்றனர். பேருந்துகளில் இடம் கிடைக்காதர்வர்களின் தேர்வு ரெயில்தான். இதனால், எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட மிக அதிகமாகவே உள்ளது. பலர் நின்றுகொண்டே பயணிப்பதை பார்க்க முடிகிறது.

    பண்டிகை காலத்தை முன்னிட்டு தாம்பரம், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், எழும்பூரில் வழக்கமாக இயக்கப்படும் ரெயில்களுடன் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டு உள்ளன. பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில், ரெயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் சாதாரண உடையில் ஆங்காங்கே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ராமேசுவரம் பகுதிக்கு சிறப்பு ெரயில்களை இயக்க வேண்டும் என மாவட்ட வா்த்தக சங்கத் தலைவா் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்தப் பகுதி மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றமாக உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வா்த்தக சங்கத் தலைவா் ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புண்ணிய ஸ்தலமான ராமேசு வரத்துக்கு ஆண்டு தோறும் கோடிக்க ணக்கான பக்தர்கள், சுற்றுலா பய ணி கள் வந்து செல்கின்றனா். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம், இது தவிர தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ராம நாதபுரம் மாவட்ட தொழி லாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் தீபாவளி பண்டி கையை கொண்டாட சொந்த ஊர் திரும்பும் போது பல்வேறு இடை யூறுகளை சந்தித்து வரு கின்றனர். ஆண்டு தோறும் அதிக கட்டணம் கொடுத்து ஆம்னி பஸ்களில் வந்து சேர வேண்டிய நிலையில் உள்ளனர், சில சமயங்க ளில் நேரடி பஸ் இல்லாத நிலையில் பல்வேறு வழித்த டங்கள் வழியாக சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.

    இதனால் பண விரயம், மன உளைச்சல் ஏற்பட்டு பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையை போக்க தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ெரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ெரயில்வே அறிவித்துள்ளது. ஆனால், ராமநாதபுரம், ராமேசுவரம் பகுதிக்கு சிறப்பு ெரயில்கள் அறிவிக்கப்படவில்லை. இந்தப் பகுதி மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றமாக உள்ளது.

    ஆகவே, தீபாவளி பண்டிகை மற்றும் அமாவாசை போன்ற விசேஷ நாள்களில் ராமநாதபுரம் பகுதிக்கு சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • இரண்டு ஏ.சி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன.
    • 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் வரும் 22-ந் தேதி முதல் இணைத்து இயக்கப்படும்.

    கோவை

    கோவை வழியாக இயக்கப்படும் 4 எக்ஸ்பிரஸ் ெரயில்களில் கூடுதலாக இரண்டு ஏ.சி பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த சேலம் கோட்ட ெரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம்-மும்பை சத்ரபதி சிவாஜி ெரயில் நிலையம் (சி.எஸ் எம்.டி) இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயிலில் (எண்:16332), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் இன்று முதல் இணைத்து இயக்கப்படுகிறது.

    இதேபோன்று மும்பை சி.எஸ்.எம்.டி-திருவனந்தபுரம் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ெரயிலில் (16331), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் நாளை முதல் இணைத்து இயக்கப்படுகிறது.

    மேலும், கன்னியாகுமரி-புனே இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ெரயிலில் (எண்:16382), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் வரும் 22-ந் தேதி முதல் இணைத்து இயக்கப்படும்.

    புனே-கன்னியாகுமரி இடையிலான தினசரி எக்ஸ்பிரஸ் ெரயிலில் (எண்:16381), கூடுதலாக இரண்டு 3-ம் வகுப்பு ஏ.சி பெட்டிகள் வரும் 23-ந் தேதி முதல் இணைத்து இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருச்சி-மானாமதுரை பயணிகள் ரெயில் இரு மார்க்கங்கங்களிலும் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதிகள் வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிவகங்கை-மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
    • திண்டுக்கல்-அம்பாத்துரை இடையே பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கோவை-நாகர்கோவில் விரைவு ரெயில் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.

    மதுரை:

    மானாமதுரை-மேல கொன்னகுளம், திண்டுக்கல்-அம்பாத்துரை ராஜபாளையம்-சங்கரன்கோவில், சூடியூர்-பரமக்குடி ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயில் நாளை (16-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் ராமேசுவரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக, மதியம் 1.30 மணிக்கு புறப்படும். அதேபோல மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பதில் மதியம் 1.10 மணிக்கு புறப்படும்.

