search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "training camp"

    • தனி மனிதனின் தலைமை பண்பின் குணாதிசயங்கள் குறித்து ரத்தினபிரபு எடுத்துரைத்தார்.
    • ராஜகுமரன் தமது உரையில் மிகச்சிறந்த தலைவர்களை மேற்கோள் காட்டினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர மதிப்பீடு உறுதிப் பிரிவு மற்றும் சமவாய்ப்பு மையம் சார்பில் 'தலைமை பண்புகள்' என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார்.

    உள்தர மதிப்பீடு உறுதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜிம் ரீவ்ஸ் சைலண்ட் நைட் வரவேற்று பேசினார். சமவாய்ப்பு மையத்தின் ஆலோசகர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை ராமஜெய லட்சுமி சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

    இந்த பயிற்சி முகாமிற்கு பாளை ஜான்ஸ் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ரத்தினபிரபு மற்றும் மெப்கோ ஸ்லனக் பொறியியல் கல்லூரி ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் ராஜகுமரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று பேசினர்.

    சிறப்பு விருந்தினர் ரத்தினபிரபு தமது உரையில் தனி மனிதனின் தலைமை பண்பு சூழ்நிலை வரும் பொழுது வெளிவரும் என்றும் தலைமை பண்பின் குணாதிசயங்களான தகவல் பரிமாற்றம், அணுகுமுறை, பொறுப்புணர்ச்சி, உணர்ச்சிபூர்வ அறிவு ஆகியவற்றை விளக்கமாக எடுத்துரைத்தார்.

    முனைவர் ராஜகுமரன் தமது உரையில் மிகச்சிறந்த தலைவர்களை மேற்கோள் காட்டினார். மேலும் தலைமை பண்புகளான புரிதல், ஏற்று கொள்ளுதல் ஆகியவற்றை மாணவர்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார். இந்த பயிற்சி முகாமில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    சமவாய்ப்பு மையத்தின் உறுப்பினர் மற்றும் ஆங்கிலத்துறை பேராசிரியை முனைவர் முனீஸ்வரி மற்றும் முதலாம் ஆண்டு முதுகலை பொருளியல் துறை மாணவர் செல்வம் ஆகியோர் நன்றி கூறினார்கள்.

    இந்த பயிற்சி முகாமில் ஆங்கிலத்துறை தலைவர் சாந்தி மற்றும் பேராசிரியைகள் ஆரோக்கிய மேரி, பெர்னான்டஸ், ரீட்டா யசோதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கள்ளிக்குடியில் பாதுகாப்பான குடிநீர் குறித்த விளக்க பயிற்சி முகாம் நடந்தது.
    • உதவி பொறியாளர்கள் கருத்த பாண்டியன், ராம்குமார் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலகத்தில், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராமப்புற மக்களுக்காக கிராமங்களில் வழங்கக்கூடிய குடிநீரை பரிசோதனை செய்து, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.

    கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகளை சார்ந்த பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. கிராம குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் செந்தில் குமரன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் கருத்த பாண்டியன், ராம்குமார் கலந்து கொண்டனர்.

    மெர்குரி மகளிர் குழுவைச் சார்ந்த அன்புச்செல்வி, வாசுகி உட்பட மகளிர் குழுவினர் ஏராளமான கலந்து கொண்டு விளக்க பயிற்சியை அளித்தனர்.இதில் ஊராட்சித் தலைவர் மற்றும் செயலர்கள் தங்களுடைய சந்தேகத்திற்கு இடமான கேள்விகளை அதிகாரிகளிடம் அறிந்து கொண்டனர்.

    ஆங்காங்கே ரசாயன கலந்த (R.0) விற்பனை செய்வதை அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும், அதனால் ஏற்படக்கூடிய தீங்குகளை குறித்தும் பயிற்சி வகுப்பில் விளக்கப்பட்டது. கிராமங்களில் கிடைக்கக்கூடிய குடிநீரை சுத்தம் செய்து மக்கள் பயன்படுத்த வேண்டும்.

    மேலும் அதன் மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைப்பது குறித்தும் கூட்டத்தில் விளக்கப்பட்டன.

