search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்"

    • மீன் பிடித்து விட்டு கரைத்திரும்பிய போது கடலில் தவறி விழுந்துள்ளார்.
    • 20 மணி நேரத்திற்கு பிறகு மாயமான மாணவனின் உடல் மீட்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், காமே ஸ்வரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் ஞானசேகர் (வயது 20) இவர் நாகை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் விடுமுறை நாளான நேற்று தனது தாத்தா கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான மீன்பிடிப் படகில் தனது தந்தை சந்திரசேகரனுடன் மீன்பிடிக்க அதிகாலை கடலுக்கு சென்றுள்ளனர்.

    மீன் பிடித்து விட்டு கரைத்திரும்பிய போது சுமார் 50 மீட்டர் தூரத்தில் பொறியியல் படித்து வரும் ஞானசேகர், கடல் அலையின் வேகத்தால் தவறி கடலில் விழுந்து மாயமாகியுள்ளார்.

    தகவல் அறிந்த வேளாங்க ண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் கீழையூர் கடலோர காவல் குழும போலீசாருடன் மீன்வர்களும் படகு மூலம் மாயமான இளைஞரை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் மாணவன் கிடைக்காததால் மீண்டும் இன்று அதிகாலையில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட படகுகளின் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் கடற்க ரையோரம் நண்டு கள் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த வலையில் உயிரிழந்த நிலையில் மாணவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

    சுமார் 20 மணி நேரம் தேடலுக்கு பிறகு கடலில் மாயமான மாணவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

    விடுமுறை நாளில் தனது தாத்தாவின் படகில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு தொடக்கப்பள்ளியில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான மாணவர் சேர்க்கை நடப்பதாக சிவகங்கை கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    சிவகங்கை

    சிவகங்கையில் பார்வைத் திறன் குறையுடை யோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 2023-24-ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 5 முதல் 15 வயது வரை உள்ள பார்வையற்ற, குறைபார்வையுடைய மாணவ-மாணவிகள் சேர்ந்து படிக்கலாம். விடுதி சார்ந்த இப்பள்ளியில் உணவு, உடை இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.

    இந்த பள்ளியில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்க ளால் பிரெய்லி முறையில் கல்வியுடன் உடற்கல்வி மற்றம் கணினி பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. விடுதியில் பார்வையற்ற மாணவர்களை கனிவுடன் கவனிக்க விடுதி பணியா ளர்கள் உள்ளனர். இப்பள்ளியில் சேர தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விபரங்களுக்கு இளையான்குடி சாலை அம்பேத்கர் சிலை அருகில் உள்ள பார்வைத்திறன் குறையுடை யோருக்கான அரசு தொடக்கப் பள்ளியை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    • அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் மாணவ, மாணவிகள் ஏற்றி வரப்பட்டதால் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.
    • கருணா என்ற 6-ம் வகுப்பு மாணவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுதிணறி மயக்கம் அடைந்தார்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி பகுதியில் புனித இஞ்ஞாசியர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 800 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்கள் தினமும் பள்ளிக்கு சொந்தமான பஸ், மினி பஸ் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகிறார்கள்.

    வழக்கம் போல் இன்று காலையும் பள்ளிக்கு சொந்தமான மினிபஸ்சித்தார், மூன்று ரோடு, சேவானூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஒரே நேரத்தில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

    அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் மாணவ, மாணவிகள் ஏற்றி வரப்பட்டதால் பஸ்சில் இருந்த மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர். கூட்ட நெரிசலில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இந்நிலையில் பள்ளி பஸ் அம்மாபேட்டை அருகே உள்ள சாரி கொட்டாய் என்ற இடம் அருகே இன்று காலை 8.30மணியளவில் வந்த போது சேவானூர் தழுக்கனூர் பகுதியை சேர்ந்த கருணா (11) என்ற 6-ம் வகுப்பு மாணவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுதிணறி மயக்கம் அடைந்தார்.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மாணவ, மாணவிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து மினி பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

