search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காதல்"

    • போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்
    • பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்

    புதுக்கோட்டை

    ஆலங்குடி அருகே கீரமங்கலம் தர்மர் கோவிலை சேர்ந்தவர் சரவணன் மகன் மணிகண்டன் (வயது 23). சிவகங்கை மாவட்டம், புதுவயல் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கணேசன் மகள் பிரதீபா (20). இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர்.

    இந்நிலையில் பிரதீபாவை காணவில்லை என்று அவரது தாய் உமா சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே மணிகண்டன்-பிரதீபா இருவரும் பழனி கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து ஆலங்குடி போலீசார் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் காதல் ஜோடி இருவரையும் சாக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர்.
    • காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    பெய்ஜிங்:

    காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன. என்றாலும் அதிலும் பல்வேறு பாதிப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன.

    சீனாவை சேர்ந்த ஒரு இளம் காதல் ஜோடி அடிக்கடி பல இடங்களுக்கு சென்று தங்களின் காதலை வளர்த்து வந்தனர். இந்தநிலையில் இருவரும் சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு இருவரும் 'லிப்லாக்' எனப்படும் உதட்டு முத்தம் கொடுத்துள்ளனர்.

    இருவரும் உதட்டோடு உதட்டை வைத்து சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் முத்தம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் திடீரென்று காதலனின் காதில் ஊசி குத்துவது போன்று வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உதட்டு முத்தத்தை நிறுத்திவிட்டு அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் காதலனின் காதில் ஏற்பட்ட வலி நேரம் செல்ல செல்ல அதிகரித்ததோடு, அவரின் கேட்கும் திறனும் குறைந்துள்ளது.

    இதையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவ மனைக்கு சென்றனர். அங்கு காதலனுக்கு டாக்டர்கள் பரிசோதனைகள் மேற்கொண்டனர். அப்போது அவரது காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியை பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் சிறு அளவிலான 2 துளைகள் இருப்பது தெரியவந்தது. அதுதான் அவரது காது வலிக்கு காரணம் என்பதை டாக்டர்கள் கண்டறிந்தனர். உணர்ச்சிவசப்பட்டு கொடுக்கும் முத்தம் காதுக்குள் காற்றழுத்தத்தில் விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்றனர்.

    இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் முழுமையாக குணமடைய 2 மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். காதலன் காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனையே இழந்த சம்பவம் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    • விஜய் மது பழக்கத்திற்க்கு அடிமையானதால் காதலி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாம்பரம் அடுத்த ராஜகீழ்பாக்கம் அண்ணா தெருவை சேர்ந்தவர் விஜய் (27). இவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் விஜய் மது பழக்கத்திற்க்கு அடிமையானதால் காதலி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த விஜய் எறும்புகளை அழிக்க பயன்படுத்தும் டர்பண்ட் ஆயிலை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    • வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.
    • சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா.

    ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

    அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

    கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

    சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

    புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

    பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

    சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

    சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக்கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை."

    இப்போது ஞானி சொன்னார்,

    "இது தான் திருமணம்!".

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முகமது ஷோயப் இளம்பெண்ணின் பெற்றோரின் கண்ணில் படாமல் இருப்பதற்காக மறைவான பகுதிக்கு ஓடினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத் போர பண்டாவை சேர்ந்தவர் முகமது சவுகத் அலி. இவரது மகன் முகமது ஷோயப் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள பேக்கரியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    தினமும் காலையில் வேலைக்கு செல்லும் முகமது ஷோயப் நள்ளிரவு ஒரு மணிக்கு வீடு திரும்புவது வழக்கம். அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவரை முகமது ஷோயப் காதலித்து வந்தார்.

    இந்த நிலையில் நள்ளிரவு 1 மணிக்கு வேலையில் இருந்து வந்த முகமது ஷோயப் காதலியை ரகசியமாக சந்திக்க முடிவு செய்தார். முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு காதலி வீட்டில் 3-வது மாடிக்கு சென்றார்.

