search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tournament"

    • உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஊராட்சி மற்றும் செட்டியாபத்து காமராஜர் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து மாவட்ட அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி 3 நாட்கள் நடத்தியது.
    • முதலிடம் பிடித்த செட்டியாபத்து அணிக்கு ரொக்க பரிசு ரூ.10 ஆயிரத்து 75 யை உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருங்கை மகாராஜா வழங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஊராட்சி மற்றும் செட்டியாபத்து காமராஜர் ஸ்போர்ட்ஸ் கிளப் இணைந்து 75-வது சுதந்திர தின விழாவையொட்டி மாவட்ட அளவிலான மின்னொளி கைப்பந்து போட்டி 3 நாட்கள் நடத்தியது. போட்டியை உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    உடன்குடி யூனியன் துணைச் சேர்மன் மீராசிராசுதீன், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன், துணைத் தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜம்புராஜ் வரவேற்றார். மொத்தம் 32 அணிகள் கலந்து கொண்டது.

    இறுதி போட்டியில் செட்டியாபத்து காமராஜர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், சுவிசேஷபுரம் அணியும் மோதியது.இதில் செட்டியாபத்து அணி வெற்றிபெற்றது. முதலிடம் பிடித்த செட்டியாபத்து அணிக்கு ரொக்க பரிசு ரூ.10 ஆயிரத்து 75 யை உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருங்கை மகாராஜா வழங்கினார்.

    வெற்றி கோப்பையை குலசேகரன்பட்டினம் ஊராட்சிதுணைத்தலைவர் கணேசன் வழங்கினார்.2-வது இடம் பிடித்த சுவிசேஷபுரம் அணிக்கு ரொக்க பரிசு ரூ. 7 ஆயிரத்து 75 யை செட்டியாபத்து ஊராட்சி மன்றதலைவர் பாலமுருகன் வழங்கினார்.

    வெற்றி கோப்பையை கடாச்சபுரம் ஸ்டன்லி ஞானப்பிரகாசம் வழங்கினார். 3-வது பரிசு பெற்ற கூடுதாழை அணிக்குரொக்கபரிசு ரூ.5 ஆயிரத்து 75 யை செட்டியாபத்து ஊராட்சிதுணைத் தலைவர் செல்வகுமார் வழங்கினார்.

    வெற்றி கோப்பையை முருகன் வழங்கினார். 4-ம் இடம் பிடித்த கொங்கராயின் குறிச்சி அணிக்கு ரொக்க பரிசு ரூ.3 ஆயிரத்து 75 யை செட்டியாபத்து ராம்குமார் வழங்கினார். வெற்றி கோப்பையை கிறிஸ்தியாநகரம் ராஜேஷ் வழங்கினார். ஆட்ட நாயகன் பரிசுகளை செட்டியா பத்து ஊராட்சி எழுத்தர் கணேசன் வழங்கினர்.


    • ஆலங்குளம் அருகில் உள்ள இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் மாநில அளவிலான 2 நாள் கோ-கோ விளையாட்டு போட்டி நடந்தது.
    • போட்டியில் ஓசூர், ஈரோடு, கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, கோயம் புத்தூர், மற்றும் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து 65-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகில் உள்ள இடைகால் ஸ்டஅக் ஹைடெக் பள்ளியில் சொக்கலிங்கம், ஞானப்பூ நினைவு சுழற்கோப்பைக்கான 2-ம் ஆண்டு மாநில அளவிலான 2 நாள்கோ-கோ விளையாட்டு போட்டி அப்பள்ளியின் மைதான த்தில் நடந்தது.

    இந்தப் போட்டியில் ஓசூர், ஈரோடு, கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, கோயம் புத்தூர், மற்றும் தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இருந்து 65-க்கும் மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டு விளையாடினர்.வெற்றி பெற்ற அணியின ருக்கு பரிசளிக்கும் விழா நடந்தது.

    இந்த விழாவுக்கு பள்ளியின் தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.பள்ளியின் தாளாளர் புனிதா செல்வி முன்னிலை வகித்தார்.முதல்வர் பிரவீன்குமார் வரவேற்றார்.

    தமிழ் ஆசிரியர் ஜான்சன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.விழாவில் சிறப்பு விருந்தினராக நெல்லை வனத்துறை சரக அலுவலர் சரவணகுமார் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணியினரை பாராட்டி சான்றிதழ்,பரிசு மற்றும் சுழற்கோப்பையினை வழங்கினார்.

    விளையாட்டு போட்டியினை உடற்கல்வி ஆசிரியர்கள் முத்துக்குமார், திலீப்குமார்,சுதா,நிர்வாக அலுவலர் சிவக்குமார், அலுவலக பணியாளர்கள் லட்சுமி,சாந்தி,நர்மதா, செவி லியர் மெர்சி ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர். விழா முடிவில் தமிழ் ஆசிரியை ரேவதி நன்றி கூறினார்.

    • மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.