    பின்னர் மயக்கம் அடை ந்த மாணவன் கருணாவை சிகிச்சைக்காக அருகில் இருந்த பொது மக்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    தொடர்ந்து பொது மக்களின் எதிர்ப்பு காரணமாக பாதி மாணவ, மாணவிகள் மினிபஸ்சில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர். பின்னர் 2 முறை மாணவ, மாணவிகளை மினி பஸ் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மலுமிச்சம்பட்டியில் இருந்து சுந்தராபுரம் நோக்கி ஒரு கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது.
    • மக்கள் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    குனியமுத்தூர்,

    கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வழக்கமாக கார், லாரி, மோட்டார் சைக்கிள்கள், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் கோவைக்கும், பொள்ளாச்சிக்கும் சென்ற வண்ணம் இருந்தன.

    அப்போது அந்த சாலையில் மலுமிச்சம்பட்டியில் இருந்து சுந்தராபுரம் நோக்கி ஒரு கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த காரில் 2 வாலிபர்கள் இருந்தனர்.

    எல்.ஐ.சி காலனி அருகே வந்தபோது கார் இடது புறமும், வலது புறமும் வளைந்து நெளிந்து சென்றது.

    மேலும் அதிவேகத்திலும் கார் வந்ததால் அந்த சாலையில் வந்த மற்ற வாகன ஓட்டிகளும், சாலை யோரம் நடந்து சென்றவர்களும் அச்சம் அடைந்தனர்.

    பின்னர் வேகமாக சென்ற அந்த காரை பின்னால் வாகனங்களில் வந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அனைவரும் சேர்ந்து அந்த காரை மடக்கி பிடித்தனர்.

    அப்போது காரை ஓட்டி வந்த வாலிபர் மதுபோதையில் இருந்தார். இதையடுத்து மக்கள் அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கார் நடுரோட்டில் நின்றதால் அந்த சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    பின்னர் அந்த வாலிபர் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்து, ரெயில் நிலை வாகன நிறுத்தும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.தொடர்ந்து அந்த வாலிபர் யார் என்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த வாலிபர் சுந்தராபுரம் காந்திநகரை சேர்ந்த விஸ்வநாதன்(21) என்பதும், கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மாணவர் மீது வழக்கு பதிவு செய்து, காரை வேகமாகவும், மதுபோதையில் இயக்கி வந்ததற்காகவும் அபராதம் விதித்தனர். தொடர்ந்து அந்த மாணவருக்கு இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கை விடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் காரணமாக கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் வாகனபோக்குவரத்து தடைபட்டது. போலீசார் அதனை சரி செய்த பின்னர் வாகனங்கள் அங்கிருந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • டெல்லியில் ஏராளமான மாணவர்கள் இடையிலேயே படிப்பை நிறுத்துகின்றனர்.
    • ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவர்கள் இடையிலேயே படிப்பை நிறுத்துவது தொடர்ந்து குறைந்து வருகிறது.

    புதுடெல்லி :

    நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் பள்ளிகளில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பான தகவல்கள் மத்திய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் வாரிய (பிஏபி) கூட்ட நடவடிக்கை குறிப்புகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

    அதில் தெரிய வந்துள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

    * 2021-22-ம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளி அளவில் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் இடையில் நிற்பது பீகார் மாநிலத்தில் 20.46 சதவீதமாகவும், குஜராத்தில் 17.85 சதவீதமாகவும், அசாமில் 20.3 சதவீதமாகவும், ஆந்திராவில் 16.7 சதவீதமாகவும், பஞ்சாபில் 17.2 சதவீதமாகவும், மேகாலயாவில் 21.7 சதவீதமாகவும், கர்நாடகத்தில் 14.6 சதவீதமாகவும் இருந்துள்ளது.

    * மேற்கண்ட 7 மாநிலங்களில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது தேசிய சராசரியான 12.6 சதவீதத்தைவிட அதிகம் ஆகும்.

    * மேற்கு வங்காளத்தில் 2020-21-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-22-ம் ஆண்டில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது குறைந்துள்ளது. இது தொடக்கப்பள்ளி அளவிலாகும்.