    அங்கு வந்த காதலியுடன் சுவாரிசியமாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது இளம் பெண்ணின் பெற்றோர் திடீரென மாடிக்கு வந்தனர்.

    இதனை கண்ட முகமது ஷோயப் இளம்பெண்ணின் பெற்றோரின் கண்ணில் படாமல் இருப்பதற்காக மறைவான பகுதிக்கு ஓடினார்.

    அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கால் தடுக்கி 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார். அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக முகமது ஷோயாப்பின் தந்தை முகமது சவுகத் அலிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அலறியடித்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்த முகமது சவுகத் அலி மற்றும் அவரது உறவினர்கள் முகமது ஷோயப்பை மீட்டு சிகிச்சைக்காக உஸ்மானியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போர பண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் திரும்பி வரவில்லை.
    • கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகிவந்தது தெரியவந்தது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த காட்டாவூர் பகுதியை சேர்ந்த 28 வயது இளம் பெண் கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2019 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற இளம்பெண் பின்னர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவிலலை.

    இதுகுறித்து பொன்னேரி போலீஸ்நிலையத்தில் இளம்பெண்ணின் கணவர் புகார் செய்தார். விசாரணையில் மாயமான இளம்பெண் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் வாலிபர் ஒருவருடன் பழகிவந்தது தெரியவந்தது.

    இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது. இது தொடர்பாக போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லிம் நகரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி மாயமானார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.
    • இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே நீங்காரவிளை, முளகுமூடு, பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவர் சினேகா (25) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார்.

    இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது மது அருந்தி விட்டு வந்து மனைவி சினேகாவிடம் தகராறு செய்வது வழக்கம்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வந்து மனைவி சினேகாவை அடித்து கொடுமை படுத்தி உள்ளார். அவர் தனது 3 பிள்ளைகளையும் அழைத் துக் கொண்டு தன் தந்தை வீட்டுக்கு சென்றார். மனைவி தன்னை விட்டு சென்றதை எண்ணி மன வேதனையில் சுரேஷ் இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறி கம்பியில் தூக்கில் தொங்கி னார்.

    இதை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்து சினேகாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்து உடனே திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சினேகா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள்.
    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    சென்னை வடபழனியைச் சேர்ந்த 17 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    அவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் நேரில் சந்தித்து பேசினார்கள். இந்நிலையில் வீட்டிலிருந்த மாணவி மாயமானார். இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினார்கள்.

    ஆனால் அவரைப் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடினார்கள். அப்போது மாணவி வாலிபருடன் மாயமாகி இருப்பது தெரிய வந்தது.

    தொடர்ந்து மாணவியின் செல்போனை போலீசார் ஆய்வு செய்து வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக அவர் செல்போனில் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். இதனால் அவரை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. ஒரு மாதமாக தேடியும் மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் மாணவி, தனது தோழி ஒருவருக்கு செல்போனில் பேசினார். அவர் தனது தோழியிடம் காதலனை நம்பி வந்ததாகவும் அவர் தனது நகையை விற்று செலவு செய்து விட்டு, தற்பொழுது கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறினார். மேலும் பக்கத்து வீட்டு பெண் ஒருவரின் செல்போனை வாங்கி பேசுவதாக கூறியதுடன் தான் குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    இந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் தன்னால் கூற இயலவில்லை. எனவே பெற்றோரிடம் தெரிவித்து தன்னை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க பேசினார். இதையடுத்து மாணவியை அவரது தோழி சமாதானம் செய்தார். மேலும் மாணவியின் பெற்றோரிடம் நடந்த சம்பவத்ததையும் கூறினார். அவர்கள் இந்த தகவலை போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர்.