    சேலம்:

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் மாநில அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கைப்பந்து போட்டி கடந்த 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற்றது.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் சேலம் மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் பெண்கள் பிரிவில் சேலம் மாவட்ட அணி 2-வது இடமும், ஆண்கள் பிரிவில் சேலம் மாவட்ட அணி 3-வது இடமும் பிடித்து வெற்றி பெற்றனர். இதையடுத்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நேற்று சேலத்தில் நடைபெற்றது.

    இதற்கு சேலம் மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி வெற்றி பெற்ற சேலம் மாவட்ட அணியில் இடம்பிடித்த வீரர், வீராங்கனைகளை பாராட்டி பரிசு வழங்கினார்.

    இதில் கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணைத்தலைவர் ராஜாராம், இணை செயலாளர்கள் சீனிவாசன், வடிவேல், வேங்கையன், நிர்வாகி நந்தன், தொழில் அதிபர் விஜயராஜ், பயிற்சியாளர் அருள் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
    • போட்டியை அமர்ந்து பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

    திசையன்விளை:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு திசையன்விளையை அடுத்து உள்ள அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர். செய்துள்ளார்.

    போட்டியில் மராட்டியம், உத்தரபிரதேசம், அரியானா, குஜராத், டெல்லி, மும்பை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா தமிழ்நாடு உள்பட 80 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகிறது.

    போட்டியை அமர்ந்து பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பார்வையிட்டார்.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். சுரேஷ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், தகவல் தொழில்நுட்ப அணி முருகேஷ், புளியடி குமார், எழில் ஜோசப், ஸ்டாலின், முத்தையா மற்றும் பலர் உடனிருந்தனர்.

    இன்று இரவு நடைபெறும் முதல்நாள் போட்டியை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி தொடங்கிவைக்கிறார்.

    • இளையோர் கைப்பந்து போட்டி நடந்தது.
    • ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு கோப்பையுடன், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் ராம்கோ ஊர்க்காவல் படை மைதானத்தில் மாநில அளவிலான இளையோருக்கான யூத் சாம்பியன்ஷிப் கைப்பந்து போட்டி தொடங்கியது. மாநில கைப்பந்து கழக தலைமைப் புரவலர் ஜெயமுருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு கைப்பந்து கழகத்தின் தலைவர் அர்ஜுன்துரை காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து பெண்கள் அணி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணமராஜபாளையம்நாடார் உறவின்முறை தலைவர் ஆதவன், செயலாளர் வெற்றிச்செல்வன், மாவட்ட கைப்பந்து கழகத்தின் செயலாளர் துரைசிங், மாவட்டத் தலைவர் செல்வ கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 4 நாட்கள் பகல் இரவாக இந்த போட்டிகள் நடைபெறுகிறது. முதல் இரண்டு நாட்கள் லீக் முறையிலும், 3 மற்றும் 4 வது நாளில் நாக் அவுட் முறையிலும் இறுதிப் போட்டிகள் நடைபெறுகிறது.

    தொடக்க ஆட்டத்தில் சென்னை, கோவை பெண்கள் அணியினர் மோதினர். இதில் சென்னை அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு கோப்பையுடன், சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது. 

    • கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது.
    • போட்டியில் கோட்டை மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர்.

    ஓமலூர்:

    ஓமலூர் ஒன்றியம் கோட்டைமேட்டுப்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற கிராமப்புற இளைஞர்களுக்கான சதுரங்க போட்டி நடைபெற்றது. போட்டியில் கோட்டை மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பள்ளி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விளையாடினர்.

    போட்டியை ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கணேசன் தொடங்கி வைத்தார். போட்டியில் ஆட்டோமேட்டிக் பகுதியில் சேர்ந்த இளைஞர் அன்பரசு முதல் பரிசை தட்டிச் சென்றார் அதே பகுதியைச் சேர்ந்த பிரேம் குமார் 2-ம் பரிசும் நந்தகோபால் 3-ம் பரிசும் பெற்றனர். இவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    இதில் துணைத் தலைவர் மகாலட்சுமி வார்டு உறுப்பினர் ரமேஷ், ஊராட்சி செயலாளர் பூவராகவன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    • மாநில அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டி நடந்தது.
    • கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்தை ஸ்டீபன் பிரகாஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    மதுரை

    திண்டுக்கல்லில் மாநில அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டி நடந்தது. இதில் மதுரை ெரயில்வே சிக்னல் ஊழியர் ஸ்டீபன்பிரகாஷ் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு 3 கோப்பைகளை வென்றார். . இதன் மூலம் அவர் இந்தோனேசியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்கிறார். கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்தை ஸ்டீபன் பிரகாஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    • தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
    • இந்த போட்டியில் சர்வதேச அளவில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    நாமக்கல்:

    தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 188 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சார்பில் ஒலிம்பியாட் கோலம் வரையப்பட்டது. மேலும் சிலம்பம், வில்வித்தை போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்பட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் என மொத்தம் 4 நபர்களுக்கு தலா ரூ.3 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலைகளையும், 19 நபர்களுக்கு தலா ரூ.1,000-க்கான வங்கி வரைவோலைகளையும் கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசாக வழங்கினார்.