    • காவலர் தேர்வுக்கு இலவச பயிற்சி முகாம் நடந்தது.
    • கடந்த 18-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இளைஞர்கள் படித்து பயன்பெரும் வண் ணம் தன்னார்வ பயிலகம் இயங்கி வருகிறது.

    இத்தன்னார்வ பயிலகத் தில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள 2-ம் நிலை காவலர், சிறைக்காவ லர் மற்றும் தீயணைப்பாளர் பணி காலியிட அறிவிக்கை வெளியிடப்பட்டு 3,359 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இத்தேர்விற்கு விண்ணப் பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தின் வாயிலாக கடந்த 18-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை விண்ணப் பித்துக் கொள்ளலாம். இதற் கான தேர்வுகட்டணம் ரூ.250 ஆகும்.

    இப்போட்டி த்தேர்வுக் கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று முதல் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு தொடங்கப்படவுள்ளது.

    இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இவ்வலுவலக தொலைபேசி எண் 04567-230160 வாயிலா கவும் அல்லது 7867080168 என்ற அலைபேசியின் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன் பெறுமாறு மாவட்ட கலெக்டர் விஷ்னு சந்திரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர்.

    பெங்களூரு:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரை இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் ரோகித் சர்மா ஷர்மா தலைமையிலான 18 பேர் கொண்ட இந்திய அணி சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

    ஆசிய கோப்பை போட்டிக்கு சிறந்த முறையில் தயாராகுவதற்காக இந்திய வீரர்களுக்கு 6 நாள் பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாம் பெங்களூரு அருகே உள்ள ஆலூரில் நேற்று தொடங்கியது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றுள்ளனர். அயர்லாந்து தொடரில் ஆடிய ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, மாற்று வீரர் சஞ்சு சாம்சன் ஆகியோர் இன்று பயிற்சி முகாமில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    முகாமில் பேட்டிங், பந்து வீச்சு பயிற்சி மட்டுமின்றி உடல்தகுதி விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக யோ-யோ சோதனையும் நடத்தப்படுகிறது. யோ-யோ சோதனை என்பது குறிப்பிட்ட தூரத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் வேகமாக ஓடி கடக்க வேண்டும். இதில் 16.5 புள்ளியை கடந்தால் தான் வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இருப்பதற்குரிய அளவுகோலாக இந்திய கிரிக்கெட் வாரியம் வைத்துள்ளது. முதல் நாளில் கோலி யோ-யோ சோதனையில் 17.2 புள்ளிகள் எடுத்து அசத்தினார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

    ரோகித், பாண்டயா, ஆகியோரும் இந்த கடுமையான சோதனையை வெற்றிகரமாக முடித்தனர். மறுபடியும் லேசான காயமடைந்துள்ள லோகேஷ் ராகுல் மற்ற பயிற்சியில் ஈடுபட்டாரே தவிர, யோ-யோ சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ளவில்லை. அவரது உடல்தகுதி எந்த அளவுக்கு மேம்படுகிறது என்பதை அணி நிர்வாகம் உன்னிப்பாக கவனிக்கிறது.

    இந்த பயிற்சி முகாம் வருகிற 29-ந்தேதி நிறைவடைகிறது. மறுநாள் அங்கிருந்து வீரர்கள் கொழும்பு புறப்பட்டு செல்கிறார்கள். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை செப்.2-ந்தேதி சந்திக்கிறது.

