search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "training camp"

    • 195 பேருக்கு 5 கட்டங்களாக இந்த பயிற்சி நடந்தது
    • நீரின் மூலம் பரவும் நோய்கள் குறித்தும், சுகாதாரமான முறையில் குடிநீரை பயன்படுத்துவது அவசியம்

    திருப்பத்தூர்:

    கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 39 ஊராட்சிகளுக்குட் பட்ட பொதுமக்களுக்கு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மினிடேங் போன்றவற்றின் மூலமாகவும், ஜல்ஜீவன் திட்டத் தின் மூலமாகவும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமை வட் டார வளர்ச்சி அலுவலர் நா.விநாயகம் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரிய நிர்வாக பொறியாளர் திருமால், பயிற்சியின் அவசியம், நீரின் மூலம் பரவும் நோய்கள் குறித்தும், சுகாதாரமான முறையில் குடிநீரை பயன்படுத்துவ தன் அவசியம் பற்றியும் பேசினார்.

    துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகராசி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் தேசிங்குராஜா, உதவி பொறியாளர் கலைப்பி ரியா, மஞ்சுநாதன், ராஜா ஆகியோர், பம்ப் ஆபரேட்டர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், வார்டு உறுப்பினர் ஆகியோ ருக்கு பயிற்சி அளித்து கையேடு வழங்கினர். முடிவில்வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு நன்றி கூறினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கிராம குடிநீர் திட்டம் சார்பில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் கிராமக் குடிநீர் மற்றும் சுகாதாரக் குழு உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஊராட்சிக்கும் 5 பேர் வீதம் 39 ஊராட்சிகளுக்கு 195 பேருக்கு 5 கட்டங்களாக இந்த பயிற்சி நடைபெற உள்ளது.

    • கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினர்.
    • 2-ம் ஆண்டு மாணவிகள் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பூ, இனிப்பு, பேனா வழங்கி வரவேற்றனர்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் டி.டி.என்.கல்விக்குழுமம் சார்பில் மரியா கலை மற்றும் அறிவி யல் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

    இக்கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கு மாணவிகள் சேர்ந்துள்ளனர். இம் மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி மற்றும் வழிகாட்டுதல், புத்தொளி பயிற்சி முகாம் நடைபெற்றது.

    வள்ளியூர் புனித பாத்திமா திருத்தல பங்கு தந்தை ஜாண்சன் அடிகளார் ஜெபம் செய்து ஆசியுரை வழங்கினார். கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலர் ஹெலன் லாரன்ஸ் ஆகியோர் தலைமை தாங்கி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினர்.

    டி.டி.என்.கல்விக்குழு மங்களின் நிறுவனர் டி.லாரன்ஸ் முன்னிலை வகித்தார். டி.டி.என்.கல்விக் குழுமங்களின் நிர்வாகி ஸ்டேன்லி வரவேற்று பேசி னார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக புல முதல்வர் ராஜலிங்கம், மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் சுப்பிரமணிய பிள்ளை ஆகியோர் புத்தொளி பயிற்சி உரையாற்றினர்.

    டி.டி.என்.கல்விக்குழு நிர்வாகி ஒலிவா, சமூகரெங்கபுரம் ஹெடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்ஸன், நேரு நர்ஸிங் கல்லூரி முதல்வர் மார்க்க ரெட் ரஞ்சிதம் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தி வரவேற்று பேசினர்.

    முன்னதாக 2-ம் ஆண்டு மாணவிகள் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு பூ, இனிப்பு, பேனா வழங்கி வரவேற்றனர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் நன்றி கூறினார். ஏற்பாடு களை கல்லூரி பேராசிரியைகள் செய்திருந்தனர்.

