என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பேட்மிட்டன்
நீங்கள் தேடியது "பேட்மிட்டன்"
- மாநில அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டி நடந்தது.
- கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்தை ஸ்டீபன் பிரகாஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மதுரை
திண்டுக்கல்லில் மாநில அளவிலான பாரா பேட்மிட்டன் போட்டி நடந்தது. இதில் மதுரை ெரயில்வே சிக்னல் ஊழியர் ஸ்டீபன்பிரகாஷ் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் கலந்து கொண்டு 3 கோப்பைகளை வென்றார். . இதன் மூலம் அவர் இந்தோனேசியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்கிறார். கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த்தை ஸ்டீபன் பிரகாஷ் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வியட்னாமில் நடைபெற்று வரும் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தோனேஷியாவின் ரஷ்டவிடோவிடம் தோல்வியை தழுவினார் அஜய் ஜெயராம். #VietnamOpen #AjayJayaram
ஹனோய்:
வியட்னாமில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், இந்தோனேஷியாவின் ஷேசர் ஹிரன் ரஷ்டவிடோவுடன் மோதினார்.
நேற்று நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் ஜப்பானின் இக்ராஷியை வீழ்த்திய ஜெயராம், இன்றைய போட்டியில் அதே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவிட்டார்.
இதனால், 14-21, 10-21 என்ற கணக்கில் ஜெயராமை எளிதில் வீழ்த்தி ரஷ்டவிடோ தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய ஜெயராம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இதே ரஷ்டவிடோவை கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தாய்லாந்து ஓப்பன் பேட்மிட்டன் தொடரில் 21-11, 19-21, 21-9 என்ற கணக்கில் அஜய் ஜெயராம் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. #VietnamOpen #AjayJayaram
வியட்னாமில் நடைபெற்று வரும் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் அஜய் ஜெயராமன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். #VietnamOpen #AjayJayaram
ஹனோய்:
வியட்னாமில் நடைபெற்று வரும் ஆண்களுக்கான பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரை இறுதி போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம், உலக பேட்மிட்டன் தரவரிசையில் 7-ம் இடத்தில் உள்ள ஜப்பானின் யூ இக்ராஷியுடன் இன்று மோதினார்.
விருவிருப்புடன் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெயராமன் மற்றும் இக்ராஷி இடையே கடும் போட்டி நடந்து வந்தது. இதில், 21-14, 21-19 என்ற கணக்கில் இக்ராஷியை வீழ்த்தி அஜய் ஜெயராமன் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
சமீப காலமாக ஜெயராமன் தசைபிடிப்பு காரணமாக ஓய்வு பெற்றிருந்த நிலையில் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இவர் உலக பேட்மிட்டன் தரவரிசையில் 13-ம் இடம் பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #VietnamOpen #AjayJayaram
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X