search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.என். கல்லூரியில் செஸ் போட்டி
    X

    எஸ்.என். கல்லூரியில் செஸ் போட்டி

    • எஸ்.என். கல்லூரியில் செஸ் போட்டி நடந்தது.
    • ஏழு சுற்றுக்களில் நடந்த இப்போட்டிகளில் 225 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை பெருங்குடியில் உள்ள சரசுவதி நாராயணன் கல்லூரியில் 44-வது ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியை கொண்டாடும் வகையில் மாநில செஸ் போட்டி நடந்தது.

    ஏழு சுற்றுக்களில் நடந்த இப்போட்டிகளில் 225 மாணவர்கள் கலந்து கொண்டனர். சரஸ்வதி வித்யாலயா பள்ளி ஸ்ரீனிஷ் உதயன், எஸ்.பி.ஓ.ஏ.சீனியர் செகண்ட்ரிபள்ளி அஸ்வின், விசாகா பள்ளி மிர்துன்ராஜ், சி.எஸ்.ஆர்.மெட்ரிக் பள்ளி கெவின்பாரதி, ஜீவனா பள்ளி ஜெய்ஆகாஷ், மகாத்மா பள்ளி அனுஷ்கா, சேதுபதி பள்ளி விஷ்ணுவர்தன், அண்ணாமலையார் பள்ளி கதிர்காமன் முதல் 10 இடங்களை வென்று பரிசுகள் பெற்றனர்.

    மாணவியருக்கான சிறப்பு பரிசில், ஒத்தக்கடை அரசு பள்ளி சங்கீதா, ராஜ் மெட்ரிக் பள்ளி தரணி, அண்ணாமலையார் மெட்ரிக் பள்ளி சுபஸ்ரீ, கேட்டிவிகாஷ் பள்ளி 7 வயது சக்தி சந்தானம் இளம் வீரருக்கான பரிசு, அதிக மாணவர்கள் பங்கேற்ற அமுதம் மெட்ரிக் பள்ளிக்கு முதல் பரிசும், திருமங்கலம் பி.கே.என். பள்ளிக்கு 2-ம் பரிசும் வழங்கப்பட்டது.

    பரிசளிப்பு விழாவிற்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத்தலைவர் ஜெயக்கொடி வரவேற்றார். மாவட்ட சதுரங்க சங்க முதுநிலை ஆர்பிட்டா அரசப்பன் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் யுவராஜ் நன்றி கூறினார்.

    Next Story
    ×