search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian woman"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரத்தன்புரா கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் நேற்று ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு வந்தார்.
    • பெண்ணிடம் பாஸ்போர்ட்டு, விசா மற்றும் பயணம் செய்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சு என்ற இளம்பெண் தனது பேஸ்புக் காதலன் நஸ்ருல்லாவை தேடி பாகிஸ்தான் சென்றார். கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற அஞ்சு மதம் மாறி நஸ்ருல் லாவை திருமணம் செய்து கொண்டதாக பரப்பரப்பான தகவல் வெளியானது. இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராதநிலையில் அதே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு இளம் பெண் காதலனை தேடி பாகிஸ்தான் செல்ல முயன்ற சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டம் ரத்தன்புரா கிராமத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் நேற்று ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர் டிக்கெட் கவுண்டருக்கு சென்று பாகிஸ்தான் செல்ல டிக்கெட் வேண்டும் என கேட்டார். இதைப்பார்த்து சந்தேகம் அடைந்த ஊழியர் இது பற்றி அங்கிருந்த விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் கூறினார்.

    இதையடுத்து பாதுகாப்பு படையினர் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அந்த பெண்ணிடம் பாஸ்போர்ட்டு, விசா மற்றும் பயணம் செய்வதற்கான எந்தவித ஆவணங்களும் இல்லை.இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் துருவி.துருவி விசாரணை நடத்தியதில் தனக்கு சொந்த ஊர் பாகிஸ்தான் என்றும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்து தனது அத்தை வீட்டில் தங்கி இருந்ததாகவும், தற்போது மீண்டும் பாகிஸ்தான் திரும்பி செல்வதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோரை அழைத்து விசாரித்த போது அவள் கூறியது அனைத்தும் பொய் என தெரிந்தது. பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது காதலனை சந்திக்க அவர் அந்த நாட்டுக்கு செல்ல முயன்றது அம்பலமானது. உடனே விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பெண்ணை ஜெய்ப்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நஸ்ருல்லாவுடன் சுற்றுலாத் தலங்களுக்கு உல்லாச பயணம் சென்றார் அஞ்சு.
    • இந்தியாவில் அவரது கணவரும், இரு குழந்தைகளும்தான் தவித்து நிற்கின்றனர்.

    பெஷாவர் :

    கணவர், குழந்தைகளை கைவிட்டு பாகிஸ்தான் சென்ற இந்திய பெண் மதம் மாறி முகநூல் காதலரை கோர்ட்டில் திருமணம் செய்துகொண்டார்.

    காதலரை நாடி 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், இங்கேயே வாழ ஜனாதிபதிக்கு கருணை மனு அளித்துவிட்டு காத்திருக்கிறார். இதை அப்படியே புரட்டிப்போட்டது போல இருக்கிறது, அஞ்சுவின் கதை.

    உத்தரபிரதேச மாநிலம் கைலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்த அஞ்சு (வயது 34).

    இவர் திருமணத்துக்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் கணவர் அரவிந்த்குமாருடன் வசித்தார். இந்த தம்பதிக்கு 15 வயது மகளும், 6 வயது மகனும் உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு அஞ்சுவுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்பவருடன் முகநூலில் (பேஸ்புக்) அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் அவர்கள் காதலிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை, ஜெய்ப்பூர் நகருக்கு சென்றுவருவதாக கூறி வீட்டை விட்டு கிளம்பிச் சென்றார் அஞ்சு. ஆனால் அவர் சென்றது, பாகிஸ்தானில் உள்ள தனது முகநூல் காதலரை காண்பதற்கு. அதற்காக, குடும்பத்தினருக்கு தெரியாமல், முறைப்படி விண்ணப்பித்து ஒரு மாத விசாவையும் அஞ்சு பெற்றுள்ளார். நஸ்ருல்லாவின் சொந்த ஊர், கைபர் பக்துங்வா மாகாணம் அப்பர் திர்மாவட்டத்தில் உள்ள குல்ஷோ என்ற குக்கிராமம். அறிவியல் பட்டதாரியான நஸ்ருல்லா, 5 சகோதரர்களில் இளையவர். திருமணம் ஆகாதவர்.

    நஸ்ருல்லா வீட்டுக்கு சென்று தங்கிய அஞ்சு, அங்கிருந்தபடி, தான் அவரை காதலிப்பதாக பேட்டியும் அளித்தார். ஆனால் 'தோழி'யான அஞ்சுவை திருமணம் செய்யும் எண்ணமில்லை என்றும், அவர் இந்தியாவுக்குத் திரும்பிச் சென்றுவிடுவார் என்றும் நஸ்ருல்லா கூறினார்.

    ஆனால் ஒரே நாளில் அதிரடியாக காட்சிகள் மாறின.

    'பாத்திமா' என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு மாறிய 'அஞ்சு', நேற்று மாவட்ட கோர்ட்டில் நஸ்ருல்லாவின் உறவினர்கள், வக்கீல்கள், போலீசார் முன்னிலையில் முறைப்படி அவரை கரம் பிடித்தார். திருமணத்துக்கு பிறகு அவர்கள் வீடு திரும்பினர்.

    நேற்று முன்தினம், நஸ்ருல்லாவுடன் கைபர் பக்துங்வா சுற்றுலாத் தலங்களுக்கு உல்லாச பயணம் சென்றார் அஞ்சு. அங்கு போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில், கரம் கோர்த்தபடி அந்த ஜோடி உற்சாகமாக உலா வந்தது.

    இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள போவுனா கிராமத்தில் அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ் பேட்டி அளித்தார். அப்போது அவர், 'எனது மகளுடன் கடந்த 20 ஆண்டுகளாக எனக்கு நேரடித் தொடர்பில்லை. அவர் மனரீதியாக பிரச்சினை உள்ளவர். விசித்திரமான நடத்தை கொண்டவர். என் மருமகன் எளிமையான மனிதர். அவர் மீது தவறு எதுவும் கிடையாது' என்றார்.

    இதற்கிடையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அஞ்சு, 'நான் பாகிஸ்தானில் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறேன். இந்தியாவில் உள்ள எனது உறவினர்களையும், குழந்தைகளையும் ஊடகத்தினர் யாரும் தொந்தரவுபடுத்த வேண்டாம்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

    புதிய மண்ணில், புது வாழ்வை தொடங்கிவிட்டார், 'பாத்திமா' ஆகிவிட்ட 'அஞ்சு'. ஆனால் இந்தியாவில் அவரது கணவரும், இரு குழந்தைகளும்தான் தவித்து நிற்கின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அஞ்சு யாருக்கும் தெரிவிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்றது தவறு.
    • எனது மருமகன் மிகவும் எளிமையான நபர்.

    புதுடெல்லி:

    உத்தரபிரதேசம் மாநிலம் கைலோர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவருக்கு அரவிந்த் குமார் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தற்போது ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.

    அஞ்சுவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா (29) என்ற வாலிபருடன் முகநூல் (பேஸ்புக்) மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில் அஞ்சு குடும்பத்தினரிடம் எதுவும் கூறாமல் முகநூல் நண்பரை பார்க்க முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்று விட்டார்.

    இதனால் அவரது கணவர் அரவிந்த்குமார் மற்றும் குழந்தைகள் அஞ்சு எப்போது வருவார் என தெரியாமல் தவிப்புடன் காத்திருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் போலீஸ் அதிகாரிகள் நஸ்ருல்லாவிடம் விசாரித்தனர்.

    அப்போது அவர், அஞ்சுவை மணக்கும் எண்ணம் எனக்கு இல்லை. அவரின் ஒரு மாத கால விசா முடிந்ததும் அவர் இந்தியா திரும்பி விடுவார் என கூறியுள்ளார்.