    • உணவு வணிகர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பல்லடம் தனியார் உணவகத்தில் நடைபெற்றது.
    • பயிற்சி முடிவில் அனைவருக்கும் மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பல்லடம்:

    தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை மற்றும் மத்திய அரசின் ஏஜென்சி ஆகியவை இணைந்து நடத்திய உணவு வணிகர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பல்லடம் தனியார் உணவகத்தில் நடைபெற்றது. பல்லடம் உணவு பாதுகாப்பு அலுவலர் கேசவராஜ் பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியில் ஓட்டல் உரிமையாளர்கள்,மெஸ் உரிமையாளர்கள்,பேக்கரி உரிமையாளர்கள்,உணவு பொருட்கள் விநியோகி ஸ்தர்கள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட உணவு வணிகர்கள் கலந்து கொண்டனர்.இந்த பயிற்சியில் தன் சுத்தம் பேணுதல், பராமரிப்பு, உணவு கையாளும் முறைகள், பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் வகைகள், உணவுப் பொருளில் ஏற்படக்கூடிய கலப்படம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் உணவு பாதுகாப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சி முடிவில் அனைவருக்கும் மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒவ்வொரு உணவு வணிகரும் ஒவ்வொரு உணவு கையாளுபவர்களும் பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்ற நபரை பணிக்கு அமர்த்த வேண்டும். உணவு உற்பத்தி அல்லது வணிகம் மேற்கொள்ளும் அனைத்து உணவு வணிகர்களும் கட்டாயம் மத்திய அரசால் வழங்கப்படும் ஒருநாள் உணவு பாதுகாப்பு தொடர்பான பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    • முகாமிற்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
    • ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் முகாமில் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் வட்டார ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் தயாரித்தல் தொடர்பான முதற்கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன், துணை சேர்மன் சந்திரமோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், ரவிச்சந்திரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், கனகராஜ், முனியராஜ், சரஸ்வதி, நெல்கட்டும்செவல் ஊராட்சிமன்றத் தலைவர் பாண்டியராஜா, விஸ்வ நாதபேரி ஊராட்சிமன்றத் தலைவர் ஜோதி மணிகண்டன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சரவணன், வாசுதேவநல்லூர் ஒன்றிய அலுவலர்கள், வேளா ண்மைத்துறை, வனத்துறை, மகளிர் மேம்பாட்டுத்துறை அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிளை செயலாளர்கள், மகேந்திரன், ஸ்டாலின், மணிகண்டன், விக்கி, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
    • விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    மதுரை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மாவட்ட பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் 15 நாட்கள் நடந்தது. இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து.

    கையுந்துபந்து, வளைகோல்பந்து, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் இலவசமாக நடத்தப்பட்டது. பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு காலை முட்டையும், மாலையில் பிஸ்கெட், கண்டல் வழங்கப்பட்டது. பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.

    மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, வரவேற்றார். 6-வது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர் முருகன், மதுரை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் கண்ணன், மண்டல இந்திய வங்கி முதன்மை மேலாளர் அண்ணாமலை, இந்தியன் வங்கியின் மாவட்ட கோர்ட்டு கிளை மேலாளர் பாலகுமார், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரகாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று 202 வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    • நாளை காலை கோடை விடுமுறை கால பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.
    • காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சிகள் நடைபெறும்.

    நெல்லை:

    நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் கோடை விடுமுறை காலத்தினை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு கோடை விடுமுறை கால பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.

    இப்பயிற்சி முகாமில் ஓவிய பயிற்சி, கலை பயிற்சி ,கழிவுகளில் இருந்து கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி, களிமண்ணில் பொம்மைகள் செய்யும் பயிற்சி, காகிதக்கலை பயிற்சி, பேச்சுக்கலை பயிற்சி, எழுத்துக்கலை பயிற்சி, கதை சொல்லல் பயிற்சி, யோகா பயிற்சி, சிலம்பம் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் நடைபெற உள்ளன. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இப்பயிற்சிகள் நடைபெறும். வருகிற 31-ந்தேதி வரை இப்பயிற்சி முகாம் நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 75024 33751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

    • காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 வரையும் பயிற்சியளிக்கப்படும்.
    • இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் அனை வருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்ட ரங்கத்தில் 8-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை கோடை கால பயிற்சி முகாம் நடை பெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். தடகளம், கைப்பந்து, கபடி, கால்பந்து, வாலிபால், மல்லர்கம்பம், கூடைப்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டு களில் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி முகாமில் 10 வயதிற்கு மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். காலை 6 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6.30 வரையும் பயிற்சியளிக்கப்படும்.

