search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati"

    • கபிலேஸ்வரர் கோவிலில் நேற்று லட்ச வில்வார்ச்சனை
    • உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா

    திருமலை:

    திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நேற்று லட்ச வில்வார்ச்சனை நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடந்தது. அதன்பிறகு காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை லட்ச வில்வார்ச்சனை நடந்தது.

    மாலை உற்சவர் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதில் கோவில் அதிகாரிகளும், பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • திருமலையில், வசந்த மண்டபத்தில் விஷ்ணு சாளக்கிராம பூஜை.
    • வாசனை திரவியங்களால் சாளக்கிராம கற்களுக்கு சிறப்பு அபிஷேகம்.

    திருமலை:

    உலக மக்கள் நன்மைக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் விஷ்ணு சாளக்கிராம பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் மாலை 3 மணியில் இருந்து 4.30 மணி வரை ஒளிப்பரப்பப்பட்டது.

    முன்னதாக கோவிலில் இருந்து உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமியை நான்கு மாடவீதிகள் வழியாக வசந்த மண்டபத்துக்கு கொண்டு வந்தனர்.

    அங்கு உற்சவர்கள் முன்னிலையில் பிரதான அர்ச்சகர்கள் விஷ்ணு சாளக்கிராம பூஜை, பிரார்த்தனை சூக்தம், அஷ்டதிக் பாலக பிரார்த்தனை, நவக்கிரக பிரார்த்தனைகளுடன் பூஜையை தொடங்கினர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத அர்ச்சகர்கள் பால், தயிர், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சாளக்கிராம கற்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர்.

    அதன்பின் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கும், சாளக்கிராமங்களுக்கும் ஆரத்தி காண்பித்தனர். இதையடுத்து பிரசாதம் வழங்கி வேத மந்திரம் மற்றும் மங்களத்துடன் பூஜை முடிந்தது.

    சாளக்கிராமம் மகாவிஷ்ணுவின் உண்மையான அவதாரம். சாளக்கிராம பூஜையால் அனைத்து மக்களையும் காத்து, அவர்களின் துன்பங்கள் நீங்கும். சாளக்கிராமங்களில் செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தை உட்கொண்டால், சகல பாவங்களும் நீங்கும், சகல நோய்களும் விலகும் என்பது ஐதீகம் என்று பண்டிதர் ராமகிருஷ்ண சேஷசாயி கூறினார்.

    சாளக்கிராம பூஜையில் தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர் மற்றும் தர்மகிரி வேத பள்ளியின் வேத பண்டிதர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து வகை பிரசாதம் மற்றும் பனியாரம் தயாரிக்கும் பணி அனுபவம்.
    • தேர்வு செய்யப்படுபவர்களுக்கான மாத ஊதியம் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கும் பணிக்கு ஆட்சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, அனைத்து வகை பிரசாதம் மற்றும் பனியாரம் தயாரிக்கும் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்கள் மற்றும் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.21,139 மாத ஊதியம் அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் ஒரு கண்டிஷன். வைஷ்ண பிராமணர்கள் மட்டுமே ஆகம விதிப்படி விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு புஷ்பார்ச்சனை.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் இரவு புஷ்ப யாகத்துக்கான அங்குரார்ப்பணம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக வசந்த மண்டபத்தில் சேனாதிபதி உற்சவம், மிருதங்கரஹணம், ஆஸ்தானம் மற்றும் யாக சாலையில் அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடந்தது.

    இந்தநிலையில் நேற்று மதியம் பூந்தோட்ட அலுவலகத்தில் பல்வேறு வகையான மலர்களை தனித்தனியாக சேகரித்து, கூடைகளில் நிரப்பப்பட்டன. அந்த மலர்களுக்கு தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி சிறப்புப்பூஜைகள் செய்தார். பூஜைகள் முடிந்துதும் பூந்தோட்ட அலுவலகத்தில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.

    அப்போது தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி பேசுகையில், மொத்தம் 8 டன் எடையிலான 17 வகையான மலர்கள் மற்றும் இலைகளால் மதியம் 1 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது.

    அதில் 4 டன் மலர்கள் தமிழகத்தில் இருந்தும், தலா 2 டன் மலர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்தும் வந்தன. முன்னதாக காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது, என்றார்.