    உடனே சென்னை போலீசார், வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மாணவியை மீட்க வடசேரி போலீசார் நடவடிக்கை எடுத்தனர். மாணவி கூறிய தகவலின் அடிப்படையில் வடசேரி பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மாணவி இருந்தது தெரிய வந்தது. அவரை மீட்ட போலீசார், அங்கு இருந்த வாலிபரையும் பிடித்தனர். மீட்கப்பட்ட மாணவியையும் அந்த வாலிபரையும் போலீசார் வடசேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    மாணவி மீட்கப்பட்டது குறித்த தகவல் சென்னை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அவர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்துக் கொண்டு இன்று காலை வடசேரி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவியுடன் சமூக வலைதளம் மூலமாக பழகி தனது நண்பர் ஒருவரது ஏற்பாட்டில் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்ததாகவும் நாகர்கோவிலில் வாடகை வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் வாலிபர் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் என்ற தகவலும் தெரியவந்தது.

    மாணவிக்கு 17 வயதே ஆவதால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சம்பந்தப்பட்ட வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    வடசேரி வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவியை போலீசார் நேற்று இரவு விசாரணைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இன்று காலை மீண்டும் மாணவி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது சென்னையில் இருந்து போலீசாரும் மாணவியின் பெற்றோரும் அங்கு வந்தனர். மாணவி அவரது பெற்றோரை பார்த்ததும் கதறி அழுதார். இதையடுத்து அவர்கள் அவரை சமாதானம் செய்தனர். வாலிபரை நம்பி எனது வாழ்க்கையை இழந்து விட்டேன் என்று கூறி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

    வடசேரியில் வாடகை வீட்டில் மீட்கப்பட்ட மாணவிக்கு 17 வயதே ஆவதால் அந்த மாணவியரிடம் குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. மீட்கப்பட்ட மாணவியிடம் நடந்த சம்பவத்தை அவர்கள் கேட்டறிந்தனர். விசாரணையின் போது அவரது பெற்றோர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார்.
    • பேட்டி டுவிட்டரில் வைரலாகி 2,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.

    காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார்.

    இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவரிடம் போனை திருப்பி கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த இமானுவேலா, திருடனை மன்னித்ததோடு அவருடன் நட்பாக பழக தொடங்கினார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறி உள்ளது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாக கூறுகிறார்கள். இவர்களது பேட்டி டுவிட்டரில் வைரலாகி 2,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர், அன்பால் எதையும் சாதிக்க முடியும் எனவும், மற்றொருவர் இது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது, ஆனால் உண்மையானது என பதிவிட்டுள்ளார்.

    • காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • மாணவியின் பெற்றோர் மகளை தங்களுடன் வா என அழைத்தனர்.

    கோவை:

    கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் 23 வயது மாணவி.

    இவர் கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள தனியார் வேளாண் கல்லூரியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் படித்து வந்தார்.

    இந்த நிலையில் மாணவிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இடுக்கியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்க்கும் அனீஸ் (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மாணவி தனது காதலை தொடர்ந்து வந்தார்.

    நேற்றுடன் மாணவியின் பட்டப்படிப்பு முடிந்தது. எனவே தன்னை அழைத்து செல்ல வருமாறு மாணவி அவரது காதலனுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதனையடுத்து அனீஸ் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 9 பேருடன் கல்லூரிக்கு வந்தார்.

    மாணவியின் பெற்றோரும் தங்களது மகளை அழைத்து செல்வதற்காக கல்லூரிக்கு வந்திருந்தனர்.

    மாணவி தனது பெற்றோர் வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. மாணவியின் பெற்றோர் மகளை தங்களுடன் வா என அழைத்தனர். ஆனால் அவருக்கு தான் வீட்டிற்கு சென்றால் காதலை மறந்து விடு என்பார்கள்.

    அத்துடன் வேறு யாருக்காவது தன்னை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என நினைத்து பயந்தார். இதனால் அவர்கள் கூப்பிட்டதற்கு மறுப்பு தெரிவித்தார்.

    நான் உங்களுடன் வரமாட்டேன். எனது காதலருடன் தான் செல்வேன் என கூறினார். இதனால் பெற்றோர் மீண்டும் அவரிடம் பேசி பார்த்தனர். ஆனால் மாணவி தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார்.

