search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கோடை விடுமுறை கால பயிற்சி முகாம்- நாளை தொடங்குகிறது
    X

    நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் கோடை விடுமுறை கால பயிற்சி முகாம்- நாளை தொடங்குகிறது

    • நாளை காலை கோடை விடுமுறை கால பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.
    • காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பயிற்சிகள் நடைபெறும்.

    நெல்லை:

    நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் கோடை விடுமுறை காலத்தினை பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு கோடை விடுமுறை கால பயிற்சி முகாம் தொடங்க உள்ளது.

    இப்பயிற்சி முகாமில் ஓவிய பயிற்சி, கலை பயிற்சி ,கழிவுகளில் இருந்து கலைப் பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி, களிமண்ணில் பொம்மைகள் செய்யும் பயிற்சி, காகிதக்கலை பயிற்சி, பேச்சுக்கலை பயிற்சி, எழுத்துக்கலை பயிற்சி, கதை சொல்லல் பயிற்சி, யோகா பயிற்சி, சிலம்பம் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் நடைபெற உள்ளன. தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இப்பயிற்சிகள் நடைபெறும். வருகிற 31-ந்தேதி வரை இப்பயிற்சி முகாம் நடைபெறும். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 75024 33751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை நெல்லை மாவட்ட அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×