    புஷ்ப யாகத்தில் கோவில் துணை அதிகாரி லோகநாதம், தோட்டக்கலைத்துறை இயக்குனர் சீனிவாசலு, பறக்கும் படை அதிகாரி நந்தகிஷோர், பேஷ்கார் ஸ்ரீஹரி, பார்பதீடர் உமா மகேஸ்வரரெட்டி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சானூர்

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்தது. அதையொட்டி நடந்த நித்ய கைங்கர்யங்களில் அர்ச்சகர்கள், அதிகாரிகள் அல்லாதவர்கள் மற்றும் பக்தர்கள் செய்த தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக புஷ்ப யாகம் செய்வது வழக்கம்.

    இந்தநிலையில் நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், தேன், இளநீர் போன்ற சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. மதியம் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து கோவிலுக்கு பல்வேறு மலர்கள் நிரப்பப்பட்ட கூடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

    கோவில் அருகில் உள்ள ஸ்ரீகிருஷ்ணர் முக மண்டபத்தில் மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை 3 டன் எடையிலான பல்வேறு அலங்கார, பாரம்பரிய மலர்களால் புஷ்ப யாக மகோற்சவம் நடத்தப்பட்டது. அதில் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர்.

    2015-ம் ஆண்டு முதல் நாங்கள் சைக்கிளில் சென்று தரிசனம் செய்து வருகிறோம். சுமார் 750கி.மீ.துாரம் சைக்கிளிலேயே குழுவாக செல்கிறோம் என்றார்.

    கடலூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச்சேர்ந்தவர்கள் சங்கர், தென்றல் மாரியப்பன், அப்பணசாமி, கருப்பசாமி, சங்கர், தங்கராஜ், ஆறுமுகம், அஜய்குமார். சுமை துாக்கும் தொழி லாளியான இவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிரபக்தர்கள். இவர்கள் ஆண்டுதோறும் 21 நாட்கள் விரதமிருந்து, சைக்கிளிலேயே பயணமாக சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு விரதமிருந்து மாலை அணிந்து 8 பேர், கடந்த 11-ந் தேதி ஓடப்பட்டி பிள்ளையார்கோவிலில் இருந்து சைக்கிள் யாத்திரையை புறப்பட்டனர். 3-ம் நாளான நேற்று ராமநத்தம் வழியாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தனர். இதுகுறித்து சைக்கிள் யாத்திரை குழுவின் தலைவர் சங்கர் கூறும் போது, 2015-ம் ஆண்டு முதல் நாங்கள் சைக்கிளில் சென்று தரிசனம் செய்து வருகிறோம். சுமார் 750கி.மீ.துாரம் சைக்கிளிலேயே குழுவாக செல்கிறோம் என்றார்.

    • இன்று காலை தங்க தேரோட்டம்.
    • சிவப்பு இக்சோரா மலர் மாலையால் சுவாமி அலங்கரிப்பு

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சூரிய பிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பிரகாசமான சிவப்பு `இக்சோரா மலர்' மாலையால் அலங்கரிக்கப்பட்டு, சூரிய நாராயணமூர்த்தியாக எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதன் பிறகு இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சந்திரபிரபை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, நவநீத கிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் இரவு 9 மணியில் இருந்து 10 மணிவரை நவராத்திரி கொலு, ஆஸ்தானம் நடந்தது.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை)  தங்கத்தேரோட்டம், இரவு 8 மணியில் இருந்து 9 மணிவரை குதிரை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • 27 அடி உயர புஷ்பக விமான வீதிஉலா.
    • ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி பவனி.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 27 அடி உயர புஷ்பக விமான வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி கோவர்த்தனகிரி மலையை தாங்கும் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் எழுந்தருளி பவனி வந்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை 4 மணியளவில் புஷ்பக விமான வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, கோவர்த்தனகிரிமலைைய தனது சுண்டு விரலால் தாங்கும் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்திலும், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயாா்கள் ருக்மணி, சத்தியபாமா அலங்காரத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

     அனுமன் வாகனச் சேவையில் எழுந்தருளிய உற்சவர் மலையப்பசாமி சோர்வடைந்ததால், அவர் தனது உபய நாச்சியார்களுடன் புஷ்பக விமானத்தில் எழுந்தருளி இளைப்பாறினார்.

    இந்த தனித்துவமான புஷ்பக விமானம் தென்னங்குருத்தோலைகளால் தயாரிக்கப்பட்டது. புஷ்பக விமானம் 27 அடி உயரம், 15 அடி நீளம், 14 அடி அகலம் மற்றும் ஒரு டன் எடை கொண்டது. அதில் 6 வகையான பாரம்பரிய மலர்கள் பயன்படுத்தப்பட்டன.