    இதனை பார்த்த கல்லூரி நிர்வாகத்தினர் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். கல்லூரி நிர்வாகம் பெற்றோருடனே செல்லவே நாங்கள் அனுமதிப்போம் என தெரிவித்தனர். அப்போதும் அவர் பெற்றோருடன் செல்வதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

    இதுபற்றிய தகவல் ஆனைமலை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவி, அவரது பெற்றோர், மாணவியின் காதலன், காதலனின் பெற்றோரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போதும் மாணவி தான் காதலனுடன் தான் செல்வேன். பெற்றோருடன் செல்லமாட்டேன் என தெரிவித்ததால், போலீசார் மாணவியை அவரது காதலனுடன் அனுப்பி வைத்தனர்.

    • அஞ்சு யாருக்கும் தெரிவிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்றது தவறு.
    • எனது மருமகன் மிகவும் எளிமையான நபர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலம் கைலோர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு அரவிந்த் குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தற்போது ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.

    அஞ்சுவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா (29) என்ற வாலிபருடன் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில் அஞ்சு குடும்பத்தினரிடம் எதுவும் கூறாமல் முகநூல் நண்பரை பார்க்க முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்று விட்டார்.

    இதனால் அவரது கணவர் அரவிந்த்குமார் மற்றும் குழந்தைகள் அஞ்சு எப்போது வருவார் என தெரியாமல் தவிப்புடன் காத்திருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் நஸ்ருல்லாவிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர், அஞ்சுவை மணக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அவரின் ஒரு மாத கால விசா முடிந்ததும் அவர் இந்தியா திரும்பி விடுவார் என கூறியுள்ளார்.

    இந்நிலையில் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தேகன்பூர் நகரில் வசிக்கும் அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அஞ்சு யாருக்கும் தெரிவிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்றது தவறு. அவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவள் எப்போது பாகிஸ்தான் சென்றாள் என்பது எனக்கு தெரியாது.

    அஞ்சு 3 வயதில் இருந்தே உத்தரபிரேதசத்தில் உள்ள ஜலான் மாவட்டத்தில் அவரது தாய்மாமாவுடன்தான் தங்கி இருந்தார். அவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அஞ்சுவுக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்தது. இதனால் அடிக்கடி விசித்திரமான தன்மைகளை செய்து வந்தார்.

    எனவே நான் அவளை கண்டுகொள்வது கிடையாது. அதன் பின்னர் அஞ்சுவுக்கு திருமணம் நடந்ததை அறிந்தேன். எனது மருமகன் மிகவும் எளிமையான நபர். ஆனால் அஞ்சு விசித்திரமானவள். அவள் மன உளைச்சலில் இருக்கிறாள் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலில் விழுந்துள்ளார்.
    • அஞ்சு முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்றுள்ளார்

    பெஷாவர் :

    'பப்ஜி' காதலனை தேடி சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், 'இந்தியாவில் வாழ அனுமதிக்க வேண்டும்' என்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

    அதற்கு எதிர்மாறான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சு (வயது 34) என்ற பெண், திருமணமாகி ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் வசிக்கிறார்.

    இவரும், பாகிஸ்தான் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள அப்பர் திர் மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்ற வாலிபரும் முகநூல் மூலம் நண்பர்களாகினர். இந்த நிலையில் நஸ்ருல்லாவை காண, குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் அஞ்சு முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அந்த நண்பர் வீட்டில் தங்கியுள்ளார்.

    அஞ்சுவும், அவரை விசாரித்த பாகிஸ்தான் போலீஸ் அதிகாரியும், அவர் நஸ்ருல்லாவை காதலிப்பதாக கூறியுள்ளனர்.

    ஆனால் அஞ்சுவை மணக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அவரின் ஒரு மாத கால விசா முடிந்தபின் ஆகஸ்டு 20-ந்தேதி இந்தியா திரும்பிவிடுவார் என்றும் நஸ்ருல்லா கூறியுள்ளார்.

    அஞ்சுவை எதிர்பார்த்து ராஜஸ்தானில் அவரது கணவர் அரவிந்த்குமாரும் தங்கள் 15 வயது மகள், 6 வயது மகனுடன் காத்திருக்கிறார்.

    ×