    திருச்சி-மானாமதுரை பயணிகள் ரெயில் இரு மார்க்கங்கங்களிலும் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதிகள் வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிவகங்கை-மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

    திண்டுக்கல்-அம்பாத்துரை இடையே பராமரிப்பு பணி காரணமாக நாளை (16-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை கோவை-நாகர்கோவில் விரைவு ரெயில் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.

    இதே போல சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய், சனிக்கிழமைகளில் 70 நிமிடம் தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் அந்த 3 நாட்களும் குருவாயூர் விரைவு ரெயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி பாசஞ்சர், இணைப்பு ரெயிலாக செயல்படாது.

    ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரெயில் பாதை பலப்படுத்தும் பணி நடக்கிறது. மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரெயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் மதுரை பயணிகள் ரெயில் ஆகியவை நாளை (16-ந் தேதி) முதல் வருகிற 30-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    கோவில்பட்டியில் வருகிற 21, 22-ந் தேதிகளில் பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரெயில் இரு மார்க்கங்களிலும் சாத்தூர்-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    குமாரபுரம் பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 28, 29-ம் தேதிகளில் பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் இரு மார்க்கங்களிலும் கோவில்பட்டி-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதுவும் தவிர இந்த ரெயில்கள் வருகிற 30-ம் தேதி மதுரை-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் பாலக்காடு செல்லும் ரெயில், மதுரையில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும்.

    தென்காசி-செங்கோட்டை இடையே ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடப்பதால் வருகிற 20-ந் தேதி முதல் 30-ந் தேதி தேதிகள் வரை மதுரையில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரெயில் மற்றும் நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரெயில் தென்காசி-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • ரெயில்களில் கூட்டநெரிசலுடன் பயணிகள் பயணம் செய்கின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி என 2 சந்திப்பு ரெயில் நிலையங்கள் உள்ளன. இங்கிருந்து சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்ல நேரடி ரெயில் வசதி இல்லை. புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரத்தில் இருந்து சென்னை செல்ல 2 ரெயில்கள் மட்டுமே தினசரி சேவையாக உள்ளது.

    இந்த 2 ரெயில்களை நம்பி ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்ட பயணிகள் உள்ளனர். இதன் காரணமாக இந்த ரெயிலில் தினமும் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஏராளமான பயணிகள் ஆபத்தான நிலையில் சரக்கு பெட்டிகளில் ஏறி பயணம் செய்கின்றனர்.

    ரெயில் நிலையங்கள் இல்லாத ஊர்களான இளையான்குடி, கமுதி, சாயல்குடி, பார்த்திபனூர் ஆகிய பகுதிகளில் இருந்து பயணிகள் சென்னை செல்ல மானாமதுரை ரெயில் நிலையம் வந்து சென்னை-திருச்சி செல்லும் ரெயில்களில் கூட்டநெரிசலுடன் பயணம் செய்கின்றனர்.

    சென்னை-ராமேசுவரம் மார்க்கத்தில் பல ஆண்டுகளாக கூடுதல் ரெயில்களோ, பகல் நேரசிறப்பு ரெயில்களோ இதுவரை இயக்கப்படவில்லை. பயணிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில் சிவகங்கை மாவட்ட பயணிகள் வசதிக்காக கூடுதல் ரெயில்களை சென்னை மார்க்கத்தில் இயக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • மதுரை, விருதுநகர், சாத்தூர் வழியாக நெல்லை-ஈரோடு இடையே ரெயில்கள் அடுத்த மாதம் இயக்கப்படுகிறது.
    • இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    நெல்லை-ஈரோடு இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது.

    அதன்படி ஈரோட்டில் இருந்து வருகிற 11-ம் தேதி முதல் மதியம் 1.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், இரவு 9.45 மணிக்கு நெல்லை செல்லும்.

    மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து வருகிற 13-ம் தேதி முதல் காலை 6.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மதியம் 2.30 மணிக்கு ஈரோடு செல்லும்.

    இந்த ரெயில்கள் கொடுமுடி, புகலூர், கரூர், வெள்ளியணை, எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், துலுக்கப்பட்டி, சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி யில் நின்று செல்லும்.

    அதேபோல மயிலாடு துறை-திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

    அதன்படி மயிலாடுதுறையில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மாலை 4 மணிக்கு திண்டுக்கல் செல்லும். மறுமார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து வருகிற 12-ம் தேதி முதல் காலை 11.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மாலை 4 மணிக்கு மயிலாடுதுறை செல்லும்.

    இந்த ரெயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×