    புஷ்பக விமானம் மூன்று நிலைகளில் வடிவமைக்கப்பட்டது. முதல் நிலையில் அஷ்ட லட்சுமிகள், 2-வது நிலையில் அஷ்ட நாகங்கள், 3-வது நிலையில் திருநாமங்கள், கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விமானத்தின் இருபுறமும் ஆஞ்சநேயர், கருடன் உருவம் அமைக்கப்பட்டது.

    தமிழகத்தில் சேலத்தைச் சேர்ந்த 20 பேரும், திருமலை-திருப்பதி தேவஸ்தான தோட்டத்துறையைச் சேர்ந்த 10 பேரும் அற்புதமான புஷ்பக விமானத்தைத் தயார் செய்தனர். அதை அவர்கள் வடிவமைக்க ஒரு வாரம் கடுமையாக உழைத்ததாக தோட்டத்துறை துணை இயக்குனர் சீனிவாசலு தெரிவித்தார்.

    சென்னையைச் சேர்ந்த காணிக்கையாளரும் பக்தருமான ராம்பிரசாத்பட் புஷ்பக விமானத்தின் கவர்ச்சிகரமான வடிவமைப்பை காணிக்கையாக வழங்கினார்.

    • பல்லக்கு வாகனத்திலும் இரவு கருட வாகனத்திலும் மலையப்பசாமி உலா.
    • நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு வாகனத்திலும் இரவு கருட வாகனத்திலும் மலையப்பசாமி உலா வந்தார்.இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை பல்லக்கு உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் உற்சவர் மலையப்பசாமி 'மோகினி அலங்கார'த்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

     அதேபோல் உற்சவர் ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் தங்கத் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி உடன் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாகனங்களுக்கு முன்னால் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    அதைத்தொடர்ந்து மாலை கருட சேவை நடந்தது. வழக்கமாக வருடாந்திர மற்றும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாக்களின்போது இரவு 7 மணியளவில் கருடசேவை தொடங்கி இரவு 12 மணிவரை நடக்கும். ஆனால், தற்போது நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் மாலை 6.30 மணிக்கு கருடசேவை தொடங்கி இரவு 12 மணிவரை நடந்தது.

    தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 6-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனுமன் வாகன வீதிஉலா, மதியம் 2 மணியளவில் வசந்தோற்சவம், மாலை 4 மணியளவில் புஷ்பக விமான வாகன வீதிஉலா, இரவு யானை வாகன வீதிஉலா நடக்கிறது.

    • கல்ப விருட்ச வாகனத்தில் சுவாமி வீதிஉலா
    • கோலாட்டம் போன்ற பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. இன்று இரவு `கருடசேவை' நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, `ராஜமன்னார்' அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகன வீதி உலாவுக்கு முன்னால் யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக சென்றன. மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. 11 கலாசார குழுக்களை சேர்ந்த 281 கலைஞர்கள் குஸ்ஸாடி நடனம், லம்படா நடனம், சுக்கா பஜனை மற்றும் கோலாட்டம் போன்ற பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆண்களும், பெண்களும் மகாவிஷ்ணு, லட்சுமி, பத்மாவதி தாயார் போன்ற வேடமிட்டு சென்றனர். வாகன வீதி உலா தொடங்கும் முன் பல்வேறு ஆன்மிக நூல்கள் வெளியிடப்பட்டன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதி உலா நடந்தது. அதில் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். நவராத்திரி பிரம்மோற்வ வழாவின் 5-வது நாளான இன்று (வியாழக்கிழமை) காலை பல்லக்கில் (மோகினி அலங்காரம்) வாகன வீதிஉலா, இரவு கருடசேவை நடக்கிறது.

    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், மாலையில் முத்துப்பந்தல் வாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா நடைபெற்றது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

     வாகன வீதி உலாவுக்கு முன் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலாவும், இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வபூலபால வாகன வீதிஉலாவும் நடக்கிறது.

    • சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
    • மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, சங்கு-சக்கரதாரியுடன் பத்ரிநாராயணர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக அணிவகுத்துக் கொண்டு செல்லப்பட்டன. மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது.

    • 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது.
    • இன்று இரவு ஹம்ச வாகன வீதிஉலா

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று காலை 9 மணியில் இருந்து 11 மணிவரை தங்க திருச்சி வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலைப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாகனவீதி உலாவுக்கு முன்னதாக கோலாட்டம் உள்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

    பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை சிறிய சேஷ வாகன வீதி உலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடக்கிறது.

    ×