    • ரெகுநாதபுரம் ஊராட்சியில் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 30 நாட்கள் பயிற்சி நடைபெறும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் தொடங்கியது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் முகாமை தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் இந்திய அரசின் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகம் காரைக்கால் நிறுவ னம் சார்பில் கிராமப்புற பெண்களுக்கான திறன் வளர்ப்பு திட்டம் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் தொடங்கி வைத்தார்.இந்த பயிற்சியில் 32 பெண்கள் கலந்து கொண்டனர். 30 நாட்கள் பயிற்சி நடைபெறும். ஓ.என்.ஜி.சி மூலம் ரூ. 49 லட்சம் மதிப்பீட்டில் 10 புதிய தையல் மிஷின்கள், அரசு பள்ளிகளுக்கு கட்டங்கள் சீரமைப்பு பணி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்குதல், 2 கிராமங்களுக்கு உயர் மின் கம்பம் அமைத்து கொடுத்தல், ஒரு கிராமத்திற்கு 7 இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், காரைக்கால் நிறுவனத்தின் மேலாளர்கள் ரவிக்குமார், விஜயகண்ணன், தங்கமணி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் புல்லாணி (திருப்புல்லாணி), சுப்புலட்சுமி ஜீவானந்தம் (மண்டபம்), திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் (ரெகுநாதபுரம்), முத்தமிழ் செல்வி பூர்ணவேல் (வாலாந்தரவை), மண்டபம் வட்டார மருத்துவர் சுரேந்தர் மற்றும் மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    • விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை வர்த்தக முறை செயலாக்கத்தில் உள்ளது.
    • தொழில்நுட்ப அலுவலர்களுக்கு கடந்த 18-ந்தேதி பயிற்சி அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பாபநாசம் மற்றும் பூதலூர் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் மின்னணு தேசிய வேளாண் சந்தை மற்றும் பண்ணை அளவிலான வர்த்தக முறை செயலாக்கத்தில் உள்ளது.

    இத்திட்டத்தின் செயல்பாடுகளை வேளாண்மை உற்பத்தி ஆணையர்/ அரசு செயலர் மற்றும் இயக்குநர் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையினரின் அறிவுரையின்படி வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களும் தெரிந்து கொண்டு விவசாயிகளுக்கு உதவிட ஏதுவாக பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    இதன்படி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை தொழில்நுட்ப அலுவலர்களுக்கு கடந்த 18-ந்தேதி பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சிக்கு வேளாண்மை துனண இயக்குநர்(மத்திய திட்டங்கள்) ஈஸ்வர் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ( வேளாண்மை) கோமதி தங்கம், வேளாண்மை துனண இயக்குநர்(உழவர் பயிற்சி நிலையம்) பால சரஸ்வதி வேளாண்மை துணை இயக்குநர் ( வேளாண் வணிகம்) வித்யா, தஞ்சாவூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இப்பயிற்சியில் வேளாண்மை உதவி இயக்குநர்கள், வேளாண் அலுவலர்கள், வேளாண் உதவி அலுவலர்கள், தோட்டக்கலை துனண இயக்குநர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    மின்னணு வேளாண் சந்தை மாநில ஒருங்கினணப்பாளர் திரு. பிரேம் குமார் இத்திட்டத்தின் செயல்பாடுகளான விவசாயிகள் தரவுகளை பதிவேற்றம் செய்தல், வணிகர்களுக்கான உரிமம், ஏல முறை மற்றும் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை குறித்து பயிற்சி அளித்தார்.

    • பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வழங்கப்பட்டது.
    • ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்த பயிற்சி முகாம் வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் கரும்பு பயிரில் ஒரு பரு கரணை நாற்று உற்பத்தி தொழில்நுட்பம், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் மத்திய, மாநில அரசு மூலம் வழங்கப்படும் மானிய விவரங்கள் பற்றி எடுத்துக்கூறப்பட்டது. இப்பயிற்சியில் பொன்னி சர்க்கரை ஆலை கரும்பு மேலாளர் பழனிச்சாமி, கரும்பு ஆய்வாளர்கள் அல்லிமுத்து மற்றும் மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப உரை வழங்கினார்கள். இதில் 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவினா மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சி மந்தகுளத்துபட்டியில் பெண்களுக்கான சமத்துவ பயிற்சி முகாம் நடந்தது.
    • இதில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சி மந்தகுளத்துபட்டியில் பெண்களுக்கான சமத்துவ பயிற்சி முகாம் நடந்தது. இதற்கு சீட்ஸ் அறக்கட்டளை இயக்குநர் பிரியா தலைமை தாங்கினார்.மாலை நேர பள்ளி ஆசிரியை முருகேஸ்வரி முன்னிலை வகித்தார்.

    இதில் வக்கீல் நாகநந்தினி கலந்துகொண்டு பாலின சமத்துவதிற்கான மகளிர் உரிமைகள் குறித்து எடுத்துரைத்தார். இதில் அப்பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். தேவாங்கு பாதுகாப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாண்டி நன்றி கூறினார்.

    • சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.
    • கிராம ஊராட்சிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரம், பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, தண்ணீரில் கலந்துள்ள வேதிப்பொருட்களை அறிந்து கொள்வது எப்படி என பயிற்சி அளிக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.இதில் அஸ்வத் தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய தொழில்நுட்ப உதவியாளர் ரம்யா, ஆகியோர் கிராம ஊராட்சிகளில் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரம், பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, தண்ணீரில் கலந்துள்ள வேதிப்பொருட்களை அறிந்து கொள்வது எப்படி? என்பது குறித்து கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    • தேசிய தொழுநோய் திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டார அளவிலான தொழுநோய் கண்டறிதல் முகாம் வருகிற 17-ந் தேதி முதல் 15 நாட்கள் நடைபெறுகிறது.
    • வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவ லகத்தில் நடைபெற்ற முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    தேசிய தொழுநோய் திட்டத்தின் கீழ், வாழப்பாடி வட்டார அளவிலான தொழுநோய் கண்டறிதல் முகாம் வருகிற 17-ந் தேதி முதல் 15 நாட்கள் நடைபெறு கிறது. இந்த முகாமில் களப்பணியாளர்களாக பங்கேற்கும் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு, பேளூர் வட்டார சுகாதார நிலையத்தின் வாயிலாக தொழுநோய் கண்டறியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவ லகத்தில் நடைபெற்ற முகா மிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி வரவேற்றார். மருத்துவமல்லா வட்டார மேற்பாற்வையாளர் சரவணன் தொழுநோய் அறிகுறிகள், கண்டறிதல்கள், முகாமிற்கான அறிக்கைகள் தயாரித்தல், வீடுவீடாக சென்று தொழுநோய் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்து தல் மற்றும் நோயை கண்டறி யும் முறை குறித்தும் செயல்விளக்க பயிற்சி அளித்தார்.

    சேலம் தூயமரியன்னை மருத்துவமனை தொழு நோய் பிரிவு ஒருங்கி ணைப்பாளர் ஆண்டனி, தொழுநோய் பாதிப்புகள் மற்றும் அரசு வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார். இந்த பயிற்சி முகாமில், வாழப்பாடி வட்டார அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். முடி வில் சுகாதார ஆய்வாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

    • குடிநீர் வாரியம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.
    • பயிற்சியினை வெங்க டேசன், ராக்கம்மாள், தேவி, நந்தினி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஜல்ஜீவன் மிஷின் சார்பில், கிராம குடிநீர் மற்றும் சுகா தாரம் மேலாண்மை உறுப் பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

    குடிநீர் வடிகால் வாரியம் விருதுநகர் கோட்ட நிர்வாக பொறியாளர் கென் னடி, உதவி நிர்வாக பொறி யாளர் மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி ஆணையாளர் சிவ குமார், வட்டார வளர்ச்சி அலு வலர் மீனாட்சி ஆகி யோர் தொடங்கி வைத்தனர்.

    ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் தண்ணீரின் தரம், பாதுகாப்பு, சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங் களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட் டது. பயிற்சியினை வெங்க டேசன், ராக்கம்மாள், தேவி, நந்தினி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது
    • பம்ப் ஆபரேட்டர்களுக்கு பயிற்சி கையேடு வழங் கப்பட்டன

    வாணியம்பாடி:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளை சேர்ந்த கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு உறுப்பினருக்கு குடிநீர் பரிசோதனை பயிற்சி முகாம் 4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதன்படி, ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பயிற்சி 2 முகாமிற்கு குடிநீர் வடிகால் வாரியத்தின் கிராம குடிநீர் திட்ட கோட்ட நிர்வாக பொறியாளர் ந.விநாயகம் தலைமை தாங்கி பயிற்சியினை தொடங்கி வைத்தார்.

    வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

    இதில் குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி நிர்வாக பொறியாளர் எஸ்.தேசிங்குராஜா, உதவி பொறியாளர் கலைபிரியா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். பயிற்சியில் கலந்து கொண்ட, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பு பினர்கள், வார்டு கவுன்சிலர்கள்,

    பம்ப் ஆபரேட்டர்களுக்கு பயிற்சி கையேடு வழங் கப்பட்டன. பயிற்சியாளர்கள் ராஜா, மஞ்சுநாதன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    ×