    செஸ் ஒலிம்பியாட்டில் கலந்து கொள்ளும் 188 நாடுகளை குறிக்கும் வகையில், 188 நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட, ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களை கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதி மாணவிகள் பறக்க விட்டனர்.மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழாவிற்கு வருகை தந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர் ஒலிம்பியாட் சின்னம் அச்சிட்ட தொப்பிகள் அணிந்து வந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலு–வலர் கதிரேசன், உதவி கலெக்டர் மஞ்சுளா, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, செஸ் சங்கத்தினர், பயிற்சி–யாளர்கள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு விடுதி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • எஸ்.என். கல்லூரியில் செஸ் போட்டி நடந்தது.
    • ஏழு சுற்றுக்களில் நடந்த இப்போட்டிகளில் 225 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை பெருங்குடியில் உள்ள சரசுவதி நாராயணன் கல்லூரியில் 44-வது ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியை கொண்டாடும் வகையில் மாநில செஸ் போட்டி நடந்தது.

    ஏழு சுற்றுக்களில் நடந்த இப்போட்டிகளில் 225 மாணவர்கள் கலந்து கொண்டனர். சரஸ்வதி வித்யாலயா பள்ளி ஸ்ரீனிஷ் உதயன், எஸ்.பி.ஓ.ஏ.சீனியர் செகண்ட்ரிபள்ளி அஸ்வின், விசாகா பள்ளி மிர்துன்ராஜ், சி.எஸ்.ஆர்.மெட்ரிக் பள்ளி கெவின்பாரதி, ஜீவனா பள்ளி ஜெய்ஆகாஷ், மகாத்மா பள்ளி அனுஷ்கா, சேதுபதி பள்ளி விஷ்ணுவர்தன், அண்ணாமலையார் பள்ளி கதிர்காமன் முதல் 10 இடங்களை வென்று பரிசுகள் பெற்றனர்.

    மாணவியருக்கான சிறப்பு பரிசில், ஒத்தக்கடை அரசு பள்ளி சங்கீதா, ராஜ் மெட்ரிக் பள்ளி தரணி, அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி சுபஸ்ரீ, கேட்டிவிகாஷ் பள்ளி 7 வயது சக்தி சந்தானம் இளம் வீரருக்கான பரிசு, அதிக மாணவர்கள் பங்கேற்ற அமுதம் மெட்ரிக் பள்ளிக்கு முதல் பரிசும், திருமங்கலம் பி.கே.என். பள்ளிக்கு 2-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி வரவேற்றார். மாவட்ட சதுரங்க சங்க முதுநிலை ஆர்பிட்டா அரசப்பன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் நன்றி கூறினார்.

    • ஒலிம்பியாட் சதுரங்க போட்டி நடந்தது
    • 198 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டார அளவிலான சதுரங்க ஒலிம்பியாட் போட்டி ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 198 மாணவர்கள் கலந்துகொண்டனர்.இதில் வெற்றிபெறும் 18 நபர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகிறார்கள்

    போட்டியினை பள்ளி தலைமையாசிரியர் பி.கலைச்செல்வி மற்றும் கணக்கு பட்டதாரி ஆசிரியர் மாரிமுத்து ஆகியோர் முன்னின்று நடத்தினர். இங்கு வெற்றிப்பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வட்டார அளவில் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளை போல் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர் பல்வேறு அமைப்பு சார்ந்தவர்கள் வாழ்த்தினர்.

    • கபிலர்மலை, மோகனூர் பகுதியில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28- ந் தேதி தொடங்குகிறது.இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கபிலர்மலை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பரமசிவம் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மோகனூர்

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) தேன்மொழி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) பரமேஸ்வரன், மோகனூர் பேரூராட்சித் தலைவர் வனிதா மோகன்குமார், துணைத் தலைவர் சரவணகுமார் , இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மணி, கார்த்திக் , மகளிர் சுய உதவி குழுவினர்,துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் பேரூராட்சிஅலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கபிலர்மலை, மோகனூர் பகுதியில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பரமத்திவேலூர்:

    சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ சென்னை மாமல்லபுரத்தில் வரும் 28- ந் தேதி தொடங்குகிறது.இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தமிழக முழுவதும் அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கபிலர்மலை ஒன்றிய பகுதிகளை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் அலுவலக வளாக முன்பு செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ஜே.பி.ரவி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) பரமசிவம் முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) நாகராஜ் அனைவரையும் வரவேற்றார். செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மோகனூர்: நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேருந்து நிலையத்தில் மகளிர் சுய உதவிக் குழுவினர் சார்பில் சர்வதேச அளவிலான 44-வதுசெஸ் ஒலிம்பியாட் போட்டி‌ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுவினரை சேர்ந்த பெண்கள் செஸ் போர்டு போல் கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்(வ.ஊ) தேன்மொழி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர்(நிர்வாகம்) பரமேஸ்வரன், மோகனூர் பேரூராட்சித் தலைவர் வனிதா மோகன்குமார், துணைத் தலைவர் சரவணகுமார் , இளநிலை உதவியாளர் சுரேஷ்ராஜ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் மணி, கார்த்திக் , மகளிர் சுய உதவி குழுவினர்,துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், மற்றும் பேரூராட்சிஅலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×