    இந்நிலையில் குவாலியர் மாவட்டத்தில் உள்ள தேகன்பூர் நகரில் வசிக்கும் அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அஞ்சு யாருக்கும் தெரிவிக்காமல் பாகிஸ்தானுக்கு சென்றது தவறு. அவருக்கு கணவர் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. அவள் எப்போது பாகிஸ்தான் சென்றாள் என்பது எனக்கு தெரியாது.

    அஞ்சு 3 வயதில் இருந்தே உத்தரபிரேதசத்தில் உள்ள ஜலான் மாவட்டத்தில் அவரது தாய்மாமாவுடன்தான் தங்கி இருந்தார். அவர் 12-ம் வகுப்பு படித்து விட்டு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

    அஞ்சுவுக்கு சற்று மனநிலை பாதிப்பு இருந்தது. இதனால் அடிக்கடி விசித்திரமான தன்மைகளை செய்து வந்தார்.

    எனவே நான் அவளை கண்டுகொள்வது கிடையாது. அதன் பின்னர் அஞ்சுவுக்கு திருமணம் நடந்ததை அறிந்தேன். எனது மருமகன் மிகவும் எளிமையான நபர். ஆனால் அஞ்சு விசித்திரமானவள். அவள் மன உளைச்சலில் இருக்கிறாள் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு காதலில் விழுந்துள்ளார்.
    • அஞ்சு முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்றுள்ளார்

    பெஷாவர் :

    'பப்ஜி' காதலனை தேடி சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், 'இந்தியாவில் வாழ அனுமதிக்க வேண்டும்' என்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

    அதற்கு எதிர்மாறான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

    உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஞ்சு (வயது 34) என்ற பெண், திருமணமாகி ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் வசிக்கிறார்.

    இவரும், பாகிஸ்தான் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள அப்பர் திர் மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ருல்லா (வயது 29) என்ற வாலிபரும் முகநூல் மூலம் நண்பர்களாகினர். இந்த நிலையில் நஸ்ருல்லாவை காண, குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் அஞ்சு முறைப்படி விசா பெற்று பாகிஸ்தான் சென்றுள்ளார். அங்கு அந்த நண்பர் வீட்டில் தங்கியுள்ளார்.

    அஞ்சுவும், அவரை விசாரித்த பாகிஸ்தான் போலீஸ் அதிகாரியும், அவர் நஸ்ருல்லாவை காதலிப்பதாக கூறியுள்ளனர்.

    ஆனால் அஞ்சுவை மணக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும், அவரின் ஒரு மாத கால விசா முடிந்தபின் ஆகஸ்டு 20-ந்தேதி இந்தியா திரும்பிவிடுவார் என்றும் நஸ்ருல்லா கூறியுள்ளார்.

    அஞ்சுவை எதிர்பார்த்து ராஜஸ்தானில் அவரது கணவர் அரவிந்த்குமாரும் தங்கள் 15 வயது மகள், 6 வயது மகனுடன் காத்திருக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டு, அதன்பின் காதலில் விழுந்துள்ளார்
    • பாஸ்போர்ட் உள்ளதால் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை

    திருமணம் முடிந்த இந்திய பெண்ணுக்கு, பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை பார்ப்பதற்காக பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் நடைபெற்றது.

    உத்தர பிரதேசம் கைலோர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவர் தற்போது ராஜஸ்தானில் உள்ள அல்வார் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது கணவர் அரவிந்த். தற்போது அஞ்சு பாகிஸ்தானில் இருப்பது தெரியவந்துள்ளது.

    பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணம் கைபர் பக்துன்வாவில் உள்ள, அவரது நண்பரை பார்க்க சென்றுள்ளார். அப்பர் திர் மாவட்ட போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, பேஸ்புக் மூலமாக நஸ்ருல்லா (வயது 29) என்பவருடன் நட்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவர் மீது காதல் கொண்டதால், அவரை பார்க்க பாகிஸ்தான் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதால், அவரை போலீசார் விடுவித்துள்ளனர். தற்போது அஞ்சு பாகிஸ்தானில் உள்ளார்.