    இந்த பயிற்சி முகாமில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வர்கள் தங்கள் பெயர்களை 6381799370 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். அல்லது 8-ந் தேதி அன்று நேரடியாக மாவட்ட விளை யாட்டரங்கம், அரசு கலை கல்லூரி அருகில் கீழ்பெரும் பாக்கம், விளையாட்டு மைதானத்தில் காலை 7.30 மணிக்கு நடை பெறும் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பயன்பெற லாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் அனை வருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்படும். எனவே இந்த கோடை கால விடுமுறையை பெருமளவில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர் பழனி தெரிவித்துள்ளார்.

    • சிவகங்கை அருகே தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
    • சுயஉதவி குழுவின் உரிமையாளர் நிர்மலா கலந்துகொண்டு சுயதொழில் திட்டமிடல் குறித்து பேசினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரி, தொழில்முனைவோர் மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழகம் இணைந்து கல்லூரி படிப்பை முடித்த மாணவ-மாணவிகளுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகாமை நடத்தியது. ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்றார். வேதியியல் துறைத்தலைவர் ஜபருல்லா கான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக திருப்புவனம் சமயபுரத்தாள் சுயஉதவி குழுவின் உரிமையாளர் நிர்மலா கலந்துகொண்டு சுயதொழில் திட்டமிடல் குறித்து பேசினார். சிவகங்கை மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் தேவராஜ், மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்து விளக்கினார். சிவகங்கை, மகளிர் திட்ட உதவி மேலாளர் ராஜ்குமார், பொருட்களை சந்தைப்படுத்துதல் உத்தி குறித்து பேசினார். இதில் இறுதியாண்டு மாணவ-மாணவிகள் 75 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பழைய மாணவர்-தொழில்முனைவோர் ராமர் நன்றி கூறினார்.

    • மதுரையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.
    • இந்த முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறும்.

    மதுரை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விளையாட்டில் ஆர்வமுள்ள பள்ளி மாணவ-மாணவி களுக்கான 2023-ம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான இருப்பிடமற்ற கோடை கால பயிற்சி முகாம் டாக்டர்.எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் (ரேஸ்கோர்ஸ் மைதானம்) வருகிற 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.

    இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் 1-ந் தேதி அன்று காலை 6 மணிக்கு தங்களது பெயர்களை பயிற்சி முகாம் நடைபெறும் டாக்டர்.எம்.ஜி.ஆர்.விளையாட்டு அரங்கில் பதிவு செய்து கொள்ள வேண்டும். குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம்.

    இதில் தடகளம், கையுந்து பந்து, கூடைபந்து, கால்பந்து, ஹாக்கி ஆகிய விளையாட்டுகளுக்கு இருபாலருக்கும், பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    மேலும் கைப்பந்து மாணவ-மாணவிகள், ஜிம்னாஸ்டிக் மாணவ, மாணவிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகள பயிற்சி முகாமும் நடைபெறும். மேசைப்பந்து, இறகுப்பந்து, நீச்சல் ஆகிய விளையாட்டுகளில் கட்டணத்துடன் பயிற்சி அளிக்கப்படும். விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி பெறலாம்.

    இப்பயிற்சி முகாம் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடைபெறும். பயிற்சி முகாம் முடிவில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
    • மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற வளர்ச்சி கழக தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    மாமல்லன் சிலம்பம் மற்றும் நாடடுப்புறக்கலை வளர்ச்சி கழகம் சார்பில் 21-ம் ஆண்டு கோடைக்கால இலவச சிலம்ப பயிற்சி முகாம் பூரணாங்குப்பம் மாமல்லன் சிலம்ப பயிற்சி கூடத்தில்  தொடங்கியது.மாமல்லன் சிலம்பம் மற்றும் நாட்டுப்புற வளர்ச்சி கழக தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார்.

    செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார், ஆலோசகர் வெற்றிவேல் வரவேற்றார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்துகொண்டு சிலம்ப பயிற்சி முகாமினை தொடங்கி வைத்தார். அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், மாமல்லன் சிலம்ப நிர்வாகிகள் ஸ்டாலின், ரவிக்குமார் சியாமளா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான நுண்கலை பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
    • தினசரி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த பயிற்சி நடைபெறும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை மூலம் செயல்படும், நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்றத்தின் சார்பாக நாமக்கல் கோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் ஆக்கப்பூர்வமான நுண்கலை திறமைகளை வெளிக்கொணரும் வகையில், வருகிற மே மாதம் 1-ந்தேதி முதல் மே 15-ந் தேதி வரை, இலவச நுண்கலை பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

    தினசரி காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த பயிற்சி நடைபெறும். முகாமில், தற்காப்புக்கலை, யோகா, சிலம்பம், கராத்தே, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் மற்றும் கைவினை ஆகிய நுண்கலை பயிற்சிகள் வழங்கப்படும்.

    பயிற்சியில் சிறப்பாக பங்கேற்று திறமையை வெளிப்படுத்தும் குழந்தைகள் அரசு சார்பில் நடைபெறும், மாநில அளவிலான கலை பயிற்சி முகாமிற்கு அனுப்பி வைக்கப்படு வார்கள். முகாமில் கலந்து கொள்ளும் குழந்தைகளு க்கு சான்றிதழ் வழங்கப்படும்.

    ஜூன் 2023 மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை வாரந்தோறும் ஞாயி ற்றுக்கிழ மைகளில் நுண்கலை பயிற்சி வகுப்புகள் நடைபெறும், வருடம் முழுவதும் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள ஆண்டு சந்தா ரூ.200 செலுத்தி பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொ ள்ளலாம்.

    மேலும் விவரங்களு க்கு நாமக்கல் ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித் துள்ளார். 

    • ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது
    • அனைத்து வகை வாகனங்களும் ஓட்ட பெண் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்படும்.

    கோவை,

    தமிழகத்தில் பெண் போலீசார் போலீஸ் துறையில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையொட்டி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் தொடக்க விழா இன்று போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. "சி.ஓ.பி. அவள்" என்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓட்டுனர் பயிற்சியை தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கோவை மாநகர போலீஸ் நிலையம் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 150 பெண் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் நான்கு சக்கர வாகனம், இரு சக்கர வாகனம் இரண்டிற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு ஓட்டுனர் உரிமம் பெற்று தரப்பட உள்ளது. ஏற்கனவே ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது .

    அப்போது மாநகர போலீஸ் கமிஷனர் பாலகி ருஷ்ணன் கூறியதாவது:-

    கோவை மாநகரில் உள்ள 721 பெண் போலீசாரில் 261 பெண் போலீசாருக்கு இலகு ரக வாகனங்கள் ஓட்ட விருப்பம் தெரிவித்துள்ளனர். முதல் கட்டமாக 30 பேருக்கு இன்று முதல் பயிற்சி வழங்கப்படுகிறது. இலகு ரக மற்றும் கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் ஓட்ட பயிற்சி அளிக்கப்படும். இது வரை கனரக வாகனங்களை ஆண் போலீசார் மட்டுமே ஓட்டி வருகின்றனர். அனைத்து பெண் போலீசாருக்கு பயிற்சி அளித்து ஓட்டுநர் உரிமம் வாங்கி கொடுக்க உள்ளோம். இதற்காக தனியார் வாகன பயிற்சி மையத்துடன் இணைந்து பயிற்சி வழங்கப்படும். மேலும் 4 பெண் போலீசார் கனரக வாகன பயிற்சி பெற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    பெண் போலீசார் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தவே இந்த பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர போலீசில் ஆயுதப்படை வாகனம், ரோந்து வாகனம், சட்டம் ஒழுங்கு போலீஸ் நிலையம் வாகனங்கள் என அனைத்து வகை வாகனங்களும் ஓட்ட பெண் போலீசாருக்கு பயிற்சி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×