திருப்பதி கோவிலுக்கு சைக்கிளில் பயணம்

2015-ம் ஆண்டு முதல் நாங்கள் சைக்கிளில் சென்று தரிசனம் செய்து வருகிறோம். சுமார் 750கி.மீ.துாரம் சைக்கிளிலேயே குழுவாக செல்கிறோம் என்றார்.
திருப்பதி கோவிலுக்கு சைக்கிளில் பயணம்
Published on

கடலூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச்சேர்ந்தவர்கள் சங்கர், தென்றல் மாரியப்பன், அப்பணசாமி, கருப்பசாமி, சங்கர், தங்கராஜ், ஆறுமுகம், அஜய்குமார். சுமை துாக்கும் தொழி லாளியான இவர்கள் திருப்பதி வெங்கடாஜலபதியின் தீவிரபக்தர்கள். இவர்கள் ஆண்டுதோறும் 21 நாட்கள் விரதமிருந்து, சைக்கிளிலேயே பயணமாக சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு விரதமிருந்து மாலை அணிந்து 8 பேர், கடந்த 11-ந் தேதி ஓடப்பட்டி பிள்ளையார்கோவிலில் இருந்து சைக்கிள் யாத்திரையை புறப்பட்டனர். 3-ம் நாளான நேற்று ராமநத்தம் வழியாக சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தனர். இதுகுறித்து சைக்கிள் யாத்திரை குழுவின் தலைவர் சங்கர் கூறும் போது, 2015-ம் ஆண்டு முதல் நாங்கள் சைக்கிளில் சென்று தரிசனம் செய்து வருகிறோம். சுமார் 750கி.மீ.துாரம் சைக்கிளிலேயே குழுவாக செல்கிறோம் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com