    இந்த செய்தி வெளிவர ராஜஸ்தான் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது, அவரது கணவர் அரவிந்த் கூறுகையில் ''அஞ்சு கடந்த வியாழக்கிழமை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அவரிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் உள்ளது. தனது நண்பரை பார்க்க செல்வதாக சென்றார். இரண்டு நாட்களுக்கு முன் அவரிடம் வாட்ஸ்அப் மூலம் பேசினேன். அப்போது அவர் லாகூரில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து புகார் ஏதும் செய்யவில்லை'' என்றார்.

    அஞ்சுவிற்கு 15 வயதில் பெண் குழந்தையும், 6 வயதில் மகனும் உள்ளனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர் என்ற திருமணம் முடிந்த பெண், பப்ஜி விளையாட்டு மூலம் இந்திய நபர் மீது காதல் ஏற்பட்டு இந்தியாவுக்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இந்திய குடியுரிமை பெற முயற்சி செய்து வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விபசாரத்தில் ஈடுபட வற்புறுத்தியதாக தம்பதி மீது பொய் புகார் கொடுத்த இந்திய பெண்ணுக்கு சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    சிங்கப்பூர்:

    இந்தியாவை சேர்ந்தவர் கலைச்செல்வி முருகையன் (24). இவர் சிங்கப்பூரில் தனது கணவருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில் அவரை விட்டு கணவர் பிரிந்து விட்டார்.

    எனவே சிங்கப்பூரில் வாழவழி தெரியாத அவர் அங்கு தனக்கு பழக்கமான கணவன், மனைவியிடம் உதவி கேட்டார். அப்போது அவர்கள் தன்னை வலுக்கட்டாயமாக விபசார தொழிலில் ஈடுபடுத்த முயன்றதாக கலைச்செல்வி மத்திய போலீஸ் டிவிசன் இன்ஸ்பெக்டர் முகமது ரபி, முகமது ஈசாக்கிடம் புகார் கொடுத்தார்.

    எனவே கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே புகார் மீது நடத்தப்பட்ட விசாரணையில் தம்பதி மீது கலைச்செல்வி கொடுத்தது பொய் புகார் என தெரிய வந்தது.

    அதைதொடர்ந்து கலைச்செல்வி மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 2 வாரங்கள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

    பொய் புகார் வழக்கில் கலைச்செல்விக்கு ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், சிங்கப்பூர் பணம் 5 ஆயிரம் அபராதமும் விதிக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினரை காப்பாற்றும் பொறுப்பு தனக்கு உள்ளது என்றும், எனவே தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறும், கலைச்செல்வி கோரிக்கை விடுத்தார். எனவே, அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அயர்லாந்தில் புதிதாக உருவாக்கப்படும் கருக்கலைப்பு தடை சட்டத்துக்கு இந்திய பெண் சவீதா பெயரை சூட்ட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#IrishAbortionLaws
    டியூப்ளின்:

    அயர்லாந்தில் கருக் கலைப்பு தடை செய்யப்பட்டிருந்தது. இதனால் அங்கு தங்கி இருந்த இந்திய பெண் சவீதா ஹலப்பனாவர் கடந்த 2012-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

    அதைதொடர்ந்து அயர்லாந்தில் இச்சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய விதிமுறைகளுடன் சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.

    மக்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மெஜாரிட்டி மக்கள் கருக்கலைப்பு தடை சட்டத்தை ரத்து செய்ய ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.



    இதனால் இச்சட்டம் ரத்து ஆகி புதிய அம்சங்களுடன் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு அது நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் லியோ வராத்கர் அறிவித்துள்ளார்.

    இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்படும் இச்சட்டத்துக்கு இந்திய பெண் சவீதா பெயரை சூட்ட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.#IrishAbortionLaws
    ×