search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TNEB"

    • சங்கனான்குளம், நவ்வலடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • இட்டமொழி, நம்பிகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் நாளை பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மின்கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களான சங்கனான்குளம் மற்றும் நவ்வலடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    சங்கனான்குளம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மன்னார்புரம், வடக்கு விஜயநாராயணம், தெற்கு விஜய நாராயணம், இட்ட மொழி, நம்பிகுறிச்சி, தெற்கு ஏறாந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள்.

    நவ்வலடி துணை மின் நிலையத்திற்குட்பட்ட நவ்வலடி, ஆற்றங்கரை பள்ளி வாசல், தோட்ட விளை, தெற்கு புளி மான்கு ளம், கோடாவிளை, மரக்கா ட்டு விளை, செம்பொன் விளை, காளிகு மாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்ட ப்பனை, குட்டம், பெட் டைக்கு ளம், உறுமன்குளம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை வள்ளியூர் செயற் பொறி யாளர் வளன்அரசு தெரிவித்தார்.

    • களக்காடு உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது.
    • கூடன்குளம், இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மன்விநியோகம் இருக்காது.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட கூடன்குளம், களக்காடு மற்றும் நாங்குநேரி துணை மின்நிலையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் கூடன்குளம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட கூடன்குளம், இடிந்தகரை, இருக்கன்துறை, பொன்னார்குளம், விஜயாபதி, ஆவுடையாள்புரம், தோமை யார்புரம், சங்கனேரி, வைராவி கிணறு, தாமஸ்மண்டபம், நாங்குநேரி துணை மின்நிலை யத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்விநியோகம் இருக்காது. அதேபோல் நாங்குநேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.எல். தொழிற்கூடம் மற்றும் பக்கத்து கிராமங்கள் மற்றும் களக்காடு துணை மின்நிலை யத்திற்குட்பட்ட மணி கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடு வெட்டி, வட மலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கரு வேலன்குளம், கோவிலம்மா ள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இத்தகவலை வள்ளியூர் செயற்பொறியாளர் வளன்அரசு தெரிவித்துள்ளார்.

    • விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • ராயகிரி, வடுகப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    சிவகிரி:

    கடையநல்லூர் கோட்ட மின்விநியோகம் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடையநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    இதனால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேலக்கரிசல்குளம், கொத்தாடப்பட்டி, வடுகப்பட்டி ஆகிய கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது. எனவே மின் கம்பிகளில் தொடும் நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.
    • கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர்ப்புற மின் வினியோக செயற் பொறியாளர் முத்துக்குட்டி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்க ப்பட்டு ள்ளது. மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலா மணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம் புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்கு ளம், அன்னை நகர், தருவை, ஓம நல்லூர், கண்டித்தா ன்குளம், ஈஸ்வரியாபுரம்

    ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள் புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு(என்.ஜி.ஒ. காலனி), அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியில் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாம ரைச் செல்வி ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டி க்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தமிழ்நாட்டில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன.
    • மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த 2 ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல.

    சென்னை:

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அனைத்து ஒப்பந்த புள்ளிதாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டு உள்ளதால், மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டில் சுமார் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நேரங்களில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது தெரிய வருகிறது.

    மின்மாற்றிகள் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு மின்மாற்றிகளை எடுத்து சென்று வழங்குவதால், அவை சரக்கு வாகன கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது. மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த 2 ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. 'ஜெம் போர்டல்' விலையை எடுத்துஒப்பீடு செய்துள்ளது சரியான நடைமுறையாகாது.

    புகாரில் மற்ற மாநிலங்களோடு மின்மாற்றிகளின் கொள்முதலை ஒப்பீடு செய்து ரூ.397.37 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளது. புகாரில் மின்மாற்றிகளின் வேறுபட்ட விவரக் குறியீடுகளின் அடிப்படையிலும், வேறுபட்ட மூலப்பொருட்களின் அடிப்படையிலும் உதாரணமாக செம்பு மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்யாமல் அலுமினியம் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்துள்ளது. தி.மு.க. அரசு, எந்த நிலையிலும், முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்காது.

    ஆகவே, மின்மாற்றிகள் கொள்முதலில் புகாரில் கூறியவாறு எவ்வித முறைகேடுகளும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறவில்லை.

    புகாரில் அனைத்து ஒப்பந்த புள்ளிதாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டு உள்ளதால், மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறியுள்ளது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நேரங்களில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது தெரிய வருகிறது.

    மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த 2 ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. கேரளாவில் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்ய இயலாது.

    ராஜஸ்தானில் கொள்முதல் செய்யப்படும் மின்மாற்றிகளுக்கான உத்தரவாத காலம் 3 வருடங்கள் ஆகும். எனவே, சமநிலையில் உள்ள விவர குறியீடுகளோடுதான் ஒப்பீடு செய்வது பொருத்தமானதாக இருக்கும்.

    தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் விலை எந்தவிதத்திலும் அதிகப்படியானதாக இல்லை என்பது தெரிகிறது.

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் விவரக் குறியீடுகள் மற்ற மாநிலத்தில் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளின் விவரக் குறியீடுகளோடு ஒப்பீடு செய்ய இயலாத அளவில் உயர்ந்ததாக உள்ளது.

    மின்மாற்றியின் விலையை ஒப்பிடும்போது அதற்கு இணையான திறன் உள்ள மின்மாற்றிக்கான விலையுடன் மட்டுமே ஒப்பீடு செய்ய இயலும்.

    ஆகவே, புகாரில் ஒப்பீடு செய்துள்ளது தவறானதாகும். கொள்முதலிலும் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை தாழையூத்து துணை மின்நிலைய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் வினியோக கழகத்தில் நெல்லை கிராமப்புற வினியோக பிரிவு செயற்பொறியாளர் பாஸ்கர்பாண்டி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாழையூத்து துணை மின்நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட மானூர் வட்டாரம், தாழையூத்து, சேது ராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம் புதூர், நாஞ்சான் குளம், தென்கலம், மதவ குறிச்சி ஊர்களுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினி யோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது
    • நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று அதிகமாக இருக்கிறது.

    நெல்லை:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் செயற் பொறியாளர் அலுவலகம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செயற்பொறியாளர் கல்லிடைக்குறிச்சி கோட்டம் சுடலையாடும் பெருமாள் மற்றும் ஏனைய அதிகாரி களுக்கும் உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் பேசுகையில், நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் தென்மேற்கு பருவக்காற்று அதிகமாக இருக்கிறது.

    இதனால் அனைத்து மின் பொறியாளர்களும் தொடர் கண்காணிப்பில் பணிபுரிந்து மின் தடங்கள் ஏற்பட்டால் உடனடியாக மின் வினியோகம் வழங்குவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் வனவிலங்கு களை மின் விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு தொடர்ச்சியாக வனத்துறையுடன் இணைந்து ஆய்வு பணி மேற்கொண்டு வனவிலங்கு களால் மின்பாதைகள், மின் கம்பங்கள் சேதம் ஏற்பட்டால் உடனடியாக சரி செய்வதற்கு உத்தரவிட்டார்.

    கல்லிடைக்குறிச்சி கோட்ட த்திற்கு உட்பட்ட சுற்றுலாத் தலங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் சுற்றுலா தலங்களுக்கு தங்கு தடையின்றி மின் வினியோகம் வழங்க உத்தரவிட்டார். மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987 தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

    • எச்சரிக்கை நடவடிக்கையாக மின் பாதைகள் மின் கம்பங்கள் ஆகியவற்றின் உயரங்கள் குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
    • ஆய்வு பணியில் மின் வாரிய அலுவலர்கள், வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    சிங்கை:

    நெல்லை மின் உற்பத்தி மற்றும் பகிர்மான வட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டத்தில் உள்ள பாபநாசம் கீழ் முகாம் பிரிவுக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் மின்வாரியம் மற்றும் வனத்துறை சார்பாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக அலுவலர்கள் இணைந்து மின் பாதைகளில் ஆய்வுப் பணிகள் மேற்கொண்டனர்.

    நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் குருசாமியின் வழிகாட்டுதலின்படி மின்வாரிய செயற்பொறியாளர் சுடலையடும் பெருமாள் தலைமையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் பாபநாசம், சேர்வலார், காரையார் பகுதிகளில் வனவிலங்குகள் மின் விபத்துகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின் பாதைகள் மின் கம்பங்கள் ஆகியவற்றின் உயரங்கள் குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    ஆய்வு பணியில் மின் வாரியம் சார்பில் அம்பை உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ், பாபநாசம் இளநிலை பொறியாளர் விஜயராஜ், விக்கிரமசிங்கபுரம் இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன், முகவர் முருகன் மற்றும் வனத்துறை சார்பில் பாபநாசம் வன காப்பாளர் செல்வன், முண்டந்துறை வனவர் ராஜன், வன காப்பாளர் சமீர்அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • ராஜிவ் நகரில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மர் சேதமடைந்துள்ளது.
    • பழுதடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளத்தில் இருந்து மதுரை செல்லும் பிரதான சாலையில் பல மின்கம்பங்கள் மிகவும் சேதமடைந்து, ஆபத்தான நிலையிலும் இருந்து வருகிறது. விளாத்திகுளத்தின் பிரதான சாலையாக விளங்கி வரும் மதுரை ரோட்டில், அம்பாள் நகர் ஆர்ச் அருகில், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டிடம் அருகில், பெருநாழி விலக்கு அருகில் என வரிசையாக பல மின்கம்பங்கள் காலாவதியாகி எப்போதும் விழலாம் என்ற ஆபத்தான நிலையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

    ராஜிவ் நகரில் அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரும் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் விளாத்திகுளம் மின்வாரிய அதிகாரிகள், மின் பொறியாளர்கள் பொதுமக்களின் நலன் கருதி துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக விளாத்திகுளம் பகுதி முழுவதும் பழுதடைந்து காணப்படும் மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் மாற்றி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.
    • எந்த இடத்திலும் மின்தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.

    மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்தினால் பொதுமக்களுக்கு, பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க அந்தந்த செயற்பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    எந்த இடத்திலும் மின்தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

    அதே சமயம் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் மின்வாரிய ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நாளை பணிக்கு வராதோர் விவரங்களை காலை 10.45 மணிக்குள் தலைமையிடத்திற்கு அனுப்புமாறு மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கொங்கந்தான்பாறை உள்ளிட்ட இடங்களில் நாளை மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை மின்வாரிய செயற்பொறியாளர் (நகர்புற விநியோகம்) முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியுள்ளதாவது:-

    மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மேலப்பாளை யம் கொட்டிகுளம் பஜார், அம்பை ரோடு, சந்தை, குலவணிகர்புரம், பாளை மத்திய சிறைச்சாலை பகுதி, மாசிலாமணிநகர், வீரமாணிக்கபுரம், ஆமிம்புரம், மேலப்பாளையம்- டவுன் ரோடு,

    கணேசபுரம், மேல கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், தருவை, ஒமநல்லூர், பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், பெருமாள்புரம், பொதிகை நகர், திருமால்நகர், கண்டித்தான்குளம், கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி, அடைமி திப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மனக்காவலம்பிள்ளைநகரில் 17 தெருக்களில் செல்லும் மின்வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது.
    • அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் முன்பாக மின்வயர்களை உயரத்தில் மாற்றி அமைக்க வேண்டும்

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்திற்கு உட்பட்ட மனக்காவலம்பிள்ளைநகரில் 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் 17 தெருக்களில் செல்லும் மின்வயர்கள் மிகவும் தாழ்வாக செல்கிறது.

    தாழ்வாக செல்லும் மின்வயர்கள்

    சாலையில் நின்றால் கைகளால் தொட்டுவிடும் உயரத்தில் மின்வயர்கள் செல்வதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே அசம்பாவித சம்ப வங்கள் நடைபெறும் முன்பாக மின்வயர்களை உயரத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் மின்வ யர்களை உடனடியாக உயர்த்த க்கோரி நேற்று அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். இதையறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் ஒரு இடத்தில் சென்ற மின்வயர்களை உயர்த்தியும், மற்ற இடங்களுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறி சென்றதாக தெரி கிறது.

    கோரிக்கை

    இது குறித்து அப்பகுதியினர் கூறும்போது, மனக்கா வலம்பிள்ளைநகரில் சி.எஸ்.ஐ. தேவலாயம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்வ யர்கள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொது மக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். நேற்று ஒரு இடத்தில் மட்டும் மின்துறை அதிகாரிகள் வயர்களை சீரமை த்து சென்றுள்ளனர். சுமார் 15-க்கும் மேற்பட்ட தெருக்களில் வயர்கள் தாழ்வாக தான் செல்கிறது.

    வாகனங்கள் செல்லும் போது வயர்களை உரசியபடி செல்கிறது. இதனால் அது அறுந்துவிழும் அபாயம் இருக்கிறது. எனவே உடனடி யாக தாழ்வாக செல்லும் வயர்களை உயர்த்தி அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ×