search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை வழியாக மேலும் 2 சிறப்பு ெரயில்கள்
    X

    மதுரை வழியாக மேலும் 2 சிறப்பு ெரயில்கள்

    • மதுரை வழியாக மேலும் 2 சிறப்பு ெரயில்கள் 25-ந் தேதி இயக்கப்படுகிறது
    • இந்த ரெயில்கள் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டையில் நின்று செல்லும்.

    மதுரை

    நாகர்கோவில்- பெங்களூரு, கொச்சுவேலி- தாம்பரம் இடையே மேலும் 2 தீபாவளி சீசன் சிறப்பு ரெயில்களை இயக்குவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    நாளை மறுநாள் (25-ந் தேதி) நாகர்கோவிலில் இருந்து இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்தநாள் காலை 9.20 மணிக்கு பெங்களூர் செல்லும். மறு மார்க்கத்தில் பெங்களூரில் இருந்து வருகிற 26-ந் தேதி காலை 10.15 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்தநாள் இரவு 12.20 மணிக்கு நாகர்கோவில் செல்லும்.

    இந்த ரெயில்கள் நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டையில் நின்று செல்லும்.

    கொச்சுவேலியில் இருந்து நாளை மறுநாள் (25-ந் தேதி) காலை 11.40 மணிக்கு புறப்படும் ரெயில், அடுத்த நாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் செல்லும்.

    மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி செல்லும். இந்த ரெயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×