    * டெல்லியிலும் ஏராளமான மாணவர்கள் இடையிலேயே படிப்பை நிறுத்துகின்றனர். (மேற்கு வங்காளம், டெல்லி நிலவரம் பற்றிய புள்ளி விவரங்கள் வெளியாகவில்லை).

    * மத்திய பிரதேச மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நின்று விடுவது 2020-21-ல் 23.8 சதவீதமாக இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டிலேயே இது 10.1 சதவீதமாக அதிரடியாகக் குறைந்துள்ளது.

    * மராட்டிய மாநிலத்தில் உயர்நிலைப்பள்ளி அளவில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது 2020-21-ல் 11.2 சதவீதமாக இருந்து, மறு ஆண்டில் 10.7 சதவீதமாகக் குறைந்தது.

    * உத்தரபிரதேச மாநிலத்தில், பாஸ்தி (23.3 சதவீதம்), புதான் (19.1 சதவீதம்), எட்டவா (16.9 சதவீதம்), காசிப்பூர் (16.6 சதவீதம்), எட்டா (16.2 சதவீதம்), மகோபா (15.6 சதவீதம்), ஹர்தோய் (15.6 சதவீதம்), அசம்கார் (15 சதவீதம்) மாவட்டங்களில் மாணவர்கள் இடையிலேயே நிற்பது அதிகரித்துள்ளது.

    * ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவர்கள் இடையிலேயே படிப்பை நிறுத்துவது தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனால் பழங்குடி மற்றும் முஸ்லிம் மாணவர்கள் படிப்பை இடையிலேயே நிறுத்துவது அதிகமாக உள்ளது.

    இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    உடுமலை :

    உடுமலை அரசு கலைக்கல்லூரி சாலையில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை பதிவு, மே 24-ந்தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பபதிவு செய்ய ஜூன் 7ந்தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பதிவுக்கான அவகாசம் வருகிற 20-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 14 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை.

    எலக்ட்ரீசியன் 20 இடங்கள், பிட்டர் (20), மோட்டார் வாகன மெக்கானிக் (24), இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன் (40), மேனுபேக்சரிங் பிராசஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேஷன் (40), அட்வான்ஸ்டு சிஎன்சி., மெஷின் டெக்னீசியன் (20) உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயர்மேன் (20), வெல்டர் (40) ஆகிய இரண்டு பிரிவுகளுக்கும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

    விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்களை இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்ய விண்ணப்பதாரரின் அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஜாதிசான்றி தழ், ஆதார் அட்டை மற்றும் இரண்டு போட்டோகளுடன் தொழிற்பயிற்சி நிலையத்தை வேலை நாட்களில் காலை, 9 மணி முதல் மாலை5மணி வரை நேரில் அணுகலாம்.

    கூடுதல் தகவல் பெற 04252-223340, 99442 06017, 95855 39650, 73732 78939 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராஜேஸ்வரி தெரிவித்தார்.

    • அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் சாவு

    கன்னியாகுமரி:

    திருவனந்தபுரம் அருகே உள்ள கரமனை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 21). என்ஜினீயரிங் கல்லூரி மாணவரான இவர், தனது நண்பர் முகமது சயாஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் திருவனந்தபுரம் புறப்பட்டார்.

    தக்கலை அருகே குமாரகோவில் பகுதியில் இருந்து அவர்கள் புறப்பட்டனர். புலியூர்குறிச்சி என்ற இடத்தில் சென்ற போது, எதிரே ஒரு கார் வந்தது.அந்தக் கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் விக்னேஷ் மற்றும் முகமது சயாஸ் தூக்கி வீசப்ப ட்டனர். பலத்த காயத்துடன் கிடந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு 2 பேருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக நேற்று இரவு திருவனந்தபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளி த்தும் பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தக்கலை போலீசில் முகமது சயாஸ் புகார் கொடுத்தார். போலீ சார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரை பறிமுதல் செய்த தோடு அதனை ஒட்டி வந்த கேரளபுரம் சரல்விளையைச் சேர்ந்த விேனாத் (29) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×